search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அங்காளம்மன் கோவிலில் குட்டிக்குடி திருவிழா
    X

    அங்காளம்மன் கோவிலில் குட்டிக்குடி திருவிழா

    திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள காவல்காரபாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது.
    திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள காவல்காரபாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை முதலே அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான சந்தனகருப்பு, பேச்சியம்மன், இருளப்பன், மதுரைவீரன், வேட்டைக்கருப்பு, காளன், காளகண்டி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    இதனையடுத்து கோவில் பூசாரி சந்தனகருப்பு சாமியாடி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் மதுரைவீரன், சந்தனகருப்பு, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அடைசல் பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×