search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    லட்சுமி  குபேர பூஜை
    X
    லட்சுமி  குபேர பூஜை

    லட்சுமி  குபேர விரதம் இருப்பது எப்படி?

    இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.
    அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள (அஷ்டமி, நவமி இல்லாத) ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

    விரதம் கடைப்பிடிக்கும் தினத்துக்கு முதல் நாளே சில பூஜை பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்திரம் இப்படி லட்சுமி குபேரன் சம்மந்தமா இருக்கிறத எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதான்யம், தலைவாழை இலை இதெல்லாம் முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்றைக்கு காலையிலே எழுந்து குளிச்சிட்டு, சுத்தமான உடை அணிந்து நெத்திக்கு பொட்டு வெச்சுக்கிட்டு தயாராக வேண்டும்.

    நல்ல நேரத்துல லட்சுமி குபேரன் படம், குபேர யந்திரம் இதை எல்லாம் எடுத்து மஞ்சள், குங்குமம் வெச்சு பூஜையில் வையுங்கள். குபேரன் யந்திரம், படம் மட்டும் இருந்தா வடக்கு திசையிலே வைக்க வேண்டும். படத்துக்கு முன்னால், தலைவாழை இலையை வைத்து அதுமேல் நவ தானியத்தையும் ஒண்ணாக் கலக்காம சுத்திவர பரப்பி வைங்க. அதுக்கு நடுவுல ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதுல கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு வைக்க வேண்டும்.

    செம்பு மேல மஞ்சள் பூசின ஒரு தேங்காயை வைத்து, சுற்றிலும் மாவிலையை சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், இதோட தட்சணை எல்லாத்தையும் கலசத்துக்கு முன்னால் வைத்தல் வேண்டும். கொஞ்சம் மஞ்சள் தூள் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடிச்சு, வாழை இலையின் வலப்பக்கம் வைத்து குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். படம், யந்தரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றிற்கு பூக்களை போட்டு ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.

    கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்திரம் ஸ்லோகங்களைக் கூறவும். பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனை பற்றிய ஸ்லோகம், மந்திரம், துதி ஆகியவற்றைக் கூறவும். எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும். பின்பு தூப தீபம் காட்டி வாழைப் பழம், பசும்பால் (சர்க்கரை போட்டுக் காய்ச்சியது) பாயாசம் என்று முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம்.

    வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும், தட்சணையை ஏழைகளுக்கு கொடுக்கவும். நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும் நிலையான சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா...! என்று குபேரனை மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டு வேண்டிக் கொள்ள வேண்டும். உங்க வாழ்க்கையில் குறுக்கிடக் கூடிய இன்னல்கள், தடைகள் எல்லாவற்றையும் நீக்கி, வளமும் நலமும் உங்களை வந்தடைய குபேரன் நிச்சயம் அருள்புரிவார்.

    இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். லட்சுமி குபேர விரதம் இருந்தால் உங்களுடைய லட்சியம் எல்லாம் ஈடேறும்.

    Next Story
    ×