search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் சிங்கிரி லஷ்மி நரசிம்மர் கோவில்
    X

    ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் சிங்கிரி லஷ்மி நரசிம்மர் கோவில்

    இந்தியாவிலேயே சிங்கிரியில் மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தமிழக எல்லையான ஊத்துகோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் அடுத்த நாரயணவரம் ஸ்ரீதிருமலை கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் அருகே சிங்கிரி என்ற இடத்தில் நான்கு திசைகளுக்கு மலைகளின் நடுவே அடர்ந்த மூலிகைகள் வாசம் நிறைந்த காட்டுபகுதியில் 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராய பல்லவ பேரசால் கட்டபட்ட இந்த கோயில் நரசிம்மர் சுயம்பாக அதாவது இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார்.

    பாலக பக்தன் பிரகலா தன் தன்மேல் கொண்ட தூய அன்பிற்காகவும், தீயவன் இரண்ய கசிபுவை அழிப்பதற்காகவும் மகாவிஷ்ணு எடுத்த திருவடிவம்தான் நரசிம்ம அவதாரம் அந்நேரத்தில் அசுரனை அழித்துவிட்டு இந்த சிங்கிரி மலை காட்டுபகுதிக்கு உக்கிர நரசிம்மராக வந்தபோது சிவபெருமான் நாரத ரிஷியிடம் ஸ்ரீவிஷ்ணு உக்கர அவதாரமான நரசிம்மரை சாந்தபடுத்த என்ன செய்வதேன்று யேசித்த போது ஸ்ரீமகாலஷ்மியால் மட்டுமே சாந்தபடுத்த முடியும் என்று கூறிய நாரத ரிஷி உடனே மகாலட்சிமியிடம் முறையிடவே உடனே அதனை ஏற்று லஷ்மி தேவி சிங்கிரி மலை காட்டு பகுதிக்கு சென்று வனதேவதையாக உருமாறி நரசிம்மரை சாந்தபடுத்தியதால் இத்தலத்தில் நரசிம்மர் மற்றும் மகாலட்சுமி இருவருமே பக்தர்களுக்கு வரம்கொடுக்கவே நின்றபடியே காட்சியளிகிறார்கள்.

    வைகாசி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில், சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷ வேளையில் தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லபடுகிறது. அவ்வேளையில் இங்கு வரும் பக்தர்களுக்கு உள்ள அனைத்து குறைகளும் நீங்கும். நரசிம்ம அவதாரம் அந்த வேளையில் நிகழ்ந்ததால் நரசிம்மருக்கும் சிறப்பான நேரமாக பிரதோஷம் கருதப்படுகிறது. எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.

    இந்த சிங்கிரி லஷ்மி நரசிம்மரை அந்த நேரத்தில் வணங்க நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், திருமண தடை நீங்கும், குழந்தையில்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும்,தீராத நோயும் தீரும், கடன்கள் தீரும்,மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை இந்த ஸ்தலத்திற்கு அழைத்து வந்தால் பூரண குணம் கிடைக்கும், மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம்.

    இந்த திருத்தலத்தில் நரசிம்மரின் அவதாரத் திருநாளான நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் பகைவர்களால் தீராத தொல்லை. அபிசார தோஷம் எனப்படும் பில்லி சூனிய பிரச்னை, கடன் தொல்லை, வீட்டில் எப்போதும் சண்ட சச்சரவு, எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேரவே இல்லை என்ற ஏக்கம் போன்ற பிரச்னைகள் கதிரவனைக் கண்ட பனி போல விலகிவிடும்.
    Next Story
    ×