search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லை தைப்பூச மண்டபத்தை சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடந்தபோது எடுத்த படம்.
    X
    நெல்லை தைப்பூச மண்டபத்தை சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடந்தபோது எடுத்த படம்.

    தாமிரபரணி பு‌ஷ்கர விழா நாளை மறுநாள் தொடங்குகிறது

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி பு‌ஷ்கர விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு பு‌ஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார். விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு பு‌ஷ்கர விழா நடத்தப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மகா பு‌ஷ்கர விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவையொட்டி சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி பு‌ஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நெல்லை வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் படித்துறையை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் பு‌ஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.

    பாபநாசத்தில் தாமிரபரணி பு‌ஷ்கர விழாவை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் திருப்புடைமருதூர், நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் நடைபெறும் பு‌ஷ்கர விழாக்களிலும் பங்கேற்கிறார். இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை நேற்று தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    Next Story
    ×