என் மலர்
இஸ்லாம்
நம் வசனங்களையும், அத்தாட்சிகளையும், மறுமையின் நம் சந்திப்பையும் பொய்யெனக் கூறுகின்றவர்களின் எல்லா நல்ல காரியங்களும் அழிந்துவிடும்.
மூஸா (அலை) தூர் மலையில் தங்கி நாற்பது நாட்கள் நோன்பிருந்து, அல்லாஹ்வை மனம் உருகி வணங்கிக் கொண்டிருந்தார்கள். உள்ளத்தூய்மையுடனும் இறைநம்பிக்கையுடனும் மனம் முழுவதும் இறைவனை மட்டும் நினைத்து அல்லாஹ்விடம் வேண்டினார்கள், “யா அல்லாஹ்! நான் உன்னைப் பார்க்க வேண்டும். உன்னைக் கேட்க முடிந்த என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லையே, உன்னைக் காண்பிப்பாயாக!” என்று மிகவும் கெஞ்சினார்கள்.
அதற்கு அல்லாஹ், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது. சாதாரண மனிதரின் கண்களுக்கு நான் அப்பாற்பட்டவன். உனக்கு என்னைப் பார்க்கும் சக்தி இல்லை. எனினும் நீர் அந்த மலையைப் பார்த்துக் கொண்டிருங்கள். அந்த மலையின் மீது என் ஒளியினை படச் செய்கிறேன். அதை உங்களால் பார்க்க முடிந்தால் என்னை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று கூறினான். அப்படியே அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அம்மலை நொறுங்கித் தூளாகிவிட்டது. மூஸா (அலை) அவர்களும் மூர்ச்சையாகி மயக்கம்போட்டுக் கீழே விழுந்துவிட்டார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் தெளிவடைந்து, அல்லாஹ் அருளிய பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளைக் கையில் எடுத்து, “அல்லாஹ்வே!! நீ மிகவும் பரிசுத்தமானவன். நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன். உன் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு இறைவன், “மூஸாவே! எனது தூது செய்திகள் மூலமும், நான் நேரடியாக உம்முடன் பேசியதின் மூலமும் மனிதர்களிலேயே உங்களை மேலானவராகத் தேர்ந்தெடுத்துவிட்டேன். ஆகவே, நான் உங்களுக்குக் கொடுத்த இந்த வேதக் கட்டளைகளை உறுதியாகப் பிடித்துக் கொண்டு எனக்கு நன்றி செலுத்துபவர்களில் ஒருவராக இருப்பீராக. உங்களுடைய சமூகத்தாரையும் இக்கட்டளைக்கு அடிபணியச் சொல்வீராக.
ஆனால் பூமியில் பெருமையடித்து நடப்பவர்கள் என் கட்டளைகளை ஏற்கமாட்டார்கள். அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்டாலும் எதையும் நம்ப மாட்டார்கள். நேர் வழியைத் தங்களுக்குரிய வழியாக ஆக்கிக் கொள்ள மாட்டார்கள். மாறாகத் தவறான வழியை நேர்வழியென நம்புவார்கள். நம் வசனங்களையும், அத்தாட்சிகளையும், மறுமையின் நம் சந்திப்பையும் பொய்யெனக் கூறுகின்றவர்களின் எல்லா நல்ல காரியங்களும் அழிந்துவிடும். அவர்களின் நற்காரியங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது” என்று கூறினான்.
மூஸா (அலை) இறைவன் அருளிய தவ்ராத் வேதத்தை எடுத்துக் கொண்டு, தம் மக்களுக்கு இறைவனின் கட்டளைகள் பற்றிச் சொல்ல விரைந்தார்.
திருக்குர்ஆன் 7:142-147
- ஜெஸிலா பானு.
அதற்கு அல்லாஹ், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது. சாதாரண மனிதரின் கண்களுக்கு நான் அப்பாற்பட்டவன். உனக்கு என்னைப் பார்க்கும் சக்தி இல்லை. எனினும் நீர் அந்த மலையைப் பார்த்துக் கொண்டிருங்கள். அந்த மலையின் மீது என் ஒளியினை படச் செய்கிறேன். அதை உங்களால் பார்க்க முடிந்தால் என்னை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று கூறினான். அப்படியே அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அம்மலை நொறுங்கித் தூளாகிவிட்டது. மூஸா (அலை) அவர்களும் மூர்ச்சையாகி மயக்கம்போட்டுக் கீழே விழுந்துவிட்டார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் தெளிவடைந்து, அல்லாஹ் அருளிய பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளைக் கையில் எடுத்து, “அல்லாஹ்வே!! நீ மிகவும் பரிசுத்தமானவன். நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன். உன் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு இறைவன், “மூஸாவே! எனது தூது செய்திகள் மூலமும், நான் நேரடியாக உம்முடன் பேசியதின் மூலமும் மனிதர்களிலேயே உங்களை மேலானவராகத் தேர்ந்தெடுத்துவிட்டேன். ஆகவே, நான் உங்களுக்குக் கொடுத்த இந்த வேதக் கட்டளைகளை உறுதியாகப் பிடித்துக் கொண்டு எனக்கு நன்றி செலுத்துபவர்களில் ஒருவராக இருப்பீராக. உங்களுடைய சமூகத்தாரையும் இக்கட்டளைக்கு அடிபணியச் சொல்வீராக.
ஆனால் பூமியில் பெருமையடித்து நடப்பவர்கள் என் கட்டளைகளை ஏற்கமாட்டார்கள். அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்டாலும் எதையும் நம்ப மாட்டார்கள். நேர் வழியைத் தங்களுக்குரிய வழியாக ஆக்கிக் கொள்ள மாட்டார்கள். மாறாகத் தவறான வழியை நேர்வழியென நம்புவார்கள். நம் வசனங்களையும், அத்தாட்சிகளையும், மறுமையின் நம் சந்திப்பையும் பொய்யெனக் கூறுகின்றவர்களின் எல்லா நல்ல காரியங்களும் அழிந்துவிடும். அவர்களின் நற்காரியங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது” என்று கூறினான்.
மூஸா (அலை) இறைவன் அருளிய தவ்ராத் வேதத்தை எடுத்துக் கொண்டு, தம் மக்களுக்கு இறைவனின் கட்டளைகள் பற்றிச் சொல்ல விரைந்தார்.
திருக்குர்ஆன் 7:142-147
- ஜெஸிலா பானு.
இறைநம்பிக்கை கொண்டவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, வேறு என்னவாக இருந்தாலும் எவர் வழிபாட்டுக்குரியவன் ஒருவன் என்று அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கான நற்கூலியை அல்லாஹ் நிச்சயம் தருவான்.
பனூ இஸ்ராயீலர்கள் மூஸா (அலை) அவர்களுடன் செங்கடல் பிளந்து அதைக் கடந்து வந்த நினைவுகளில் பூரித்துப்போய் இருந்தனர். இறைவனின் அருளை நினைத்து நன்றி சொல்லிக் கொண்டும் இருந்தனர். இருப்பினும் அவர்கள் விக்கிரகங்களை வணங்குபவர்களைக் கடந்து சென்றபோது “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித் தாருங்கள்” என்று வேண்டினார்கள். காலங்காலமாக விக்கிரகங்களை வணங்கிப் பழகியவர்களுக்கு அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி உருவம் இல்லாத இறைவனை வணங்க இயலவில்லை.
அவர்கள் விக்கிரங்களைக் கேட்டவுடன், மூஸா (அலை) “நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தார்” என்றார்கள். “அந்த மக்கள் அறியாமையில் இருப்பதால் விக்கிரகங்களை வணங்குகிறார்கள். அது அழியக் கூடியவை, வீணானவை. அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கித்தருவேன்? அல்லாஹ், உங்களை உலகத்தில் உள்ள எல்லா மக்களையும்விட மேலானவர்களாக்கி வைத்துள்ளான்.
ஃபிர்அவ்னிடம் அடிமைகளாகக் கிடந்த உங்களை விடுவித்து, கொடுமைகளிலிருந்து காப்பாற்றினான். உங்கள் ஆண் குழந்தைகளைக் கொலை செய்து, உங்கள் பெண் குழந்தைகளை மானபங்கம் செய்து உங்களைச் சிறுமைப்படுத்தியதிலிருந்து உங்களை விடுவித்தான்” என்று விளக்கினார்கள். அதனைக் கேட்டு, சிறிது காலம் அடங்கி இருந்தனர் பனூ இஸ்ராயீலர்கள்.
தூர் மலை வரை சென்றுவிட்ட மூஸா (அலை) கூட்டத்தினர், உயிரினங்களே இல்லாத பாலைவனத்தில் உண்டு மகிழவும், பருகித் திளைக்கவும் இறைவன் அருளினான். மூஸா (அலை) அவர்கள் பிரார்த்தித்தபோது “உமது கைத்தடியால் அப்பாறையை அடிப்பீராக!” என்ற இறைவனின் கட்டளைக்குப் பணிந்தார்கள் மூஸா (அலை). அப்பாறையிலிருந்து பன்னிரெண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன.
ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடிக்கு ஒரு நீர்த்துறையென்று அங்குத் தங்கி அனுபவித்தனர். அதுமட்டுமின்றி மன்னு என்ற உணவுப் பொருளையும் சொர்க்கத்திலிருந்து இறைவன் அவர்களுக்காக இறக்கி அருளினான். அவர்கள் அதற்கு “மூஸாவே! ஒரே விதமான உணவை சாப்பிட்டு அலுத்துவிட்டது. ஏதாவது இறைச்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்க, அதற்கும் சளைக்காமல் பிரார்த்தித்தார் மூஸா (அலை).
இறைவனும் அவர்களுக்கு ஸல்வா என்ற குருவிகளை தினமும் இறக்கினான். அவர்கள் மேலும் பூமி விளைவிக்கும் கீரை வகைகள், வெள்ளரிக்காய், வெங்காயம், பருப்பு, கோதுமை போன்றவற்றை வெளிப்படுத்திட இறைவனிடம் கேளுங்கள்” என்று ஆசைப்பட்டனர். அதற்கு மூஸா (அலை) “நல்லதை விடுத்து மிகத்தாழ்வானதை நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஒரு நகரத்திற்குச் சென்று விடுங்கள், அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று கூறினார்கள்.
மக்கள் மீண்டும் விக்கிரகங்கள் இல்லையென்றால் நமக்கான சட்டத்திட்டங்களையாவது பெற்று வாருங்கள் என்று ஏதாவது ஒன்றை மூஸா (அலை) அவர்களைக் கேட்ட வண்ணம் இருந்தனர். மூஸா (அலை) தம் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களை, பனூ இஸ்ராயீலர்கள் வழிதவறிச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மக்களைத் திருப்திப்படுத்த மூஸா (அலை) இறைவனின் குரலை முதன்முதலில் கேட்ட தூர்-சினாய் மலைக்குச் சென்று பிரார்த்தித்தார்கள்.
அவரை முப்பது நாட்கள் இறைவன் நோன்பு இருக்கப் பணித்தான். அவர்களும் நோன்பு இருந்தார்கள். பொதுவாக நோன்பு இருப்பவர்கள் வாயில் வாடை வரும். அந்த வாடையுடன் மூஸா (அலை) இறைவனிடம் பேசத் தயங்கி தம் வாயில் மிஸ்வாக் போன்ற செடியை வைத்து தேய்த்துத் தம் நோன்பை முறித்துவிட்டார்கள்.
மூஸா (அலை) அவர்களிடம் இறைவன் “நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும். தவறிழைத்ததால் இன்னும் பத்து நாட்கள் நோன்பு இருந்துவிட்டு வாருங்கள்” என்று சொன்னான். அவ்வாறே மூஸா (அலை) அவர்களும் இறைவனின் கட்டளைக்குப் பணிந்தார்கள்.
இறைநம்பிக்கை கொண்டவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, வேறு என்னவாக இருந்தாலும் எவர் வழிபாட்டுக்குரியவன் ஒருவன் என்று அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கான நற்கூலியை அல்லாஹ் நிச்சயம் தருவான்.
திருக்குர்ஆன் 7:138-142, 2:60-62.
- ஜெஸிலா பானு.
அவர்கள் விக்கிரங்களைக் கேட்டவுடன், மூஸா (அலை) “நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தார்” என்றார்கள். “அந்த மக்கள் அறியாமையில் இருப்பதால் விக்கிரகங்களை வணங்குகிறார்கள். அது அழியக் கூடியவை, வீணானவை. அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக ஆக்கித்தருவேன்? அல்லாஹ், உங்களை உலகத்தில் உள்ள எல்லா மக்களையும்விட மேலானவர்களாக்கி வைத்துள்ளான்.
ஃபிர்அவ்னிடம் அடிமைகளாகக் கிடந்த உங்களை விடுவித்து, கொடுமைகளிலிருந்து காப்பாற்றினான். உங்கள் ஆண் குழந்தைகளைக் கொலை செய்து, உங்கள் பெண் குழந்தைகளை மானபங்கம் செய்து உங்களைச் சிறுமைப்படுத்தியதிலிருந்து உங்களை விடுவித்தான்” என்று விளக்கினார்கள். அதனைக் கேட்டு, சிறிது காலம் அடங்கி இருந்தனர் பனூ இஸ்ராயீலர்கள்.
தூர் மலை வரை சென்றுவிட்ட மூஸா (அலை) கூட்டத்தினர், உயிரினங்களே இல்லாத பாலைவனத்தில் உண்டு மகிழவும், பருகித் திளைக்கவும் இறைவன் அருளினான். மூஸா (அலை) அவர்கள் பிரார்த்தித்தபோது “உமது கைத்தடியால் அப்பாறையை அடிப்பீராக!” என்ற இறைவனின் கட்டளைக்குப் பணிந்தார்கள் மூஸா (அலை). அப்பாறையிலிருந்து பன்னிரெண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன.
ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடிக்கு ஒரு நீர்த்துறையென்று அங்குத் தங்கி அனுபவித்தனர். அதுமட்டுமின்றி மன்னு என்ற உணவுப் பொருளையும் சொர்க்கத்திலிருந்து இறைவன் அவர்களுக்காக இறக்கி அருளினான். அவர்கள் அதற்கு “மூஸாவே! ஒரே விதமான உணவை சாப்பிட்டு அலுத்துவிட்டது. ஏதாவது இறைச்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்க, அதற்கும் சளைக்காமல் பிரார்த்தித்தார் மூஸா (அலை).
இறைவனும் அவர்களுக்கு ஸல்வா என்ற குருவிகளை தினமும் இறக்கினான். அவர்கள் மேலும் பூமி விளைவிக்கும் கீரை வகைகள், வெள்ளரிக்காய், வெங்காயம், பருப்பு, கோதுமை போன்றவற்றை வெளிப்படுத்திட இறைவனிடம் கேளுங்கள்” என்று ஆசைப்பட்டனர். அதற்கு மூஸா (அலை) “நல்லதை விடுத்து மிகத்தாழ்வானதை நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஒரு நகரத்திற்குச் சென்று விடுங்கள், அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று கூறினார்கள்.
