search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    துர்க்கை
    X
    துர்க்கை

    வெள்ளிக்கிழமையில் மாலை நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில் மாலை நேரத்தில் விளக்கேற்றி அம்மனை வழிபடுவது சிறப்பாக இருக்கும்.
    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் மாலை நேரங்களில் குளித்து, தூய மனதோடு துர்கை அம்மனுக்கான இந்த எளிய ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வந்தால் மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். எந்த கெட்ட சக்தியும் உங்களை நெருங்காது.

    மந்திரம்:

    ஓம் காத்யாயனய வித்மஹே
    கன்யாகுமாரி தீமஹி
    தன்னோ துர்கிப்ரசோதயாத்

    பொருள்: காத்யாயனய என்ற மகரிஷிக்கும் மகளாகப் பிறந்தவளே, என்றும் இளமையாக இருப்பவளே, உன்னை வணங்குவோரின் மனக் குழப்பத்தை நீக்கி, நல்லறிவைக் கொடுத்து அதன் மூலம் பல நற்பலன்களை அருளக்கூடிய துர்க்கையே உன் பாதத்தைப் பணிகிறோம்.
    Next Story
    ×