search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்ப ராசி
    X
    கும்ப ராசி

    கும்ப ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷடம் பெருக எந்த கடவுளை விரதம் இருந்து வழிபடலாம்

    கும்பம் ராசியினர் வாழ்வில் செல்வ நிலை உயரவும், அதிர்ஷ்டங்களை பெறவும் எந்த தெய்வங்களை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    கும்ப ராசியில் பிறந்தவர்கள் செல்வ வளமிக்க வாழ்க்கை கிடைக்க பெறவும், அனைத்திலும் சிறப்பான முன்னேற்றங்களை அடையவும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வதால் சனி பகவானின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்பட தொடங்கும். மேலும் சனி அம்சம் கொண்ட திருப்பதி வெங்கடாசலபதியையும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ நிலை உயரும். இந்த ராசியினர் அஷ்டமி தினங்களில் பைரவர் மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வர வேண்டும்.

    கும்ப ராசியினர் விரதம் மேற்கொள்ள நினைத்தால் சனி பகவானுக்கு சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது சிறந்த பலன்களை கொடுக்கும். வலது கை மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவது அதிர்ஷ்டத்தை தரும். ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கும், கோயில்களுக்கும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தானம் தருவது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்களை போக்கும். பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் நீதி தேவனாகிய சனிபகவானின் அருள் உங்களுக்கு கிட்டும்.
    Next Story
    ×