search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சூரியன்
    X
    சூரியன்

    தினமும் காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம்

    தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.
    நாம் தினமும் காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரத்தை சொல்ல அன்றைய நாள் முழுவதும் நம் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியைப் பெறும். அதோடு சூரிய பகவானின் அருளும் நமக்கு கிடைக்கப்பெறும்.

    கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூரிய மந்திரங்களை காலையில் நீராடிவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு அதன் பின்னர் சொல்லலாம்.

    அதே போல் நீராடி சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல சூரிய பகவானின் அருள் நிறைந்து கிடைக்கும்.

    சூரிய காயத்ரி :

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
    தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

    காயத்ரி மந்திரம் 2

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    சூரிய பகவான் மந்திரம்

    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி

    இந்த அற்புத சூரிய துதி தூய தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.

    ஞாயிறு கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் சொல்ல இந்த மந்திரத்தில் மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    சூரிய மந்திரம் நம் மனதை ஒழுங்கு படுத்தி அமைதியையும், நற்சிந்தனையையும் தரும். அதே போல் சூரிய நமஸ்காரம் நம் உடலை வளப்படுத்தி, எந்த நோயிலிருந்தும் காக்கும் மிக உன்னதத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.
    Next Story
    ×