என் மலர்
இஸ்லாம்
இஸ்லாம் எப்போதுமே மனிதனால் முடியாத ஒன்றை செய்யும்படி சொல்வதேயில்லை, சொன்னதும் இல்லை.
நாம் நற்செயல்கள் செய்வது பெரியதல்ல, அதை நாள்தவறாது தொடர்ந்து செய்வதுதான் சிறப்பானது. இது சிரமம் நிறைந்ததாக இருந்தாலும், நம்மால் முடியாத ஒன்றல்ல. இஸ்லாம் எப்போதுமே மனிதனால் முடியாத ஒன்றை செய்யும்படி சொல்வதேயில்லை, சொன்னதும் இல்லை.
நபிகளார் நவின்றார்கள்: ‘அமல்களில் மிகச்சிறந்தது, அது சிறியதாக இருந்தாலும் அதைதொடர்ந்து நிரந்தரமாகச் செய்வதே’. (நூல்: முஸ்லிம்)
ஒருமுறை நபிகளாரிடம், சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் என்ற நபித்தோழர், ‘இறைத்தூதரே, இஸ்லாமைப்பற்றி எனக்கு தெள்ளத்தெளிவாக சொல்லித்தாருங்கள். இதற்குப்பிறகு வேறுயாரிடமும் நான் கேட்கவே மாட்டேன்’ என்றார்.
‘அல்லாஹ்வை நான் முழுமையாக நம்பிக்கை கொண்டேன் என்று சொல். பிறகு அந்த நம்பிக்கையிலேயே நீ நிரந்தரமாய் நீடித்து நிலைத்திரு’ என்று நபிகளார் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
ஒரு காரியத்தில் நாம் நிரந்தரமாய் இருப்பதற்கு இஸ்லாமிய மொழியில் ‘இஸ்திகாமத்’ என்று சொல்லப்படும். இது அனைத்துவிதமான காரியங்களுக்கும் மிக அவசியமானது. உலக விஷயங்களில் எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து, இடைவெளி இன்றி செய்ய வேண்டும் என்று எண்ணுகிற நாம், இறைவனுக்குச் செய்ய வேண்டிய அன்றாடக் கடமைகளில் கவனக்குறைவாக இருப்பது வருந்தத்தக்கது ஆகும்.
ரமலான் மாதத்தில் மட்டும் விழுந்து விழுந்து இரவு-பகலாகத் தொழுத நாம் இப்போது எப்படியிருக்கிறோம்?. நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. ‘இபாதத்’ எனும் இறைவணக்கம் ஒரு குறிப்பிட்ட கால, நேரத்தில் செய்ய வேண்டிய ஒன்று தானே தவிர அவை குறிப்பிட்ட காலத்தில் மட்டும்செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல.
அல்லாஹ் கூறுகிறான்: ‘நபியே நீர் உமது இரட்சகனை நம்பிக்கை (எனும் மரணம்) வரும் வரை வணங்குவீராக’ (திருக்குர்ஆன்-15:99)
‘இறை வணக்கம் அது அவரவர் இறப்பு வரைக்கும்’ என்ற செய்தியை இவ்வசனம் கூறுகிறது. நாம் நினைத்த போது இறைவனை வணங்குவதும், இதர நேரங்களில் அவனை மறந்திருப்பதும் எவ்வகையில் சரி?
நமது மூச்சுக்காற்று எங்கேயும், எப்போதும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, இரவு-பகலாக ஓய்வின்றி இயங்குவது போல இறைவனுக்கான நமது இறை வணக்கம் எங்கேயும், எப்போதும் குறைவின்றி நிறைவேற்றப்பட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: ‘ஜின் இனத்தையும், மனித இனத்தையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை’ (திருக்குர்ஆன் 51:56).
மனிதப்படைப்பின் அசல் நோக்கமே அல்லாஹ்வை அயராது வணங்கிக்கொண்டிருப்பது தான். அவனை வணங்குவது என்பது தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என இக் கடமைகளில் மட்டும் இல்லை. ‘ஒரு ஏழையின் சிரிப்பில் ஏக இறைவனைக் காணலாம்’ என்பது போல நமது வணிகம், வேலை, சேவை, பணிவிடை, உதவி, ஆதரவு, அரவணைப்பு, மருத்துவம் என அனைத்திலும் இருக்கிறது அந்த இறைவணக்கம்.
நபிகளார் நவின்றார்கள்: ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை 77 கிளைகளைக் கொண்டது. அதில் உயர்ந்தது ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ எனும் திருக்கலிமாவாகும். அதில் தாழ்ந்தது நடைபாதையில் கிடக்கும் நோவினை (பொருட்)களை அகற்றுவதாகும். வெட்கம் கொள்வதும் ஈமானின் ஒரு கிளையே’. (நூல்: புகாரி)
நமது வணக்கங்கள், வழக்கங்கள் என அனைத்தும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டவை. அவற்றில் நாம் எதைச் செய்தாலும் அதை அல்லாஹ்வுக்காக, அவனது கட்டளைப்படி செய்யும்போது அவையாவும் ‘இபாதத்’ எனும் இறைவணக்கமாக மாறி விடுகிறது. இஸ்லாம் நமக்கு அனுமதித்துள்ள முறையில் ஒருவர் வியாபாரம் செய்தால் அதுவும் ஒரு வணக்கம் என்று சொல்லி நல்வழிகாட்டியவர்கள் தான் நமது நபிகளார்.
ஆக, இறைவணக்கம் என்பது பல்வேறு பாதைகளைக் கொண்டது. அவற்றில் நாம் அயராது தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கவேண்டும். அது சிறியதொரு அமலாக இருந்தாலும் சரியே.
நபிகளார் ‘மிஅராஜ்’ எனும் அற்புதமிகு விண்ணகப் பயணத்தை முடித்துக்கொண்டு மண்ணகம் வந்தபோது தோழர் பிலாலை அழைத்து ‘உமது காலணியின் நடையோசையை நான் சுவனத்தில் செவியுற்றேனே அதற்கு நீர் அப்படியென்ன நல்லமல் செய்தீர்?’ என வினவினார்கள்.