மக்கள் மீண்டும் விக்கிரகங்கள் இல்லையென்றால் நமக்கான சட்டத்திட்டங்களையாவது பெற்று வாருங்கள் என்று ஏதாவது ஒன்றை மூஸா (அலை) அவர்களைக் கேட்ட வண்ணம் இருந்தனர். மூஸா (அலை) தம் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களை, பனூ இஸ்ராயீலர்கள் வழிதவறிச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மக்களைத் திருப்திப்படுத்த மூஸா (அலை) இறைவனின் குரலை முதன்முதலில் கேட்ட தூர்-சினாய் மலைக்குச் சென்று பிரார்த்தித்தார்கள்.
அவரை முப்பது நாட்கள் இறைவன் நோன்பு இருக்கப் பணித்தான். அவர்களும் நோன்பு இருந்தார்கள். பொதுவாக நோன்பு இருப்பவர்கள் வாயில் வாடை வரும். அந்த வாடையுடன் மூஸா (அலை) இறைவனிடம் பேசத் தயங்கி தம் வாயில் மிஸ்வாக் போன்ற செடியை வைத்து தேய்த்துத் தம் நோன்பை முறித்துவிட்டார்கள்.
மூஸா (அலை) அவர்களிடம் இறைவன் “நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும். தவறிழைத்ததால் இன்னும் பத்து நாட்கள் நோன்பு இருந்துவிட்டு வாருங்கள்” என்று சொன்னான். அவ்வாறே மூஸா (அலை) அவர்களும் இறைவனின் கட்டளைக்குப் பணிந்தார்கள்.
இறைநம்பிக்கை கொண்டவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, வேறு என்னவாக இருந்தாலும் எவர் வழிபாட்டுக்குரியவன் ஒருவன் என்று அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கான நற்கூலியை அல்லாஹ் நிச்சயம் தருவான்.
திருக்குர்ஆன் 7:138-142, 2:60-62.
- ஜெஸிலா பானு.
இறந்து போகும் நேரத்தில் கேட்கப்படும் பாவ மன்னிப்பு ஏற்கப்படாது.
இறைவன் ஃபிர்அவ்ன் கூட்டத்தினருக்குத் தந்த சோதனைகளை மூஸா (அலை) தம் பிரார்த்தனைகளின் மூலம் நீக்கினார்கள். இருப்பினும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் பனூ இஸ்ராயீலர்களுக்கு மாறு செய்தனர்.
மூஸா (அலை) இரவோடு இரவாகச் சென்று விடலாம் என்று முடிவு செய்து இறைநம்பிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள். யாருக்கும் தெரியாமல் இரகசியமாகத் தமது உடமைகளை முடிந்தவரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
அவர்கள் எகிப்தைவிட்டு செல்வது பற்றி ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்கு மறுநாள் காலையில் தெரிந்துவிட்டது. அவர்கள் அதனை ஃபிர்அவ்னுக்குத் தெரிவித்துவிட்டனர். ஃபிர்அவ்ன் தம் படைகளைத் திரட்டிக் கொண்டு மிக வேகமாக அவர்களைத் தேடிப் புறப்பட்டான்.
ஃபிர்அவ்ன் கூட்டத்தைச் சேர்ந்த ஓர் இறைநம்பிக்கையாளர் விரைந்து வந்து இந்தச் செய்தியை பனூ இஸ்ராயீலர்களுக்குத் தெரிவித்தார். உடனே பனூ இஸ்ராயீலர்கள் மூஸா (அலை) அவர்களைக் குறைச்சொல்ல ஆரம்பித்தார்கள் “உங்கள் பேச்சைக் கேட்டு நாங்கள் வெளியேறினோம். இப்போது என்ன செய்யப் போகிறோம்? ஃபிர்அவ்ன் நம்மைக் கண்டுபிடித்து எல்லோரையும் கொலை செய்துவிடப் போகிறான். நாம் எகிப்திலேயே தங்கியிருந்தால் ஃபிர்அவ்னின் கொடுமைகளுக்கு ஆளாகியிருப்போம், ஆனால் உயிர் மிஞ்சியிருக்கும். இப்போது உயிரையே இழக்கப் போகிறோம்” என்று பீதியில் இருந்த மக்கள் இறைநம்பிக்கையை இழந்து பேசினார்கள்.
மனம் தளராத மூஸா (அலை) அவர்கள் “பயப்படாதீர்கள்! ஃபிர்அவ்னிடமிருந்து நம்மைக் காப்பாற்றி இவ்வளவு தூரம் கொண்டு வந்த நம் இறைவன் துணையிருப்பான்” என்று வேகமாகத் தம் கூட்டத்தினருடன் நகர்ந்தார்கள். அப்போது செங்கடல் குறுக்கிட்டது. “நதியை எப்படி நாம் எப்படிக் கடக்கப் போகிறோம். சிக்கிவிட்டோம், ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் நெருங்கிவிட்டனர்” என்று பயத்தில் அழத் தொடங்கிவிட்டனர்.
இறைவன் மூஸா (அலை) அவர்களைத் தம் கைத்தடியைக் கொண்டு தரையை அடிக்கும்படி கட்டளையிட்டான். மூஸா (அலை) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். கடல் இரண்டாகப் பிளந்தது. கடல் பிளந்து அவர்களுக்கு வழி விட்டது. மூஸா (அலை) மற்றும் அவர்கள் கூட்டத்தினர் அதில் நடந்து கடந்து சென்றாகள். பின்னால் துரத்தி வந்த ஃபிர்அவ்ன் இந்த அதிசயத்தைக் கண்டு வாய்பிளந்து, தம் கூட்டத்தினரிடம் தான் சொன்னதன் பேரில்தான் கடல் பிளந்துள்ளது என்று பொய்யுரைத்தான்.
மூஸா (அலை) மற்றும் அவர்களுடைய கூட்டத்தார் அக்கரையை எளிதாக அடைந்தார்கள்.
ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் நடுக்கடலை அடைந்ததும் கடல் மூடுவதைக் கண்ட ஃபிர்அவ்ன் “இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த இறைவனின் மீது நம்பிக்கைக் கொண்டார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் நம்பிக்கைக் கொள்கிறேன், இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். ஆனால் அவனுடைய பாவ மன்னிப்பு ஏற்கப்படவில்லை. ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் கடலில் மூழ்கடிக்கப்பட்டார்கள்.
இறந்து போகும் நேரத்தில் கேட்கப்படும் பாவ மன்னிப்பு ஏற்கப்படாது.
ஃபிர்அவ்னை மூழ்கடித்ததில் அத்தாட்சி உள்ளதாக, திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் “உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” என்று திருக்குர்ஆனின் இறைவசனத்திற்கேற்ப, பல்லாயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் கண்டெடுக்கப்பட்டுத் தற்போது எகிப்து நாட்டின் கெய்ரோ நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.
திருக்குர்ஆன் 26:52-68, 10:88-92
- ஜெஸிலா பானு.
மூஸா (அலை) இரவோடு இரவாகச் சென்று விடலாம் என்று முடிவு செய்து இறைநம்பிக்கையாளர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள். யாருக்கும் தெரியாமல் இரகசியமாகத் தமது உடமைகளை முடிந்தவரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
அவர்கள் எகிப்தைவிட்டு செல்வது பற்றி ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்கு மறுநாள் காலையில் தெரிந்துவிட்டது. அவர்கள் அதனை ஃபிர்அவ்னுக்குத் தெரிவித்துவிட்டனர். ஃபிர்அவ்ன் தம் படைகளைத் திரட்டிக் கொண்டு மிக வேகமாக அவர்களைத் தேடிப் புறப்பட்டான்.
ஃபிர்அவ்ன் கூட்டத்தைச் சேர்ந்த ஓர் இறைநம்பிக்கையாளர் விரைந்து வந்து இந்தச் செய்தியை பனூ இஸ்ராயீலர்களுக்குத் தெரிவித்தார். உடனே பனூ இஸ்ராயீலர்கள் மூஸா (அலை) அவர்களைக் குறைச்சொல்ல ஆரம்பித்தார்கள் “உங்கள் பேச்சைக் கேட்டு நாங்கள் வெளியேறினோம். இப்போது என்ன செய்யப் போகிறோம்? ஃபிர்அவ்ன் நம்மைக் கண்டுபிடித்து எல்லோரையும் கொலை செய்துவிடப் போகிறான். நாம் எகிப்திலேயே தங்கியிருந்தால் ஃபிர்அவ்னின் கொடுமைகளுக்கு ஆளாகியிருப்போம், ஆனால் உயிர் மிஞ்சியிருக்கும். இப்போது உயிரையே இழக்கப் போகிறோம்” என்று பீதியில் இருந்த மக்கள் இறைநம்பிக்கையை இழந்து பேசினார்கள்.
மனம் தளராத மூஸா (அலை) அவர்கள் “பயப்படாதீர்கள்! ஃபிர்அவ்னிடமிருந்து நம்மைக் காப்பாற்றி இவ்வளவு தூரம் கொண்டு வந்த நம் இறைவன் துணையிருப்பான்” என்று வேகமாகத் தம் கூட்டத்தினருடன் நகர்ந்தார்கள். அப்போது செங்கடல் குறுக்கிட்டது. “நதியை எப்படி நாம் எப்படிக் கடக்கப் போகிறோம். சிக்கிவிட்டோம், ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் நெருங்கிவிட்டனர்” என்று பயத்தில் அழத் தொடங்கிவிட்டனர்.
இறைவன் மூஸா (அலை) அவர்களைத் தம் கைத்தடியைக் கொண்டு தரையை அடிக்கும்படி கட்டளையிட்டான். மூஸா (அலை) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். கடல் இரண்டாகப் பிளந்தது. கடல் பிளந்து அவர்களுக்கு வழி விட்டது. மூஸா (அலை) மற்றும் அவர்கள் கூட்டத்தினர் அதில் நடந்து கடந்து சென்றாகள். பின்னால் துரத்தி வந்த ஃபிர்அவ்ன் இந்த அதிசயத்தைக் கண்டு வாய்பிளந்து, தம் கூட்டத்தினரிடம் தான் சொன்னதன் பேரில்தான் கடல் பிளந்துள்ளது என்று பொய்யுரைத்தான்.
மூஸா (அலை) மற்றும் அவர்களுடைய கூட்டத்தார் அக்கரையை எளிதாக அடைந்தார்கள்.
ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் நடுக்கடலை அடைந்ததும் கடல் மூடுவதைக் கண்ட ஃபிர்அவ்ன் “இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த இறைவனின் மீது நம்பிக்கைக் கொண்டார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் நம்பிக்கைக் கொள்கிறேன், இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். ஆனால் அவனுடைய பாவ மன்னிப்பு ஏற்கப்படவில்லை. ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் கடலில் மூழ்கடிக்கப்பட்டார்கள்.
இறந்து போகும் நேரத்தில் கேட்கப்படும் பாவ மன்னிப்பு ஏற்கப்படாது.
ஃபிர்அவ்னை மூழ்கடித்ததில் அத்தாட்சி உள்ளதாக, திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் “உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” என்று திருக்குர்ஆனின் இறைவசனத்திற்கேற்ப, பல்லாயிரம் வருடங்களுக்கு முன் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் கண்டெடுக்கப்பட்டுத் தற்போது எகிப்து நாட்டின் கெய்ரோ நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது.
திருக்குர்ஆன் 26:52-68, 10:88-92
- ஜெஸிலா பானு.
துபாயில் புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் 20-ஆம் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது மறைந்த ‘ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்’ அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.
துபாயில் புனித ரமதான் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் 20-ஆம் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது மறைந்த ‘ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்’ அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.
இவ்விழா ரமதான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நிகழ்கின்றது. உலகப் புகழ்பெற்ற அறிஞர்களின் சிறப்பு விரிவுரைகள் தினமும் நடைபெற உள்ளன.
அரபி ஆங்கிலம் தவிர தமிழ், மலையாளம், பங்காளி மொழிகளிலும் சிறப்புரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டின் வரவேற்பையடுத்து இந்த ஆண்டும் அரபி மொழியில் எழுத்தணிக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அமீரகத்தின் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெறுகிறது.
இந்த சர்வதேச குர்ஆன் போட்டி இன்று 12 ஜூன் 2016 இரவிலிருந்து ஆரம்பமாகிறது. ரமதான் ஏழில் தொடங்கி இருபது வரை நடைபெறும் இந்தப் போட்டியில் சுமார் 92 நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
குர்ஆனை மனனம் செய்து இப்போட்டியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு, இப்போட்டிக் குழுவினர் 500 கேள்விகள் தயார் செய்து வைத்துள்ளனர். ஆரம்பத் தகுதி சுற்றில் தகுதிப் பெற்றவர்களுக்கு இறுதிச் சுற்றில் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். அதில் இரண்டு கேள்விகள் மதியம் அவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் நடைபெறும் கூட்டத்தில் கேட்கப்படும். மற்ற மூன்று கேள்விகள் துபாய் சேம்பர் அரங்கத்தின் மேடையில் எல்லோர் முன்னிலையிலும் கேட்கப்படும்.
20-ஆம் சர்வதேச குர்ஆன் போட்டியின் நடுவர்களாக, சவுதி அரேபியாவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் அதெல் பின் இப்ராஹிம் முஹம்மது ரிஃபாய், அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹசன் அப்துல்லாஹ் அல் அலி, எகிப்தைச் சேர்ந்த ஷேக் அய்மன் அகமது முஹம்மது சயீத், குவைத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல் அஜீஸ் ஃபாதெல் மத்தார் ஃபஹத் அல் அன்ஸி, சிரியாவைச் சேர்ந்த ஷேக் அய்மன் ருஷ்டி சுவைத் மற்றும் சூடானைச் சேர்ந்த ஷேக் அலி முஹம்மது அல் ஸைன் மஸ்ரூவி.
உலகத்திலேயே குர்ஆனுக்காக நடத்தப்படும் போட்டிகளில் துபாயில் நடத்தப்படும் இந்த சர்வதேசப் போட்டியே மிகப் பெரிய அளவில் நடைபெறும் போட்டி. இதில் வழங்கப்படும் பரிசு மிகவும் மேன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஜெஸிலா பானு.
இவ்விழா ரமதான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நிகழ்கின்றது. உலகப் புகழ்பெற்ற அறிஞர்களின் சிறப்பு விரிவுரைகள் தினமும் நடைபெற உள்ளன.
அரபி ஆங்கிலம் தவிர தமிழ், மலையாளம், பங்காளி மொழிகளிலும் சிறப்புரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டின் வரவேற்பையடுத்து இந்த ஆண்டும் அரபி மொழியில் எழுத்தணிக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அமீரகத்தின் துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெறுகிறது.
இந்த சர்வதேச குர்ஆன் போட்டி இன்று 12 ஜூன் 2016 இரவிலிருந்து ஆரம்பமாகிறது. ரமதான் ஏழில் தொடங்கி இருபது வரை நடைபெறும் இந்தப் போட்டியில் சுமார் 92 நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
குர்ஆனை மனனம் செய்து இப்போட்டியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு, இப்போட்டிக் குழுவினர் 500 கேள்விகள் தயார் செய்து வைத்துள்ளனர். ஆரம்பத் தகுதி சுற்றில் தகுதிப் பெற்றவர்களுக்கு இறுதிச் சுற்றில் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். அதில் இரண்டு கேள்விகள் மதியம் அவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் நடைபெறும் கூட்டத்தில் கேட்கப்படும். மற்ற மூன்று கேள்விகள் துபாய் சேம்பர் அரங்கத்தின் மேடையில் எல்லோர் முன்னிலையிலும் கேட்கப்படும்.
