என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாதேஸ்வரர் மகாதேவ் திருக்கோவில்- மகாராஷ்டிரா
Byமாலை மலர்1 Oct 2021 6:24 AM GMT (Updated: 1 Oct 2021 6:24 AM GMT)
இந்த கோவிலில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றும், தனித்தன்மையுடனும் இருக்கின்றன. இங்குள்ள ஒரு அதிசய நந்தியே இதற்கு சான்றாக கூறலாம்
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ளது, பாதேஷ் என்ற ஊர். இங்கு பாதேஸ்வரர் மகாதேவ் திருக்கோவில் உள்ளது. இந்தக்கோவில் எட்டு பெரிய குகைகளையும், பல சிறிய குகைகளையும் உள்ளடக்கிய பெரிய வளாகம் போல் காட்சியளிக்கிறது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்லப்படும் இந்த ஆலயத்தில் ஆயிரம் சிவலிங்கங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த ஆலய வளாகத்தில் ஒரு வித்தியாசமான சிலையையும் நாம் காண முடியும். நந்தியின் வடிவத்தில் இருக்கும் இந்த வித்தியாசமான சிலையை, அக்னி பகவானின் உருவம் என்கிறார்கள். வேதத்தில் அக்னி பகவானுக்கு இரண்டு தலைகளும், மூன்று கால்களும், ஏழு கைகளும் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தில் கூறப்பட்ட வடிவமைப்புக்கேற்ற வகையில் இந்த சிலை இருப்பதால், இதனை அக்னி பகவான் என்றே வழிபட்டு வருகின்றனர்.
நேராக நின்று பார்க்கும் போது, மனித முகம், சற்று சாய்வாக பார்க்கும்போது நந்தியின் முகம் என இரண்டு முகங்கள் தெரியும். நேராக நின்று பார்க்கும்போது மனித கால்கள் இரண்டு, நந்தியின் கால் ஒன்று என மொத்தம் மூன்று கால்களும், இடது பக்கமாக நின்று பார்க்கும்போது நந்தியின் கால்கள் இரண்டு, மனித கால் ஒன்று என மொத்தம் மூன்று கால்களும் தென்படும். (இதில் ஏதாவது ஒரு பக்கத்தைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்). அதே போல் கரங்களும் 7 இருப்பதை பார்க்கலாம். நேராக நின்று பார்க்கும்போது இந்த 7 கரங்களும் தெளிவாகத் தெரியும்.
இது ஒரு சிவாலயம் என்பதால், நந்தியின் வடிவத்தில் அக்னி பகவானின் சிலையை வடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆலய வளாகத்தில் ஒரு வித்தியாசமான சிலையையும் நாம் காண முடியும். நந்தியின் வடிவத்தில் இருக்கும் இந்த வித்தியாசமான சிலையை, அக்னி பகவானின் உருவம் என்கிறார்கள். வேதத்தில் அக்னி பகவானுக்கு இரண்டு தலைகளும், மூன்று கால்களும், ஏழு கைகளும் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தில் கூறப்பட்ட வடிவமைப்புக்கேற்ற வகையில் இந்த சிலை இருப்பதால், இதனை அக்னி பகவான் என்றே வழிபட்டு வருகின்றனர்.
நேராக நின்று பார்க்கும் போது, மனித முகம், சற்று சாய்வாக பார்க்கும்போது நந்தியின் முகம் என இரண்டு முகங்கள் தெரியும். நேராக நின்று பார்க்கும்போது மனித கால்கள் இரண்டு, நந்தியின் கால் ஒன்று என மொத்தம் மூன்று கால்களும், இடது பக்கமாக நின்று பார்க்கும்போது நந்தியின் கால்கள் இரண்டு, மனித கால் ஒன்று என மொத்தம் மூன்று கால்களும் தென்படும். (இதில் ஏதாவது ஒரு பக்கத்தைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்). அதே போல் கரங்களும் 7 இருப்பதை பார்க்கலாம். நேராக நின்று பார்க்கும்போது இந்த 7 கரங்களும் தெளிவாகத் தெரியும்.
இது ஒரு சிவாலயம் என்பதால், நந்தியின் வடிவத்தில் அக்னி பகவானின் சிலையை வடித்திருப்பதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X