அதற்கு, ‘தூதரே, நான் எப்போதுமே ‘ஒளு’ எனும் கை, கால், முக உறுப்புத்தூய்மையுடன் தான் இருப்பேன்’ என்றார்கள். ‘ஆம், அதுதான் காரணம்’ என பிறகு அதை உறுதிப் படுத்தவும் செய்தார்கள் நம் நபியவர்கள். (நூல்: மிஷ்காத்)
இன்னொரு முறை ஹாரிஸ் இப்னு நுஅமான் என்ற நாயகத்தோழரிடம், ‘தோழரே, நீர் குர்ஆன் ஓதும் இனிய குரலோசையை சுவனத்தில் நான் கேட்டேனே. அதற்கு நீர் என்ன அமல் செய்தீர்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் ‘என் தாயாருக்கு எப்போதுமே நான் பணிவிடை செய்துகொண்டே இருப்பேன்’ என்றார். ‘ஆம், அதுதான் காரணம்’ என்று உடனே பதில் மொழி பகர்ந்தார்கள் நபி (ஸல்) அவர்கள். (நூல்: மிஷ்காத்)
இப்படியாக எண்ணற்ற அளவில் சின்னச்சின்ன சம்பவங்கள் நிறைய உண்டு. அவை யாவையுமே நமக்கு கற்பிக்கும் செய்தி ‘நாம் எந்தவொரு செயலையும், அமலையும் விடாமல் செய்ய வேண்டும்’ என்பதே.
நன்மையான காரியங்களில் மட்டும் அல்ல, தீமையான காரியங்களிலும் நாம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
உதாரணமாக பொய் பேசுதல். இது ஒரு சாதாரணச் செயல்தானே என எண்ணலாம். ஆனால், அது அல்லாஹ்வின் பார்வையில் பெருங்குற்றமாக பதிவு செய்யப்படும்.
சிறியதோ, பெரியதோ எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடர்ந்து நாள்தோறும் தவறாது செய்து வருவதில் தான் நமது சாதனையே இருக்கிறது. ‘ஒரே செயலில் ஒருவர் நிலைத்திருப்பது என்பது அதுவே ஓர் அற்புதம்’ என்பார்கள் நமது இறைநேசச்செல்வர்கள். ஆம், அற்புதங்களைச் செய்து காட்டுவது மட்டும் அற்புதம் அல்ல, அற்ப காரியங்களையும் அற்புதமாய் செய்து காட்டுவதுதான் பேரற்புதம்.
வாருங்கள், நற்செயல்களைச் செய்வோம், அதை நாள் தவறாது செய்வோம்.
நபிகளார் நவின்றார்கள்: ‘அமல்களில் மிகச்சிறந்தது, அது சிறியதாக இருந்தாலும் அதைதொடர்ந்து நிரந்தரமாகச் செய்வதே’. (நூல்: முஸ்லிம்)
ஒருமுறை நபிகளாரிடம், சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் என்ற நபித்தோழர், ‘இறைத்தூதரே, இஸ்லாமைப்பற்றி எனக்கு தெள்ளத்தெளிவாக சொல்லித்தாருங்கள். இதற்குப்பிறகு வேறுயாரிடமும் நான் கேட்கவே மாட்டேன்’ என்றார்.
‘அல்லாஹ்வை நான் முழுமையாக நம்பிக்கை கொண்டேன் என்று சொல். பிறகு அந்த நம்பிக்கையிலேயே நீ நிரந்தரமாய் நீடித்து நிலைத்திரு’ என்று நபிகளார் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
ஒரு காரியத்தில் நாம் நிரந்தரமாய் இருப்பதற்கு இஸ்லாமிய மொழியில் ‘இஸ்திகாமத்’ என்று சொல்லப்படும். இது அனைத்துவிதமான காரியங்களுக்கும் மிக அவசியமானது. உலக விஷயங்களில் எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து, இடைவெளி இன்றி செய்ய வேண்டும் என்று எண்ணுகிற நாம், இறைவனுக்குச் செய்ய வேண்டிய அன்றாடக் கடமைகளில் கவனக்குறைவாக இருப்பது வருந்தத்தக்கது ஆகும்.
ரமலான் மாதத்தில் மட்டும் விழுந்து விழுந்து இரவு-பகலாகத் தொழுத நாம் இப்போது எப்படியிருக்கிறோம்?. நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. ‘இபாதத்’ எனும் இறைவணக்கம் ஒரு குறிப்பிட்ட கால, நேரத்தில் செய்ய வேண்டிய ஒன்று தானே தவிர அவை குறிப்பிட்ட காலத்தில் மட்டும்செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல.
அல்லாஹ் கூறுகிறான்: ‘நபியே நீர் உமது இரட்சகனை நம்பிக்கை (எனும் மரணம்) வரும் வரை வணங்குவீராக’ (திருக்குர்ஆன்-15:99)
‘இறை வணக்கம் அது அவரவர் இறப்பு வரைக்கும்’ என்ற செய்தியை இவ்வசனம் கூறுகிறது. நாம் நினைத்த போது இறைவனை வணங்குவதும், இதர நேரங்களில் அவனை மறந்திருப்பதும் எவ்வகையில் சரி?
நமது மூச்சுக்காற்று எங்கேயும், எப்போதும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, இரவு-பகலாக ஓய்வின்றி இயங்குவது போல இறைவனுக்கான நமது இறை வணக்கம் எங்கேயும், எப்போதும் குறைவின்றி நிறைவேற்றப்பட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: ‘ஜின் இனத்தையும், மனித இனத்தையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை’ (திருக்குர்ஆன் 51:56).
