search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி
    X
    தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி

    தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி

    திருவண்ணாமலை கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் அன்னை மீனாட்சி உழவார பணிக்குழுவை சேர்ந்த சுமார் 40 பேர் ஈடுபட்டனர்.
    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தீபத்திருவிழா ஒன்றாகும். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் அன்னை மீனாட்சி உழவார பணிக்குழுவை சேர்ந்த சுமார் 40 பேர் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்யவது, விளக்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
    Next Story
    ×