search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குரு பகவான்
    X
    குரு பகவான்

    வியாழக்கிழமையான இன்று குருவின் சன்னிதியில் பாட வேண்டிய பாடல்

    சனியைச் சாய்வாய் நின்று கும்பிடு, குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அந்த அடிப்படையில் குருவின் சன்னிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.
    வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும், புஷ்ப ராகமும்

    உந்தனுக் களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும், தனித்ததோர் புகழும்

    நிலையாய்த் தந்திட நேரினில் வருக!

    இந்த துதிப்பாடல் பாடித் தொழுதால் குருவருளால் குதூகலமான வாழ்வமையும்.
    Next Story
    ×