என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சபரிமலையில் 14-ந்தேதி மகரவிளக்கு பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
Byமாலை மலர்8 Jan 2021 5:56 AM GMT (Updated: 8 Jan 2021 5:56 AM GMT)
சபரிமலையில் கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் :
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் முடிந்து தற்போது மகர விளக்கு திருவிழா நடந்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. கொரோனா பிரச்சினையால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மகரவிளக்கு பூஜைக்கு முன்னர் சபரிமலையில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் உடலில் சாயம் பூசி ஊர்வலமாக செல்வார்கள்.
இந்த வருடம் பேட்டை துள்ளல் நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்களும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X