என் மலர்
இஸ்லாம்
அண்டசராசரங்களையும் படைத்துப் பாதுகாத்து வரும் அந்த சர்வலோக இரட்சகன்தான் நம் எல்லோருக்கும் இறைவன்.
மூஸா (அலை) தம் மனைவியை அழைத்துக் கொண்டு எகிப்திற்குப் பல நாள் பயணத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தார்கள். தன்னுடைய வீட்டைக் கண்டுபிடித்து வந்தடைந்து, தன் சகோதரன் ஹாரூனிடம் இறைவனின் கட்டளையைப் பற்றிச் சொன்னார்கள்.
இறைத்தூதர் இருவரும் தம் தாயிடம் விடைபெற்று ஃபிர்அவ்னின் அவைக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் அனுமதி பெற்றுப் பேசினார்கள். இறைவனின் கட்டளையின்படி ஓரிறைக் கொள்கையைப் பற்றி எடுத்துரைத்தார்கள். “நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடுங்கள்” என்று கம்பீரமாகத் தங்கு தடையில்லாமல் சரளமாகப் பேசியவர்களை ஃபிர்அவ்ன் ஆணவத்துடன் ஏளனமாகப் பார்த்தான்.
“என்ன இறைத்தூதரா? நீங்கள் மூஸாதானே? எங்கள் வீட்டில் வளர்ந்த பிள்ளைதானே? ஒரு கொலை செய்துவிட்டு இங்கிருந்து ஓடியவர்தானே? இன்று நன்றி கெட்டவராக வந்து நிற்கிறாயே!?” என்று கேவலப்படுத்தும் நோக்கில் ஃபிர்அவ்ன் கேட்டான்.
“ஆமாம், கொலை செய்தேன். அது அறியாமையில் நிகழ்ந்தது. நான் நேர்வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன். உங்களுக்கு அஞ்சி ஓடிவிட்டேன். என் இறைவன் என்னை மன்னித்துவிட்டான். எனக்கு ஞானத்தை வழங்கித் தூதர்களில் ஒருவராக என்னை நியமித்துள்ளான். இஸ்ராயீலர்களை நீங்கள் அடிமைப்படுத்த நியாயம் கற்பித்து எனக்குச் செய்தவற்றை நீங்கள் சொல்லிக் காட்டுகிறீர்கள்” என்று வாதாடினார்கள் மூஸா (அலை).
தம் முன்பு நின்று பேச அஞ்சுபவர்களுக்கு மத்தியில் துணிச்சலாகப் பேசும் மூஸாவைக் கண்டு ஃபிர்அவ்னுக்குக் கோபம் பொங்கி “யார் உன் இறைவன்?” என்று கேட்டான்.
“அண்டசராசரங்களையும் படைத்துப் பாதுகாத்து வரும் அந்த சர்வலோக இரட்சகன்தான் நம் எல்லோருக்கும் இறைவன். அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன். அவன் ஒருவனே. வழிபாட்டிற்குரியவன் அவனைத் தவிர வேறில்லை. எங்களுடைய நல்லுபதேசங்களை நீங்கள் செவிமடுக்காமல் போனால் நீங்களே நஷ்டமடைவீர்கள்” என்று உறுதியாகச் சொன்னார்கள் மூஸா (அலை).
தன்னைச் சுற்றியிருந்தோர்களிடம் ஃபிர்அவ்ன் “இதை நீங்கள் கேட்டீர்களா? நம்மிடம் அனுப்பப்பட்டுள்ள இந்தத் தூதர் பைத்தியக்காரர்தான்" என்று நகைத்தான். தொடர்ந்து கோபமான குரலில் “என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தாலும் உம்மைச் சிறைப்படுத்துவேன்” என்று மிரட்டினான்.
“தெளிவான அத்தாட்சியை நான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா?” என்று கூறியபடி, தமது கைத்தடியை எறிந்தார்கள் அது பெரிய பாம்பாக மாறி எல்லாரையும் பயமுறுத்தியது. தமது கையை வெளிப்படுத்தினார் மூஸா (அலை), அது பார்ப்போருக்கு வெண்மையாகவும் பிரகாசமாகவும் தோன்றியது.
உடனே அவையில் இருந்த ஃபிர்அவ்னின் ஆட்கள் “இவர் திறமையான சூனியக்காரர்தான்” என்று சொல்ல, அதற்கு ஃபிர்அவ்ன் “தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று இஸ்ராயீலர்களையே திசை திருப்பினான்.
இரு சகோதரர்களுக்கும் கொஞ்சம் அவகாசம் அளிப்போம். பல நகரங்களில் இருந்து திறமையான சூனியக்காரர்களையெல்லாம் திரட்டி இவர்களுக்குள் போட்டி வைப்போம். அப்போது உண்மை தெரிந்துவிடும் என்று முடிவானது.
- ஜெஸிலா பானு
இறைத்தூதர் இருவரும் தம் தாயிடம் விடைபெற்று ஃபிர்அவ்னின் அவைக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் அனுமதி பெற்றுப் பேசினார்கள். இறைவனின் கட்டளையின்படி ஓரிறைக் கொள்கையைப் பற்றி எடுத்துரைத்தார்கள். “நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடுங்கள்” என்று கம்பீரமாகத் தங்கு தடையில்லாமல் சரளமாகப் பேசியவர்களை ஃபிர்அவ்ன் ஆணவத்துடன் ஏளனமாகப் பார்த்தான்.
“என்ன இறைத்தூதரா? நீங்கள் மூஸாதானே? எங்கள் வீட்டில் வளர்ந்த பிள்ளைதானே? ஒரு கொலை செய்துவிட்டு இங்கிருந்து ஓடியவர்தானே? இன்று நன்றி கெட்டவராக வந்து நிற்கிறாயே!?” என்று கேவலப்படுத்தும் நோக்கில் ஃபிர்அவ்ன் கேட்டான்.
“ஆமாம், கொலை செய்தேன். அது அறியாமையில் நிகழ்ந்தது. நான் நேர்வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன். உங்களுக்கு அஞ்சி ஓடிவிட்டேன். என் இறைவன் என்னை மன்னித்துவிட்டான். எனக்கு ஞானத்தை வழங்கித் தூதர்களில் ஒருவராக என்னை நியமித்துள்ளான். இஸ்ராயீலர்களை நீங்கள் அடிமைப்படுத்த நியாயம் கற்பித்து எனக்குச் செய்தவற்றை நீங்கள் சொல்லிக் காட்டுகிறீர்கள்” என்று வாதாடினார்கள் மூஸா (அலை).
தம் முன்பு நின்று பேச அஞ்சுபவர்களுக்கு மத்தியில் துணிச்சலாகப் பேசும் மூஸாவைக் கண்டு ஃபிர்அவ்னுக்குக் கோபம் பொங்கி “யார் உன் இறைவன்?” என்று கேட்டான்.
“அண்டசராசரங்களையும் படைத்துப் பாதுகாத்து வரும் அந்த சர்வலோக இரட்சகன்தான் நம் எல்லோருக்கும் இறைவன். அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன். அவன் ஒருவனே. வழிபாட்டிற்குரியவன் அவனைத் தவிர வேறில்லை. எங்களுடைய நல்லுபதேசங்களை நீங்கள் செவிமடுக்காமல் போனால் நீங்களே நஷ்டமடைவீர்கள்” என்று உறுதியாகச் சொன்னார்கள் மூஸா (அலை).
தன்னைச் சுற்றியிருந்தோர்களிடம் ஃபிர்அவ்ன் “இதை நீங்கள் கேட்டீர்களா? நம்மிடம் அனுப்பப்பட்டுள்ள இந்தத் தூதர் பைத்தியக்காரர்தான்" என்று நகைத்தான். தொடர்ந்து கோபமான குரலில் “என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தாலும் உம்மைச் சிறைப்படுத்துவேன்” என்று மிரட்டினான்.
“தெளிவான அத்தாட்சியை நான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா?” என்று கூறியபடி, தமது கைத்தடியை எறிந்தார்கள் அது பெரிய பாம்பாக மாறி எல்லாரையும் பயமுறுத்தியது. தமது கையை வெளிப்படுத்தினார் மூஸா (அலை), அது பார்ப்போருக்கு வெண்மையாகவும் பிரகாசமாகவும் தோன்றியது.
உடனே அவையில் இருந்த ஃபிர்அவ்னின் ஆட்கள் “இவர் திறமையான சூனியக்காரர்தான்” என்று சொல்ல, அதற்கு ஃபிர்அவ்ன் “தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று இஸ்ராயீலர்களையே திசை திருப்பினான்.
இரு சகோதரர்களுக்கும் கொஞ்சம் அவகாசம் அளிப்போம். பல நகரங்களில் இருந்து திறமையான சூனியக்காரர்களையெல்லாம் திரட்டி இவர்களுக்குள் போட்டி வைப்போம். அப்போது உண்மை தெரிந்துவிடும் என்று முடிவானது.
- ஜெஸிலா பானு
‘துவா’ என்ற பள்ளத்தாக்கில் இறைவன், தன் இறை அறிவிப்பை அருளி, மூஸா (அலை) அவர்களை இறைத்தூதராகத் தேர்ந்தெடுத்தார்.
‘துவா’ என்ற பள்ளத்தாக்கில் இறைவன், தன் இறை அறிவிப்பை அருளி, மூஸா (அலை) அவர்களை இறைத்தூதராகத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குச் சென்று ஃபிர்அவ்னிடம் ஓரிறைக் கொள்கையைப் போதிக்கும்படி சொன்னான்.
மூஸா (அலை) அவர்கள் பயந்தார்கள். தன்னைக் கொலைகாரனென்று தேடிக் கொண்டு இருக்கும் இடத்தில் எப்படி தன்னை இறைத்தூதரென்று சொல்லிக் கொண்டு அதே எகிப்தில் நுழைவது என்று யோசித்தார்கள். மேலும் அவர் சரளமாகப் பேசக் கூடியவர் இல்லை. மற்றவர்கள் சரியாக விளங்கிக் கொள்ள முடியாதவாறு திக்கிப் பேசும் இயல்புடையவராக இருந்தார்கள் மூஸா (அலை). தான் தனியாக ஃபிர்அவ்னை எதிர்கொள்வதைக் காட்டிலும் தன்னுடன் தன் சகோதரன் ஹாரூன் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவராக இறைவனிடம் தனக்கு வேண்டியதைக் கேட்டார்கள்.
“இறைவனே! நான் பயப்படாமல் நடந்து கொள்ளும் அளவுக்கு என்னை உறுதிப்படுத்தி, எனக்கு எல்லாக் காரியங்களையும் எளிதாக்கி வைப்பாயாக. என்னால் சரளமாகப் பேச முடியாது, நான் சொல்வது மற்றவர்கள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு என் நாக்கில் இருக்கும் திக்குவாய் முடிச்சை அவிழ்ப்பாயாக! எனக்கு உதவியாளராக என் உடன்பிறந்த சகோதரன் ஹாரூனை ஏற்படுத்தித் தருவாயாக” என்று பயபக்தியோடு கேட்டார்கள் மூஸா (அலை).
அதற்கு இறைவன் “பயப்படாமல் புறப்படுங்கள், நீங்கள் கேட்டவைகளை உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது வாக்குறுதி மாறாமல் உங்களைக் காத்தது பற்றி எண்ணிப் பாருங்கள். உங்களை நாமே பல சோதனைகள் கொண்டு சோதித்தோம்.
எனக்காகவே உம்மைத் தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகவே, நீங்களும் உங்கள் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்லுங்கள். என்னைத் தியானித்துத் தொழுவதை நீங்கள் இருவரும் கைவிடாதீர்கள். வரம்பு மீறிவிட்ட ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நீங்கள் என்னுடைய தூதரென்று சொல்லுங்கள். அவனிடம் நீங்கள் இருவரும் சாந்தமாக நடந்து கொள்ளுங்கள்.
மென்மையான சொற்களைச் சொல்லுங்கள். அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம். பனூ இஸ்ராயீலர்களை வேதனைப்படுத்தாது நல்ல முறையில் நடந்து கொள்ளச் சொல்லுங்கள். நேர் வழியைப் பின்பற்றுகிறவருக்குத்தான் வாழ்க்கையில் அமைதியும் வெற்றியும் என்று சொல்லுங்கள்” என்றான் இறைவன்.
அதற்கு மூஸா (அலை) “எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான் அல்லது அவனால் எங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன்" என்றார்கள்.
