search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள்
    X
    பெருமாள்

    திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    திருப்பதி மலையில் ஏறும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லிய படி மலையேறினால் நம் வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறும்.
    ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
    ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே
    ச்ரத்தயாஸஹ தம் பவந்தம்
    அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம...
    க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ
    த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே"

    பொருள் : பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.
    Next Story
    ×