20-ஆம் சர்வதேச குர்ஆன் போட்டியின் நடுவர்களாக, சவுதி அரேபியாவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் அதெல் பின் இப்ராஹிம் முஹம்மது ரிஃபாய், அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹசன் அப்துல்லாஹ் அல் அலி, எகிப்தைச் சேர்ந்த ஷேக் அய்மன் அகமது முஹம்மது சயீத், குவைத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல் அஜீஸ் ஃபாதெல் மத்தார் ஃபஹத் அல் அன்ஸி, சிரியாவைச் சேர்ந்த ஷேக் அய்மன் ருஷ்டி சுவைத் மற்றும் சூடானைச் சேர்ந்த ஷேக் அலி முஹம்மது அல் ஸைன் மஸ்ரூவி.
உலகத்திலேயே குர்ஆனுக்காக நடத்தப்படும் போட்டிகளில் துபாயில் நடத்தப்படும் இந்த சர்வதேசப் போட்டியே மிகப் பெரிய அளவில் நடைபெறும் போட்டி. இதில் வழங்கப்படும் பரிசு மிகவும் மேன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஜெஸிலா பானு.
அனைவரும் பசி உணர்வை அறிந்து அதன் அருமையால் நல்ல பலன்களை பெற்றிட ரமலான் நோன்பு உறுதுணை செய்கின்றது.
பசியின் கொடுமையை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும், அதன்மூலம் இருப்பவர் இல்லாதவருக்கு உதவ வழிகாட்டுகிறது ரமலான் நோன்பு. அனைவரும் பசி உணர்வை அறிந்து அதன் அருமையால் நல்ல பலன்களை பெற்றிட ரமலான் நோன்பு உறுதுணை செய்கின்றது.
‘நோன்பு’ இறைவனுக்காக என்ற தியாக உணர்வில் செயல்படுவதால், நோன்பு வைப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் சிரமங்கள் எதுவும் சிரமமாகவே தெரிவது இல்லை. சிரமத்தை தாங்கிக்கொள்ளும் பக்குவம் ஏற்படுகின்ற பொழுது சகிப்புத்தன்மையும் தானாகவே தோன்றி விடுகின்றது.
சகிப்புத் தன்மையை அதிகரிக்கும்போது அது மனஉறுதியை ஏற்படுத்துகிறது. ‘மனோ இச்சைகளை தூண்டும் சைத்தான் நோன்பு காலங்களில் விலங்கிடப்படுகின்றான்’ என்று அண்ணல் நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
அதிகமாக உண்பதும், குடிப்பதும் உடலையும், மனதையும் பாதிக்கிறது. அது சிற்றின்ப வேட்கையை அதிகப்படுத்தி மனதை கலங்கடிக்கச் செய்து விடும். இன்னும் தூக்கத்தை அதிகப்படுத்தி இறைதியானத்தையும், வணக்கத்தையும் விட்டும் நம்மை தூரமாக்கிட காரணமாகி விடும்.
நோன்பு காலங்களில் பசியினால் அடையும் நன்மைகளை கவனத்தில் கொண்டு ரமலான் அல்லாத காலங்களிலும் அரை வயிற்று உணவுடன் வாழ பழக்கப்படுத்திக் கொள்ளும்போது அது மாபெரும் நன்மைகளை நமக்கு அடைய உதவுகிறது.
அண்ணலார் கூறினார்கள், ‘நான் ஒரு நாள் பசித்திருக்க வேண்டும். மற்றொரு நாள் புசித்திருக்க வேண்டும். பட்டினியாக இருக்கும் போது நான் பொறுமையை கைக்கொள்வேன். உணவை சாப்பிட்ட அன்று திருப்தியுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தி மகிழ்வேன்’ என்றார்கள்.
நபிகளாரின் இல்லத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் உணவு இல்லை என்ற நிலை காணப்படும். அவர்கள் எவ்வாறு சாப்பிடுவதை சுருக்கிக் கொண்டார்கள் என்பதை இதன்மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
‘நீங்கள் உணவை சுருக்குவது (குறைப்பதைக்) கொண்டு மனதை உயிருள்ளதாக ஆக்குங்கள். பசித்திருப்பதன் மூலம் மனதை பரிசுத்தப்படுத்துங்கள்’ என்று கூறிய நபிகளார், தனது வாழ்நாள் முழுவதும் இதனை கடைப்பிடித்தும், செயல்படுத்தியும் காட்டினார்கள்.
ஒருமுறை அண்ணலாரின் அருமை மகள் பாத்திமா (ரலி) தனது இல்லத்தில் தயாரான ரொட்டிகளை கொண்டு வந்து தனது தந்தையான நபிகளாரிடம் தந்து விட்டு கூறினார்கள், ‘எனதருமை தந்தையே! தங்களுக்கு உண்ணத்தராமல் இந்த ரொட்டிகளை உண்பதற்கு எனக்கு மனம் வரவில்லை’ என்றார்கள்.
அப்போது அண்ணலார் கூறினார்கள், ‘அருமை மகளே! மூன்று நாட்களுக்கு பின்னர் உன் தந்தையின் வாயினுள் செல்லவிருக்கும் உணவுகளில் (நீ தந்த) இந்த உணவே முதல் உணவாகும்’ என்றார்கள்.
பசியின் உணர்வை எப்போதும் நபிகளார் புழக்கத்தில் வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்நிகழ்வு சான்று கூறுகின்றது.
பசியின் நிமித்தமேயன்றி இறைவன் யாரிடமும் நட்பு பாராட்டுவதில்லை என்பதை தீர்க்கதரிசிகளின் வாழ்வும் ஞானியரின் வாழ்வும் நமக்கு தெளிவுபடுத்தும் உண்மையாகும்.
40 நாட்கள் பசியுடன் நோன்பிருந்த பின்னரே மூஸா நபி (அலை) அவர்கள் தூர்சினா மலையில் இறைவனை தரிசிக்கவும், அவனோடு வசனிக்கவும், பாக்கியம் பெற்றார்கள்.
பசியுடன் இருப்பதால் உடலுக்கும், மனதுக்கும் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றது. எனவே பசியின் பயனை எவர் உணர்ந்து கொண்டாரோ அவர் அதனை கடைப்பிடிப்பதில் எப்போதும் முனைப்புடன் செயல்படுவார் என்பது உறுதியாகும்.
நோன்பில் பசியோடு இருக்கும்போது மனம் பக்குவப்பட்டு நமது கட்டுக்குள் வருகின்றது. சிந்தனையில் தூய்மை ஏற்பட்டு மனம் தெளிவு பெறுகின்றது. அறியும் திறன் அதிகமாகி, நினைவாற்றல் கூடுகின்றது.
ஏழைகளின் பசியை நினைவுபடுத்திடும் ரமலான் நோன்பு, அவர்களுக்கு என்றும் உதவிடவும், ஏனைய நற்செயல்களை எப்பொழுது புரிந்திடவும் நம் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி தருகின்றது.
ரமலான் மாதத்தில் ஒரு மாத காலம் தொடர்ந்து பகல் பொழுதில் உண்ணாமலும், பருகாமலும், இல்லற வாழ்வில் ஈடுபடாமலும், உடலையும் மனதையும் தகாத செயல்களில் ஈடுபடுத்தாமலும், பெருமை பேசாமலும், வீண் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமலும், முடிந்த மட்டும் மவுனமாக இருந்து இறை தியானத்தில் ஈடுபட ரமலான் நோன்பு சிறந்ததொரு பயிற்சிக்களமாக அமைந்து விடுகிறது.
அந்த ரமலான் மாதத்தில் கிடைக்கும் நல்ல அனுபவங்களை மனதில் கொண்டு, அதனை ஆண்டு முழுவதும் செயல்படுத்திட உறுதி கொண்டிட வேண்டும். அதுவே ரமலான் நோன்பை நாம் கண்ணியப்படுத்துவதாக இருக்கும். அத்தகைய ரமலானை இதயப்பூர்வமாக வரவேற்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
இறையச்சம் என்ற தக்வாவை பரிசாக தருகின்ற ரமலானே வருக!
இறைநெருக்கம் என்ற மாட்சிமையை நல்கிடும் ரமலானே வருக!
இறைவனின் மகத்துவத்தை நமது மனதில் நன்றாக பதியச் செய்யும் ரமலானே வருக!
இத்தகைய சங்கை மிகு ரமலானை தொடர்ந்து கடைப்பிடித்து இவ்வுலகிலும் மறுவுலகிலும் இறையருளைப் பெற்று நாம் அனைவரும் வாழ்வாங்கு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக! ஆமீன்.
மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.
‘நோன்பு’ இறைவனுக்காக என்ற தியாக உணர்வில் செயல்படுவதால், நோன்பு வைப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் சிரமங்கள் எதுவும் சிரமமாகவே தெரிவது இல்லை. சிரமத்தை தாங்கிக்கொள்ளும் பக்குவம் ஏற்படுகின்ற பொழுது சகிப்புத்தன்மையும் தானாகவே தோன்றி விடுகின்றது.
சகிப்புத் தன்மையை அதிகரிக்கும்போது அது மனஉறுதியை ஏற்படுத்துகிறது. ‘மனோ இச்சைகளை தூண்டும் சைத்தான் நோன்பு காலங்களில் விலங்கிடப்படுகின்றான்’ என்று அண்ணல் நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
அதிகமாக உண்பதும், குடிப்பதும் உடலையும், மனதையும் பாதிக்கிறது. அது சிற்றின்ப வேட்கையை அதிகப்படுத்தி மனதை கலங்கடிக்கச் செய்து விடும். இன்னும் தூக்கத்தை அதிகப்படுத்தி இறைதியானத்தையும், வணக்கத்தையும் விட்டும் நம்மை தூரமாக்கிட காரணமாகி விடும்.
நோன்பு காலங்களில் பசியினால் அடையும் நன்மைகளை கவனத்தில் கொண்டு ரமலான் அல்லாத காலங்களிலும் அரை வயிற்று உணவுடன் வாழ பழக்கப்படுத்திக் கொள்ளும்போது அது மாபெரும் நன்மைகளை நமக்கு அடைய உதவுகிறது.
அண்ணலார் கூறினார்கள், ‘நான் ஒரு நாள் பசித்திருக்க வேண்டும். மற்றொரு நாள் புசித்திருக்க வேண்டும். பட்டினியாக இருக்கும் போது நான் பொறுமையை கைக்கொள்வேன். உணவை சாப்பிட்ட அன்று திருப்தியுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தி மகிழ்வேன்’ என்றார்கள்.
நபிகளாரின் இல்லத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் உணவு இல்லை என்ற நிலை காணப்படும். அவர்கள் எவ்வாறு சாப்பிடுவதை சுருக்கிக் கொண்டார்கள் என்பதை இதன்மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
‘நீங்கள் உணவை சுருக்குவது (குறைப்பதைக்) கொண்டு மனதை உயிருள்ளதாக ஆக்குங்கள். பசித்திருப்பதன் மூலம் மனதை பரிசுத்தப்படுத்துங்கள்’ என்று கூறிய நபிகளார், தனது வாழ்நாள் முழுவதும் இதனை கடைப்பிடித்தும், செயல்படுத்தியும் காட்டினார்கள்.
ஒருமுறை அண்ணலாரின் அருமை மகள் பாத்திமா (ரலி) தனது இல்லத்தில் தயாரான ரொட்டிகளை கொண்டு வந்து தனது தந்தையான நபிகளாரிடம் தந்து விட்டு கூறினார்கள், ‘எனதருமை தந்தையே! தங்களுக்கு உண்ணத்தராமல் இந்த ரொட்டிகளை உண்பதற்கு எனக்கு மனம் வரவில்லை’ என்றார்கள்.
அப்போது அண்ணலார் கூறினார்கள், ‘அருமை மகளே! மூன்று நாட்களுக்கு பின்னர் உன் தந்தையின் வாயினுள் செல்லவிருக்கும் உணவுகளில் (நீ தந்த) இந்த உணவே முதல் உணவாகும்’ என்றார்கள்.
பசியின் உணர்வை எப்போதும் நபிகளார் புழக்கத்தில் வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்நிகழ்வு சான்று கூறுகின்றது.
பசியின் நிமித்தமேயன்றி இறைவன் யாரிடமும் நட்பு பாராட்டுவதில்லை என்பதை தீர்க்கதரிசிகளின் வாழ்வும் ஞானியரின் வாழ்வும் நமக்கு தெளிவுபடுத்தும் உண்மையாகும்.
40 நாட்கள் பசியுடன் நோன்பிருந்த பின்னரே மூஸா நபி (அலை) அவர்கள் தூர்சினா மலையில் இறைவனை தரிசிக்கவும், அவனோடு வசனிக்கவும், பாக்கியம் பெற்றார்கள்.
பசியுடன் இருப்பதால் உடலுக்கும், மனதுக்கும் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றது. எனவே பசியின் பயனை எவர் உணர்ந்து கொண்டாரோ அவர் அதனை கடைப்பிடிப்பதில் எப்போதும் முனைப்புடன் செயல்படுவார் என்பது உறுதியாகும்.
நோன்பில் பசியோடு இருக்கும்போது மனம் பக்குவப்பட்டு நமது கட்டுக்குள் வருகின்றது. சிந்தனையில் தூய்மை ஏற்பட்டு மனம் தெளிவு பெறுகின்றது. அறியும் திறன் அதிகமாகி, நினைவாற்றல் கூடுகின்றது.
ஏழைகளின் பசியை நினைவுபடுத்திடும் ரமலான் நோன்பு, அவர்களுக்கு என்றும் உதவிடவும், ஏனைய நற்செயல்களை எப்பொழுது புரிந்திடவும் நம் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி தருகின்றது.
ரமலான் மாதத்தில் ஒரு மாத காலம் தொடர்ந்து பகல் பொழுதில் உண்ணாமலும், பருகாமலும், இல்லற வாழ்வில் ஈடுபடாமலும், உடலையும் மனதையும் தகாத செயல்களில் ஈடுபடுத்தாமலும், பெருமை பேசாமலும், வீண் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமலும், முடிந்த மட்டும் மவுனமாக இருந்து இறை தியானத்தில் ஈடுபட ரமலான் நோன்பு சிறந்ததொரு பயிற்சிக்களமாக அமைந்து விடுகிறது.
அந்த ரமலான் மாதத்தில் கிடைக்கும் நல்ல அனுபவங்களை மனதில் கொண்டு, அதனை ஆண்டு முழுவதும் செயல்படுத்திட உறுதி கொண்டிட வேண்டும். அதுவே ரமலான் நோன்பை நாம் கண்ணியப்படுத்துவதாக இருக்கும். அத்தகைய ரமலானை இதயப்பூர்வமாக வரவேற்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
இறையச்சம் என்ற தக்வாவை பரிசாக தருகின்ற ரமலானே வருக!
இறைநெருக்கம் என்ற மாட்சிமையை நல்கிடும் ரமலானே வருக!
இறைவனின் மகத்துவத்தை நமது மனதில் நன்றாக பதியச் செய்யும் ரமலானே வருக!
இத்தகைய சங்கை மிகு ரமலானை தொடர்ந்து கடைப்பிடித்து இவ்வுலகிலும் மறுவுலகிலும் இறையருளைப் பெற்று நாம் அனைவரும் வாழ்வாங்கு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக! ஆமீன்.
மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.