“நீங்கள் இருவரும் பயப்பட வேண்டாம். நான் எல்லாவற்றையும் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் உங்களிருவருடனும் எப்போதும் இருப்பேன்” என்று இறைவன் அறிவித்ததைக் கேட்டு, மூஸா (அலை) அவர்களுக்குத் தெளிவு பிறந்தது. அவர்கள் இருதயம் படபடத்தது. தன்னுடன் பேசிய குரல் நின்றதும், சுற்றிலும் பார்த்துவிட்டு, தம் மனைவியை விட்டுவிட்டு வந்த இடத்திற்குத் திரும்பினார்கள்.
தன் மனைவியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்தார்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற நாம் உடனே எகிப்துக்குப் புறப்பட வேண்டுமென்று அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினார்கள்.
- ஜெஸிலா பானு.
மூஸா (அலை) அவர்கள் பயந்தார்கள். தன்னைக் கொலைகாரனென்று தேடிக் கொண்டு இருக்கும் இடத்தில் எப்படி தன்னை இறைத்தூதரென்று சொல்லிக் கொண்டு அதே எகிப்தில் நுழைவது என்று யோசித்தார்கள். மேலும் அவர் சரளமாகப் பேசக் கூடியவர் இல்லை. மற்றவர்கள் சரியாக விளங்கிக் கொள்ள முடியாதவாறு திக்கிப் பேசும் இயல்புடையவராக இருந்தார்கள் மூஸா (அலை). தான் தனியாக ஃபிர்அவ்னை எதிர்கொள்வதைக் காட்டிலும் தன்னுடன் தன் சகோதரன் ஹாரூன் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவராக இறைவனிடம் தனக்கு வேண்டியதைக் கேட்டார்கள்.
“இறைவனே! நான் பயப்படாமல் நடந்து கொள்ளும் அளவுக்கு என்னை உறுதிப்படுத்தி, எனக்கு எல்லாக் காரியங்களையும் எளிதாக்கி வைப்பாயாக. என்னால் சரளமாகப் பேச முடியாது, நான் சொல்வது மற்றவர்கள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு என் நாக்கில் இருக்கும் திக்குவாய் முடிச்சை அவிழ்ப்பாயாக! எனக்கு உதவியாளராக என் உடன்பிறந்த சகோதரன் ஹாரூனை ஏற்படுத்தித் தருவாயாக” என்று பயபக்தியோடு கேட்டார்கள் மூஸா (அலை).
அதற்கு இறைவன் “பயப்படாமல் புறப்படுங்கள், நீங்கள் கேட்டவைகளை உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது வாக்குறுதி மாறாமல் உங்களைக் காத்தது பற்றி எண்ணிப் பாருங்கள். உங்களை நாமே பல சோதனைகள் கொண்டு சோதித்தோம்.
எனக்காகவே உம்மைத் தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகவே, நீங்களும் உங்கள் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்லுங்கள். என்னைத் தியானித்துத் தொழுவதை நீங்கள் இருவரும் கைவிடாதீர்கள். வரம்பு மீறிவிட்ட ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நீங்கள் என்னுடைய தூதரென்று சொல்லுங்கள். அவனிடம் நீங்கள் இருவரும் சாந்தமாக நடந்து கொள்ளுங்கள்.
மென்மையான சொற்களைச் சொல்லுங்கள். அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம். பனூ இஸ்ராயீலர்களை வேதனைப்படுத்தாது நல்ல முறையில் நடந்து கொள்ளச் சொல்லுங்கள். நேர் வழியைப் பின்பற்றுகிறவருக்குத்தான் வாழ்க்கையில் அமைதியும் வெற்றியும் என்று சொல்லுங்கள்” என்றான் இறைவன்.
அதற்கு மூஸா (அலை) “எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான் அல்லது அவனால் எங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன்" என்றார்கள்.
“நீங்கள் இருவரும் பயப்பட வேண்டாம். நான் எல்லாவற்றையும் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் உங்களிருவருடனும் எப்போதும் இருப்பேன்” என்று இறைவன் அறிவித்ததைக் கேட்டு, மூஸா (அலை) அவர்களுக்குத் தெளிவு பிறந்தது. அவர்கள் இருதயம் படபடத்தது. தன்னுடன் பேசிய குரல் நின்றதும், சுற்றிலும் பார்த்துவிட்டு, தம் மனைவியை விட்டுவிட்டு வந்த இடத்திற்குத் திரும்பினார்கள்.
தன் மனைவியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்தார்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற நாம் உடனே எகிப்துக்குப் புறப்பட வேண்டுமென்று அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினார்கள்.
- ஜெஸிலா பானு.
அல்லாஹ் தான் நாடியவரை மன்னிப்பான், தான் நாடியவரை வேதனையும் செய்வான், இன்னும் தான் நாடியவருக்கு, தம் அருட்கொடையையும் விசாலமாக்குவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
திட்டமிடாமல் கால் போன போக்கில் எகிப்தைவிட்டுத் தப்பி வந்து, மத்யன் நகரத்தில் பத்தாண்டுகள் இருந்துவிட்டு, கர்ப்பிணியான மனைவியுடன் அந்த நகரத்தைவிட்டுக் கிளம்பி தன் குடும்பத்தினரைப் பார்க்கும் ஆவலில் மீண்டும் எகிப்துக்குக் கிளம்பிவிடுகிறார்கள் மூஸா (அலை).
மூஸா (அலை) அவர்களுக்கு ஆடுகளையும் உணவையும் தந்து வழியனுப்பிய ஷுஐப் (அலை) ஆடு மேய்க்கும் தடியையும் தந்தார்கள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, அப்படியே வந்து கொண்டிருந்தபோது மிகவும் இருட்டிவிட்டிருந்தது. நல்ல குளிராக இருந்த இரவில் குளிர்காய்வதற்கும், சமைப்பதற்கும் நெருப்பில்லை. எங்காவது நெருப்பு கிடைக்குமா என்று சுற்றிப் பார்த்தார்கள் மூஸா (அலை). தொலைவில் தூர்-சினாய் மலையில் வெளிச்சமாகத் தெரிந்தது. “நீங்கள் இங்கேயே இருங்கள் நான் அங்கு சென்று நெருப்பு வாங்கி வருகிறேன்” என்று சொல்லி மனைவியை அங்கு விட்டுவிட்டு. வெளிச்சம் தெரியும் பகுதிக்கு விரைந்தார்கள்.
அந்த இடத்திற்கு வந்ததும் “மூஸாவே!” என்று யாரோ அழைப்பதைக் கேட்டுப் பயந்தார்கள் மூஸா (அலை). அந்தக் குரல் தொடர்ந்தது “பயப்படாதீர்கள். நாம்தான் உம்முடைய இறைவன். நீங்கள் புனிதமான ‘துவா’ என்ற பள்ளத்தாக்கில் நிற்கிறீர்கள். உங்கள் காலணிகளைக் கழற்றிவிடுங்கள்” என்ற இறைவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உடனே தமது காலணிகளைக் கழற்றினார்கள் மூஸா (அலை). “நாம் உம்மை என் தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த இறை அறிவிப்பை கவனமாகக் கேளுங்கள்” என்றான் இறைவன்.
மிகவும் பவ்யமாக, கவனமாகக் காது கொடுத்துக் கேட்டார்கள் மூஸா (அலை) “நான்தான் அல்லாஹ், என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீங்கள் வழிபடுங்கள், என்னையே தியானிக்கும் பொருட்டு உங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் செய்த காரியங்களுக்கான தகுந்த பிரதிபலன்கள் அளிக்கப்படும். அதனை நம்பாது, தன் மன இச்சையைப் பின்பற்றுபவன் அழிந்து போவான். அந்த நியாயத் தீர்ப்பு நாள் எப்போது வரும் என்பதை என்னைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்” என்று அறிவிப்பை அருளினான் இறைவன்.
மூஸா (அலை) இன்னும் பதட்டத்திலிருந்து மீளாமல், செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். “மூஸாவே! உம்முடைய வலது கையில் என்ன இருக்கிறது?” என்று அல்லாஹ் கேட்டான். கொஞ்சம் இயல்புநிலைக்குத் திரும்பியவராக மூஸா (அலை) “இது என்னுடைய கைத்தடி. இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறித்துப் போடுவேன். இதன் மீது நான் சமயங்களில் சாய்ந்து கொள்ளவும் செய்வேன்.
இதை வைத்து சில பல தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வேன்” என்று தன் திக்குவாயால் திக்கித் திணறிச் சொன்னார்கள். “அதனைக் கீழே எறியும்” என்று இறைவன் கட்டளையிட்டான். கட்டளைக்குப் பணிந்து உடனே அதனைக் கீழே எறிந்தார்கள் மூஸா (அலை). அப்போது அந்தக் கைத்தடி ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பானது. அதைக் கண்டு பயந்து ஓடினார்கள் மூஸா (அலை). இறைவன் மீண்டும் “மூஸாவே, பயப்படாதீர்கள். அதைப் பிடியுங்கள். கண்டிப்பாக அது பழைய நிலைக்கே மாறிவிடும்” என்ற இறைவனின் வாக்கிற்கு கட்டுப்பட்டு, அதனை எடுத்தார்கள் உடனே அந்தப் பாம்பு பழைய நிலையான கைத்தடிக்கு மாறியது.
இன்னும் வேறு ஓர் அதிசயத்தை மூஸா (அலை) அவர்களுக்கு விட்டுச் சென்றான் இறைவன். மூஸா (அலை) தமது கையை விலாப்புறமாக அக்குளுக்குள் புகுத்தி வெளியில் எடுத்தால், ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக ஒளிரும் கையாக மாறியது. அது தன்னுடைய மற்றொரு அத்தாட்சி என்று அறிவித்தான் இறைவன். மேலும் எகிப்துக்குச் சென்று வரம்பு மீறிய ஃபிர்அவ்னிடம் ஓரிறைக் கொள்கையைப் போதிக்கும்படி சொன்னான். அல்லாஹ் கொடுத்த அற்புத சக்திகள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள உதவும் என்றும் இறைவன் கூறினான்.
எகிப்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு ஃபிர்அவ்னிடமிருந்து தப்பித்து வந்த மூஸா (அலை) அவர்களிடம், இறைவன் தம் இறை அறிவிப்பைத் தந்து இறைத்தூதராக்கி அற்புதங்களையும் தந்து, அல்லாஹ்வின் பாதுகாப்பை உறுதியளித்து ஃபிர்அவ்னிடமே அனுப்பி வைக்கிறான். அல்லாஹ் தான் நாடியவரை மன்னிப்பான், தான் நாடியவரை வேதனையும் செய்வான், இன்னும் தான் நாடியவருக்கு, தம் அருட்கொடையையும் விசாலமாக்குவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
- ஜெஸிலா பானு.
மூஸா (அலை) அவர்களுக்கு ஆடுகளையும் உணவையும் தந்து வழியனுப்பிய ஷுஐப் (அலை) ஆடு மேய்க்கும் தடியையும் தந்தார்கள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, அப்படியே வந்து கொண்டிருந்தபோது மிகவும் இருட்டிவிட்டிருந்தது. நல்ல குளிராக இருந்த இரவில் குளிர்காய்வதற்கும், சமைப்பதற்கும் நெருப்பில்லை. எங்காவது நெருப்பு கிடைக்குமா என்று சுற்றிப் பார்த்தார்கள் மூஸா (அலை). தொலைவில் தூர்-சினாய் மலையில் வெளிச்சமாகத் தெரிந்தது. “நீங்கள் இங்கேயே இருங்கள் நான் அங்கு சென்று நெருப்பு வாங்கி வருகிறேன்” என்று சொல்லி மனைவியை அங்கு விட்டுவிட்டு. வெளிச்சம் தெரியும் பகுதிக்கு விரைந்தார்கள்.
அந்த இடத்திற்கு வந்ததும் “மூஸாவே!” என்று யாரோ அழைப்பதைக் கேட்டுப் பயந்தார்கள் மூஸா (அலை). அந்தக் குரல் தொடர்ந்தது “பயப்படாதீர்கள். நாம்தான் உம்முடைய இறைவன். நீங்கள் புனிதமான ‘துவா’ என்ற பள்ளத்தாக்கில் நிற்கிறீர்கள். உங்கள் காலணிகளைக் கழற்றிவிடுங்கள்” என்ற இறைவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உடனே தமது காலணிகளைக் கழற்றினார்கள் மூஸா (அலை). “நாம் உம்மை என் தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த இறை அறிவிப்பை கவனமாகக் கேளுங்கள்” என்றான் இறைவன்.
