search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    அண்ணாமலையார்
    X
    அண்ணாமலையார்

    முக்தி தரும் அண்ணாமலையார் துதிப்பாடல்

    அண்ணாமலையாரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.
    சிவபெருமான் அருள்பாலிக்கும் எத்தனையோ தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு மிக முக்கியமான சிறப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தலத்துக்கு மட்டுமே உண்டு. அருணாசலேஸ்வரரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனம் கசிந்து, ஆத்மார்த்தமாக இருந்த இடத்தில் இருந்தே அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.

    மறையி னானொடு மாலவன் காண்கிலா
    நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
    உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்
    பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.
    Next Story
    ×