புனித ரமலானில் அதிகமான பலன்களை பெறுவதற்கு பாவமன்னிப்பை ஒரு கேடயமாக உலக முஸ்லிம்கள் பயன்படுத்தி முழுப்பயன்களையும் பெற்றிட வல்ல இறைவன் கிருபை செய்வானாக.
புனித ரமலான் மாதத்திற்கு ‘ஷஹ்ருல் இஸ்திபார்’ (பாவமன்னிப்பு வேண்டப்படும் மாதம்) எனும் தத்துவப்பெயரும் உண்டு. ஒரு நோன்பாளி தான் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, மனம் விரும்பியோ, மனம் விரும்பாமலோ செய்த, செய்கின்ற, செய்யப்படுகின்ற சிறிய–பெரிய தவறுகளுக்கும், பாவங்களுக்கும் கண்டிப்பாக பாவமன்னிப்பு கோர வேண்டும்.
மேலும் முஸ்லிம்களாக இறந்துபோன பெற்றோர், உற்றார், உறவினர், அண்டை அயலார், சகோதர–சகோதரியர், தற்காலத்தில் வாழும் உலக முஸ்லிம்கள், காலம் கடந்து சென்ற முஸ்லிம்கள், பாவமன்னிப்பு கோரவேண்டிய கோரிக்கை வைக்கும் முஸ்லிம்கள்... என அனைவருக்கும் படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடவேண்டும்.
பாவமன்னிப்பு தேடுவதற்கு நேரமோ, காலமோ, கிழமையோ, மாதமோ குறிக்கப்படவில்லை. பாவமன்னிப்பு இப்பொழுதும் தேடலாம், இனி எப்பொழுதும் தேடலாம். நடந்துவிட்ட பாவங்களுக்கும் தேடலாம்; இனி நடக்கவிருக்கிற பாவங்களுக்கும் தேடலாம். எனினும் புனித ரமலான் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவமன்னிப்பு வேண்டுவதற்கும் ஒரு விசேஷமான மாதம். ஆதலால் புனித ரமலானில் கூடுதலாக கவனம் செலுத்தி அதிகமாக பாவமன்னிப்பு வேண்டப்படுகிறது. இதுதான் ரமலானின் தனித்துவமான மகத்துவம்.
‘‘எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற்கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பிருக்கிறாரோ, அவருக்காக அவன் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) புகாரி: 1901)
‘‘ஐங்காலத் தொழுகைகள், ஒரு ஜும்ஆவில் இருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு வருட ரமலானில் இருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கிடையில் பெரும்பாவங்களை தவிர்த்திருந்தால் அவைகள் (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரமாக அமைந்து விடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (முஸ்லிம்)
நோய்க்கு சிகிச்சை பார்ப்பது போன்று, பாவத்திற்கும் சிகிச்சை பார்க்கவேண்டும். பாவத்திற்கு சிகிச்சையாகவும், மருந்து நிவாரணமாகவும் ‘இஸ்திபார் – பாவமன்னிப்பு வேண்டுதல்’ அமைந்துள்ளது. இதை புனித ரமலானில் அதிகம் தேடவேண்டும். குறிப்பாக ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள இரண்டாவது பத்து நாட்கள் பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவங்கள் மன்னிக்கப்படும் பகுதியாகவும் அமைந்துள்ளது. முடிந்தளவு நோன்பாளிகள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று, புண்ணியங்களை தேடி புறப்பட்டு, புது மனிதர்களாகவும், புனிதர்களாகவும் மாற்றம் பெறவேண்டும்.
‘‘யார் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ, அவர் (அதற்கு) முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) புகாரி)
‘‘அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ர் எது என்று நான் அறிந்து கொண்டால், அதிலே நான் என்ன கூற வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்?’’ என ஆயிஷா (ரலி) கேட்டபோது, ‘இறைவா! நீ மன்னிப்பவன்; மன்னிப்பை நேசிப்பவன்; எனவே எனது பாவத்தை நீ மன்னித்துவிடு!’ என்பதை நீ ஓதி வா என நபி (ஸல்) கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) திர்மிதி).
‘‘எனது சமுதாயத்திற்கு ரமலான் மாதத்தில் ஐந்து அருட்பாக்கியங்கள் பிரத்தியேகமான முறையில் வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபுஹீரைரா (ரலி) நூல்: அஹ்மது)
புனித ரமலான் மாதம் முழுவதும் பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நாட்களாக உள்ளது. ரமலான் அல்லாத காலங்களிலும் பாவமன்னிப்பு தேடலாம்.
‘பயபக்தியாளர்கள் விடியற் காலங்களில் (சஹர் நேரம்) மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள்’ (51:18), ‘அவர்கள் (இரவின் கடைசி) சஹர் நேரத்தில் மன்னிப்புக்கோருவோராகவும் இருப்பார்கள்’ (3:17) என்பது திருக்குர்ஆன் மொழியாகும்.
பாவமன்னிப்பு வேண்டுவது பாவம் செய்யும் பாமரர்களின் செயல்மட்டும் அல்ல. பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட நபிமார்களும், ஆதி நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் பாவமன்னிப்பு வேண்டியுள்ளார்கள்.
அனைத்து நபிமார்களும் பாவம் செய்தார்களா? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பாவமன்னிப்பு வேண்டியது அவர்கள் செய்த பாவத்திற்காக அல்ல. பாவம் செய்யும் மனிதன் இறைவனிடம் எப்படி பாவமன்னிப்பு வேண்டும் என்பதை கற்றுத்தருவதற்காகவே அன்றி வேறு இல்லை.
மனிதனை பொறுத்த அளவில் பாவமன்னிப்பு தேடுவது பாவங்களிலிருந்து விடுபட. நபிமார்களை பொறுத்த அளவில் அவர்களின் அந்தஸ்து மேம்பட பலவழிகள் உண்டு. அதில் இதுவும் ஒன்று.
ஆதம் (அலை) அவர்களின் பாவமன்னிப்பு:
‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’’ (திருக்குர்ஆன் 7:23)
நபி (ஸல்) அவர்களின் பாவமன்னிப்பு:
‘என் மனதிலே ஒருவிதமான நெருடல் உள்ளது. நான் ஒரு நாளைக்கு நூறுதடவை அல்லாஹ்விடம் பாவ மீட்சி தேடுகிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள்.
பாவமன்னிப்புத் தேடுவதால் கிடைக்கும் பலன்கள்:
மன அமைதி ஏற்படுகிறது, உள்ளம் சாந்தம் பெறுகிறது, உடல் வலிமை பெறுகிறது, நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. மனிதனின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.
பொய்த்துபோன மழை பொழிகிறது, நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்கிறது, விசாலமான வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது, பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகளாக மாற்றப்படுகிறது.
சோதனைகள் தடுத்து நிறுத்தப்படுகிறது, ஷைத்தானின் அதிருப்தியும் இறைவனின் திருப்தியும் கிடைக்கிறது. உள்ளம் உயிர் பெறுகிறது, அனைத்து விதமான பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது, மறுமையில் பாதுகாப்பு கிடைக்கிறது, உள்ளங்களுக்கிடையில் பகைமை நீங்கும், மார்க்கமும், அமலும் பாதுகாக்கப்படும்.
இவ்வளவு பலன்களை உள்ளடக்கிய பாவமன்னிப்புத் தேடுவதை நாம் உதாசீனப்படுத்தக்கூடாது. புனித ரமலானில் அதிகமான பலன்களை பெறுவதற்கு பாவமன்னிப்பை ஒரு கேடயமாக உலக முஸ்லிம்கள் பயன்படுத்தி முழுப்பயன்களையும் பெற்றிட வல்ல இறைவன் கிருபை செய்வானாக.
மேலும் முஸ்லிம்களாக இறந்துபோன பெற்றோர், உற்றார், உறவினர், அண்டை அயலார், சகோதர–சகோதரியர், தற்காலத்தில் வாழும் உலக முஸ்லிம்கள், காலம் கடந்து சென்ற முஸ்லிம்கள், பாவமன்னிப்பு கோரவேண்டிய கோரிக்கை வைக்கும் முஸ்லிம்கள்... என அனைவருக்கும் படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடவேண்டும்.
பாவமன்னிப்பு தேடுவதற்கு நேரமோ, காலமோ, கிழமையோ, மாதமோ குறிக்கப்படவில்லை. பாவமன்னிப்பு இப்பொழுதும் தேடலாம், இனி எப்பொழுதும் தேடலாம். நடந்துவிட்ட பாவங்களுக்கும் தேடலாம்; இனி நடக்கவிருக்கிற பாவங்களுக்கும் தேடலாம். எனினும் புனித ரமலான் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவமன்னிப்பு வேண்டுவதற்கும் ஒரு விசேஷமான மாதம். ஆதலால் புனித ரமலானில் கூடுதலாக கவனம் செலுத்தி அதிகமாக பாவமன்னிப்பு வேண்டப்படுகிறது. இதுதான் ரமலானின் தனித்துவமான மகத்துவம்.
‘‘எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற்கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பிருக்கிறாரோ, அவருக்காக அவன் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) புகாரி: 1901)
‘‘ஐங்காலத் தொழுகைகள், ஒரு ஜும்ஆவில் இருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு வருட ரமலானில் இருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கிடையில் பெரும்பாவங்களை தவிர்த்திருந்தால் அவைகள் (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரமாக அமைந்து விடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (முஸ்லிம்)
நோய்க்கு சிகிச்சை பார்ப்பது போன்று, பாவத்திற்கும் சிகிச்சை பார்க்கவேண்டும். பாவத்திற்கு சிகிச்சையாகவும், மருந்து நிவாரணமாகவும் ‘இஸ்திபார் – பாவமன்னிப்பு வேண்டுதல்’ அமைந்துள்ளது. இதை புனித ரமலானில் அதிகம் தேடவேண்டும். குறிப்பாக ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள இரண்டாவது பத்து நாட்கள் பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவங்கள் மன்னிக்கப்படும் பகுதியாகவும் அமைந்துள்ளது. முடிந்தளவு நோன்பாளிகள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று, புண்ணியங்களை தேடி புறப்பட்டு, புது மனிதர்களாகவும், புனிதர்களாகவும் மாற்றம் பெறவேண்டும்.
‘‘யார் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ, அவர் (அதற்கு) முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) புகாரி)
‘‘அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ர் எது என்று நான் அறிந்து கொண்டால், அதிலே நான் என்ன கூற வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்?’’ என ஆயிஷா (ரலி) கேட்டபோது, ‘இறைவா! நீ மன்னிப்பவன்; மன்னிப்பை நேசிப்பவன்; எனவே எனது பாவத்தை நீ மன்னித்துவிடு!’ என்பதை நீ ஓதி வா என நபி (ஸல்) கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) திர்மிதி).
‘‘எனது சமுதாயத்திற்கு ரமலான் மாதத்தில் ஐந்து அருட்பாக்கியங்கள் பிரத்தியேகமான முறையில் வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபுஹீரைரா (ரலி) நூல்: அஹ்மது)
புனித ரமலான் மாதம் முழுவதும் பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நாட்களாக உள்ளது. ரமலான் அல்லாத காலங்களிலும் பாவமன்னிப்பு தேடலாம்.
‘பயபக்தியாளர்கள் விடியற் காலங்களில் (சஹர் நேரம்) மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள்’ (51:18), ‘அவர்கள் (இரவின் கடைசி) சஹர் நேரத்தில் மன்னிப்புக்கோருவோராகவும் இருப்பார்கள்’ (3:17) என்பது திருக்குர்ஆன் மொழியாகும்.
பாவமன்னிப்பு வேண்டுவது பாவம் செய்யும் பாமரர்களின் செயல்மட்டும் அல்ல. பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட நபிமார்களும், ஆதி நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் பாவமன்னிப்பு வேண்டியுள்ளார்கள்.
அனைத்து நபிமார்களும் பாவம் செய்தார்களா? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பாவமன்னிப்பு வேண்டியது அவர்கள் செய்த பாவத்திற்காக அல்ல. பாவம் செய்யும் மனிதன் இறைவனிடம் எப்படி பாவமன்னிப்பு வேண்டும் என்பதை கற்றுத்தருவதற்காகவே அன்றி வேறு இல்லை.
மனிதனை பொறுத்த அளவில் பாவமன்னிப்பு தேடுவது பாவங்களிலிருந்து விடுபட. நபிமார்களை பொறுத்த அளவில் அவர்களின் அந்தஸ்து மேம்பட பலவழிகள் உண்டு. அதில் இதுவும் ஒன்று.
ஆதம் (அலை) அவர்களின் பாவமன்னிப்பு:
‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’’ (திருக்குர்ஆன் 7:23)
நபி (ஸல்) அவர்களின் பாவமன்னிப்பு:
‘என் மனதிலே ஒருவிதமான நெருடல் உள்ளது. நான் ஒரு நாளைக்கு நூறுதடவை அல்லாஹ்விடம் பாவ மீட்சி தேடுகிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள்.
பாவமன்னிப்புத் தேடுவதால் கிடைக்கும் பலன்கள்:
மன அமைதி ஏற்படுகிறது, உள்ளம் சாந்தம் பெறுகிறது, உடல் வலிமை பெறுகிறது, நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. மனிதனின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.
பொய்த்துபோன மழை பொழிகிறது, நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்கிறது, விசாலமான வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது, பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகளாக மாற்றப்படுகிறது.
சோதனைகள் தடுத்து நிறுத்தப்படுகிறது, ஷைத்தானின் அதிருப்தியும் இறைவனின் திருப்தியும் கிடைக்கிறது. உள்ளம் உயிர் பெறுகிறது, அனைத்து விதமான பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது, மறுமையில் பாதுகாப்பு கிடைக்கிறது, உள்ளங்களுக்கிடையில் பகைமை நீங்கும், மார்க்கமும், அமலும் பாதுகாக்கப்படும்.
இவ்வளவு பலன்களை உள்ளடக்கிய பாவமன்னிப்புத் தேடுவதை நாம் உதாசீனப்படுத்தக்கூடாது. புனித ரமலானில் அதிகமான பலன்களை பெறுவதற்கு பாவமன்னிப்பை ஒரு கேடயமாக உலக முஸ்லிம்கள் பயன்படுத்தி முழுப்பயன்களையும் பெற்றிட வல்ல இறைவன் கிருபை செய்வானாக.
ஒவ்வொரு முறையும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் மூஸா (அலை) அவர்களை ஏமாற்றி வந்தனர்.
ஒவ்வொரு முறையும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் இறைவனின் வேதனையைச் சுவைக்கும் போது அவர்கள் மூஸா (அலை) அவர்களின் உதவியை நாடினர்.
வேதனைகள் நீங்கிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்வோம், பனூ இஸ்ராயீலர்களை அவருடன் அனுப்பிவிடுவோம் என்று வாக்குறுதி அளித்து, அதனை மீறினர். இப்படியாகக் கனமழை, வெட்டுக்கிளி, பேன்களின் சோதனைகளிலிருந்து மூஸா (அலை) அவர்களின் பிரார்த்தனையின் மூலம் காப்பாற்றப்பட்டனர்.