மிகவும் பவ்யமாக, கவனமாகக் காது கொடுத்துக் கேட்டார்கள் மூஸா (அலை) “நான்தான் அல்லாஹ், என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீங்கள் வழிபடுங்கள், என்னையே தியானிக்கும் பொருட்டு உங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் செய்த காரியங்களுக்கான தகுந்த பிரதிபலன்கள் அளிக்கப்படும். அதனை நம்பாது, தன் மன இச்சையைப் பின்பற்றுபவன் அழிந்து போவான். அந்த நியாயத் தீர்ப்பு நாள் எப்போது வரும் என்பதை என்னைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்” என்று அறிவிப்பை அருளினான் இறைவன்.
மூஸா (அலை) இன்னும் பதட்டத்திலிருந்து மீளாமல், செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். “மூஸாவே! உம்முடைய வலது கையில் என்ன இருக்கிறது?” என்று அல்லாஹ் கேட்டான். கொஞ்சம் இயல்புநிலைக்குத் திரும்பியவராக மூஸா (அலை) “இது என்னுடைய கைத்தடி. இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறித்துப் போடுவேன். இதன் மீது நான் சமயங்களில் சாய்ந்து கொள்ளவும் செய்வேன்.
இதை வைத்து சில பல தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வேன்” என்று தன் திக்குவாயால் திக்கித் திணறிச் சொன்னார்கள். “அதனைக் கீழே எறியும்” என்று இறைவன் கட்டளையிட்டான். கட்டளைக்குப் பணிந்து உடனே அதனைக் கீழே எறிந்தார்கள் மூஸா (அலை). அப்போது அந்தக் கைத்தடி ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பானது. அதைக் கண்டு பயந்து ஓடினார்கள் மூஸா (அலை). இறைவன் மீண்டும் “மூஸாவே, பயப்படாதீர்கள். அதைப் பிடியுங்கள். கண்டிப்பாக அது பழைய நிலைக்கே மாறிவிடும்” என்ற இறைவனின் வாக்கிற்கு கட்டுப்பட்டு, அதனை எடுத்தார்கள் உடனே அந்தப் பாம்பு பழைய நிலையான கைத்தடிக்கு மாறியது.
இன்னும் வேறு ஓர் அதிசயத்தை மூஸா (அலை) அவர்களுக்கு விட்டுச் சென்றான் இறைவன். மூஸா (அலை) தமது கையை விலாப்புறமாக அக்குளுக்குள் புகுத்தி வெளியில் எடுத்தால், ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக ஒளிரும் கையாக மாறியது. அது தன்னுடைய மற்றொரு அத்தாட்சி என்று அறிவித்தான் இறைவன். மேலும் எகிப்துக்குச் சென்று வரம்பு மீறிய ஃபிர்அவ்னிடம் ஓரிறைக் கொள்கையைப் போதிக்கும்படி சொன்னான். அல்லாஹ் கொடுத்த அற்புத சக்திகள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள உதவும் என்றும் இறைவன் கூறினான்.
எகிப்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு ஃபிர்அவ்னிடமிருந்து தப்பித்து வந்த மூஸா (அலை) அவர்களிடம், இறைவன் தம் இறை அறிவிப்பைத் தந்து இறைத்தூதராக்கி அற்புதங்களையும் தந்து, அல்லாஹ்வின் பாதுகாப்பை உறுதியளித்து ஃபிர்அவ்னிடமே அனுப்பி வைக்கிறான். அல்லாஹ் தான் நாடியவரை மன்னிப்பான், தான் நாடியவரை வேதனையும் செய்வான், இன்னும் தான் நாடியவருக்கு, தம் அருட்கொடையையும் விசாலமாக்குவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
- ஜெஸிலா பானு.
இறைவனின் அத்தாட்சிகளைக் கண்ணுற்று, இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் மூஸா (அலை).
ஷுஐப் (அலை) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூஸா (அலை) மத்யன் நகரத்திலேயே தங்கினார்கள். ஷுஐப் (அலை) அவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார்கள்.
ஷுஐப் (அலை) அவர்களின் ஆடுகளை மேய்த்ததோடு, வீட்டில் தங்களால் முடிந்த எல்லா வேலைகளையும் செய்தார்கள் மூஸா (அலை).
ஷுஐப் (அலை) அவர்கள் தன் வாக்குறுதியின்படி தமது இரண்டாவது மகளை மூஸா (அலை) அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்கள். மூஸா (அலை) வேலையாள் போல் இல்லாமல் ஒரு மகனைப் போல் மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார்கள்.
மூஸா (அலை) தமது குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்ந்த அந்தப் பத்து ஆண்டு காலம் அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அந்தக் காலம் அவர் ஓர் இறைத்தூதராவதற்கான தயாரிப்புக் காலமாக அமைந்தது. சூரியன் உதிப்பதிலிருந்து சூரியன் மறைவது, நிலா நட்சத்திரங்களைக் கவனிப்பது, செடி, கொடிகள் வளர்வதை உற்று நோக்குவது என்று இறைவனின் எல்லாப் படைப்புகளைப் பற்றியும் ஆராய்வதும் சிந்திப்பதுமாக இருந்தார்கள். பூமியைப் பிளந்து கொண்டு துளிர்விடும் சின்னச் செடியையும், மடிந்த செடிகள் மீண்டும் விதையிலிருந்து உயிர்ப்புடன் எழுவதையெல்லாம் பார்த்து, அதில் இறைவனின் அத்தாட்சிகளைக் கண்ணுற்று, இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் மூஸா (அலை).
இறைவனின் மகத்துவத்தைப் பற்றி இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் பேசுவார்கள். இருவரும் சேர்ந்தே இறைவனைத் துதிப்பார்கள்.
பத்தாவது ஆண்டின் முடிவில் மூஸா (அலை) அவர்களுக்குத் தமது குடும்பத்தினரிடம் திரும்ப வேண்டுமென்ற தமது விருப்பத்தை ஷுஐப் (அலை) அவர்களிடம் சொன்னார்கள். ஷுஐப் (அலை) சில ஆடுகள், கொஞ்சம் உணவு என்று பயணத்திற்குத் தேவையானவற்றைத் தயார் செய்து தந்தார்கள்.
கர்ப்பிணியான தம் மனைவியை அழைத்துக் கொண்டு எகிப்திற்குப் புறப்பட்டார்கள் மூஸா (அலை).
“இறைவன் பாதுகாப்பானாக” என்று அவர்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள் ஷுஐப் (அலை).
- ஜெஸிலா பானு.
ஷுஐப் (அலை) அவர்களின் ஆடுகளை மேய்த்ததோடு, வீட்டில் தங்களால் முடிந்த எல்லா வேலைகளையும் செய்தார்கள் மூஸா (அலை).
ஷுஐப் (அலை) அவர்கள் தன் வாக்குறுதியின்படி தமது இரண்டாவது மகளை மூஸா (அலை) அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்கள். மூஸா (அலை) வேலையாள் போல் இல்லாமல் ஒரு மகனைப் போல் மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார்கள்.
மூஸா (அலை) தமது குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்ந்த அந்தப் பத்து ஆண்டு காலம் அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அந்தக் காலம் அவர் ஓர் இறைத்தூதராவதற்கான தயாரிப்புக் காலமாக அமைந்தது. சூரியன் உதிப்பதிலிருந்து சூரியன் மறைவது, நிலா நட்சத்திரங்களைக் கவனிப்பது, செடி, கொடிகள் வளர்வதை உற்று நோக்குவது என்று இறைவனின் எல்லாப் படைப்புகளைப் பற்றியும் ஆராய்வதும் சிந்திப்பதுமாக இருந்தார்கள். பூமியைப் பிளந்து கொண்டு துளிர்விடும் சின்னச் செடியையும், மடிந்த செடிகள் மீண்டும் விதையிலிருந்து உயிர்ப்புடன் எழுவதையெல்லாம் பார்த்து, அதில் இறைவனின் அத்தாட்சிகளைக் கண்ணுற்று, இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் மூஸா (அலை).
இறைவனின் மகத்துவத்தைப் பற்றி இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் பேசுவார்கள். இருவரும் சேர்ந்தே இறைவனைத் துதிப்பார்கள்.
பத்தாவது ஆண்டின் முடிவில் மூஸா (அலை) அவர்களுக்குத் தமது குடும்பத்தினரிடம் திரும்ப வேண்டுமென்ற தமது விருப்பத்தை ஷுஐப் (அலை) அவர்களிடம் சொன்னார்கள். ஷுஐப் (அலை) சில ஆடுகள், கொஞ்சம் உணவு என்று பயணத்திற்குத் தேவையானவற்றைத் தயார் செய்து தந்தார்கள்.
கர்ப்பிணியான தம் மனைவியை அழைத்துக் கொண்டு எகிப்திற்குப் புறப்பட்டார்கள் மூஸா (அலை).
“இறைவன் பாதுகாப்பானாக” என்று அவர்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள் ஷுஐப் (அலை).
- ஜெஸிலா பானு.
மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் பாதுகாப்பான இடத்தை அருளினான்.
பல நாட்கள் நடந்து பயணம் செய்திருந்த களைப்பாலும், பசியின் சோர்வாலும் தளர்ந்திருந்த மூஸா (அலை) அவர்களுக்குத் தாகத்திற்குத் தண்ணீர் மட்டுமே கிடைத்தது.
மூஸா (அலை) அவர்களின் உதவியால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு வழக்கத்தைவிட சீக்கிரம் வீடு திரும்பிய மகள்களிடம் காரணம் கேட்டார் அவர்களுடைய தந்தை. அந்த இரு பெண்களுடைய தந்தைதான் இறைத்தூதர் ஷுஐப் (அலை). நடந்தவற்றை விவரித்த மகள்களிடம், மூஸா (அலை) அவர்களை அழைத்து வரச் சொன்னார் ஷுஐப் (அலை).
தந்தை கேட்டுக் கொண்டதன் பேரில் இளைய மகள் மூஸா (அலை) இருக்கும் மரத்திற்கு அருகே வந்து நாணத்துடன் நின்றார். இறைவனிடம் உதவி வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த மூஸா (அலை) அவர்களிடம் “எங்களுக்காக நீங்கள் உதவியதற்கான கூலியைத் தர எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்றார் வெட்கப்பட்டுக் கொண்டே.
மூஸா (அலை), ஷுஐப் (அலை) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். மூஸா (அலை) பற்றி ஷுஐப் (அலை) விசாரித்தபோது, மூஸா (அலை) எதையும் மறைக்காமல் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை விவரித்தார்கள். “பயப்படாதீர்கள், நீங்கள் மிகவும் பாதுகாப்பான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். அந்த நாட்டை விட்டு வெகுதூரம் வந்துவிட்டீர். இங்கு உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று கருணையின் வடிவாக ஆறுதல் சொன்னார்கள்.
மூஸா (அலை), அந்தப் பாறையை பலம்கொண்டு நகர்த்தியதைக் கண்ணுற்றதால் அவர் பலசாலி என்றும், தங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டு உதவியதால் நம்பிக்கைக்குரியவர் என்றும் தெரிந்து கொண்ட மகள்களில் ஒருவர், தன் தந்தையிடம் மூஸா (அலை) அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளச் சொல்கிறார்.
அதைச் சரியென்று உணர்ந்த ஷுஐப் (அலை), மூஸா (அலை) அவர்களிடம் “உங்களைப் பார்த்தால் நல்லவராகத் தெரிகிறது. நீங்கள் விருப்பப்பட்டால் என்னிடமே வேலைக்குச் சேர்ந்து, எங்களுக்கு எட்டு ஆண்டுகள் உதவியாக இருந்தால் என்னுடைய மகள்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுப்பேன்” என்று வாக்குறுதியைத் தருகிறார்கள். மூஸாவும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.
நாளை என்னவென்று தெரியாமல் இருந்த மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் பாதுகாப்பான இடத்தை அருளினான்.
- ஜெஸிலா பானு.
