search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சிவலிங்கம்
    X
    சிவலிங்கம்

    மகா சிவராத்திரியான இன்று உச்சரிக்க வேண்டிய அற்புத திருமந்திரம் பாடல்கள்

    மகா சிவராத்திரி தினத்தன்று உச்சரிக்க வேண்டிய மிக அற்புத பாடல்களில் ஒன்று திருவாசகப் பாடல்கள். சிவன் மீதான பக்திச் சுவை சொட்டச் சொட்ட எழுதிய பாடல் தான் திருவாசகப் பாடல்கள்.
    மகா சிவராத்திரி தினத்தன்று உச்சரிக்க வேண்டிய மிக அற்புத பாடல்களில் ஒன்று திருவாசகப் பாடல்கள். மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. சிவன் மீதான பக்திச் சுவை சொட்டச் சொட்ட எழுதிய பாடல் தான் திருவாசகப் பாடல்கள்.

    சிவசிவ என்கிலர் தீவினையாளர்
    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
    சிவசிவ என்றிடச் சிவகதி தானே.
    (திருமந்திரம் பாடல் : 2716)

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே.

    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தன் இணையடி நீழலே!
    த்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
    வைத்தாய் பெண்ணைத் தென்பால்
    வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
    அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!

    உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
    நிலவுலாவிய நீர்மலி வேணியன்
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

    கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
    நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
    சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
    எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!

    பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

    அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!
    அன்பு சிவமிர ண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே!

    உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
    உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
    உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.

    அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
    அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
    அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு

    அணுவில் அணுவை அணுகலும் ஆமே

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

    அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
    மொழிகின்ற முப்பத்து முன்றென்ப தாகுங்
    கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
    தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே
    Next Story
    ×