என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை
    X
    சபரிமலை

    சபரிமலையில் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

    மகரவிளக்கு பூஜையன்று சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறினார்.
    சபரிமலை :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 31-ந்தேதி முதல் பூஜை நடைெபற்று வருகிறது.

    தற்போது கோவிலில் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சிகர நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் என்.வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மகர விளக்கு தினமான வருகிற14-ந் தேதி ஆன்லைனில் தரிசனத்திற்கான முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்களுக்கு கண்டிப்பாக தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

    தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் உள்பட கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ்களை பக்தர்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×