தவணை முறையில் சோதனையைத் தந்த இறைவன் தவளைகளை அனுப்பி வைத்தான். ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் வாழும் பகுதியில் ஆயிரக்கணக்கான தவளைகள் உலா வந்தன. ஃபிர்அவ்னின் மாளிகையின் அடியில் ஓடிக் கொண்டிருந்த நைல் நதியின் கால்வாய்களிலிருந்து தவளைகள் மாளிகைக்கே நேரடியாகப் படையெடுத்து வந்தன. தவளைகள் தெருவிலும் வீட்டிலும், அறையிலும், படுக்கையிலும் கட்டுப்பாடில்லாமல் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.
இதற்குத் தீர்வாக மறுபடியும் மூஸா (அலை) அவர்களை, ஃபிர்அவ்ன் கூட்டத்தினர் அழைத்துப் பிரார்த்திக்கச் செய்தனர். வேதனைகள் நீங்கினால் பனூ இஸ்ராயீலர்களை நல்ல முறையில் நடத்துவதாக வாக்குறுதி அளித்தனர். மூஸா (அலை) அவர்களும் வழக்கம் போல் அவர்களை நம்பினார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிணி நீங்கியது. தவளைகள் நதிக்குத் திரும்பின. வழக்கம்போல் ஃபிர்அவ்ன் கூட்டத்தினர் தம் வாக்குறுதிக்கு மாறுசெய்தனர்.
அடுத்து வந்த சோதனை, பெருஞ்சோதனையாக அமைந்தது. ஒருநாள் காலையில் கண் விழித்த ஃபிர்அவ்னுக்குப் பருகப் பால் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்தக் குவளையில் ஃபிர்அவ்ன் பாலுக்குப் பதிலாக இரத்தத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். தம் வேலையாட்களை அழைத்துக் கடிந்தான். அவர்களுக்கும் பால் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட கோப்பையில் இரத்தம் இருப்பதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
மீண்டும் தண்ணீரைப் பருக எடுத்தபோது அதிலும் இரத்தம்தான் இருந்தது. “முட்டாள்களே! உங்கள் அனைவரையும் அழித்துவிடுவேன். பால், தண்ணீர் என்று எல்லாக் குவளைகளிலும் இரத்தம் கொண்டு வந்துள்ளீர்களே!?” என்று ஆத்திரமடைந்து ஓய்வதற்குள் அவன்அரண்மனைக்கு வெளியே அவனது சமூகத்தினர் வந்து குவிந்திருந்தனர்.
“அரசே! இப்படியான ஒரு சோதனையை நாங்கள் இதுவரை கண்டிருக்கவில்லை. தயவு செய்து இஸ்ராயீலர்களை நம் கட்டுபாட்டிலிருந்து விடுவித்து மூஸா (அலை) அவர்களுடன் அனுப்பிவிடலாம்” என்று குமுறியது கூடியிருந்த கூட்டம்.
இதைக் கேட்ட ஃபிர்அவ்னுக்குக் கோபம் கொப்பளித்தது. மக்கள் அறிவிழந்தவர்கள் போல் பேசுகிறார்களே, இப்போது என்ன நேர்ந்துவிட்டது என்று விசாரிக்க, கூடியிருந்த மக்கள் நகரத்தில் ஒரு சொட்டுத் தண்ணீருமில்லை எல்லாமே இரத்தமாகியுள்ளன என்று முறையிட்டனர்.
ஃபிர்அவ்னுக்கு, தனக்குத் தரப்பட்ட பாலும், தண்ணீரும் இரத்தமாக மாறி இருந்தது குறித்து விளங்கியது. மீண்டும் மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் அழைக்கப்பட்டனர்.
“இந்தப் பெருஞ்சோதனையிலிருந்து என்னையும் என் மக்களையும் காப்பாற்றிவிட்டால் கண்டிப்பாகப் பனூ இஸ்ராயீலர்களை எங்கள் கட்டுபாட்டிலிருந்து விடுவித்துவிடுவோம்” என்று ஃபிர்அவ்ன் வாக்குறுதி அளித்தான்.
இறைத்தூதர்கள் இருவரும் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். இறைவன் வேதனையை அவர்களைவிட்டு நீக்கினான்.
நகரமே இயல்புநிலைக்கு வந்த பிறகு ஃபிர்அவ்ன் இனி மூஸா (அலை) அவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்தான். ஆனால் இறைவனின் திட்டம் வேறொன்றாக இருந்தது.
- ஜெஸிலா பானு.
வேதனைகள் நீங்கிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்வோம், பனூ இஸ்ராயீலர்களை அவருடன் அனுப்பிவிடுவோம் என்று வாக்குறுதி அளித்து, அதனை மீறினர். இப்படியாகக் கனமழை, வெட்டுக்கிளி, பேன்களின் சோதனைகளிலிருந்து மூஸா (அலை) அவர்களின் பிரார்த்தனையின் மூலம் காப்பாற்றப்பட்டனர்.
தவணை முறையில் சோதனையைத் தந்த இறைவன் தவளைகளை அனுப்பி வைத்தான். ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தினர் வாழும் பகுதியில் ஆயிரக்கணக்கான தவளைகள் உலா வந்தன. ஃபிர்அவ்னின் மாளிகையின் அடியில் ஓடிக் கொண்டிருந்த நைல் நதியின் கால்வாய்களிலிருந்து தவளைகள் மாளிகைக்கே நேரடியாகப் படையெடுத்து வந்தன. தவளைகள் தெருவிலும் வீட்டிலும், அறையிலும், படுக்கையிலும் கட்டுப்பாடில்லாமல் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.
இதற்குத் தீர்வாக மறுபடியும் மூஸா (அலை) அவர்களை, ஃபிர்அவ்ன் கூட்டத்தினர் அழைத்துப் பிரார்த்திக்கச் செய்தனர். வேதனைகள் நீங்கினால் பனூ இஸ்ராயீலர்களை நல்ல முறையில் நடத்துவதாக வாக்குறுதி அளித்தனர். மூஸா (அலை) அவர்களும் வழக்கம் போல் அவர்களை நம்பினார்கள். அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிணி நீங்கியது. தவளைகள் நதிக்குத் திரும்பின. வழக்கம்போல் ஃபிர்அவ்ன் கூட்டத்தினர் தம் வாக்குறுதிக்கு மாறுசெய்தனர்.
அடுத்து வந்த சோதனை, பெருஞ்சோதனையாக அமைந்தது. ஒருநாள் காலையில் கண் விழித்த ஃபிர்அவ்னுக்குப் பருகப் பால் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்தக் குவளையில் ஃபிர்அவ்ன் பாலுக்குப் பதிலாக இரத்தத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். தம் வேலையாட்களை அழைத்துக் கடிந்தான். அவர்களுக்கும் பால் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட கோப்பையில் இரத்தம் இருப்பதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
மீண்டும் தண்ணீரைப் பருக எடுத்தபோது அதிலும் இரத்தம்தான் இருந்தது. “முட்டாள்களே! உங்கள் அனைவரையும் அழித்துவிடுவேன். பால், தண்ணீர் என்று எல்லாக் குவளைகளிலும் இரத்தம் கொண்டு வந்துள்ளீர்களே!?” என்று ஆத்திரமடைந்து ஓய்வதற்குள் அவன்அரண்மனைக்கு வெளியே அவனது சமூகத்தினர் வந்து குவிந்திருந்தனர்.
“அரசே! இப்படியான ஒரு சோதனையை நாங்கள் இதுவரை கண்டிருக்கவில்லை. தயவு செய்து இஸ்ராயீலர்களை நம் கட்டுபாட்டிலிருந்து விடுவித்து மூஸா (அலை) அவர்களுடன் அனுப்பிவிடலாம்” என்று குமுறியது கூடியிருந்த கூட்டம்.
இதைக் கேட்ட ஃபிர்அவ்னுக்குக் கோபம் கொப்பளித்தது. மக்கள் அறிவிழந்தவர்கள் போல் பேசுகிறார்களே, இப்போது என்ன நேர்ந்துவிட்டது என்று விசாரிக்க, கூடியிருந்த மக்கள் நகரத்தில் ஒரு சொட்டுத் தண்ணீருமில்லை எல்லாமே இரத்தமாகியுள்ளன என்று முறையிட்டனர்.
ஃபிர்அவ்னுக்கு, தனக்குத் தரப்பட்ட பாலும், தண்ணீரும் இரத்தமாக மாறி இருந்தது குறித்து விளங்கியது. மீண்டும் மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் அழைக்கப்பட்டனர்.
“இந்தப் பெருஞ்சோதனையிலிருந்து என்னையும் என் மக்களையும் காப்பாற்றிவிட்டால் கண்டிப்பாகப் பனூ இஸ்ராயீலர்களை எங்கள் கட்டுபாட்டிலிருந்து விடுவித்துவிடுவோம்” என்று ஃபிர்அவ்ன் வாக்குறுதி அளித்தான்.
இறைத்தூதர்கள் இருவரும் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். இறைவன் வேதனையை அவர்களைவிட்டு நீக்கினான்.
நகரமே இயல்புநிலைக்கு வந்த பிறகு ஃபிர்அவ்ன் இனி மூஸா (அலை) அவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்தான். ஆனால் இறைவனின் திட்டம் வேறொன்றாக இருந்தது.
- ஜெஸிலா பானு.
அல்லாஹ் பொறுமையாளர்களையும், நன்மை செய்பவர்களையுமே நேசிக்கின்றான்.
மூஸா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) செய்த பிரார்த்தனையால் இறைவன் ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்கு ஒன்றன்பின் ஒன்றாக சோதனைகளை அனுப்பினான். கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும் அனுப்பி வைத்த இறைவனிடமே, ஃபிர்அவ்னின் கூட்டத்தினரின் பொய் வாக்குறுதியை நம்பி, அந்த வேதனைகளை நீக்கக் கோரினார்கள் மூஸா (அலை).
இறைவனும் நிரந்தரமாக வேதனைகளை முற்றிலும் நீக்கிவிடாமல் அவர்கள் திருந்த ஒரு சந்தர்ப்பம் தந்து, சிறு தவணை வரை அவர்களுக்கு வேதனை தராமல் விட்டு வைத்தான். திருந்தாத ஃபிர்அவ்னின் சமூகத்தினர் வழக்கம் போலவே பெருமையடித்துக் கொண்டும், பனூ இஸ்ராயீலர்களை இழிவாக நடத்திக் கொண்டும் இருந்தனர்.
ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் இப்படி இருக்க, பனூ இஸ்ராயீலர்களின் கலகத்தையும் மூஸா (அலை) சமாளிக்க வேண்டியிருந்தது. மூஸா (அலை) சமூகத்தைச் சேர்ந்த காரூன் என்பவர் பெரிய செல்வந்தராக இருந்தார். எல்லோராலும் அறியப்பட்டவராகப் பல அடிமைகளைக் கொண்டு வேலை ஏவுபவராக இருந்தார். பெரிய மாடமாளிகையில் தங்கியிருந்தார்.
அவரிடமிருந்த செல்வம் மொத்த பனூ இஸ்ராயீல் சமூகத்தை உயர்த்தும் அளவுக்கு நிறைந்திருந்தது. அவர் விலை உயர்ந்த உடுப்புகளை உடுத்திக் கொண்டு ஏழைகளுக்கு உதவாது பெருமையடித்துக் கொண்டிருப்பவராக இருந்தார். ஆதலால் மூஸா (அலை) அவர்களின் அறிவுரைகளை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாம் செல்வந்தராக இருப்பதற்குத் தன்னுடைய அறிவும் முயற்சியும் மட்டுமே காரணம் என்று சொல்லி கர்வத்துடன் நடந்து கொண்டார்.
அவருடைய கூட்டத்தார் அவரிடம் “பெருமைகொண்டு ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், ஆணவம் கொள்பவர்களை நேசிக்க மாட்டான். இறைவன் உனக்கு நல்லது செய்திருப்பதைப் போல் நீயும் நல்லதை செய். இந்த உலக வாழ்க்கையின் கவர்ச்சியில் உன்னைப் படைத்தவனை மறந்துவிடாதே, மறுமை வீட்டை மறந்துவிடாதே” என்று உபதேசித்தனர். அவர் அதைக் கேட்பதாக இல்லை.
சிலர் “காரூனுக்கு இறைவன் கொடுத்ததைப் போல் நமக்கும் கொடுக்கக்கூடாதா?” என்று ஏங்கினர்.
சிலர் “இறைநம்பிக்கையுடன் நல்ல காரியங்களைச் செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது” என்று கூறினர்.
மூஸா (அலை) ‘ஸகாத்’ அதாவது கட்டாயத் தர்மம் குறித்துக் காரூனுக்கு நினைவூட்டினார்கள். ஏழைகளுக்குத் தமது செல்வத்தில் இருந்து ஒரு பகுதியை தர்மம் செய்ய வேண்டும், ஸகாத் என்பது அனைத்து விசுவாசிகளின் மீதானக் கட்டாயக் கடமை என்று விவரித்தார்கள்.
காரூனுக்கு மூஸா (அலை) அவர்கள் சொன்னதில் நம்பிக்கையில்லை. தன்னை இறைவனுக்குப் பிடித்ததாலும், தான் வாழும் முறையை அங்கீகரித்ததாலுமே தமது செல்வத்தை இறைவன் அதிகரித்தானே தவிர ஏழைகளுக்கு உதவுவதற்கில்லை என்றார்.
மூஸா (அலை), காரூனுடைய எண்ணம் தவறானது. இறைவன் கொடுப்பதே நம்மைவிட எளியவருக்குக் கொடுப்பதற்காகத்தான். ஒரு பகுதியைக் கணக்கிட்டு கொடுத்துவிடு என்று சொன்னதைக் காரூன் கணக்கிட்டுப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இவ்வளவு பெரிய தொகையைப் பிரிய அவர் மனம் ஒப்பவில்லை.
காரூன் ஸகாத் கொடுக்க மறத்ததோடு, மூஸா (அலை) அவர்களுடைய சொந்த லாபத்திற்காகத்தான் இப்படியான ஸகாத் சட்டத்தைக் கண்டுபிடித்துள்ளார் என்று வதந்தியைப் பரப்பினார். லஞ்சம் கொடுத்து மூஸா (அலை) அவர்களின் பாதையிலிருந்து சிலரை விலக்கவும் செய்தார் காரூன்.
இறைவனின் கோபம் காரூன் மீது திரும்பியது. காரூனையும் அவன் வீட்டையும் பூமி விழுங்கிவிட்டது. அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்று இல்லாத வண்ணம் அந்த இடமே சூனியமானது.
இதைக் கண்ட மக்கள் “அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு வசதிகளைப் பெருக்கவும் செய்கிறான், சுருக்கவும் செய்கிறான். பெருமை அடிப்பவர்களை இறைவன் விரும்புவதில்லை. அல்லாஹ்வின் அருள் இல்லையென்றால் நம்மையும் இப்பூமி விழுங்கி இருக்கும்” என்று பேசிக் கொண்டனர்.
அல்லாஹ் பொறுமையாளர்களையும், நன்மை செய்பவர்களையுமே நேசிக்கின்றான்.
- ஜெஸிலா பானு.
இறைவனும் நிரந்தரமாக வேதனைகளை முற்றிலும் நீக்கிவிடாமல் அவர்கள் திருந்த ஒரு சந்தர்ப்பம் தந்து, சிறு தவணை வரை அவர்களுக்கு வேதனை தராமல் விட்டு வைத்தான். திருந்தாத ஃபிர்அவ்னின் சமூகத்தினர் வழக்கம் போலவே பெருமையடித்துக் கொண்டும், பனூ இஸ்ராயீலர்களை இழிவாக நடத்திக் கொண்டும் இருந்தனர்.
ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் இப்படி இருக்க, பனூ இஸ்ராயீலர்களின் கலகத்தையும் மூஸா (அலை) சமாளிக்க வேண்டியிருந்தது. மூஸா (அலை) சமூகத்தைச் சேர்ந்த காரூன் என்பவர் பெரிய செல்வந்தராக இருந்தார். எல்லோராலும் அறியப்பட்டவராகப் பல அடிமைகளைக் கொண்டு வேலை ஏவுபவராக இருந்தார். பெரிய மாடமாளிகையில் தங்கியிருந்தார்.
அவரிடமிருந்த செல்வம் மொத்த பனூ இஸ்ராயீல் சமூகத்தை உயர்த்தும் அளவுக்கு நிறைந்திருந்தது. அவர் விலை உயர்ந்த உடுப்புகளை உடுத்திக் கொண்டு ஏழைகளுக்கு உதவாது பெருமையடித்துக் கொண்டிருப்பவராக இருந்தார். ஆதலால் மூஸா (அலை) அவர்களின் அறிவுரைகளை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாம் செல்வந்தராக இருப்பதற்குத் தன்னுடைய அறிவும் முயற்சியும் மட்டுமே காரணம் என்று சொல்லி கர்வத்துடன் நடந்து கொண்டார்.
அவருடைய கூட்டத்தார் அவரிடம் “பெருமைகொண்டு ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், ஆணவம் கொள்பவர்களை நேசிக்க மாட்டான். இறைவன் உனக்கு நல்லது செய்திருப்பதைப் போல் நீயும் நல்லதை செய். இந்த உலக வாழ்க்கையின் கவர்ச்சியில் உன்னைப் படைத்தவனை மறந்துவிடாதே, மறுமை வீட்டை மறந்துவிடாதே” என்று உபதேசித்தனர். அவர் அதைக் கேட்பதாக இல்லை.
சிலர் “காரூனுக்கு இறைவன் கொடுத்ததைப் போல் நமக்கும் கொடுக்கக்கூடாதா?” என்று ஏங்கினர்.
சிலர் “இறைநம்பிக்கையுடன் நல்ல காரியங்களைச் செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது” என்று கூறினர்.
மூஸா (அலை) ‘ஸகாத்’ அதாவது கட்டாயத் தர்மம் குறித்துக் காரூனுக்கு நினைவூட்டினார்கள். ஏழைகளுக்குத் தமது செல்வத்தில் இருந்து ஒரு பகுதியை தர்மம் செய்ய வேண்டும், ஸகாத் என்பது அனைத்து விசுவாசிகளின் மீதானக் கட்டாயக் கடமை என்று விவரித்தார்கள்.
காரூனுக்கு மூஸா (அலை) அவர்கள் சொன்னதில் நம்பிக்கையில்லை. தன்னை இறைவனுக்குப் பிடித்ததாலும், தான் வாழும் முறையை அங்கீகரித்ததாலுமே தமது செல்வத்தை இறைவன் அதிகரித்தானே தவிர ஏழைகளுக்கு உதவுவதற்கில்லை என்றார்.
மூஸா (அலை), காரூனுடைய எண்ணம் தவறானது. இறைவன் கொடுப்பதே நம்மைவிட எளியவருக்குக் கொடுப்பதற்காகத்தான். ஒரு பகுதியைக் கணக்கிட்டு கொடுத்துவிடு என்று சொன்னதைக் காரூன் கணக்கிட்டுப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இவ்வளவு பெரிய தொகையைப் பிரிய அவர் மனம் ஒப்பவில்லை.
காரூன் ஸகாத் கொடுக்க மறத்ததோடு, மூஸா (அலை) அவர்களுடைய சொந்த லாபத்திற்காகத்தான் இப்படியான ஸகாத் சட்டத்தைக் கண்டுபிடித்துள்ளார் என்று வதந்தியைப் பரப்பினார். லஞ்சம் கொடுத்து மூஸா (அலை) அவர்களின் பாதையிலிருந்து சிலரை விலக்கவும் செய்தார் காரூன்.
இறைவனின் கோபம் காரூன் மீது திரும்பியது. காரூனையும் அவன் வீட்டையும் பூமி விழுங்கிவிட்டது. அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்று இல்லாத வண்ணம் அந்த இடமே சூனியமானது.
இதைக் கண்ட மக்கள் “அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு வசதிகளைப் பெருக்கவும் செய்கிறான், சுருக்கவும் செய்கிறான். பெருமை அடிப்பவர்களை இறைவன் விரும்புவதில்லை. அல்லாஹ்வின் அருள் இல்லையென்றால் நம்மையும் இப்பூமி விழுங்கி இருக்கும்” என்று பேசிக் கொண்டனர்.
அல்லாஹ் பொறுமையாளர்களையும், நன்மை செய்பவர்களையுமே நேசிக்கின்றான்.
- ஜெஸிலா பானு.
எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் மூஸா (அலை) அவர்கள் மக்களின் கெஞ்சலுக்குச் செவிசாய்த்தார்கள்.
மூஸா (அலை) அவர்களின் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரம் தொடர்ந்தது. மூஸா (அலை) சொன்னதை அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர வேறு யாரும் நம்பிக்கை கொள்ளவில்லை. ஏனெனில், ஃபிர்அவ்னும் அவனுடைய பிரமுகர்களும் அவர்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக.
மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் இறைவனின் கட்டளையின்படி வீட்டையே பள்ளிவாசல்களாக மாற்றி தொழுதார்கள். உலக வாழ்க்கை சுகங்களான செல்வங்களும் ஆடம்பரங்களும் ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய கூட்டத்தாருக்கும் இல்லாமல் போய், வேதனைகளை சுவைத்தால்தான் அவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள் என்று மூஸா மற்றும் ஹாரூன் (அலை) இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
இறைவன் அவர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்களின் விளைச்சலில் பிரச்சனையை ஏற்படுத்தினான். இருப்பினும் அவர்கள் திருந்தவில்லை. அவர்கள் அது இறைவன் தந்த சோதனையாக எண்ணவில்லை, மூஸா (அலை) அவர்களின் சூனியத்தின் சூழ்ச்சியாக எண்ணினார்கள்.
கனமழையைப் பொழிந்து நைல் நதியின் நீர் மட்டத்தை உயர்த்தி வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தி எல்லாவற்றையும் அழித்தான் இறைவன். ஆனால் பனூ இஸ்ராயீலர்களின் பகுதியில் எந்தச் சேதமுமில்லை.
உடனே ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் மூஸா (அலை) அவர்களிடம் தங்களுக்காகப் பிரார்த்திக்கும்படியும், ஆபத்து நீங்கிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்வதாகவும் பனூ இஸ்ராயீலர்களை அவருடன் அனுப்பி வைப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர். அவர்களை நம்பிய மூஸா (அலை) அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்து, கனமழையை நிறுத்தி மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மாற்றினார்கள். ஆனாலும் அவர்கள் தம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
அடுத்த சோதனையாக வெட்டுக்கிளியை இறைவன் அனுப்பினான். அந்த வெட்டுக்கிளிகள் வீட்டுத் தூண்களையும் அரித்து வீடு இடிந்து விழுவதும், விளைச்சல்களை நாசமாக்குவதுமாக இருப்பதைக் கண்ட மக்கள் பீதியடைந்து மறுபடியும் மூஸா (அலை) அவர்களிடம் வந்து, இறைவனிடம் பிரார்த்திக்கும்படியும், இம்முறை வாக்கு மாறாமல் ஓரிறைக் கொள்கையை ஏற்பதாகவும் சொன்னதை நம்பி, மறுபடியும் மூஸா (அலை) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். வெட்டுக்கிளிகள் வந்த வழியே மறைந்தன. ஃபிர்அவ்ன் கூட்டத்தினரின் வாக்குறுதிகளும் மறைந்து போயின.
இன்னும் கொஞ்சம் காலம் சென்ற பிறகு இறைவன் பேன்களின் மூலம் நம்பிக்கையற்றக் கூட்டத்தாருக்கு வேதனையைத் தந்தான். எல்லா பக்கங்களிலும் பேன்கள் வழிந்து இயல்பு வாழ்க்கையை நாசமாக்கியது. சாப்பிட வாய் திறந்தாலும் வாய்க்குள் போனது. தூங்கவிடாமல் தொந்தரவு தந்தது. மறுபடியும் ஃபிர்அவ்னின் சமூகத்தார் மூஸா (அலை) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தங்களுக்காக பிரார்த்திக்கும்படி கெஞ்சினார்கள். அல்லாஹ்வை நம்புவதாகவும், பனூ இஸ்ராயீலர்களை உடனே அனுப்பிவிடுவதாகவும் சொன்னார்கள்.
எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் மூஸா (அலை) அவர்கள் மக்களின் கெஞ்சலுக்குச் செவிசாய்த்தார்கள்.
இம்முறை மக்கள் மூஸா (அலை) அவர்களை ஏமாற்றினார்களா, அல்லது ஃபிர்அவ்னை எதிர்த்து மக்கள் மனம் மாறினார்களா!?
அவர்களின் இருதயம் பூட்டப்பட்டதாக முத்திரையிடப்பட்டதாக இருப்பின், அவர்கள் எவ்வித அதிசயங்களைக் கண்களால் பார்த்தாலும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
ஜெஸிலா பானு.
மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் இறைவனின் கட்டளையின்படி வீட்டையே பள்ளிவாசல்களாக மாற்றி தொழுதார்கள். உலக வாழ்க்கை சுகங்களான செல்வங்களும் ஆடம்பரங்களும் ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய கூட்டத்தாருக்கும் இல்லாமல் போய், வேதனைகளை சுவைத்தால்தான் அவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள் என்று மூஸா மற்றும் ஹாரூன் (அலை) இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
இறைவன் அவர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்களின் விளைச்சலில் பிரச்சனையை ஏற்படுத்தினான். இருப்பினும் அவர்கள் திருந்தவில்லை. அவர்கள் அது இறைவன் தந்த சோதனையாக எண்ணவில்லை, மூஸா (அலை) அவர்களின் சூனியத்தின் சூழ்ச்சியாக எண்ணினார்கள்.
கனமழையைப் பொழிந்து நைல் நதியின் நீர் மட்டத்தை உயர்த்தி வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தி எல்லாவற்றையும் அழித்தான் இறைவன். ஆனால் பனூ இஸ்ராயீலர்களின் பகுதியில் எந்தச் சேதமுமில்லை.
உடனே ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் மூஸா (அலை) அவர்களிடம் தங்களுக்காகப் பிரார்த்திக்கும்படியும், ஆபத்து நீங்கிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்வதாகவும் பனூ இஸ்ராயீலர்களை அவருடன் அனுப்பி வைப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர். அவர்களை நம்பிய மூஸா (அலை) அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்து, கனமழையை நிறுத்தி மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மாற்றினார்கள். ஆனாலும் அவர்கள் தம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
அடுத்த சோதனையாக வெட்டுக்கிளியை இறைவன் அனுப்பினான். அந்த வெட்டுக்கிளிகள் வீட்டுத் தூண்களையும் அரித்து வீடு இடிந்து விழுவதும், விளைச்சல்களை நாசமாக்குவதுமாக இருப்பதைக் கண்ட மக்கள் பீதியடைந்து மறுபடியும் மூஸா (அலை) அவர்களிடம் வந்து, இறைவனிடம் பிரார்த்திக்கும்படியும், இம்முறை வாக்கு மாறாமல் ஓரிறைக் கொள்கையை ஏற்பதாகவும் சொன்னதை நம்பி, மறுபடியும் மூஸா (அலை) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். வெட்டுக்கிளிகள் வந்த வழியே மறைந்தன. ஃபிர்அவ்ன் கூட்டத்தினரின் வாக்குறுதிகளும் மறைந்து போயின.
இன்னும் கொஞ்சம் காலம் சென்ற பிறகு இறைவன் பேன்களின் மூலம் நம்பிக்கையற்றக் கூட்டத்தாருக்கு வேதனையைத் தந்தான். எல்லா பக்கங்களிலும் பேன்கள் வழிந்து இயல்பு வாழ்க்கையை நாசமாக்கியது. சாப்பிட வாய் திறந்தாலும் வாய்க்குள் போனது. தூங்கவிடாமல் தொந்தரவு தந்தது. மறுபடியும் ஃபிர்அவ்னின் சமூகத்தார் மூஸா (அலை) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தங்களுக்காக பிரார்த்திக்கும்படி கெஞ்சினார்கள். அல்லாஹ்வை நம்புவதாகவும், பனூ இஸ்ராயீலர்களை உடனே அனுப்பிவிடுவதாகவும் சொன்னார்கள்.
எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் மூஸா (அலை) அவர்கள் மக்களின் கெஞ்சலுக்குச் செவிசாய்த்தார்கள்.
இம்முறை மக்கள் மூஸா (அலை) அவர்களை ஏமாற்றினார்களா, அல்லது ஃபிர்அவ்னை எதிர்த்து மக்கள் மனம் மாறினார்களா!?
அவர்களின் இருதயம் பூட்டப்பட்டதாக முத்திரையிடப்பட்டதாக இருப்பின், அவர்கள் எவ்வித அதிசயங்களைக் கண்களால் பார்த்தாலும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
ஜெஸிலா பானு.
அல்லாஹ்வுக்கு இணை வைக்காதீர்கள். அவனிடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள். அவன் மன்னிப்பவனாக இருக்கின்றான்
பிர்அவ்ன் தன் சமுதாயத்தாரை பயமுறுத்தி தன்னை வணங்கும்படி செய்தான். ஆனால் மூஸா (அலை) இறைவன் தந்த அத்தாட்சிகளைக் கொண்டும், போட்டியாக நியமிக்கப்பட்ட சூனியக்காரர்களை வீழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தினார்.
சூனியக்காரர்கள் மனம் திருந்தி இறைவழியில் தம் உயிரைத் துறக்கும் அளவுக்கு இறை நம்பிக்கையுடையவர்களாக மாறியதைக் கண்ட மக்கள் குழப்பத்தில் இருந்தார்கள். எங்கு அவர்கள் மனம் மாறிவிடுவார்களோ, தம் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மூஸா (அலை) அவர்களின் பின்னால் சென்றுவிடுவார்களோ என்ற பீதியில் ஃபிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களைக் கொல்லத் திட்டம் வகுத்தான்.
ஃபிர்அவ்ன் தம் அரசவையில் கூறினான் “மூஸாவை நான் கொலை செய்தே தீருவேன். அவரை அப்படியே விட்டால் உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் மாற்றிவிடுவார்” என்றான்.
அதற்கு ஃபிர்அவ்னின் குடும்பத்தாரிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அதனை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்தவர், மூஸா (அலை) அவர்களைக் கொலை செய்வேன் என்று ஃபிர்அவ்ன் பேசியதைக் கேட்டு தாங்கிக் கொள்ள இயலாமல், அதே சமயம் தனது இறைநம்பிக்கையை வெளிப்படுத்தாதவராக ஃபிர்அவ்னையே எச்சரித்தார்.