மனிதப்படைப்பின் அசல் நோக்கமே அல்லாஹ்வை அயராது வணங்கிக்கொண்டிருப்பது தான். அவனை வணங்குவது என்பது தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என இக் கடமைகளில் மட்டும் இல்லை. ‘ஒரு ஏழையின் சிரிப்பில் ஏக இறைவனைக் காணலாம்’ என்பது போல நமது வணிகம், வேலை, சேவை, பணிவிடை, உதவி, ஆதரவு, அரவணைப்பு, மருத்துவம் என அனைத்திலும் இருக்கிறது அந்த இறைவணக்கம்.
நபிகளார் நவின்றார்கள்: ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை 77 கிளைகளைக் கொண்டது. அதில் உயர்ந்தது ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ எனும் திருக்கலிமாவாகும். அதில் தாழ்ந்தது நடைபாதையில் கிடக்கும் நோவினை (பொருட்)களை அகற்றுவதாகும். வெட்கம் கொள்வதும் ஈமானின் ஒரு கிளையே’. (நூல்: புகாரி)
நமது வணக்கங்கள், வழக்கங்கள் என அனைத்தும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டவை. அவற்றில் நாம் எதைச் செய்தாலும் அதை அல்லாஹ்வுக்காக, அவனது கட்டளைப்படி செய்யும்போது அவையாவும் ‘இபாதத்’ எனும் இறைவணக்கமாக மாறி விடுகிறது. இஸ்லாம் நமக்கு அனுமதித்துள்ள முறையில் ஒருவர் வியாபாரம் செய்தால் அதுவும் ஒரு வணக்கம் என்று சொல்லி நல்வழிகாட்டியவர்கள் தான் நமது நபிகளார்.
ஆக, இறைவணக்கம் என்பது பல்வேறு பாதைகளைக் கொண்டது. அவற்றில் நாம் அயராது தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கவேண்டும். அது சிறியதொரு அமலாக இருந்தாலும் சரியே.
நபிகளார் ‘மிஅராஜ்’ எனும் அற்புதமிகு விண்ணகப் பயணத்தை முடித்துக்கொண்டு மண்ணகம் வந்தபோது தோழர் பிலாலை அழைத்து ‘உமது காலணியின் நடையோசையை நான் சுவனத்தில் செவியுற்றேனே அதற்கு நீர் அப்படியென்ன நல்லமல் செய்தீர்?’ என வினவினார்கள்.
அதற்கு, ‘தூதரே, நான் எப்போதுமே ‘ஒளு’ எனும் கை, கால், முக உறுப்புத்தூய்மையுடன் தான் இருப்பேன்’ என்றார்கள். ‘ஆம், அதுதான் காரணம்’ என பிறகு அதை உறுதிப் படுத்தவும் செய்தார்கள் நம் நபியவர்கள். (நூல்: மிஷ்காத்)
இன்னொரு முறை ஹாரிஸ் இப்னு நுஅமான் என்ற நாயகத்தோழரிடம், ‘தோழரே, நீர் குர்ஆன் ஓதும் இனிய குரலோசையை சுவனத்தில் நான் கேட்டேனே. அதற்கு நீர் என்ன அமல் செய்தீர்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் ‘என் தாயாருக்கு எப்போதுமே நான் பணிவிடை செய்துகொண்டே இருப்பேன்’ என்றார். ‘ஆம், அதுதான் காரணம்’ என்று உடனே பதில் மொழி பகர்ந்தார்கள் நபி (ஸல்) அவர்கள். (நூல்: மிஷ்காத்)
இப்படியாக எண்ணற்ற அளவில் சின்னச்சின்ன சம்பவங்கள் நிறைய உண்டு. அவை யாவையுமே நமக்கு கற்பிக்கும் செய்தி ‘நாம் எந்தவொரு செயலையும், அமலையும் விடாமல் செய்ய வேண்டும்’ என்பதே.
நன்மையான காரியங்களில் மட்டும் அல்ல, தீமையான காரியங்களிலும் நாம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
உதாரணமாக பொய் பேசுதல். இது ஒரு சாதாரணச் செயல்தானே என எண்ணலாம். ஆனால், அது அல்லாஹ்வின் பார்வையில் பெருங்குற்றமாக பதிவு செய்யப்படும்.
சிறியதோ, பெரியதோ எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடர்ந்து நாள்தோறும் தவறாது செய்து வருவதில் தான் நமது சாதனையே இருக்கிறது. ‘ஒரே செயலில் ஒருவர் நிலைத்திருப்பது என்பது அதுவே ஓர் அற்புதம்’ என்பார்கள் நமது இறைநேசச்செல்வர்கள். ஆம், அற்புதங்களைச் செய்து காட்டுவது மட்டும் அற்புதம் அல்ல, அற்ப காரியங்களையும் அற்புதமாய் செய்து காட்டுவதுதான் பேரற்புதம்.
வாருங்கள், நற்செயல்களைச் செய்வோம், அதை நாள் தவறாது செய்வோம்.
ஸபா நாட்டின் அரசி பல்கீஸ், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் சுலைமான் (அலை) அவர்களையும் நம்பி ஓரிறைக் கொள்கையை ஏற்றக்கொண்டார்.
ஸபா நாட்டின் அரசி பல்கீஸ், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் சுலைமான் (அலை) அவர்களையும் நம்பி ஓரிறைக் கொள்கையை ஏற்ற பின் தன் நாட்டிற்குத் திரும்பினார்
மக்களிடம் உண்மைகளை எடுத்துரைத்தார். ஓரிறைக் கொள்கையைப் பற்றிப் போதித்தார். மக்களும் அரசி சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்து சூரியனை வணங்குவதைக் கைவிட்டனர்.
மக்களும் இறைவழியில் மிகவும் நல்லமுறையில் நேர்மையாகவும் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் ஓரிறைக் கொள்கை நெறிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.