மூஸா (அலை) அவர்களின் உதவியால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு வழக்கத்தைவிட சீக்கிரம் வீடு திரும்பிய மகள்களிடம் காரணம் கேட்டார் அவர்களுடைய தந்தை. அந்த இரு பெண்களுடைய தந்தைதான் இறைத்தூதர் ஷுஐப் (அலை). நடந்தவற்றை விவரித்த மகள்களிடம், மூஸா (அலை) அவர்களை அழைத்து வரச் சொன்னார் ஷுஐப் (அலை).
தந்தை கேட்டுக் கொண்டதன் பேரில் இளைய மகள் மூஸா (அலை) இருக்கும் மரத்திற்கு அருகே வந்து நாணத்துடன் நின்றார். இறைவனிடம் உதவி வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த மூஸா (அலை) அவர்களிடம் “எங்களுக்காக நீங்கள் உதவியதற்கான கூலியைத் தர எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்றார் வெட்கப்பட்டுக் கொண்டே.
மூஸா (அலை), ஷுஐப் (அலை) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். மூஸா (அலை) பற்றி ஷுஐப் (அலை) விசாரித்தபோது, மூஸா (அலை) எதையும் மறைக்காமல் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை விவரித்தார்கள். “பயப்படாதீர்கள், நீங்கள் மிகவும் பாதுகாப்பான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். அந்த நாட்டை விட்டு வெகுதூரம் வந்துவிட்டீர். இங்கு உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று கருணையின் வடிவாக ஆறுதல் சொன்னார்கள்.
மூஸா (அலை), அந்தப் பாறையை பலம்கொண்டு நகர்த்தியதைக் கண்ணுற்றதால் அவர் பலசாலி என்றும், தங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்டு உதவியதால் நம்பிக்கைக்குரியவர் என்றும் தெரிந்து கொண்ட மகள்களில் ஒருவர், தன் தந்தையிடம் மூஸா (அலை) அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளச் சொல்கிறார்.
அதைச் சரியென்று உணர்ந்த ஷுஐப் (அலை), மூஸா (அலை) அவர்களிடம் “உங்களைப் பார்த்தால் நல்லவராகத் தெரிகிறது. நீங்கள் விருப்பப்பட்டால் என்னிடமே வேலைக்குச் சேர்ந்து, எங்களுக்கு எட்டு ஆண்டுகள் உதவியாக இருந்தால் என்னுடைய மகள்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுப்பேன்” என்று வாக்குறுதியைத் தருகிறார்கள். மூஸாவும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.
நாளை என்னவென்று தெரியாமல் இருந்த மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் பாதுகாப்பான இடத்தை அருளினான்.
- ஜெஸிலா பானு.
தேவையுள்ளவர்களுக்கு இறைவன் தேவையானவற்றை சரியான நேரத்தில் தந்தருள்கிறான்.
மூஸா (அலை) பல நாட்கள் மறைந்து மறைந்து பிரயாணம் செய்து பாலைவனத்தைக் கடந்து மத்யன் நகரத்தை வந்தடைந்தார்கள். அவர்களுக்கு மிகவும் களைப்பாகவும், பசியாகவும், தாகமாகவும் இருந்தது. சுடுமணலிலும், பாறைகளின் மீதும் நடந்து வந்ததால் தம் கால்கள் தேய்ந்துவிட்டதாக உணர்ந்தார்கள். அவர்களிடம் செருப்பு வாங்க பணமுமில்லை, பசியைத் தீர்த்துக் கொள்ள உணவுமில்லை.
மூஸா (அலை) ஒரு தண்ணீர்த் துறை அருகே வந்தபோது, பலர் தம் கால்நடைகளுக்குத் தண்ணீர்ப் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். அங்கே இரண்டு பெண்கள் தம் கால்நடைகளோடு ஒதுங்கி நின்றிருந்ததையும் கவனித்தார்கள். தாம் தாகமாக இருப்பதையும் மறந்து அந்தப் பெண்களிடம் சென்று 'ஏதேனும் உதவி வேண்டுமா?' என்று கேட்டார்கள். “நாங்கள் மற்ற மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர்க் கொடுத்து முடியட்டும் என்று காத்திருக்கிறோம். நாங்கள் ஆண்களைத் தள்ளிக் கொண்டு முந்த முடியாதல்லவா?” என்றார் அந்தப் பெண்களில் மூத்த சகோதரி.
“நீங்கள் ஏன் ஆடு மேய்க்கிறீர்கள். இது பெண்களுக்குக் கடினமான வேலையாயிற்றே?” என்று மூஸா (அலை) அப்பெண்களிடம் கேட்டார்கள். “எங்கள் தந்தை மிகவும் வயதானவர், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்” என்று இருவரும் பதிலளித்தார்கள்.
மற்ற மேய்ப்பவர்கள் தண்ணீர் புகட்டிவிட்டு ஒரு பெரிய பாறையைக் கொண்டு தண்ணீர் ஊற்றின் வாயை அடைத்திருப்பதைக் கண்டார்கள். பத்து பேர் சேர்ந்து அகற்றக் கூடிய அந்தப் பாறையை, தம் நரம்புகள் புடைக்க, எல்லா பலத்தைக் கொண்டும் அகற்றி, அந்தப் பெண்களின் ஆடுகளுக்குத் தண்ணீர் தந்தார்கள். அவ்விரு சகோதரிகளும் நன்றி சொல்லிவிட்டு கால்நடையைக் கூட்டிக் கொண்டு நகர்ந்தார்கள்.
அவ்வூற்றில் தாமும் தண்ணீர் பருகிவிட்டு, ஒரு மர நிழலின் கீழ் உட்கார்ந்து, பசியோடும் சோர்வோடும் இருக்கும் மூஸா (அலை)இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். “என் இறைவா, நீ எனக்கு நல்லவற்றைத் தந்தருள்வாயாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன். எனக்கு வழிகாட்டுவாயாக”
தேவையுள்ளவர்களுக்கு இறைவன் தேவையானவற்றை சரியான நேரத்தில் தந்தருள்கிறான்.
- ஜெஸிலா பானு.
மூஸா (அலை) ஒரு தண்ணீர்த் துறை அருகே வந்தபோது, பலர் தம் கால்நடைகளுக்குத் தண்ணீர்ப் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். அங்கே இரண்டு பெண்கள் தம் கால்நடைகளோடு ஒதுங்கி நின்றிருந்ததையும் கவனித்தார்கள். தாம் தாகமாக இருப்பதையும் மறந்து அந்தப் பெண்களிடம் சென்று 'ஏதேனும் உதவி வேண்டுமா?' என்று கேட்டார்கள். “நாங்கள் மற்ற மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர்க் கொடுத்து முடியட்டும் என்று காத்திருக்கிறோம். நாங்கள் ஆண்களைத் தள்ளிக் கொண்டு முந்த முடியாதல்லவா?” என்றார் அந்தப் பெண்களில் மூத்த சகோதரி.
“நீங்கள் ஏன் ஆடு மேய்க்கிறீர்கள். இது பெண்களுக்குக் கடினமான வேலையாயிற்றே?” என்று மூஸா (அலை) அப்பெண்களிடம் கேட்டார்கள். “எங்கள் தந்தை மிகவும் வயதானவர், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்” என்று இருவரும் பதிலளித்தார்கள்.
மற்ற மேய்ப்பவர்கள் தண்ணீர் புகட்டிவிட்டு ஒரு பெரிய பாறையைக் கொண்டு தண்ணீர் ஊற்றின் வாயை அடைத்திருப்பதைக் கண்டார்கள். பத்து பேர் சேர்ந்து அகற்றக் கூடிய அந்தப் பாறையை, தம் நரம்புகள் புடைக்க, எல்லா பலத்தைக் கொண்டும் அகற்றி, அந்தப் பெண்களின் ஆடுகளுக்குத் தண்ணீர் தந்தார்கள். அவ்விரு சகோதரிகளும் நன்றி சொல்லிவிட்டு கால்நடையைக் கூட்டிக் கொண்டு நகர்ந்தார்கள்.
அவ்வூற்றில் தாமும் தண்ணீர் பருகிவிட்டு, ஒரு மர நிழலின் கீழ் உட்கார்ந்து, பசியோடும் சோர்வோடும் இருக்கும் மூஸா (அலை)இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். “என் இறைவா, நீ எனக்கு நல்லவற்றைத் தந்தருள்வாயாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன். எனக்கு வழிகாட்டுவாயாக”
தேவையுள்ளவர்களுக்கு இறைவன் தேவையானவற்றை சரியான நேரத்தில் தந்தருள்கிறான்.
- ஜெஸிலா பானு.
யூசுப் (அலை) அவர்களின் சந்ததியினரான பனீ இஸ்ராயீலர்களின் ஆண் குழந்தைகளைக் கொன்று குவித்த ஃபிர்அவ்னின் வீட்டிலேயே வளர்ந்து ஆளாகி வாலிபத்தை அடைகிறார் மூஸா (அலை).
யூசுப் (அலை) அவர்களின் சந்ததியினரான பனீ இஸ்ராயீலர்களின் ஆண் குழந்தைகளைக் கொன்று குவித்த ஃபிர்அவ்னின் வீட்டிலேயே வளர்ந்து ஆளாகி வாலிபத்தை அடைகிறார் மூஸா (அலை).
மூஸா (அலை) அவர்கள் பலசாலியாகவும், வலிமை மிக்கவராகவும், கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், ஞானமிக்கவராகவும் இருந்தார்கள். அவர் ஃபிர்அவ்னின் மகன் என்ற மரியாதையையும் நன்மதிப்பையும் பெற்றுவந்தாலும், மூஸா (அலை) அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது தாம் பனீ இஸ்ராயீலர்களைச் சேர்ந்தவரென்று.
ஒருநாள் மூஸா (அலை) அரண்மனையை விட்டு வெளியே நகரத்து வீதியில் நடந்து கொண்டிருந்த போது, ஓர் எகிப்தியரும்- பனீ இஸ்ராயீல் இனத்தைச் சேர்ந்த ஒருவரும் சண்டை போடுவதைக் கண்டார்கள். பனீ இஸ்ராயீல் இனத்தைச் சேர்ந்தவர் வழக்கம்போல எகிப்தியரிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தார். மூஸா (அலை) அவர்களைக் கண்டதும் அடிவாங்கிக் கொண்டிருந்த பனீ இஸ்ராயீலர், மூஸா (அலை) அவர்களை உதவிக்கு அழைத்தார்.
மூஸா (அலை) அவர்களும் இவர் அடிவாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததால் அவர்கள் வழக்கில் தலையிட்டுப் பேசிக் கொண்டிருந்தபோதே அந்த எகிப்தியர், தலையிடாதே போய்விடு என்பதாக மூஸா (அலை) அவர்களைத் தள்ளிவிட, கோபம் தலைக்கேறிய மூஸா (அலை) அந்த எகிப்தியரை ஒரு குத்துவிடுகிறார். ஒரே குத்தில் சுருண்டு விழுந்து மடிந்தார் அந்த எகிப்தியர்.
இதை எதிர்பாராத மூஸா (அலை) அவர்கள், ‘தான் வேண்டுமென்றே செய்யவில்லை, தவறு நடந்துவிட்டது, என்னை மன்னித்துவிடு இறைவா’ என்று அந்த இடத்திலேயே அல்லாஹ்விடம் மண்டியிட்டுக் கையேந்துகிறார்கள். அவருக்குள் சாந்தம் நிலவுகிறது. தான் இன்னும் நிதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்று எண்ணியவர்களாக அங்கிருந்து உடனே கிளம்பிவிடுகிறார்கள்.
மறுநாள், நகரத்தின் வேறொரு வழியே நடந்து கொண்டிருந்தபோது முன்தினம் உதவி் கேட்ட அதே பனீ இஸ்ராயீலர் வேறொரு எகிப்தியருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். மூஸாவை கண்டதும் உதவிக்காகக் கூச்சலிட்டு அழைத்தார். அதற்கு மூஸா (அலை) “நீ பெரிய கலகக்காரனாக இருப்பாய்போலவே” என்று சொல்லிக் கொண்டு அவர்களை நெருங்கி, அந்த எகிப்தியரைப் பிடிக்க வரும்போது, அவர் தன்னையே தாக்க வருகிறார் என்று தவறாக எண்ணி அந்தப் பனீ இஸ்ராயீலர் “மூஸாவே! நேற்று ஒருவரைக் கொலை செய்தது போல் என்னையும் கொன்றுவிடலாம் என்று பார்க்கிறாயோ? சமாதானப்படுத்தி இணக்கம் ஏற்படுத்துபவராக நீர் தெரியவில்லை” என்று சொன்னார்.