“என் இறைவன் அல்லாஹ் என்று கூறிய ஒரே காரணத்திற்காக ஒரு மனிதரைக் கொல்லப் போகிறீர்களா?இறைவனிடமிருந்து தெளிவான சாட்சிகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய் சொல்லி இருந்தால், அந்தப் பொய்க்கான தண்டனையை அவரே அனுபவிப்பார். ஆனால் அவர் உண்மையைச் சொல்லி இருந்தால்? அவர் உங்களை எச்சரிக்கை செய்யும் ஆபத்துகளும் வேதனைகளும் உங்களையும் நம் சமுதாயத்தினரையும் வந்தடையுமே? எப்படிப் பார்த்தாலும் அவரைக் கொலை செய்வது சரியாகப்படவில்லை” என்று தெளிவாகவும் தைரியமாகவும் எடுத்துரைத்தார்.
இதைக் கேட்டு ஃபிர்அவ்ன் கோபமடைந்தாலும் நிதானமாகப் பேசினான் “நான் உண்மையாளனாகவே இருக்கிறேன். உங்களுக்கு நேரான பாதையைத்தான் காட்டுகிறேன். அப்படியிருக்க நமக்கு எப்படி வேதனை வந்தடையும்?” என்று பொய்யுரைத்தான்.
அந்த நம்பிக்கையாளர் மனம் தளராமல் அவையை நோக்கி “சமூகத்தாரே! நமக்கு முன் அழிந்து போனவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள், தீர்ப்பு நாளைப் பற்றியும் சிந்தியுங்கள்” என்றார்
எங்கே தம் சொந்த சமுதாயத்தார் மனம் மாறிவிடுவார்களோ என்று பயந்த ஃபிர்அவ்ன் “என்னுடைய சமூகத்தாரே! இந்த எகிப்தின் அரசாங்கம் என்னுடையதல்லவா? என் மாளிகை அடியில் ஓடிக் கொண்டிருக்கும் நைல் நதியின் இக்கால்வாய்களும் என் ஆட்சிக்கு உட்பட்டவை அல்லவா? அப்படிப்பட்ட நான் எங்கே, தெளிவாகப் பேச இயலாதவராகிய இழிவான அவன் எங்கே? என்னைவிட அவன் மேலானவனாக இருந்தால் ஏன் அவருக்குப் பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது ஏன் வானவர்கள் கூட்டமாக அவருடன் வரவில்லை?” என்று மூஸா (அலை) அவர்களை இழிவாகப் பேசினான். அவன் பேசியதில் நியாயம் உள்ளதென்று அவன் சமூக எகிப்து மக்களும் கீழ்ப்படிந்தனர்.
மூஸா (அலை) அவர்களின் பிரச்சாரம் பரவிக் கொண்டே இருந்தது. அவர்கள் தம் பனூ இஸ்ராயீலர்களிடம் “ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றுங்கள், நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் மட்டுமே, மறுமையோ என்றென்றுமிருக்கும் நிலையான இடம். தீமை செய்கிறவர்களுக்கு அதற்கான தண்டனையுண்டு. நல்ல காரியம் செய்கின்றவர்கள் என்றென்றும் சொர்க்கத்தில் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு இணை வைக்காதீர்கள். அவனிடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள். அவன் மன்னிப்பவனாக இருக்கின்றான்” என்று சொல்லி பனூ இஸ்ராயீலர்களைத் தம் பக்கம் வைத்திருந்தாலும், ஃபிர்அவ்னின் குறுக்கீடு அவர்களை வழிதவறவே செய்தது.
ஃபிர்அவ்னிடம் ஆட்சியும் அந்தஸ்தும் இருப்பதாலேயே அவர்கள் மிதமிஞ்சி நடக்கிறார்கள். ஆகையால் இறைவனின் சோதனைகளை அவனுக்கும் அவன் சமூகத்தாருக்கும் தரும்படி மூஸா (அலை) அவர்களும் ஹாரூன் (அலை) அவர்களும் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
ஃபிர்அவ்ன் திட்டமிட்ட தீமைகளிலிருந்து மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காத்துக் கொண்டான். வேதனைகள் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
- ஜெஸிலா பானு.
சூனியக்காரர்கள் மனம் திருந்தி இறைவழியில் தம் உயிரைத் துறக்கும் அளவுக்கு இறை நம்பிக்கையுடையவர்களாக மாறியதைக் கண்ட மக்கள் குழப்பத்தில் இருந்தார்கள். எங்கு அவர்கள் மனம் மாறிவிடுவார்களோ, தம் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மூஸா (அலை) அவர்களின் பின்னால் சென்றுவிடுவார்களோ என்ற பீதியில் ஃபிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களைக் கொல்லத் திட்டம் வகுத்தான்.
ஃபிர்அவ்ன் தம் அரசவையில் கூறினான் “மூஸாவை நான் கொலை செய்தே தீருவேன். அவரை அப்படியே விட்டால் உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் மாற்றிவிடுவார்” என்றான்.
அதற்கு ஃபிர்அவ்னின் குடும்பத்தாரிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அதனை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்தவர், மூஸா (அலை) அவர்களைக் கொலை செய்வேன் என்று ஃபிர்அவ்ன் பேசியதைக் கேட்டு தாங்கிக் கொள்ள இயலாமல், அதே சமயம் தனது இறைநம்பிக்கையை வெளிப்படுத்தாதவராக ஃபிர்அவ்னையே எச்சரித்தார்.
“என் இறைவன் அல்லாஹ் என்று கூறிய ஒரே காரணத்திற்காக ஒரு மனிதரைக் கொல்லப் போகிறீர்களா?இறைவனிடமிருந்து தெளிவான சாட்சிகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய் சொல்லி இருந்தால், அந்தப் பொய்க்கான தண்டனையை அவரே அனுபவிப்பார். ஆனால் அவர் உண்மையைச் சொல்லி இருந்தால்? அவர் உங்களை எச்சரிக்கை செய்யும் ஆபத்துகளும் வேதனைகளும் உங்களையும் நம் சமுதாயத்தினரையும் வந்தடையுமே? எப்படிப் பார்த்தாலும் அவரைக் கொலை செய்வது சரியாகப்படவில்லை” என்று தெளிவாகவும் தைரியமாகவும் எடுத்துரைத்தார்.
இதைக் கேட்டு ஃபிர்அவ்ன் கோபமடைந்தாலும் நிதானமாகப் பேசினான் “நான் உண்மையாளனாகவே இருக்கிறேன். உங்களுக்கு நேரான பாதையைத்தான் காட்டுகிறேன். அப்படியிருக்க நமக்கு எப்படி வேதனை வந்தடையும்?” என்று பொய்யுரைத்தான்.
அந்த நம்பிக்கையாளர் மனம் தளராமல் அவையை நோக்கி “சமூகத்தாரே! நமக்கு முன் அழிந்து போனவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள், தீர்ப்பு நாளைப் பற்றியும் சிந்தியுங்கள்” என்றார்
எங்கே தம் சொந்த சமுதாயத்தார் மனம் மாறிவிடுவார்களோ என்று பயந்த ஃபிர்அவ்ன் “என்னுடைய சமூகத்தாரே! இந்த எகிப்தின் அரசாங்கம் என்னுடையதல்லவா? என் மாளிகை அடியில் ஓடிக் கொண்டிருக்கும் நைல் நதியின் இக்கால்வாய்களும் என் ஆட்சிக்கு உட்பட்டவை அல்லவா? அப்படிப்பட்ட நான் எங்கே, தெளிவாகப் பேச இயலாதவராகிய இழிவான அவன் எங்கே? என்னைவிட அவன் மேலானவனாக இருந்தால் ஏன் அவருக்குப் பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது ஏன் வானவர்கள் கூட்டமாக அவருடன் வரவில்லை?” என்று மூஸா (அலை) அவர்களை இழிவாகப் பேசினான். அவன் பேசியதில் நியாயம் உள்ளதென்று அவன் சமூக எகிப்து மக்களும் கீழ்ப்படிந்தனர்.
மூஸா (அலை) அவர்களின் பிரச்சாரம் பரவிக் கொண்டே இருந்தது. அவர்கள் தம் பனூ இஸ்ராயீலர்களிடம் “ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றுங்கள், நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் மட்டுமே, மறுமையோ என்றென்றுமிருக்கும் நிலையான இடம். தீமை செய்கிறவர்களுக்கு அதற்கான தண்டனையுண்டு. நல்ல காரியம் செய்கின்றவர்கள் என்றென்றும் சொர்க்கத்தில் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு இணை வைக்காதீர்கள். அவனிடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள். அவன் மன்னிப்பவனாக இருக்கின்றான்” என்று சொல்லி பனூ இஸ்ராயீலர்களைத் தம் பக்கம் வைத்திருந்தாலும், ஃபிர்அவ்னின் குறுக்கீடு அவர்களை வழிதவறவே செய்தது.
ஃபிர்அவ்னிடம் ஆட்சியும் அந்தஸ்தும் இருப்பதாலேயே அவர்கள் மிதமிஞ்சி நடக்கிறார்கள். ஆகையால் இறைவனின் சோதனைகளை அவனுக்கும் அவன் சமூகத்தாருக்கும் தரும்படி மூஸா (அலை) அவர்களும் ஹாரூன் (அலை) அவர்களும் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
ஃபிர்அவ்ன் திட்டமிட்ட தீமைகளிலிருந்து மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காத்துக் கொண்டான். வேதனைகள் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
- ஜெஸிலா பானு.
அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது.
சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னை எதிர்த்துப் பேசியதையும், மூஸா (அலை) ஹாரூன் (அலை) அவர்களுடன் சேர்ந்து இறைவனின் துதி பாடியதையும் மக்கள் பார்த்த வண்ணம் இருந்தார்களே தவிர அவர்களால் தைரியமாக ஃபிர்அவ்னை எதிர்த்து நிற்க முடியவில்லை.
கண் முன்பே எது சரி எது தவறு என்று தெரிந்தும் அவர்களால் தம் விடுதலைக்காகப் பேச முடியவில்லை. சம்பந்தமில்லாத ஒருவர் வந்து தம்மைத் தம் அரசவையிலேயே அவமானப்படுத்திவிட்டதாக ஃபிர்அவ்ன் உணர்ந்தான். தான் காலங்காலமாகக் கட்டிக்காத்த மரியாதை தகர்ந்து தான் பொய்யன் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதை ஃபிர்அவ்னால் ஏற்க முடியவில்லை.
மூஸா (அலை) அவர்களின் பின்னால் பலர் சென்றதை ஃபிர்அவ்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவசரமாகத் தன் அமைச்சர்களை அழைத்தான். தம்மைத் துரத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் குறித்துத் தமது மந்திரியிடம் வினவினான் “ஹாமானே! நான் என்ன பொய்யனா?” உடனே ஹாமான் திகைப்புடன் அவரது முழங்காலில் நின்று “அரசே, உங்களைப் பொய்யர் என்று சொல்ல இங்கு யாருக்குத் தைரியம் உள்ளது” என்று கேட்டார்.
“அண்டசராசரத்தையும் காக்கின்ற இறைவன் இருப்பதாக மூஸா சொன்னாரே!?” என்று ஃபிர்அவ்ன் முடிக்கும் முன்பு, ஹாமான் “மூஸாதான் பொய் சொல்கிறார்” என்று ஃபிர்அவ்ன் எதிர்பார்த்த பதிலைத் தந்தார். திருப்தியடைந்த ஃபிர்அவ்ன் “ஆமாம். மூஸா பொய்யர் என்று எனக்கும் தெரியும்” என்று யோசனையில் ஆழ்ந்தார்.
“ஹாமானே, உயரமான ஒரு கோபுரத்தை எனக்காகக் கட்டுங்கள். அதன் மேலே நான் ஏறி மூஸாவின் இறைவனைப் பார்க்கப் போகிறேன். அப்போது யார் பொய் சொல்கிறார் என்று தெரிந்துவிடும்” என ஃபிர்அவ்ன் ஆணவத்தினால் தமது தீயச் செயல்களையும் அழகாக்க முற்பட்டான்.
ஃபிர்அவ்னின் கட்டளையின்படி மிக வேகமாகக் கோபுரம் எழுந்தது. கோபுரத்தில் ஏறியெல்லாம் இறைவனை அடைய முடியாது என்று ஹாமானுக்குத் தெரிந்தே இருந்தது. இருப்பினும் ஃபிர்அவ்னை திருப்திப்படுத்தும் வகையிலும் முதல் முறையாக அரசரை மறுத்தும் ஹாமான் “மாட்சிமை பொருந்திய அரசே, உங்களால் வானத்தில் எதையும் யாரையும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் உங்களைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று சொன்னதை எதிர்பார்த்தவனாக ஃபிர்அவ்னும் ஏற்றுக் கொண்டான்.
மூஸா (அலை) அவர்களின் பின்னால் சென்றவர்களின் கதி இதுதான் என்று மக்கள் அச்சம் கொள்வதற்காக, இறைவனை நம்பிச் சென்ற சூனியக்காரர்களை மக்கள் முன்னிலையில் சிலுவையில் அறைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனம் திருந்திய சூனியக்காரர்கள் அதற்கெல்லாம் பயமில்லாமல் “கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள். எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய். எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!
நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்” என்று தங்களது கடைசி ஆசையைச் சொல்லிவிட்டு, இறைவனுக்காக, தம் உயிரைத் துறந்தனர்.
அதைக் கண்டு மக்கள் பீதியில் இருந்தனர்.
"இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உங்களையும் உங்கள் கடவுள்களையும் புறக்கணிப்பதற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். வழக்கம்போல் மக்கள் பயத்தில் அமைதியாக உறைந்து நின்றனர்.
"மூஸாவை இறைத்தூதர் என்று நம்பி அவரின் இறைவனை வழிபடுபவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண் மக்களைக் கற்பழித்து உயிருடன் விட்டு விடுவோம். நாம் உங்கள் அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர்கள்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
இதையெல்லாம் பார்த்து சகிக்க முடியாத மூஸா (அலை) மிகவும் பொறுமையாக "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு இறைவனை அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று தமது சமுதாயத்திடம் கூறினார்.
ஆனால் மக்களோ இந்த முறை மூஸா (அலை) அவர்களைக் குற்றம்சாட்டினார்கள் "நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். நீர் எங்களிடம் வந்த பின்னரும் துன்புறுத்தப்பட்டே வருகின்றோம்'' என்று கூறினர்.
அதற்கு மூஸா (அலை) அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக "நம் இறைவன், நம்முடைய எதிரிகளை அழித்து, பூமிக்கு உங்களை வழிதோன்றல்களாக்கி வைக்கக்கூடும். அதன்பிறகு நீங்கள் எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதையும் அவனே கவனிப்பான்'' என்று கூறினார்.
மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினருக்கு எதிராக வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று ஃபிர்அவ்ன் யோசிக்கும் முன்பே, இறைவன் ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களுக்குத் தொடர்ந்து தண்டனைகளை வழங்கினான்.
- ஜெஸிலா பானு.
கண் முன்பே எது சரி எது தவறு என்று தெரிந்தும் அவர்களால் தம் விடுதலைக்காகப் பேச முடியவில்லை. சம்பந்தமில்லாத ஒருவர் வந்து தம்மைத் தம் அரசவையிலேயே அவமானப்படுத்திவிட்டதாக ஃபிர்அவ்ன் உணர்ந்தான். தான் காலங்காலமாகக் கட்டிக்காத்த மரியாதை தகர்ந்து தான் பொய்யன் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதை ஃபிர்அவ்னால் ஏற்க முடியவில்லை.