சுலைமான் (அலை) அவர்கள், பல்வேறு பிரிவினரை ஒன்றுபடுத்தும் வகையில் ஓரிறைக் கொள்கையைப் போதித்து வந்தார்கள். காற்றை இறைவன் தமது தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்தித் தந்ததால் அதன் மூலம் பல இடத்திற்குப் பயணப்பட்டுப் போதித்து வந்ததோடு, ஜின்களை வைத்து பல விஷயங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள். குறிப்பாக சுலைமான் (அலை) அவர்களுக்குப் பிடித்தமான கட்டடங்களை உருவாக்கவும், சிற்பங்களைச் செதுக்கவும், பாறைக் குவிமாடம் அமைந்த பள்ளிவாசல்களை விரிவுபடுத்தவும் ஜின்களை ஈடுபடுத்தினார்கள்.
என்னதான் இறைத்தூதரான சுலைமான் (அலை) அவர்களுக்கு இதையெல்லாம் இறைவன் வசப்படுத்தித் தந்திருந்தாலும், முழுக்கட்டுப்பாட்டுடையவன் அல்லாஹ் ஒருவனே, அகிலங்களை ஆளும் அவனுக்குத்தான் அழிவில்லை என்ற உண்மையை மக்களும் ஜின்களும் அறியும் வகையில், சுலைமான் (அலை) ஜின்களுக்கு வேலையை ஏவி விட்டு உட்கார்ந்த இடத்திலேயே இறந்துவிட்டார்கள். சுலைமான் (அலை) அவர்கள் ஊன்றி உட்கார்ந்திருந்த ஊன்றுகோலை கரையான் அரிக்கவே, அவர்கள் தலைசாய்ந்து இயற்கை எய்தினார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.
திருக்குர்ஆன் 34:12-14
- ஜெஸிலா பானு.
மக்களிடம் உண்மைகளை எடுத்துரைத்தார். ஓரிறைக் கொள்கையைப் பற்றிப் போதித்தார். மக்களும் அரசி சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்து சூரியனை வணங்குவதைக் கைவிட்டனர்.
மக்களும் இறைவழியில் மிகவும் நல்லமுறையில் நேர்மையாகவும் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் ஓரிறைக் கொள்கை நெறிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர்.
சுலைமான் (அலை) அவர்கள், பல்வேறு பிரிவினரை ஒன்றுபடுத்தும் வகையில் ஓரிறைக் கொள்கையைப் போதித்து வந்தார்கள். காற்றை இறைவன் தமது தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்தித் தந்ததால் அதன் மூலம் பல இடத்திற்குப் பயணப்பட்டுப் போதித்து வந்ததோடு, ஜின்களை வைத்து பல விஷயங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள். குறிப்பாக சுலைமான் (அலை) அவர்களுக்குப் பிடித்தமான கட்டடங்களை உருவாக்கவும், சிற்பங்களைச் செதுக்கவும், பாறைக் குவிமாடம் அமைந்த பள்ளிவாசல்களை விரிவுபடுத்தவும் ஜின்களை ஈடுபடுத்தினார்கள்.
என்னதான் இறைத்தூதரான சுலைமான் (அலை) அவர்களுக்கு இதையெல்லாம் இறைவன் வசப்படுத்தித் தந்திருந்தாலும், முழுக்கட்டுப்பாட்டுடையவன் அல்லாஹ் ஒருவனே, அகிலங்களை ஆளும் அவனுக்குத்தான் அழிவில்லை என்ற உண்மையை மக்களும் ஜின்களும் அறியும் வகையில், சுலைமான் (அலை) ஜின்களுக்கு வேலையை ஏவி விட்டு உட்கார்ந்த இடத்திலேயே இறந்துவிட்டார்கள். சுலைமான் (அலை) அவர்கள் ஊன்றி உட்கார்ந்திருந்த ஊன்றுகோலை கரையான் அரிக்கவே, அவர்கள் தலைசாய்ந்து இயற்கை எய்தினார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.
திருக்குர்ஆன் 34:12-14
- ஜெஸிலா பானு.
ஸபாவின் அரசி பல்கீஸ் உலகிற்கெல்லாம் அதிபதியே உன்னையும், உன் தூதரையும் மனதார நம்புகிறேன்" என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
ஸபாவின் அரசி பல்கீஸ், இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களைக் காண தனது சேனைகளுடன் புறப்பட்டு, சுலைமான் (அலை) அவர்களின் அரண்மனையை அடைந்தார்.
சேனைகள் வெளியில் காவலிருக்க, சுலைமான் (அலை) அரசியை மிகுந்த மரியாதையோடும் அன்போடும் வரவேற்று, அரசிக்காக அமைத்திருந்த மேடை அருகே அழைத்து வந்து, அரசியின் அரியணையைச் சுட்டிக்காட்டி, "தங்களின் அரியாசனம் இப்படி இருக்குமா?" என்று கேட்டார்.
அரசிக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. தன் முன் இருப்பது தனது அரியாசனமென்று உணர்ந்தவர். அதனைப் பூட்டி காவலில் வைத்து வந்திருந்தது எப்படி இங்கே வந்திருக்க முடியும் என்று எண்ணியவராக, தமது அரியணை மிகவும் அழகாக மாற்றப்பட்டிருப்பதை இரசித்து வியந்தவராக, தடுமாறியபடி "ம்ம்... ஆமாம், இது என்னுடைய அரியணைப் போலுள்ளது" என்று கூறினார்.
இறைத்தூதர் சுலைமான் (அலை) சற்றும் தாமதிக்காமல் "இது உங்களுடைய அரியணைதான்" என்று கூறியதும் அரசி அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தார்.
"எப்படி இது உங்களுக்குச் சாத்தியமாயிற்று?. நான் இதனை மிகுந்த காவலுக்குட்படுத்தி இருந்தேனே?" என்று பிரமிப்பிலிருந்து மீளாதவராகக் கேட்டார்.
அதற்கு சுலைமான் (அலை), "உண்மையில் இது தங்களுடைய அரியாசனம்தான். உங்கள் நகரத்திலிருந்துதான் எடுத்து வரப்பட்டது. நீங்கள் விரும்பினால், அதற்கு மிக அருகில் சென்று பார்வையிடுங்களேன்" என்றார்கள்.
