என் மலர்

    ஆன்மிகம்

    காமேஸ்வரி
    X
    காமேஸ்வரி

    தனவரவு, குடும்பத்தில் ஆனந்தம் தரும் காமேஸ்வரி ஸ்லோகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்திய வாழ்க்கை அமைய காமேஸ்வரிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்யலாம்.
    ‘காம’ எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.

    மந்திரம்:

    ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
    நித்யக்லின்னாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்:
    சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.

    வழிபடு பலன்கள்:

    குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்
    Next Story
    ×