அதைக் கேட்டு உறைந்து நின்றார் மூஸா (அலை). ஊர் மக்கள் எல்லாருக்கும் இவ்விஷயம் தெரிய வந்தது. பிர்அவ்னின் காதுகளுக்கும் இது எட்டியது. பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் ஓடி வந்து “மூஸாவே! எகிப்தியர்களெல்லாம் சேர்ந்து உங்களை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார்கள். கொலைக்கான தண்டனை மரணம் ஆகையால் இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்ட மூஸா (அலை) அவர்கள் பயந்தார்கள். மீண்டும் அரண்மனைக்குச் சென்று தன்னுடைய பயணத்திற்காகத் தயார்படுத்திக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. ஊர்விட்டு ஊர் செல்ல அவர்களிடம் எந்தக் கால்நடையுமில்லை. பிர்அவ்னிடமிருந்து தப்பித்து வெகுதூரம் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் மட்டும் ஓடினார்கள். அவர்கள் மத்யன் நகரத்துப் பக்கமாக விரைந்தார்கள்.
சூடான மணல் உள்ளங்கால்களை எரிக்க, பசியாற ஒரு புல்லுமில்லாத அந்தப் பாலைவன பயணத்தில் அவரது ஒரே துணை அல்லாஹ். அவர் பற்றிப்பிடித்து நடந்தது அவருடைய இறைநம்பிக்கையை மட்டும்.
- ஜெஸிலா பானு.
மூஸா (அலை) அவர்கள் பலசாலியாகவும், வலிமை மிக்கவராகவும், கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், ஞானமிக்கவராகவும் இருந்தார்கள். அவர் ஃபிர்அவ்னின் மகன் என்ற மரியாதையையும் நன்மதிப்பையும் பெற்றுவந்தாலும், மூஸா (அலை) அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது தாம் பனீ இஸ்ராயீலர்களைச் சேர்ந்தவரென்று.
ஒருநாள் மூஸா (அலை) அரண்மனையை விட்டு வெளியே நகரத்து வீதியில் நடந்து கொண்டிருந்த போது, ஓர் எகிப்தியரும்- பனீ இஸ்ராயீல் இனத்தைச் சேர்ந்த ஒருவரும் சண்டை போடுவதைக் கண்டார்கள். பனீ இஸ்ராயீல் இனத்தைச் சேர்ந்தவர் வழக்கம்போல எகிப்தியரிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தார். மூஸா (அலை) அவர்களைக் கண்டதும் அடிவாங்கிக் கொண்டிருந்த பனீ இஸ்ராயீலர், மூஸா (அலை) அவர்களை உதவிக்கு அழைத்தார்.
மூஸா (அலை) அவர்களும் இவர் அடிவாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததால் அவர்கள் வழக்கில் தலையிட்டுப் பேசிக் கொண்டிருந்தபோதே அந்த எகிப்தியர், தலையிடாதே போய்விடு என்பதாக மூஸா (அலை) அவர்களைத் தள்ளிவிட, கோபம் தலைக்கேறிய மூஸா (அலை) அந்த எகிப்தியரை ஒரு குத்துவிடுகிறார். ஒரே குத்தில் சுருண்டு விழுந்து மடிந்தார் அந்த எகிப்தியர்.
இதை எதிர்பாராத மூஸா (அலை) அவர்கள், ‘தான் வேண்டுமென்றே செய்யவில்லை, தவறு நடந்துவிட்டது, என்னை மன்னித்துவிடு இறைவா’ என்று அந்த இடத்திலேயே அல்லாஹ்விடம் மண்டியிட்டுக் கையேந்துகிறார்கள். அவருக்குள் சாந்தம் நிலவுகிறது. தான் இன்னும் நிதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்று எண்ணியவர்களாக அங்கிருந்து உடனே கிளம்பிவிடுகிறார்கள்.
மறுநாள், நகரத்தின் வேறொரு வழியே நடந்து கொண்டிருந்தபோது முன்தினம் உதவி் கேட்ட அதே பனீ இஸ்ராயீலர் வேறொரு எகிப்தியருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். மூஸாவை கண்டதும் உதவிக்காகக் கூச்சலிட்டு அழைத்தார். அதற்கு மூஸா (அலை) “நீ பெரிய கலகக்காரனாக இருப்பாய்போலவே” என்று சொல்லிக் கொண்டு அவர்களை நெருங்கி, அந்த எகிப்தியரைப் பிடிக்க வரும்போது, அவர் தன்னையே தாக்க வருகிறார் என்று தவறாக எண்ணி அந்தப் பனீ இஸ்ராயீலர் “மூஸாவே! நேற்று ஒருவரைக் கொலை செய்தது போல் என்னையும் கொன்றுவிடலாம் என்று பார்க்கிறாயோ? சமாதானப்படுத்தி இணக்கம் ஏற்படுத்துபவராக நீர் தெரியவில்லை” என்று சொன்னார்.
அதைக் கேட்டு உறைந்து நின்றார் மூஸா (அலை). ஊர் மக்கள் எல்லாருக்கும் இவ்விஷயம் தெரிய வந்தது. பிர்அவ்னின் காதுகளுக்கும் இது எட்டியது. பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் ஓடி வந்து “மூஸாவே! எகிப்தியர்களெல்லாம் சேர்ந்து உங்களை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார்கள். கொலைக்கான தண்டனை மரணம் ஆகையால் இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்ட மூஸா (அலை) அவர்கள் பயந்தார்கள். மீண்டும் அரண்மனைக்குச் சென்று தன்னுடைய பயணத்திற்காகத் தயார்படுத்திக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. ஊர்விட்டு ஊர் செல்ல அவர்களிடம் எந்தக் கால்நடையுமில்லை. பிர்அவ்னிடமிருந்து தப்பித்து வெகுதூரம் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் மட்டும் ஓடினார்கள். அவர்கள் மத்யன் நகரத்துப் பக்கமாக விரைந்தார்கள்.
சூடான மணல் உள்ளங்கால்களை எரிக்க, பசியாற ஒரு புல்லுமில்லாத அந்தப் பாலைவன பயணத்தில் அவரது ஒரே துணை அல்லாஹ். அவர் பற்றிப்பிடித்து நடந்தது அவருடைய இறைநம்பிக்கையை மட்டும்.
- ஜெஸிலா பானு.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இறைவனுக்கு நிகர் அவனே. இதனைப் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
மூஸா (அலை) அவர்களின் தாய், இறைவனின் கட்டளையின் பேரில் குழந்தையை பெட்டிக்குள் வைத்து நைல் நதியில் விட்டுவிடுகிறார்கள். பெட்டியைக் கண்டெடுத்த அரண்மனைக்காரர்கள் அதனை ஃபிர்அவ்னின் மனைவியிடம் சேர்ப்பித்தார்கள். அந்தக் குழந்தை அரண்மனையிலேயே வளர சம்மதத்தைப் பெற்றார் ஃபிர்அவ்னின் மனைவி.
கண்டெடுத்த குழந்தையைக் குளிக்க வைத்து, உடை மாற்றி அழகு பார்க்கும் போது, குழந்தை பசித்து அழுதது. அழுகிற பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக ஊரில் உள்ள தாய்மார்கள் வரவழைக்கப்பட்டார்கள். குழந்தை செவிலித் தாய்களின் மார்பிலிருந்து பால் குடிக்க மறுத்து, வீறிட்டு அழுது கொண்டே இருந்தது.
அதைப் பார்த்துத் துடித்த ஃபிர்அவ்னின் மனைவியிடம், பெட்டியைப் பின்தொடர்ந்துவந்து, வேலையாளாகச் சேர்ந்த குழந்தை மூஸாவின் சகோதரி மர்யம் “எனக்கு ஒருவரைத் தெரியும், அவர்கள் மிகவும் அன்பாகப் பாலூட்டுவார்கள். கண்டிப்பாக இந்தக் குழந்தை அவருடைய பாலைப் பருகும்” என்று சொன்னவுடன், அந்தத் தாயை உடனே அழைத்து வரச் சொன்னார்கள்.
மகிழ்ச்சியாக வீடு திரும்பி, மர்யம் தன் தாயிடம் நடந்தவற்றை எடுத்துரைத்தார். உடனே மூஸா (அலை) அவர்களின் தாய் அரண்மனைக்கு விரைந்து சென்றார்கள். குழந்தை அவரிடம் தரப்பட்டது. குழந்தையை அன்பாகத் தொட்டுத்தூக்கிப் பாலூட்டினார்கள். அவருடைய மடி லேசானது. அந்தத் தாயின் மனம் குளிர்ந்தது.
இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்கள் ஃபிர்அவ்னும் அவரது மனைவியும். அவரிடம் மட்டும் முகம் திருப்பாமல் வாய் வைத்துப் பருகியதின் காரணத்தை அந்தத் தாயிடம் வினவினார்கள். ஆனால் அவரோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், சாமர்த்தியமாகச் சமாளித்தார்.
பெற்ற தாயே மூஸா (அலை) அவர்களின் செவிலித்தாயாக நியமிக்கப்பட்டார். தாய்ப்பால் கொடுப்பவராக மட்டுமல்லாமல், மூஸா (அலை) வளரும் பருவத்திலும் அவர் குழந்தையைக் கவனித்து பராமரித்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்.
எந்தக் குழந்தை பிறந்துவிடக் கூடாது என்று ஃபிர்அவ்ன் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைக் கொன்று குவித்தானோ அந்தக் குழந்தை அவன் சொந்த வீட்டில் வளர்கிறது.
இறைவன் அந்தத் தாய்க்கு வாக்குறுதி அளித்தபடி அந்தக் குழந்தையைப் பாதுகாத்ததோடு, மிகவும் ஆடம்பரமான பாதுகாப்பான இடத்தில் சேர்த்ததோடு, சொந்தத் தாயையே பால் கொடுக்கவும் செய்துவிட்டான். அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவர் சந்தோஷப்படவும் இப்படியான ஏற்பாட்டைச் செய்துவிட்டான் இறைவன்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இறைவனுக்கு நிகர் அவனே. இதனைப் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
- ஜெஸிலா பானு.
கண்டெடுத்த குழந்தையைக் குளிக்க வைத்து, உடை மாற்றி அழகு பார்க்கும் போது, குழந்தை பசித்து அழுதது. அழுகிற பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக ஊரில் உள்ள தாய்மார்கள் வரவழைக்கப்பட்டார்கள். குழந்தை செவிலித் தாய்களின் மார்பிலிருந்து பால் குடிக்க மறுத்து, வீறிட்டு அழுது கொண்டே இருந்தது.
அதைப் பார்த்துத் துடித்த ஃபிர்அவ்னின் மனைவியிடம், பெட்டியைப் பின்தொடர்ந்துவந்து, வேலையாளாகச் சேர்ந்த குழந்தை மூஸாவின் சகோதரி மர்யம் “எனக்கு ஒருவரைத் தெரியும், அவர்கள் மிகவும் அன்பாகப் பாலூட்டுவார்கள். கண்டிப்பாக இந்தக் குழந்தை அவருடைய பாலைப் பருகும்” என்று சொன்னவுடன், அந்தத் தாயை உடனே அழைத்து வரச் சொன்னார்கள்.
மகிழ்ச்சியாக வீடு திரும்பி, மர்யம் தன் தாயிடம் நடந்தவற்றை எடுத்துரைத்தார். உடனே மூஸா (அலை) அவர்களின் தாய் அரண்மனைக்கு விரைந்து சென்றார்கள். குழந்தை அவரிடம் தரப்பட்டது. குழந்தையை அன்பாகத் தொட்டுத்தூக்கிப் பாலூட்டினார்கள். அவருடைய மடி லேசானது. அந்தத் தாயின் மனம் குளிர்ந்தது.
இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்கள் ஃபிர்அவ்னும் அவரது மனைவியும். அவரிடம் மட்டும் முகம் திருப்பாமல் வாய் வைத்துப் பருகியதின் காரணத்தை அந்தத் தாயிடம் வினவினார்கள். ஆனால் அவரோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், சாமர்த்தியமாகச் சமாளித்தார்.
பெற்ற தாயே மூஸா (அலை) அவர்களின் செவிலித்தாயாக நியமிக்கப்பட்டார். தாய்ப்பால் கொடுப்பவராக மட்டுமல்லாமல், மூஸா (அலை) வளரும் பருவத்திலும் அவர் குழந்தையைக் கவனித்து பராமரித்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்.
