search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கன்னிகா பரமேஸ்வரி
    X
    கன்னிகா பரமேஸ்வரி

    கன்னிகா பரமேஸ்வரி மூல மந்திரம்

    திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.
    அன்னையை வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும் என்றும் வேண்டும் செல்வம் சேரும் என்பதும் நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.

    அன்னையின் மூல மந்திரமான

    ஓம் பாலாரூபிணி வித்மஹே

    பரமேஸ்வரி தீமஹி

    தன்னோ கந்யா ப்ரசோதயாத்

    என்னும் மந்திரத்தைச் சொல்லிவர சகல நன்மைகளும் கைகூடும்.

    கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம். வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருக்கும் அம்மன் படத்துக்கு பூ சாத்தி, நீர் மோர், பானகம் ஆகியன செய்து படைத்து வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால் அன்னை மனம் குளிர்ந்து நம்மைச் சூழ இருக்கும் இன்னல்களிலிருந்து விலக்கிக் காப்பாள் என்பது ஐதிகம்.
    Next Story
    ×