தண்ணீர் குளத்திற்குள் அரியணை இருப்பதாக எண்ணிய அரசி, தமது ஆடை நனைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆடையை அவருடைய கணுக்கால் தெரியும்படி தூக்கினார்.
அதற்கு சுலைமான் (அலை) புன்முறுவலுடன், "அது கண்ணாடிதானே தவிர தண்ணீரில்லை" என்று சொன்னார்கள்.
ஆடையைக் கீழிறக்கி அரியணைக்கு அருகில் வந்தவர், தனது அரியாசனத்தைச் சோதித்தவராக, உறுதி செய்த மகிழ்ச்சியில் "ஆமாம், இது என்னுடைய அரியணைதான்" என்று புன்னகையுதித்தார்
அரசர் சுலைமான் (அலை) "அமருங்கள்" என்று சொல்ல. அதில் ஏறி அமர்ந்தார் அரசி. அந்த நொடியில் அரசி சுலைமான் (அலை) ஓர் இறைத்தூதர் என்பதை உணர்ந்தார்கள். ஓர் இறைத்தூதரால் மட்டும்தான் யாரும் செய்ய இயலாத இத்தகைய அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பதை உணர்ந்தார்கள். தாம் இத்தனை காலமாக நிலையில்லாத சூரியனை வணங்குவதைக் குறித்து வெட்கித் தலைகுனிந்தார்கள்.
உடனே தனது இரு கைகளையும் ஏந்தி உள்ளம் ஒன்றி மனதார பிரார்த்தனை செய்தார் "இறைவா, இந்நாள் வரை சூரியனை எங்கள் தெய்வமாகக் கருதி வணங்கி தவறிழைத்துவிட்டோம். என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும், என் மக்களையும் மன்னிப்பாயாக! இறைவன் ஒருவன் தவிர வேறில்லை என்று நம்பிக்கைக் கொண்டு உன்னிடம் சரணடைகிறேன். உலகிற்கெல்லாம் அதிபதியே உன்னையும், உன் தூதரையும் மனதார நம்புகிறேன்" என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
திருக்குர்ஆன் 27:40-47
- ஜெஸிலா பானு.
சேனைகள் வெளியில் காவலிருக்க, சுலைமான் (அலை) அரசியை மிகுந்த மரியாதையோடும் அன்போடும் வரவேற்று, அரசிக்காக அமைத்திருந்த மேடை அருகே அழைத்து வந்து, அரசியின் அரியணையைச் சுட்டிக்காட்டி, "தங்களின் அரியாசனம் இப்படி இருக்குமா?" என்று கேட்டார்.
அரசிக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. தன் முன் இருப்பது தனது அரியாசனமென்று உணர்ந்தவர். அதனைப் பூட்டி காவலில் வைத்து வந்திருந்தது எப்படி இங்கே வந்திருக்க முடியும் என்று எண்ணியவராக, தமது அரியணை மிகவும் அழகாக மாற்றப்பட்டிருப்பதை இரசித்து வியந்தவராக, தடுமாறியபடி "ம்ம்... ஆமாம், இது என்னுடைய அரியணைப் போலுள்ளது" என்று கூறினார்.
இறைத்தூதர் சுலைமான் (அலை) சற்றும் தாமதிக்காமல் "இது உங்களுடைய அரியணைதான்" என்று கூறியதும் அரசி அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தார்.
"எப்படி இது உங்களுக்குச் சாத்தியமாயிற்று?. நான் இதனை மிகுந்த காவலுக்குட்படுத்தி இருந்தேனே?" என்று பிரமிப்பிலிருந்து மீளாதவராகக் கேட்டார்.
அதற்கு சுலைமான் (அலை), "உண்மையில் இது தங்களுடைய அரியாசனம்தான். உங்கள் நகரத்திலிருந்துதான் எடுத்து வரப்பட்டது. நீங்கள் விரும்பினால், அதற்கு மிக அருகில் சென்று பார்வையிடுங்களேன்" என்றார்கள்.
தண்ணீர் குளத்திற்குள் அரியணை இருப்பதாக எண்ணிய அரசி, தமது ஆடை நனைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆடையை அவருடைய கணுக்கால் தெரியும்படி தூக்கினார்.
அதற்கு சுலைமான் (அலை) புன்முறுவலுடன், "அது கண்ணாடிதானே தவிர தண்ணீரில்லை" என்று சொன்னார்கள்.
ஆடையைக் கீழிறக்கி அரியணைக்கு அருகில் வந்தவர், தனது அரியாசனத்தைச் சோதித்தவராக, உறுதி செய்த மகிழ்ச்சியில் "ஆமாம், இது என்னுடைய அரியணைதான்" என்று புன்னகையுதித்தார்
அரசர் சுலைமான் (அலை) "அமருங்கள்" என்று சொல்ல. அதில் ஏறி அமர்ந்தார் அரசி. அந்த நொடியில் அரசி சுலைமான் (அலை) ஓர் இறைத்தூதர் என்பதை உணர்ந்தார்கள். ஓர் இறைத்தூதரால் மட்டும்தான் யாரும் செய்ய இயலாத இத்தகைய அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பதை உணர்ந்தார்கள். தாம் இத்தனை காலமாக நிலையில்லாத சூரியனை வணங்குவதைக் குறித்து வெட்கித் தலைகுனிந்தார்கள்.
உடனே தனது இரு கைகளையும் ஏந்தி உள்ளம் ஒன்றி மனதார பிரார்த்தனை செய்தார் "இறைவா, இந்நாள் வரை சூரியனை எங்கள் தெய்வமாகக் கருதி வணங்கி தவறிழைத்துவிட்டோம். என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும், என் மக்களையும் மன்னிப்பாயாக! இறைவன் ஒருவன் தவிர வேறில்லை என்று நம்பிக்கைக் கொண்டு உன்னிடம் சரணடைகிறேன். உலகிற்கெல்லாம் அதிபதியே உன்னையும், உன் தூதரையும் மனதார நம்புகிறேன்" என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
திருக்குர்ஆன் 27:40-47
- ஜெஸிலா பானு.