எந்தக் குழந்தை பிறந்துவிடக் கூடாது என்று ஃபிர்அவ்ன் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைக் கொன்று குவித்தானோ அந்தக் குழந்தை அவன் சொந்த வீட்டில் வளர்கிறது.
இறைவன் அந்தத் தாய்க்கு வாக்குறுதி அளித்தபடி அந்தக் குழந்தையைப் பாதுகாத்ததோடு, மிகவும் ஆடம்பரமான பாதுகாப்பான இடத்தில் சேர்த்ததோடு, சொந்தத் தாயையே பால் கொடுக்கவும் செய்துவிட்டான். அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவர் சந்தோஷப்படவும் இப்படியான ஏற்பாட்டைச் செய்துவிட்டான் இறைவன்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இறைவனுக்கு நிகர் அவனே. இதனைப் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
- ஜெஸிலா பானு.
ஒரு நாட்டின் ஆட்சியாளர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியான எல்லாக் குணங்களையும் ஒருசேரப் பெற்றிருந்தான் எகிப்து நாட்டின் அரசன் ஃபிர்அவ்ன்.
ஒரு நாட்டின் ஆட்சியாளர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியான எல்லாக் குணங்களையும் ஒருசேரப் பெற்றிருந்தான் எகிப்து நாட்டின் அரசன் ஃபிர்அவ்ன். எகிப்தை ஆளுபவர்களுக்கு ஃபிர்அவ்ன் என்று பெயர்.
அவன் தன்னை உலகத்தின் அதிபதியாகக் கருதினான். தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் யாருமில்லை என்று பெருமையடித்துக் கொண்டான். அந்தக் கொடுங்கோலன் தனது ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் தன்னைக் கடவுள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டதோடு தன்னைப் போலவே ஒரு சிலையையும் செய்து, அதனைக் கடவுளாக்கி, மக்களை அதனை வணங்க வற்புறுத்தினான்.
இறையச்சம் இல்லாதவனாக, தான் செய்யும் அட்டூழியங்களுக்குக் கேள்வி கணக்கு உண்டு, மறுமையில் வேதனையுண்டு என்ற பயமில்லாமல் செயல்பட்டான்.
நாட்டு மக்களிடையே பிரித்து ஆளும் சூழ்ச்சியைச் செய்தான். மக்களிடையே உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தினான். இப்ராஹிம் (அலை), யாகூப் (அலை) அவர்களின் வழி வந்த பனீ இஸ்ராயீலர்களைக் கொத்தடிமைகளாக்கி துன்புறுத்தினான். அவன் குலத்தினர் எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும் அவர்களே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தார்கள்.
எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறுபான்மையினராகக் கருதப்பட்ட பனீ இஸ்ராயீலர்கள், தம் இனத்திலிருந்து ஒருவர் தோன்றுவார், அவர் ஃபிர்அவ்னை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவார் தம் இன்னல்களுக்கு முடிவு கட்டுவார் என்று நம்பினார்கள். இது பற்றித் தம் முன்னோர்களின் இறை அறிவுப்புகளில் உள்ளதால் அது விரைவில் நடந்தேறும் என்றும் காத்திருந்தனர்.
ஃபிர்அவ்னுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு தீச்சுவாலை பனீ இஸ்ராயீலர்களிலிருந்து கிளம்பி வந்து தம் அரண்மனையைக் கொளுத்திவிடுவதாகக் கண்டு திடுக்கிட்டு பயந்து எழுந்தான்.
மறுநாளே தம் நாட்டின் ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும் அழைத்து, தம் கனவு குறித்து விளக்கம் கேட்டான். அதற்கு அவர்கள் “பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் தோன்றுகின்ற குழந்தை, பெரியவனாகி ஃபிர்அவ்னை அழித்து வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவான்” என்று சொன்னதைக் கேட்டு கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஃபிர்அவ்ன் எந்தக் குறிப்பிட்ட காலத்தில் தோன்றுவான் என்பதை அறிந்து பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று குவிக்க உத்தரவிட்டான்.
நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள் கண்காணிக்கப்பட்டனர். ஆண் குழந்தையென்றால் அறுத்துக் கொலை செய்வது, பெண் குழந்தைகளை உயிருடன் விட்டுவிடுவது என்று உத்தரவிடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண் குழந்தைகள் தாய்மார்களின் கண் முன்பே கொல்லப்பட்டனர்.
இறைவன் அந்நாட்டின் பலஹீனப்படுத்தப்பட்டோருக்கு அருள்புரிய நாடினான். ஃபிர்அவ்ன் பயந்த விஷயத்தை நிறைவேற்ற முடிவு செய்தான். பலஹீனப்பட்ட பனீ இஸ்ராயீலர்களிலிருந்தே தலைவர்களை உருவாக்கவும், அந்நாட்டுக்கே வாரிசுகளாக்கவும் விரும்பினான்.
நபி மூஸாவை உருவாக்கி, மூஸா (அலை) அவர்களின் தாயாருக்கு இறைச்செய்தியை அனுப்பி வைத்தான் இறைவன். “உன் குழந்தை பிறந்ததும் அதற்கு வயிறு நிரம்பப் பாலூட்டி, அவரைப் பயப்படாமல், துக்கப்படாமல் ஆற்றில் விட்டுவிடு. அவரை இறைத்தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்ற அறிவிப்பு வந்தது.
மூஸாவின் தாயார் கர்ப்பிணியாக இருந்தும் அது வெளியே தெரியாதது போல இருந்ததால், இரகசியமாகக் குழந்தையைப் பெற்று, பாலூட்டி, பிரிய மனமில்லாமல் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து பாதுகாப்பாக ஆற்றில் விட்டுவிடுகிறார்கள். ஆனால் அதனைக் கண்காணிக்க தன் மூத்த மகள் மரியமை அனுப்பி வைக்கிறார்கள்.
நைல் நதியில் மிதந்து வந்த அந்தப் பெட்டியை ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் கண்டெடுக்கின்றனர். அதனை ஃபிர்அவ்னின் மனைவியிடம் சேர்ப்பித்த போது குழந்தையில்லாத அவள் அந்த அழகான குழந்தையைப் பார்த்தவுடன் வாரி அணைத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் சொரிவதைக் கண்ட ஃபிர்அவ்னுக்கும் மகிழ்ச்சியாகிவிடுகிறது. அந்தக் குழந்தையைக் கொல்லாமல் விட்டு வைக்கும்படியும், அதனைத் தாம் தத்தெடுக்க விரும்புவதாகவும் சொன்ன மனைவியின் வார்த்தைக்கு ஃபிர்அவ்ன் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
பிற்காலத்தில் அந்தக் குழந்தைதான் ஃபிர்அவ்னுக்கு விரோதியாகவும் அவனையே வீழ்த்தக் கூடியவராகவும் ஆவார் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
- ஜெஸிலா பானு.
அவன் தன்னை உலகத்தின் அதிபதியாகக் கருதினான். தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் யாருமில்லை என்று பெருமையடித்துக் கொண்டான். அந்தக் கொடுங்கோலன் தனது ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் தன்னைக் கடவுள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டதோடு தன்னைப் போலவே ஒரு சிலையையும் செய்து, அதனைக் கடவுளாக்கி, மக்களை அதனை வணங்க வற்புறுத்தினான்.
இறையச்சம் இல்லாதவனாக, தான் செய்யும் அட்டூழியங்களுக்குக் கேள்வி கணக்கு உண்டு, மறுமையில் வேதனையுண்டு என்ற பயமில்லாமல் செயல்பட்டான்.
நாட்டு மக்களிடையே பிரித்து ஆளும் சூழ்ச்சியைச் செய்தான். மக்களிடையே உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தினான். இப்ராஹிம் (அலை), யாகூப் (அலை) அவர்களின் வழி வந்த பனீ இஸ்ராயீலர்களைக் கொத்தடிமைகளாக்கி துன்புறுத்தினான். அவன் குலத்தினர் எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும் அவர்களே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தார்கள்.
எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறுபான்மையினராகக் கருதப்பட்ட பனீ இஸ்ராயீலர்கள், தம் இனத்திலிருந்து ஒருவர் தோன்றுவார், அவர் ஃபிர்அவ்னை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவார் தம் இன்னல்களுக்கு முடிவு கட்டுவார் என்று நம்பினார்கள். இது பற்றித் தம் முன்னோர்களின் இறை அறிவுப்புகளில் உள்ளதால் அது விரைவில் நடந்தேறும் என்றும் காத்திருந்தனர்.
ஃபிர்அவ்னுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு தீச்சுவாலை பனீ இஸ்ராயீலர்களிலிருந்து கிளம்பி வந்து தம் அரண்மனையைக் கொளுத்திவிடுவதாகக் கண்டு திடுக்கிட்டு பயந்து எழுந்தான்.
மறுநாளே தம் நாட்டின் ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும் அழைத்து, தம் கனவு குறித்து விளக்கம் கேட்டான். அதற்கு அவர்கள் “பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் தோன்றுகின்ற குழந்தை, பெரியவனாகி ஃபிர்அவ்னை அழித்து வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவான்” என்று சொன்னதைக் கேட்டு கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஃபிர்அவ்ன் எந்தக் குறிப்பிட்ட காலத்தில் தோன்றுவான் என்பதை அறிந்து பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று குவிக்க உத்தரவிட்டான்.
நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள் கண்காணிக்கப்பட்டனர். ஆண் குழந்தையென்றால் அறுத்துக் கொலை செய்வது, பெண் குழந்தைகளை உயிருடன் விட்டுவிடுவது என்று உத்தரவிடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண் குழந்தைகள் தாய்மார்களின் கண் முன்பே கொல்லப்பட்டனர்.
இறைவன் அந்நாட்டின் பலஹீனப்படுத்தப்பட்டோருக்கு அருள்புரிய நாடினான். ஃபிர்அவ்ன் பயந்த விஷயத்தை நிறைவேற்ற முடிவு செய்தான். பலஹீனப்பட்ட பனீ இஸ்ராயீலர்களிலிருந்தே தலைவர்களை உருவாக்கவும், அந்நாட்டுக்கே வாரிசுகளாக்கவும் விரும்பினான்.
நபி மூஸாவை உருவாக்கி, மூஸா (அலை) அவர்களின் தாயாருக்கு இறைச்செய்தியை அனுப்பி வைத்தான் இறைவன். “உன் குழந்தை பிறந்ததும் அதற்கு வயிறு நிரம்பப் பாலூட்டி, அவரைப் பயப்படாமல், துக்கப்படாமல் ஆற்றில் விட்டுவிடு. அவரை இறைத்தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்ற அறிவிப்பு வந்தது.
மூஸாவின் தாயார் கர்ப்பிணியாக இருந்தும் அது வெளியே தெரியாதது போல இருந்ததால், இரகசியமாகக் குழந்தையைப் பெற்று, பாலூட்டி, பிரிய மனமில்லாமல் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து பாதுகாப்பாக ஆற்றில் விட்டுவிடுகிறார்கள். ஆனால் அதனைக் கண்காணிக்க தன் மூத்த மகள் மரியமை அனுப்பி வைக்கிறார்கள்.
நைல் நதியில் மிதந்து வந்த அந்தப் பெட்டியை ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் கண்டெடுக்கின்றனர். அதனை ஃபிர்அவ்னின் மனைவியிடம் சேர்ப்பித்த போது குழந்தையில்லாத அவள் அந்த அழகான குழந்தையைப் பார்த்தவுடன் வாரி அணைத்து முத்தமிட்டு ஆனந்தக் கண்ணீர் சொரிவதைக் கண்ட ஃபிர்அவ்னுக்கும் மகிழ்ச்சியாகிவிடுகிறது. அந்தக் குழந்தையைக் கொல்லாமல் விட்டு வைக்கும்படியும், அதனைத் தாம் தத்தெடுக்க விரும்புவதாகவும் சொன்ன மனைவியின் வார்த்தைக்கு ஃபிர்அவ்ன் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
பிற்காலத்தில் அந்தக் குழந்தைதான் ஃபிர்அவ்னுக்கு விரோதியாகவும் அவனையே வீழ்த்தக் கூடியவராகவும் ஆவார் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
- ஜெஸிலா பானு.
