search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனுமன்
    X
    அனுமன்

    தமிழில் ஸ்ரீ அனுமன் புகழ்மாலை

    தமிழில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு உகந்த இந்த புகழ்மாலையை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் பறந்தோடும்.
    மேலை விரிஞ்சன் வீயினும் வீயாமிகை நாளீர்
    நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல்தக்கீர்
    காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர்
    ஆலம் நுகர்ந்தானாம் என வெம்போர் அடர்கிற்பீர்

    வெப்புறு செந் தீ நீர் வளியாலும் விளியாதீர்
    செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்
    ஒப்புறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே
    குப்புறின் அண்டத்தப் புறமேயும் குதிகொள்வீர்

    நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீரச்
    சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர்
    வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே
    கொல்லவும் வல்லீர் தோள் வலிஎன்றும் குறையாதீர்

    மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரு மெய்யீர்
    மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்
    பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர்
    சூரியனைச் சென்று ஒண்கையகத்தும் தொட வல்லீர்

    அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறழியாமை
    மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்
    பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க
    எறிந்துழி இற்றோர் புன் மயிரேனும் இழவாதீர்

    போர்முன் எதிர்ந்தால் மூஉலகேனும் பொருள் ஆகா
    ஒர்வில் வலம் கொண்டு ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்
    பாருலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன்
    தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர்

    நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்
    மாதர் தவம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம்
    ஓதி யுணர்ந்தீர் ஊழி கடந்தீர் உல கீனும்
    ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்

    அண்ணல் அம் மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே
    கண்ணி உணர்ந்தீர் கமுமம் நுமக்கே கடன் என்னத்
    திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால்
    புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்

    அடங்கபும் வல்லீர்காலமது அன்றேல் அமர்வந்தால்
    மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர் மதி நாடித்
    தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்
    இடங்கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடை யாதீர்

    ஈண்டிய கொற்றத் திந்திரன் என்பான் முதல் யாரும்
    பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும்
    பண்டிதர் நீரே பார்த்தினிது உய்க்கும்படி வல்லீர்
    வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர்

    ஏகுமின் ஏகி எம்முயிர் நல்கிஇசைகொள்ளீர்
    ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னம் குறைவு இல்லாச்
    சாகரம் முற்றும் தாவிமும் நீர் இக்கடல் தாவும்
    வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான்.
    Next Story
    ×