மூஸா (அலை) அவர்களின் பின்னால் பலர் சென்றதை ஃபிர்அவ்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவசரமாகத் தன் அமைச்சர்களை அழைத்தான். தம்மைத் துரத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் குறித்துத் தமது மந்திரியிடம் வினவினான் “ஹாமானே! நான் என்ன பொய்யனா?” உடனே ஹாமான் திகைப்புடன் அவரது முழங்காலில் நின்று “அரசே, உங்களைப் பொய்யர் என்று சொல்ல இங்கு யாருக்குத் தைரியம் உள்ளது” என்று கேட்டார்.
“அண்டசராசரத்தையும் காக்கின்ற இறைவன் இருப்பதாக மூஸா சொன்னாரே!?” என்று ஃபிர்அவ்ன் முடிக்கும் முன்பு, ஹாமான் “மூஸாதான் பொய் சொல்கிறார்” என்று ஃபிர்அவ்ன் எதிர்பார்த்த பதிலைத் தந்தார். திருப்தியடைந்த ஃபிர்அவ்ன் “ஆமாம். மூஸா பொய்யர் என்று எனக்கும் தெரியும்” என்று யோசனையில் ஆழ்ந்தார்.
“ஹாமானே, உயரமான ஒரு கோபுரத்தை எனக்காகக் கட்டுங்கள். அதன் மேலே நான் ஏறி மூஸாவின் இறைவனைப் பார்க்கப் போகிறேன். அப்போது யார் பொய் சொல்கிறார் என்று தெரிந்துவிடும்” என ஃபிர்அவ்ன் ஆணவத்தினால் தமது தீயச் செயல்களையும் அழகாக்க முற்பட்டான்.
ஃபிர்அவ்னின் கட்டளையின்படி மிக வேகமாகக் கோபுரம் எழுந்தது. கோபுரத்தில் ஏறியெல்லாம் இறைவனை அடைய முடியாது என்று ஹாமானுக்குத் தெரிந்தே இருந்தது. இருப்பினும் ஃபிர்அவ்னை திருப்திப்படுத்தும் வகையிலும் முதல் முறையாக அரசரை மறுத்தும் ஹாமான் “மாட்சிமை பொருந்திய அரசே, உங்களால் வானத்தில் எதையும் யாரையும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் உங்களைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று சொன்னதை எதிர்பார்த்தவனாக ஃபிர்அவ்னும் ஏற்றுக் கொண்டான்.
மூஸா (அலை) அவர்களின் பின்னால் சென்றவர்களின் கதி இதுதான் என்று மக்கள் அச்சம் கொள்வதற்காக, இறைவனை நம்பிச் சென்ற சூனியக்காரர்களை மக்கள் முன்னிலையில் சிலுவையில் அறைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனம் திருந்திய சூனியக்காரர்கள் அதற்கெல்லாம் பயமில்லாமல் “கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள். எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய். எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!
நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்” என்று தங்களது கடைசி ஆசையைச் சொல்லிவிட்டு, இறைவனுக்காக, தம் உயிரைத் துறந்தனர்.
அதைக் கண்டு மக்கள் பீதியில் இருந்தனர்.
"இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உங்களையும் உங்கள் கடவுள்களையும் புறக்கணிப்பதற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். வழக்கம்போல் மக்கள் பயத்தில் அமைதியாக உறைந்து நின்றனர்.
"மூஸாவை இறைத்தூதர் என்று நம்பி அவரின் இறைவனை வழிபடுபவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண் மக்களைக் கற்பழித்து உயிருடன் விட்டு விடுவோம். நாம் உங்கள் அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர்கள்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
இதையெல்லாம் பார்த்து சகிக்க முடியாத மூஸா (அலை) மிகவும் பொறுமையாக "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு இறைவனை அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று தமது சமுதாயத்திடம் கூறினார்.
ஆனால் மக்களோ இந்த முறை மூஸா (அலை) அவர்களைக் குற்றம்சாட்டினார்கள் "நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். நீர் எங்களிடம் வந்த பின்னரும் துன்புறுத்தப்பட்டே வருகின்றோம்'' என்று கூறினர்.
அதற்கு மூஸா (அலை) அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக "நம் இறைவன், நம்முடைய எதிரிகளை அழித்து, பூமிக்கு உங்களை வழிதோன்றல்களாக்கி வைக்கக்கூடும். அதன்பிறகு நீங்கள் எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதையும் அவனே கவனிப்பான்'' என்று கூறினார்.
மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினருக்கு எதிராக வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று ஃபிர்அவ்ன் யோசிக்கும் முன்பே, இறைவன் ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களுக்குத் தொடர்ந்து தண்டனைகளை வழங்கினான்.
- ஜெஸிலா பானு.
இறைவனை நம்பிவிட்ட பின் இறைவன் அவர்களைக் காத்தருள்வான். நம்பிக்கையாளர்களை என்றும் அல்லாஹ் கைவிடுவதில்லை.
ஃபிர்அவ்ன் மூஸா (அலை) அவர்களை சூனியக்காரன் என்று நிரூபிக்கத் தம் நாட்டில் உள்ள எல்லாச் சூனியக்காரர்களையும் அழைத்தான். எல்லாரும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்திருந்தனர். போட்டிக்கான நாள் வந்தது. சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் எப்போதும்போல் ஃபிர்அவ்னே கடவுளாக வணங்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஃபிர்அவ்னின் அரச அவையில் மக்கள் திரண்டிருந்தார்கள். என்ன நடக்கப் போகிறது என்ற ஆவல் எல்லோரின் மனதிலும் இருந்தன.
ஹாரூன் (அலை) மூஸா (அலை) அவர்களுடன் வந்திருந்தார்கள். கூடியிருந்த சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னை நோக்கி "நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று கேட்டனர். "ஆம் நிச்சயமாக. நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகிவிடுவீர்கள். வேறு என்ன வேண்டும்?"என்றான் ஃபிர்அவ்ன்.
சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் பரிசை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மூஸா (அலை) பரிசையோ கூலியையோ எந்தவொரு பிரதிபலனையோ தனக்காக எதிர்பார்க்கவில்லை என்பதைப் பற்றி ஃபிர்அவ்ன் சிந்திக்கவே இல்லை. மூஸா (அலை) மட்டுமல்ல மக்களுக்காகத் தோன்றிய எந்தவொரு இறைத்தூதரும் மக்களை நல்வழிப்படுத்த நினைத்தார்களே தவிர அதற்கான கூலியை அவர்கள் எந்தக் காலகட்டத்திலும் எதிர்பார்த்திருக்கவில்லை.
மூஸா (அலை) சூனியக்காரர்களை நோக்கி “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவனுடைய வேதனையிலிருந்து உங்களால் மீளவே முடியாது, நீங்கள் அழிந்துவிடுவீர்கள். பொய் என்றும் வெற்றி் பெறாது” என்று எச்சரிக்கை விடுத்தார்கள்.
சூனியக்காரர்களுக்குக் கொஞ்சம் பதட்டமாகிவிட்டது. தங்களுக்குள் இரகசியமாக விவாதித்துக் கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஹாரூன் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் இறைத்தூதராக இருக்க முடியாது என்று நினைத்த சூனியக்காரர்கள் “இவ்விருவரும் சூனியக்காரர்கள். அவர்களின் சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறப்பான உங்கள் மார்க்கப் பாதையையும் வழிமுறைகளையும் அழிக்க நினைக்கின்றனர்” என ஃபிர்அவ்ன் தரப்போகும் பரிசுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு, பனூ இஸ்ராயீலர்களை நோக்கிக் கூறினர். “வாருங்கள், யார் வெல்கிறார்கள் என்று பார்த்துவிடுவோம். உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத்துங்கள். அணிவகுத்து வாருங்கள்” என்று மூஸா (அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்களையும் அழைத்தனர்.
"மூஸாவே! நீர் எறிகின்றீரா? இல்லை நாங்கள் முதலில் எறியட்டுமா?'' என்று சூனியக்காரர்கள் கேட்டனர்.
"நீங்களே முதலில் எறியுங்கள்!'' என்று மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் பாம்பாகி சீறுவதைப் போலவும், நெளிவதைப் போலவும் மூஸா (அலை) அவர்களுக்குத் தோற்றமளித்தது. அதைக் கண்டு அவர்கள் பயந்தார்கள்.
அப்போது அல்லாஹ் மூஸாவிடம் “பயப்படாதீர்கள். நிச்சயமாக நீங்கள்தான் வெல்வீர்கள். சூனியக்காரன் செய்வது வெறும் சூழ்ச்சியே. அவன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” என்று உறுதியளித்தான்.
மூஸா (அலை) தமது வலது கையில் உள்ள கைத்தடியை எறிந்தார்கள். அதிலிருந்து வெளிப்பட்ட பாம்பு அவர்கள் செய்த சூனியங்கள் யாவற்றையும் விழுங்கிவிட்டது.
இதைக் கண்ட மறுநொடியே எல்லா சூனியக்காரர்களும் 'ஸஜ்தா' செய்தனர். அதாவது இறைவனுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் மண்டியிட்டுத் தம் நெற்றித் தரையில் படும்படி சிரம் தாழ்த்தி “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறோம்” என்றனர்.
அதைக் கேட்டுக் கோபம் தலைக்கேறிய ஃபிர்அவ்ன் “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவோ? உங்களை மாறுகால் மாறுகை வாங்கி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை அப்போது அறிந்துக் கொள்வீர்கள்'' என்று கூறினான்.
“எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும்விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள். இவ்வுலக வாழ்க்கையில்தான் நீ தீர்ப்பு அளிக்க முடியும். எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பான். எங்கள் இறைவனை நாங்கள் நம்புகிறோம். அல்லாஹ்வே சிறந்தவன், நிலையானவன்.
இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே, அதில் அவன் சாகவும் மாட்டான், வாழவும் மாட்டான். நல்லறங்கள் புரிந்து நம்பிக்கைக் கொண்டவராக அவனிடம் வருவோருக்கு உயர்வான பதவிகள் உள்ளன. நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி” என்று சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னின் தண்டனைக்குப் பயப்படாமல் உறுதிப்படக் கூறினார்கள்.
இறைவனை நம்பிவிட்ட பின் இறைவன் அவர்களைக் காத்தருள்வான். நம்பிக்கையாளர்களை என்றும் அல்லாஹ் கைவிடுவதில்லை.
- ஜெஸிலா பானு
ஹாரூன் (அலை) மூஸா (அலை) அவர்களுடன் வந்திருந்தார்கள். கூடியிருந்த சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னை நோக்கி "நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று கேட்டனர். "ஆம் நிச்சயமாக. நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகிவிடுவீர்கள். வேறு என்ன வேண்டும்?"என்றான் ஃபிர்அவ்ன்.
சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் பரிசை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மூஸா (அலை) பரிசையோ கூலியையோ எந்தவொரு பிரதிபலனையோ தனக்காக எதிர்பார்க்கவில்லை என்பதைப் பற்றி ஃபிர்அவ்ன் சிந்திக்கவே இல்லை. மூஸா (அலை) மட்டுமல்ல மக்களுக்காகத் தோன்றிய எந்தவொரு இறைத்தூதரும் மக்களை நல்வழிப்படுத்த நினைத்தார்களே தவிர அதற்கான கூலியை அவர்கள் எந்தக் காலகட்டத்திலும் எதிர்பார்த்திருக்கவில்லை.
மூஸா (அலை) சூனியக்காரர்களை நோக்கி “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவனுடைய வேதனையிலிருந்து உங்களால் மீளவே முடியாது, நீங்கள் அழிந்துவிடுவீர்கள். பொய் என்றும் வெற்றி் பெறாது” என்று எச்சரிக்கை விடுத்தார்கள்.
சூனியக்காரர்களுக்குக் கொஞ்சம் பதட்டமாகிவிட்டது. தங்களுக்குள் இரகசியமாக விவாதித்துக் கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஹாரூன் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் இறைத்தூதராக இருக்க முடியாது என்று நினைத்த சூனியக்காரர்கள் “இவ்விருவரும் சூனியக்காரர்கள். அவர்களின் சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறப்பான உங்கள் மார்க்கப் பாதையையும் வழிமுறைகளையும் அழிக்க நினைக்கின்றனர்” என ஃபிர்அவ்ன் தரப்போகும் பரிசுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு, பனூ இஸ்ராயீலர்களை நோக்கிக் கூறினர். “வாருங்கள், யார் வெல்கிறார்கள் என்று பார்த்துவிடுவோம். உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத்துங்கள். அணிவகுத்து வாருங்கள்” என்று மூஸா (அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்களையும் அழைத்தனர்.
"மூஸாவே! நீர் எறிகின்றீரா? இல்லை நாங்கள் முதலில் எறியட்டுமா?'' என்று சூனியக்காரர்கள் கேட்டனர்.
"நீங்களே முதலில் எறியுங்கள்!'' என்று மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் பாம்பாகி சீறுவதைப் போலவும், நெளிவதைப் போலவும் மூஸா (அலை) அவர்களுக்குத் தோற்றமளித்தது. அதைக் கண்டு அவர்கள் பயந்தார்கள்.
அப்போது அல்லாஹ் மூஸாவிடம் “பயப்படாதீர்கள். நிச்சயமாக நீங்கள்தான் வெல்வீர்கள். சூனியக்காரன் செய்வது வெறும் சூழ்ச்சியே. அவன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” என்று உறுதியளித்தான்.
மூஸா (அலை) தமது வலது கையில் உள்ள கைத்தடியை எறிந்தார்கள். அதிலிருந்து வெளிப்பட்ட பாம்பு அவர்கள் செய்த சூனியங்கள் யாவற்றையும் விழுங்கிவிட்டது.
இதைக் கண்ட மறுநொடியே எல்லா சூனியக்காரர்களும் 'ஸஜ்தா' செய்தனர். அதாவது இறைவனுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் மண்டியிட்டுத் தம் நெற்றித் தரையில் படும்படி சிரம் தாழ்த்தி “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறோம்” என்றனர்.
அதைக் கேட்டுக் கோபம் தலைக்கேறிய ஃபிர்அவ்ன் “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவோ? உங்களை மாறுகால் மாறுகை வாங்கி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை அப்போது அறிந்துக் கொள்வீர்கள்'' என்று கூறினான்.
“எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும்விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள். இவ்வுலக வாழ்க்கையில்தான் நீ தீர்ப்பு அளிக்க முடியும். எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பான். எங்கள் இறைவனை நாங்கள் நம்புகிறோம். அல்லாஹ்வே சிறந்தவன், நிலையானவன்.
இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே, அதில் அவன் சாகவும் மாட்டான், வாழவும் மாட்டான். நல்லறங்கள் புரிந்து நம்பிக்கைக் கொண்டவராக அவனிடம் வருவோருக்கு உயர்வான பதவிகள் உள்ளன. நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி” என்று சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னின் தண்டனைக்குப் பயப்படாமல் உறுதிப்படக் கூறினார்கள்.
இறைவனை நம்பிவிட்ட பின் இறைவன் அவர்களைக் காத்தருள்வான். நம்பிக்கையாளர்களை என்றும் அல்லாஹ் கைவிடுவதில்லை.
- ஜெஸிலா பானு