இறைவனிடம் நீங்களெல்லாம் மன்னிப்புக் கோரி பாவ மன்னிப்புக் கேட்டு அவன் பக்கமே மீளுங்கள்.
மத்யன் என்ற குலத்தவர்கள் எகிப்து எல்லைப் பகுதிக்கும் தற்போது ஜோர்டான் இருக்கும் இடத்திற்கும் இடையில் மத்யன் என்ற சிறு நகரத்தில் வாழ்ந்தார்கள்.
அதன் பக்கத்திலேயே ‘அய்கா’ என்ற இடம் நல்ல விளைச்சல் மிகுந்த பகுதியாகத் திகழ்ந்தது. ஆனால் இரண்டு பகுதி மக்களும் இறைமறுப்பாளர்களாக, மோசடி செய்பவர்களாக, வழிப்பறி கொள்ளையர்களாக, வியாபாரத்தில் நேர்மையில்லாதவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களை நேர்வழிப்படுத்த இறைவன் அங்கு இப்ராஹிம் (அலை) அவர்களின் தலைமுறையில் வந்தவர்களான ஷுஐப் (அலை) அவர்களை அனுப்பினான்.
ஷுஐப் (அலை) அவர்களின் குடும்பப் பின்னணி தெரிந்திருந்ததால் அவர்களிடம் மக்கள் மரியாதையாக நடந்தார்களே தவிர அவர்கள் சொன்ன விஷயங்களைக் கேட்க மறுத்துவிட்டனர். இருப்பினும் அந்த மக்களிடம் இறைத்தூதரான ஷுஐப் (அலை) “இறைவன் ஒருவனே. அவனை மட்டுமே வணங்குங்கள். வியாபாரத்தில் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
மக்களுக்குச் சேர வேண்டிய பொருட்களைச் சரியாக முழுமையாக அளந்து கொடுங்கள். எடையில் திருட்டுத்தனம் செய்து பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். நீங்கள் இப்போது நல்ல நிலைமையில்தானே இருக்கிறீர்கள், ஆனால் அளவிலும், நிறுவையிலும் மோசடி செய்தால் உங்களை வேதனை சூழ்ந்து கொள்ளும்” என்று அறிவுரை சொன்னபோதும் இறைத்தூதரான ஷுஐப்(அலை) அவர்களை யாருமே பொருட்படுத்தவில்லை.
இவர்கள் அய்காவிற்குச் சென்று அங்கும் பிரச்சாரம் செய்தார்கள். சிலர் இவர்கள் சொல்வது உண்மை, நல்வழி என்பதைப் புரிந்து கொண்டு மனம் திருந்தி வாழ்ந்தார்கள். அப்படியான நல்லடியார்களைக் கூட்டிக் கொண்டு ஷுஐப் (அலை) மீண்டும் மத்யன் பகுதிக்கு விரைந்தபோது, அங்கிருந்தவர்கள் இவர்களது போதனைகளுக்குச் செவி சாய்க்கவில்லை.
இவர்களைப் பார்த்து ஏளனம் பேசினார்கள். அவர்களுடைய குலத்தார் இல்லாமல் இருந்திருந்தால் கல்லெறிந்தே கொன்றிருப்போம் என்றார்கள். அவர்களுடன் சேர்ந்திருக்கும் கூட்டம் வசதியில்லாத ஏழை மக்கள் அதனாலேயே இவர்கள் பின்னால் வந்துவிட்டார்கள் என்றும் பேசினார்கள். ஓர் இறைக் கொள்கையில் இல்லாமல் அவர்களைப் போலவே இருக்கும்படி நம்பிக்கை கொண்டவர்களை மிரட்டிப் பார்த்தார்கள். அவர்களை ஊரைவிட்டே விரட்டிவிடுவோம் என்றும் பயமுறுத்தினார்கள்.
அவர்களின் பயமுறுத்தலுக்கெல்லாம் அஞ்சாமல் ஏகத்துவத்தை எடுத்துரைத்துக் கொண்டும், தவறான இழிசெயல்களிலிருந்து விலகக் கோரியும் போதித்த வண்ணம் இருந்தார்கள் ஷுஐப் (அலை). தனக்காக நல்வழியில் மாறச் சொல்லவில்லை. அவர்கள் நன்மக்களானால் அவர்களுக்கே நல்லது என்றும் நல்லவற்றை எடுத்துரைக்க, தான் கூலி கேட்கவில்லை மாறாக இறைவன் நன்மை செய்பவர்களுக்குத் தகுந்த கூலியைத் தருகிறான் என்றெல்லாம் சொன்னபோது, அதற்கு அவர்கள் “உங்களைப் பார்த்தால் சூனியம் செய்யப்பட்டவர்போல் உள்ளது. நீங்களும் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்தான். நீங்கள் உங்களை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால் வானத்தில் இருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படி செய்யுங்கள்” என்று நகைத்தனர்.
“அறிவிழந்து நகைக்கிறீர்கள். இதற்கு முன்பு நூஹ் (அலை), ஹூத் (அலை), சாலிஹ் (அலை), லூத் (அலை) இவர்களின் ஊர் மக்களுக்கு என்ன நேர்ந்தது, என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லையா? அவர்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்பட வேண்டுமா? தாமதமாகிவிடவில்லை, இறைவனிடம் நீங்களெல்லாம் மன்னிப்புக் கோரி பாவ மன்னிப்புக் கேட்டு அவன் பக்கமே மீளுங்கள்.
இறைவன் கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கேள்விகள் எழுப்பியும், அறிவுரைகள் தந்தும், அவர்களின் நிராகரிப்பு தொடர்ந்தது. ஊழல் பெருகியது. வழிப்பறிக் கொள்ளையும், வியாபாரத்தில் நேர்மையின்மையும் நிறைந்து வழிந்தது.
அவர்களை நேர்வழிப்படுத்தும்படி ஷுஐப் (அலை) பிரார்த்தித்தார்கள். அந்த ஊர் வெயிலின் கொடுமையில் தகித்தது. ஒருநாள் இருட்டிக்கொண்டு வந்தது. ஆனால் அந்த மேகம் மழையைத் தரவில்லை. கெட்ட மக்களுக்கு அழிவைத் தந்தது. மத்யன் நகரத்து மக்கள் மட்டுமல்ல அய்கா பகுதியின் நேர்வழிப்படாத மக்களும் அழிந்தனர். அவர்கள் கேட்ட ஒரு துண்டு வானம் அவர்கள் மீது விழவில்லை, மொத்தமாக மேகம் கீழே விழுந்தது போன்ற பேரிடிச் சத்தத்துடன் தாக்கியது. பூகம்பம் புரட்டிப் போட்டது போல் அவர்கள் தம் வீடுகளிலேயே இறந்து கிடந்தனர்.
ஷுஐப்பும் அவர்களுடனிருந்த நல்லடியார்களும் அழிவிலிருந்து தப்பித்தார்கள். நல்லவர்கள் மட்டும் வாழும் நகரமாக அப்பகுதி மாறியது. ஷுஐப் (அலை) தன்னுடைய இரண்டு மகள்களுடன் மிகச் செழிப்பான பகுதியில் வளமுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக வாழ்ந்தார்கள்.
- ஜெஸிலா பானு.
அதன் பக்கத்திலேயே ‘அய்கா’ என்ற இடம் நல்ல விளைச்சல் மிகுந்த பகுதியாகத் திகழ்ந்தது. ஆனால் இரண்டு பகுதி மக்களும் இறைமறுப்பாளர்களாக, மோசடி செய்பவர்களாக, வழிப்பறி கொள்ளையர்களாக, வியாபாரத்தில் நேர்மையில்லாதவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களை நேர்வழிப்படுத்த இறைவன் அங்கு இப்ராஹிம் (அலை) அவர்களின் தலைமுறையில் வந்தவர்களான ஷுஐப் (அலை) அவர்களை அனுப்பினான்.
ஷுஐப் (அலை) அவர்களின் குடும்பப் பின்னணி தெரிந்திருந்ததால் அவர்களிடம் மக்கள் மரியாதையாக நடந்தார்களே தவிர அவர்கள் சொன்ன விஷயங்களைக் கேட்க மறுத்துவிட்டனர். இருப்பினும் அந்த மக்களிடம் இறைத்தூதரான ஷுஐப் (அலை) “இறைவன் ஒருவனே. அவனை மட்டுமே வணங்குங்கள். வியாபாரத்தில் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.
மக்களுக்குச் சேர வேண்டிய பொருட்களைச் சரியாக முழுமையாக அளந்து கொடுங்கள். எடையில் திருட்டுத்தனம் செய்து பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். நீங்கள் இப்போது நல்ல நிலைமையில்தானே இருக்கிறீர்கள், ஆனால் அளவிலும், நிறுவையிலும் மோசடி செய்தால் உங்களை வேதனை சூழ்ந்து கொள்ளும்” என்று அறிவுரை சொன்னபோதும் இறைத்தூதரான ஷுஐப்(அலை) அவர்களை யாருமே பொருட்படுத்தவில்லை.
இவர்கள் அய்காவிற்குச் சென்று அங்கும் பிரச்சாரம் செய்தார்கள். சிலர் இவர்கள் சொல்வது உண்மை, நல்வழி என்பதைப் புரிந்து கொண்டு மனம் திருந்தி வாழ்ந்தார்கள். அப்படியான நல்லடியார்களைக் கூட்டிக் கொண்டு ஷுஐப் (அலை) மீண்டும் மத்யன் பகுதிக்கு விரைந்தபோது, அங்கிருந்தவர்கள் இவர்களது போதனைகளுக்குச் செவி சாய்க்கவில்லை.
இவர்களைப் பார்த்து ஏளனம் பேசினார்கள். அவர்களுடைய குலத்தார் இல்லாமல் இருந்திருந்தால் கல்லெறிந்தே கொன்றிருப்போம் என்றார்கள். அவர்களுடன் சேர்ந்திருக்கும் கூட்டம் வசதியில்லாத ஏழை மக்கள் அதனாலேயே இவர்கள் பின்னால் வந்துவிட்டார்கள் என்றும் பேசினார்கள். ஓர் இறைக் கொள்கையில் இல்லாமல் அவர்களைப் போலவே இருக்கும்படி நம்பிக்கை கொண்டவர்களை மிரட்டிப் பார்த்தார்கள். அவர்களை ஊரைவிட்டே விரட்டிவிடுவோம் என்றும் பயமுறுத்தினார்கள்.
அவர்களின் பயமுறுத்தலுக்கெல்லாம் அஞ்சாமல் ஏகத்துவத்தை எடுத்துரைத்துக் கொண்டும், தவறான இழிசெயல்களிலிருந்து விலகக் கோரியும் போதித்த வண்ணம் இருந்தார்கள் ஷுஐப் (அலை). தனக்காக நல்வழியில் மாறச் சொல்லவில்லை. அவர்கள் நன்மக்களானால் அவர்களுக்கே நல்லது என்றும் நல்லவற்றை எடுத்துரைக்க, தான் கூலி கேட்கவில்லை மாறாக இறைவன் நன்மை செய்பவர்களுக்குத் தகுந்த கூலியைத் தருகிறான் என்றெல்லாம் சொன்னபோது, அதற்கு அவர்கள் “உங்களைப் பார்த்தால் சூனியம் செய்யப்பட்டவர்போல் உள்ளது. நீங்களும் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்தான். நீங்கள் உங்களை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால் வானத்தில் இருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படி செய்யுங்கள்” என்று நகைத்தனர்.
“அறிவிழந்து நகைக்கிறீர்கள். இதற்கு முன்பு நூஹ் (அலை), ஹூத் (அலை), சாலிஹ் (அலை), லூத் (அலை) இவர்களின் ஊர் மக்களுக்கு என்ன நேர்ந்தது, என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லையா? அவர்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்பட வேண்டுமா? தாமதமாகிவிடவில்லை, இறைவனிடம் நீங்களெல்லாம் மன்னிப்புக் கோரி பாவ மன்னிப்புக் கேட்டு அவன் பக்கமே மீளுங்கள்.
இறைவன் கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கேள்விகள் எழுப்பியும், அறிவுரைகள் தந்தும், அவர்களின் நிராகரிப்பு தொடர்ந்தது. ஊழல் பெருகியது. வழிப்பறிக் கொள்ளையும், வியாபாரத்தில் நேர்மையின்மையும் நிறைந்து வழிந்தது.
