search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருஷ்டி கழித்தல்
    X
    திருஷ்டி கழித்தல்

    கண் திருஷ்டி நீங்க இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்

    நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் சமயத்தில், நமக்கு இடையூறாக, தடைக்கல்லாக வந்து நிற்பது, கண் திருஷ்டி தான். கண் திருஷ்டி நீங்க பரிகாரம் உள்ளது.
    நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் சமயத்தில், நமக்கு இடையூறாக, தடைக்கல்லாக வந்து நிற்பது, கண் திருஷ்டி தான். நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து, விபத்து வந்தாலும் தப்பித்துக்கொள்ளலாம். முதலில் உங்கள் குடும்பத்தில் யாருக்கு திருஷ்டி அதிகமாக இருக்கின்றதோ, அந்த குறிப்பிட்ட நபரை, கிழக்கு பார்த்தது போல், அமர வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து, அதன் மேல் ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி, இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி, கற்பூரத்தை கீழே தள்ளிவிட்டு முழுமையாக எரிய விட்டு விடுங்கள்.

    உங்கள் கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை முடிந்தால், கைகளால் நசுக்கி இரண்டு துண்டாக ஆக்கி விடுங்கள். முடியாதவர்கள் கத்தியால் இரண்டு துண்டாக ஆக்கி, அதை வீதியில் போட்டு விட வேண்டும். இந்த எலுமிச்சை பழத்தை சுற்றும்போது மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். எலுமிச்சை பழ திருஷ்டியை சுற்றும்போது, நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதோ!

    மஞ்சள் வர்ண புளித்த மாரி!
    ரத்த வீர ராசா கன்னி,
    மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா!வா!

    அவ்வளவுதான். உங்களை பிடித்த கண்திருஷ்டியுனது, ஒரே நாளிலேயே ஓடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு மந்திரத்தை உச்சரித்து, நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து, பயனடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
    Next Story
    ×