search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகா சதாசிவ மூர்த்தி சிலை, விஸ்வரூப சுப்பிரமணியசாமி சிலை
    X
    மகா சதாசிவ மூர்த்தி சிலை, விஸ்வரூப சுப்பிரமணியசாமி சிலை

    25 தலை, 50 கைகளுடன் மகா சதாசிவமூர்த்தி சிலை

    திருமுருகன்பூண்டியில் 25 தலை, 50 கைகளுடன் செதுக்கப்பட்டுள்ள மகா சதாசிவ மூர்த்தி சிலை சிவகங்கை மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்ப கலை கூடங்கள் உள்ளன. அங்கு கருங்கல்லால் செதுக்கப்படும் கலை நயமிக்க சிலைகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அங்குள்ள ஒரு சிற்ப கலை கூடத்தில் 25 தலை மற்றும் 50 கைகளுடன் கூடிய மகா சதாசிவ மூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலை குறித்து ஸ்பதி சண்முகம் கூறியதாவது:-

    திருமுருகன்பூண்டியில் தினமும் பல சிலைகள் வடிவமைத்தாலும் இதுபோன்ற சிலை வடிவமைக்கப்படுவது முதல்முறையாகும். இந்த சிலை 4 டன் எடையுடன், 7½ அடி உயரத்தில் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் 25 தலைகள், 50 கைகள் மற்றும் அம்பாள் மடியில் இருப்பது போன்று மிகவும் தத்ரூபமாக மகா சதாசிவ மூர்த்தி சிலையை வடிவமைத்துள்ளோம். இந்த சிலையை 6 பேர் கொண்ட குழு 6 மாத காலத்தில் உருவாக்கி உள்ளோம்.

    இதேபோல் 6¾ அடி உயரத்தில், 3 டன் எடை அளவுள்ள 11 தலைகள் கொண்ட விஸ்வரூப சுப்பிரமணிய சாமி சிலையையும் கலைநயத்துடன் செதுக்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த 2 சிலைகளும் சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் உள்ள பிரத்தியங்கர தேவி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    Next Story
    ×