தமது நாட்டிற்குள் வந்து விட்ட ஸபா அரசி பல்கீஸ் தனது அரண்மணைக்கு வரக் காத்திருந்தார்கள் சுலைமான் (அலை).
ஸபாவின் அரசி பல்கீஸ், இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களைக் காணும் ஆவலுடன் தனது சேனைகளுடன் புறப்பட்டார். பல நாள் பிரயாணத்திற்குப் பிறகு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டைச் சென்றடைந்தார்.
அரசி வரும் செய்தி அறிந்து சுலைமான் (அலை) அவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்க வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். உடனே தனது நம்பிக்கைக்குரியவர்களை அழைத்து, “பிரமுகர்களே, அவர்கள் என்னிடம் வருமுன், உங்களில் யார் அவருடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று சுலைமான் (அலை) கேட்டார்கள்.
ஜின்களில் பலமிக்க ஓர் இஃப்ரீத் கூறியது “இறைவன் நாடினால், நீங்கள் உங்கள் கண் இமைக்கு முன், நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்குள் அதை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன். நான் உங்கள் நம்பிக்கைக்குரியவன்” என்று சொன்னதும், சுலைமான் (அலை) “சரி, கொண்டு வா” என்று சொல்லி வாய் மூடுவதற்குள், “அரசே, உங்களுடைய வலதுப் பக்கம் பாருங்கள்” என்றது இஃப்ரீத்.
அரசி பல்கீஸின் தங்க அரியாசனம் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அரியாசனத்தைக் கொண்டு வந்ததற்காக, இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் சுலைமான் (அலை).
அந்த அரியாசனம் தன்னுடையதுதானா என்று அரசிக்குச் சந்தேகம் வரும் வகையில் அதில் மாற்றங்களை ஏற்படுத்த உத்தரவிட்டார்கள். அரியாசனத்தில் சில அலங்காரங்களை நீக்கியும், சிலவற்றைச் சேர்த்தும் அந்த அழகிய அரியாசனத்தை மிக அழகானதாக மாற்றியமைத்தனர்.
ஒரு மேடையமைத்து அதன் முன்பகுதியில் ஒரு பெரும் குளத்தை ஏற்படுத்தி, அதில் வண்ண மீன்களை விட்டு, குளத்தைக் கண்ணாடி பளிங்கு தளத்தால் மூடச்செய்தார்கள் சுலைமான் (அலை). பார்ப்பதற்கு மூடப்படாத தண்ணீர் நிறைந்த குளத்தைப் போல் அது காட்சியளித்தது. அதற்கு மத்தியில் வேலைப்பாடுகள் நிறைந்த அரசியின் அரியாசனத்தை வைக்க உத்தரவிட்டார்கள். பார்ப்பதற்கு அரியாசனம் குளத்தின் நடுவே இருப்பதுபோல் அமைந்திருந்தது.
இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, தமது நாட்டிற்குள் வந்து விட்ட ஸபா அரசி பல்கீஸ் தனது அரண்மணைக்கு வரக் காத்திருந்தார்கள் சுலைமான் (அலை).
திருக்குர்ஆன் 27:38-41
- ஜெஸிலா பானு.
அரசி வரும் செய்தி அறிந்து சுலைமான் (அலை) அவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்க வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். உடனே தனது நம்பிக்கைக்குரியவர்களை அழைத்து, “பிரமுகர்களே, அவர்கள் என்னிடம் வருமுன், உங்களில் யார் அவருடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று சுலைமான் (அலை) கேட்டார்கள்.
ஜின்களில் பலமிக்க ஓர் இஃப்ரீத் கூறியது “இறைவன் நாடினால், நீங்கள் உங்கள் கண் இமைக்கு முன், நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்குள் அதை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன். நான் உங்கள் நம்பிக்கைக்குரியவன்” என்று சொன்னதும், சுலைமான் (அலை) “சரி, கொண்டு வா” என்று சொல்லி வாய் மூடுவதற்குள், “அரசே, உங்களுடைய வலதுப் பக்கம் பாருங்கள்” என்றது இஃப்ரீத்.
அரசி பல்கீஸின் தங்க அரியாசனம் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அரியாசனத்தைக் கொண்டு வந்ததற்காக, இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் சுலைமான் (அலை).
அந்த அரியாசனம் தன்னுடையதுதானா என்று அரசிக்குச் சந்தேகம் வரும் வகையில் அதில் மாற்றங்களை ஏற்படுத்த உத்தரவிட்டார்கள். அரியாசனத்தில் சில அலங்காரங்களை நீக்கியும், சிலவற்றைச் சேர்த்தும் அந்த அழகிய அரியாசனத்தை மிக அழகானதாக மாற்றியமைத்தனர்.
ஒரு மேடையமைத்து அதன் முன்பகுதியில் ஒரு பெரும் குளத்தை ஏற்படுத்தி, அதில் வண்ண மீன்களை விட்டு, குளத்தைக் கண்ணாடி பளிங்கு தளத்தால் மூடச்செய்தார்கள் சுலைமான் (அலை). பார்ப்பதற்கு மூடப்படாத தண்ணீர் நிறைந்த குளத்தைப் போல் அது காட்சியளித்தது. அதற்கு மத்தியில் வேலைப்பாடுகள் நிறைந்த அரசியின் அரியாசனத்தை வைக்க உத்தரவிட்டார்கள். பார்ப்பதற்கு அரியாசனம் குளத்தின் நடுவே இருப்பதுபோல் அமைந்திருந்தது.
இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, தமது நாட்டிற்குள் வந்து விட்ட ஸபா அரசி பல்கீஸ் தனது அரண்மணைக்கு வரக் காத்திருந்தார்கள் சுலைமான் (அலை).
திருக்குர்ஆன் 27:38-41
- ஜெஸிலா பானு.
அரசி பல்கீஸ் சுலைமான் (அலை)யை சந்தித்து விட்டு திரும்பி வந்த தமது பிரமுகர்களிடம் விசாரணை செய்த நிகழ்ச்சியை பார்க்கலாம்.
