search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆஞ்சநேயர்
    X
    ஆஞ்சநேயர்

    சனி, ராகு கேது தோஷத்தின் தாக்கத்தை குறைக்கும் மந்திரம்

    எவ்வளவு நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையில் துயரங்கள் குறைந்து கொண்டே வரும்.
    ராகு கேது பிரச்சினையாக இருந்தாலும், சனி பகவானால் பிரச்சனை இருந்தாலும், அவர்களிடமிருந்து நாம் தப்பிப் பிழைக்க, அனுமனது பாதங்களைச் சரணடைவது தான் ஒரே வழி. என்ன செய்வது? அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன், அஞ்சா நெஞ்சம் படைத்த ஆஞ்சநேயர், எவருக்கும் எதற்கும் அஞ்சாதவர் ஆயிற்றே!

    ஆஞ்சநேயர் வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு கர்ம வினைகளும், துன்பங்களும் நிச்சயமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு வாழ்க்கையில் எப்பேர் பட்ட கஷ்டம் இருந்தாலும் பின் சொல்லக்கூடிய அனுமனது மூல மந்திரத்தை தினந்தோறும் ஐந்து முறை உச்சரித்தால் கூட, அபரிமிதமான பலனை நம்மால் பெற முடியும். உங்களுக்கான ஹனுமனின் மூல மந்திரம் இதோ!

    அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம் 
    குமாரம் ப்ரும்ஹ சாரிணம் 
    துஷ்ட க்ரஹ வினாசயா 
    ஹனுமந்த முபாஸ் மஹே!

    நான்கு வரி மந்திரம்தான். தீராத துயரங்கள் சீக்கிரமே தீரவேண்டும், என்று காலையில் கண்விழித்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்து அதன் பின்பு, இந்த நான்கு வரி மந்திரத்தை உச்சரித்து, ஹனுமனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மந்திரத்தை உச்சரிக்கும் எண்ணிக்கை என்பது உங்களுடைய இஷ்டம் தான்.

    இந்த மந்திரத்தை உச்சரித்து அனுமனை தொடர்ந்து வழிபாடு செய்து வருபவர்களை எந்த கிரக தோஷமும் எதுவும் செய்யாது. எவ்வளவு நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையில் துயரங்கள் குறைந்து கொண்டே வரும்.
    Next Story
    ×