அவர்களை நேர்வழிப்படுத்தும்படி ஷுஐப் (அலை) பிரார்த்தித்தார்கள். அந்த ஊர் வெயிலின் கொடுமையில் தகித்தது. ஒருநாள் இருட்டிக்கொண்டு வந்தது. ஆனால் அந்த மேகம் மழையைத் தரவில்லை. கெட்ட மக்களுக்கு அழிவைத் தந்தது. மத்யன் நகரத்து மக்கள் மட்டுமல்ல அய்கா பகுதியின் நேர்வழிப்படாத மக்களும் அழிந்தனர். அவர்கள் கேட்ட ஒரு துண்டு வானம் அவர்கள் மீது விழவில்லை, மொத்தமாக மேகம் கீழே விழுந்தது போன்ற பேரிடிச் சத்தத்துடன் தாக்கியது. பூகம்பம் புரட்டிப் போட்டது போல் அவர்கள் தம் வீடுகளிலேயே இறந்து கிடந்தனர்.
ஷுஐப்பும் அவர்களுடனிருந்த நல்லடியார்களும் அழிவிலிருந்து தப்பித்தார்கள். நல்லவர்கள் மட்டும் வாழும் நகரமாக அப்பகுதி மாறியது. ஷுஐப் (அலை) தன்னுடைய இரண்டு மகள்களுடன் மிகச் செழிப்பான பகுதியில் வளமுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக வாழ்ந்தார்கள்.
- ஜெஸிலா பானு.
காரைக்கால் மஸ்தான் சாஹிபு தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மஸ்தான் சாபு தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா, கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கந்தூரி விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை யொட்டி மாலை 4 மணியளவில் தர்காவில் இருந்து கந்தூரி கொடி ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்தில் கண்ணாடி துண்டுகளால் அலங் கரிக்கப்பட்ட பெரிய ரதம், சிறிய ரதம், பல்லக்கு மற்றும் சாம்பிராணி வாகனம் உள்ளிட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இந்த கொடி ஊர்வலமானது நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து இரவு 9 மணியளவில் தர்காவை வந்தடைந்ததும், கொடிமரம் மற்றும் தர்காவின் மேல் உள்ள நான்கு மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை வக்பு நிர்வாக சபையினர் செய்திருந்தனர். விழாவையொட்டி காரைக்கால்- தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
ஊர்வலத்தில் கண்ணாடி துண்டுகளால் அலங் கரிக்கப்பட்ட பெரிய ரதம், சிறிய ரதம், பல்லக்கு மற்றும் சாம்பிராணி வாகனம் உள்ளிட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இந்த கொடி ஊர்வலமானது நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து இரவு 9 மணியளவில் தர்காவை வந்தடைந்ததும், கொடிமரம் மற்றும் தர்காவின் மேல் உள்ள நான்கு மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை வக்பு நிர்வாக சபையினர் செய்திருந்தனர். விழாவையொட்டி காரைக்கால்- தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இறைத்தூதராகவே இருந்தாலும் இறைவனின் சோதனைகளிலிருந்து அவர்கள் தப்புபவர்களில்லை.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை விட்டுவிட்டவர்களாக, தம் மூதாதையர்களான இப்ராஹிம், இஸ்ஹாக், யாகூப் ஆகியோர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களாக, உறுதியான நம்பிக்கையுடன் சிறையில் இருந்தார்கள் யூசுப் (அலை).
இருட்டான சிறைச்சாலை. எது பகல் எது இரவு என்றே தெரியாத அளவுக்குச் சூரியனின் கதிர்க்கீற்று காணாதவர்களாகச் சிறையில் அடைப்பட்டுக் கிடந்தாலும், இறைவன் மீதான நம்பிக்கையிலிருந்து யூசுப் (அலை) விலகவில்லை. பாழ்கிணற்றில் கிடந்த தமக்கு இறைவன் செய்த உதவியை நினைத்துக் கொண்டார்கள். தீய இழிச்செயலைவிட சிறைச்சாலை மேல் என்று தாம் பிரார்த்தித்ததையும் யோசித்துப் பார்த்தார்கள். தவறு செய்யாத குற்றமற்ற தமக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்று பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்தார்கள்.
சிறைச்சாலையில் இருக்கும் மற்ற சிறைக் கைதிகளுக்கும் ஏக இறைவன் கொள்கையைப் பற்றிப் போதித்தார்கள். அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பது தகுமானதல்ல என்பதைப் புரிய வைத்தார்கள்.
யூசுப்புடன் இரண்டு கைதிகள் ஒரே அறையில் இருந்தார்கள். இருவருமே அரசவையில் வேலை செய்து, அரசரின் அதிருப்தியின் காரணமாகச் சிறைக்கு வந்தவர்கள். ஒருவர் அரசருக்கு மது ஊற்றிக் கொடுப்பவர். மற்றவர் ரொட்டி வாட்டுபவர். இரண்டு பேருக்கும் யூசுப் நபியின் ஞானத்தின் மீது ஈர்ப்பும் மரியாதையும் இருந்தது.
ஓர் இரவு அந்த இரண்டு கைதிகளுமே விசித்திரக் கனவு கண்டார்கள். யூசுப்பின் ஞானத்தின் மீது நம்பிக்கையுடையவர்களாக அவர்கள் யூசுப்பிடம் தங்களின் கனவுகளுக்கான விளக்கத்தைக் குறித்துக் கேட்டார்கள். ஒருவர் தாம் திராட்சை மது பிழிவதாகக் கனவு கண்டதாகச் சொன்னார். மற்றவர், தம் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டதாக விளக்கினார்.
யூசுப் (அலை), அந்தக் கைதிகளிடம் “வெவ்வேறு பல தெய்வங்களை வழிபடுவது நல்லதா? அல்லது யாவற்றையும் படைத்து ஆள்கின்ற ஒருவனான இறைவனை நம்புவது நல்லதா? அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் உங்கள் மூதாதையரின் கற்பனையால் விளைந்த தெய்வங்கள். வெறும் கற்பனைப் பெயர்கள் கொண்ட யாதொரு ஆதாரத்தையும் அர்த்தத்தையும் தராதவை. அல்லாஹ் ஒருவனே வழிபாட்டிற்குரியவன், அவனை அன்றி வேறெவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் அவனை வணங்குவதையே அவன் விரும்புகிறான்” என்று சொல்லிவிட்டு, அவர்களின் கனவுகளுக்கான விளக்கத்தை விவரித்தார்கள்.
திராட்சை மது பிழிவதாகக் கனவு கண்டவர் விரைவில் விடுதலையாகி வழக்கம் போல் அவருடைய பணியிடத்தில் தம் முதலாளிக்கு மதுரசம் ஊற்றிக் கொடுப்பார் என்றும், மற்றவர் சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும் என்றும் விளக்கினார். அவருடைய வாக்குப்படி விரைவிலேயே முதலாமவர் குற்றமற்றவர் என்று விசாரனையில் தீர்ப்பாகி விடுதலை செய்யப்பட்டார். இரண்டாமவர் அரசரைக் கொல்ல முயற்சித்தார் என்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலை அடைந்தவரிடம் யூசுப் (அலை) “என்னைப் பற்றி உன் எஜமானரிடம் சொல்வீராக” என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவரோ விடுதலையாகிய மகிழ்ச்சியில் தம் எஜமானிடம் இதைப் பற்றிக் கூற மறந்துவிட்டார் அல்லது ஷைத்தான் அவரை மறக்கடித்துவிட்டான். இதன் காரணமாக யூசுப் (அலை) மேலும் சில ஆண்டுகள் சிறையிலேயே கழிக்க வேண்டியவராகிவிட்டார்கள்.
சிறையில் இருந்தாலும் அவர்கள் தம் நம்பிக்கையைக் கைவிடவில்லை. இறைத்தூதராகவே இருந்தாலும் இறைவனின் சோதனைகளிலிருந்து அவர்கள் தப்புபவர்களில்லை.
- ஜெஸிலா பானு.
இருட்டான சிறைச்சாலை. எது பகல் எது இரவு என்றே தெரியாத அளவுக்குச் சூரியனின் கதிர்க்கீற்று காணாதவர்களாகச் சிறையில் அடைப்பட்டுக் கிடந்தாலும், இறைவன் மீதான நம்பிக்கையிலிருந்து யூசுப் (அலை) விலகவில்லை. பாழ்கிணற்றில் கிடந்த தமக்கு இறைவன் செய்த உதவியை நினைத்துக் கொண்டார்கள். தீய இழிச்செயலைவிட சிறைச்சாலை மேல் என்று தாம் பிரார்த்தித்ததையும் யோசித்துப் பார்த்தார்கள். தவறு செய்யாத குற்றமற்ற தமக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்று பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்தார்கள்.
சிறைச்சாலையில் இருக்கும் மற்ற சிறைக் கைதிகளுக்கும் ஏக இறைவன் கொள்கையைப் பற்றிப் போதித்தார்கள். அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பது தகுமானதல்ல என்பதைப் புரிய வைத்தார்கள்.
யூசுப்புடன் இரண்டு கைதிகள் ஒரே அறையில் இருந்தார்கள். இருவருமே அரசவையில் வேலை செய்து, அரசரின் அதிருப்தியின் காரணமாகச் சிறைக்கு வந்தவர்கள். ஒருவர் அரசருக்கு மது ஊற்றிக் கொடுப்பவர். மற்றவர் ரொட்டி வாட்டுபவர். இரண்டு பேருக்கும் யூசுப் நபியின் ஞானத்தின் மீது ஈர்ப்பும் மரியாதையும் இருந்தது.
ஓர் இரவு அந்த இரண்டு கைதிகளுமே விசித்திரக் கனவு கண்டார்கள். யூசுப்பின் ஞானத்தின் மீது நம்பிக்கையுடையவர்களாக அவர்கள் யூசுப்பிடம் தங்களின் கனவுகளுக்கான விளக்கத்தைக் குறித்துக் கேட்டார்கள். ஒருவர் தாம் திராட்சை மது பிழிவதாகக் கனவு கண்டதாகச் சொன்னார். மற்றவர், தம் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டதாக விளக்கினார்.
யூசுப் (அலை), அந்தக் கைதிகளிடம் “வெவ்வேறு பல தெய்வங்களை வழிபடுவது நல்லதா? அல்லது யாவற்றையும் படைத்து ஆள்கின்ற ஒருவனான இறைவனை நம்புவது நல்லதா? அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் உங்கள் மூதாதையரின் கற்பனையால் விளைந்த தெய்வங்கள். வெறும் கற்பனைப் பெயர்கள் கொண்ட யாதொரு ஆதாரத்தையும் அர்த்தத்தையும் தராதவை. அல்லாஹ் ஒருவனே வழிபாட்டிற்குரியவன், அவனை அன்றி வேறெவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் அவனை வணங்குவதையே அவன் விரும்புகிறான்” என்று சொல்லிவிட்டு, அவர்களின் கனவுகளுக்கான விளக்கத்தை விவரித்தார்கள்.
திராட்சை மது பிழிவதாகக் கனவு கண்டவர் விரைவில் விடுதலையாகி வழக்கம் போல் அவருடைய பணியிடத்தில் தம் முதலாளிக்கு மதுரசம் ஊற்றிக் கொடுப்பார் என்றும், மற்றவர் சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும் என்றும் விளக்கினார். அவருடைய வாக்குப்படி விரைவிலேயே முதலாமவர் குற்றமற்றவர் என்று விசாரனையில் தீர்ப்பாகி விடுதலை செய்யப்பட்டார். இரண்டாமவர் அரசரைக் கொல்ல முயற்சித்தார் என்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலை அடைந்தவரிடம் யூசுப் (அலை) “என்னைப் பற்றி உன் எஜமானரிடம் சொல்வீராக” என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவரோ விடுதலையாகிய மகிழ்ச்சியில் தம் எஜமானிடம் இதைப் பற்றிக் கூற மறந்துவிட்டார் அல்லது ஷைத்தான் அவரை மறக்கடித்துவிட்டான். இதன் காரணமாக யூசுப் (அலை) மேலும் சில ஆண்டுகள் சிறையிலேயே கழிக்க வேண்டியவராகிவிட்டார்கள்.
சிறையில் இருந்தாலும் அவர்கள் தம் நம்பிக்கையைக் கைவிடவில்லை. இறைத்தூதராகவே இருந்தாலும் இறைவனின் சோதனைகளிலிருந்து அவர்கள் தப்புபவர்களில்லை.
- ஜெஸிலா பானு.