பல்கீஸ் அரசியின் பிரமுகர்கள் சுலைமான் (அலை) அவர்கள் மறுத்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஸபாவிற்குத் திரும்பிச் சென்றார்கள். ஸபாவின் அரசி பல்கீஸ் தனது அரண்மனையில் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார். திரும்பி வந்த தமது பிரமுகர்களைக் கண்டு “என்ன நடந்தது?” என்று விசாரித்தார். அவர்கள் அங்கு பார்த்ததையும் கேட்டதையும் விவரிக்கும்படி கேட்டார் அரசி.
சுலைமான் (அலை) அவர்களிடம் சென்று வந்த பிரமுகர்கள், “மன்னிக்கவும். சுலைமான் (அலை) உங்களுடைய பரிசுப் பொருட்களை நிராகரித்துவிட்டார்கள். உண்மையில் அவர்களிடம் எல்லாவித செல்வங்களும் உள்ளது. அவருடைய மக்கள் மட்டுமல்ல அவரது பலம். பறவைகளும் மிருகங்களும் கூட அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளன. எல்லா உயிரினங்களும் அவருடைய கட்டளைக்கு உட்படுகிறது. நாங்கள் எங்குமே இப்படியான ஆட்சியாளரைப் பற்றிக் கேட்டதும் பார்த்ததுமில்லை” என்று சுலைமான் (அலை) அவர்களைப் பற்றிக் கூறிக் கொண்டே சென்றதை மறித்து அரசி, “சரி, அவர் என்னதான் சொன்னார்? அதைச் சொல்லுங்கள்” என்றார்.
வார்த்தை மாறாமல் சுலைமான் (அலை) அவர்கள் சொன்னதை அப்படியே விவரித்தார்கள் பிரமுகர்கள். “ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கோருகிறார். நாம் இந்நாள் வரை நம்பிக்கொண்டிருந்த தெய்வங்களைக் கைவிடச் சொல்கிறார்” என்ற விபரத்தையும் சொன்னார்கள்.
விபரங்களைக் கேட்டறிந்த அரசி பல்கீஸ், பிரமுகர்களிடம் “இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சுலைமான் (அலை) அவர்களின் ஆட்சி மிகவும் சக்தி வாய்ந்ததென்று புரிந்து கொள்கிறேன். உங்களுடைய ஆலோசனை என்ன?” என்று கேட்டார்.
“நீங்கள் சொல்வது சரிதான் அரசி. அவர்களை எதிர்க்கும் பலம் நமக்கில்லை என்றே தோன்றுகிறது” என்று பிரமுகர்களும் ஆமோதித்த பிறகு, மிகுந்த யோசனைக்குப் பின், தான் உடனே அரசர் சுலைமானைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி ஆணையிட்டவர், தம் வருகையைக் குறித்துச் சுலைமான் (அலை) அவர்களுக்குச் செய்தியை அனுப்பி வைத்தார்.
வைரத்தாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட தமது விலையுயர்ந்த அரியணையை ஓர் அறையிலிட்டுப் பூட்டி காவலாளிகளைப் பாதுகாப்பிற்கு வைத்துவிட்டு தமது சேனைகளுடன் புறப்பட்டார் அரசி பல்கீஸ். பல நாள் பிரயாணத்திற்குப் பிறகு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
திருக்குர்ஆன் 27:35-37
- ஜெஸிலா பானு.
சுலைமான் (அலை) அவர்களிடம் சென்று வந்த பிரமுகர்கள், “மன்னிக்கவும். சுலைமான் (அலை) உங்களுடைய பரிசுப் பொருட்களை நிராகரித்துவிட்டார்கள். உண்மையில் அவர்களிடம் எல்லாவித செல்வங்களும் உள்ளது. அவருடைய மக்கள் மட்டுமல்ல அவரது பலம். பறவைகளும் மிருகங்களும் கூட அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளன. எல்லா உயிரினங்களும் அவருடைய கட்டளைக்கு உட்படுகிறது. நாங்கள் எங்குமே இப்படியான ஆட்சியாளரைப் பற்றிக் கேட்டதும் பார்த்ததுமில்லை” என்று சுலைமான் (அலை) அவர்களைப் பற்றிக் கூறிக் கொண்டே சென்றதை மறித்து அரசி, “சரி, அவர் என்னதான் சொன்னார்? அதைச் சொல்லுங்கள்” என்றார்.
வார்த்தை மாறாமல் சுலைமான் (அலை) அவர்கள் சொன்னதை அப்படியே விவரித்தார்கள் பிரமுகர்கள். “ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கோருகிறார். நாம் இந்நாள் வரை நம்பிக்கொண்டிருந்த தெய்வங்களைக் கைவிடச் சொல்கிறார்” என்ற விபரத்தையும் சொன்னார்கள்.
விபரங்களைக் கேட்டறிந்த அரசி பல்கீஸ், பிரமுகர்களிடம் “இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சுலைமான் (அலை) அவர்களின் ஆட்சி மிகவும் சக்தி வாய்ந்ததென்று புரிந்து கொள்கிறேன். உங்களுடைய ஆலோசனை என்ன?” என்று கேட்டார்.
“நீங்கள் சொல்வது சரிதான் அரசி. அவர்களை எதிர்க்கும் பலம் நமக்கில்லை என்றே தோன்றுகிறது” என்று பிரமுகர்களும் ஆமோதித்த பிறகு, மிகுந்த யோசனைக்குப் பின், தான் உடனே அரசர் சுலைமானைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி ஆணையிட்டவர், தம் வருகையைக் குறித்துச் சுலைமான் (அலை) அவர்களுக்குச் செய்தியை அனுப்பி வைத்தார்.
வைரத்தாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட தமது விலையுயர்ந்த அரியணையை ஓர் அறையிலிட்டுப் பூட்டி காவலாளிகளைப் பாதுகாப்பிற்கு வைத்துவிட்டு தமது சேனைகளுடன் புறப்பட்டார் அரசி பல்கீஸ். பல நாள் பிரயாணத்திற்குப் பிறகு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
திருக்குர்ஆன் 27:35-37
- ஜெஸிலா பானு.
அரசி பல்கீஸின் ஆணையின்படி, சுலைமான் (அலை) அவர்களுக்கு விலை மதிப்புள்ள பல பொருட்களை எடுத்துக் கொண்டு வந்தார்கள்.
அரசி பல்கீஸின் ஆணையின்படி, சுலைமான் (அலை) அவர்களுக்கு விலை மதிப்புள்ள பல பொருட்களை எடுத்துக் கொண்டு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வரவிருப்பதை ஹுத்ஹுத் பறவை சுலைமான் (அலை) அவர்களுக்குத் தெரிவித்தது.
உடனே சுலைமான் (அலை), அரசி பல்கீஸின் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாக, அவர்கள் வந்து இறங்கவிருக்கும் இடத்தைச் சுத்தமாக்கி அலங்கரித்து மிக அழகான இடமாக மாற்ற உத்தரவிட்டார்கள்.
அரசி பல்கீஸின் பிரமுகர்கள் பரிசுப் பொருட்களுடன் சுலைமான் நபியைக் காண வந்தார்கள். அந்த இடத்தைப் பார்த்து அசந்து போய் நின்றார்கள். பிரமித்தார்கள். சுலைமான் (அலை) பிரம்மாண்டமான் அரியாசனத்தில் வீற்றிருக்க, பறவைகள் அவர்களுக்கு மேல் நிழற்குடை போல் சுற்றிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்தார்கள். அவர்களுடைய கண்களை அவர்களே நம்ப முடியாத அளவிற்கு இருந்தது அந்தக் காட்சி.
எல்லாச் செல்வங்களும் நிறைந்திருக்கும் அரசருக்கு பரிசு கொடுக்கவே தயங்கியபடி அரசியின் கட்டளை என்பதால் பரிசுப் பொருட்களை அளித்தார்கள்.
அதனை மறுத்து இறைத்தூதர் சுலைமான் (அலை) “மிக்க நன்றி. உங்களுடைய பரிசுகளை நான் ஏற்க மறுக்கிறேன். உங்களுடைய இந்த முயற்சி வீணானது குறித்தும், இப்பொருட்களையெல்லாம் எடுத்து வந்து திரும்ப எடுத்துச் செல்லும் சிரமத்திற்கு உங்களை ஆளாக்கியதற்காகவும் என்னை மன்னியுங்கள். ஆனால் அல்லாஹ் எனக்குத் தேவையானவற்றைவிடவும் மிக அதிகமாகத் தந்து ஆசிர்வதித்துள்ளான்.
உங்களுக்குத் தந்திருப்பதைவிட அதிகமாகவே எங்களுக்குத் தந்துள்ளான். எனக்கு எந்தப் பொருள் மீதும் மோகமில்லை. நீங்கள்தான் இப்படியான பொருட்களைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறீர்கள். எனக்கு எந்தப் பரிசுகளும் தேவைப்படவில்லை. எனது தேவையெல்லாம் நீங்களும் உங்கள் அரசவையில் உள்ளவர்களும், உங்கள் நகரத்தைச் சேர்ந்தவர்களும் சூரியனையும், நிரந்தரமில்லாதவற்றையும் வணங்குவதைக் கைவிட்டு, இறைவன் ஒருவனே என்ற ஓரிறை நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். மறுத்தால், இறைவனின் தண்டனைக்குள்ளாவதை யாரும் தடுக்க இயலாது” என்று கண்ணியமான முறையில் விளக்கினார்கள்.
பல்கீஸ் அரசியின் பிரமுகர்கள் தங்கள் அரசியிடம் தெரிவிப்பதாகச் சொல்லி சுலைமான் (அலை) அவர்கள் மறுத்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
திருக்குர்ஆன் 27:35-37
- ஜெஸிலா பானு.
உடனே சுலைமான் (அலை), அரசி பல்கீஸின் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாக, அவர்கள் வந்து இறங்கவிருக்கும் இடத்தைச் சுத்தமாக்கி அலங்கரித்து மிக அழகான இடமாக மாற்ற உத்தரவிட்டார்கள்.
அரசி பல்கீஸின் பிரமுகர்கள் பரிசுப் பொருட்களுடன் சுலைமான் நபியைக் காண வந்தார்கள். அந்த இடத்தைப் பார்த்து அசந்து போய் நின்றார்கள். பிரமித்தார்கள். சுலைமான் (அலை) பிரம்மாண்டமான் அரியாசனத்தில் வீற்றிருக்க, பறவைகள் அவர்களுக்கு மேல் நிழற்குடை போல் சுற்றிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்தார்கள். அவர்களுடைய கண்களை அவர்களே நம்ப முடியாத அளவிற்கு இருந்தது அந்தக் காட்சி.
எல்லாச் செல்வங்களும் நிறைந்திருக்கும் அரசருக்கு பரிசு கொடுக்கவே தயங்கியபடி அரசியின் கட்டளை என்பதால் பரிசுப் பொருட்களை அளித்தார்கள்.
அதனை மறுத்து இறைத்தூதர் சுலைமான் (அலை) “மிக்க நன்றி. உங்களுடைய பரிசுகளை நான் ஏற்க மறுக்கிறேன். உங்களுடைய இந்த முயற்சி வீணானது குறித்தும், இப்பொருட்களையெல்லாம் எடுத்து வந்து திரும்ப எடுத்துச் செல்லும் சிரமத்திற்கு உங்களை ஆளாக்கியதற்காகவும் என்னை மன்னியுங்கள். ஆனால் அல்லாஹ் எனக்குத் தேவையானவற்றைவிடவும் மிக அதிகமாகத் தந்து ஆசிர்வதித்துள்ளான்.
உங்களுக்குத் தந்திருப்பதைவிட அதிகமாகவே எங்களுக்குத் தந்துள்ளான். எனக்கு எந்தப் பொருள் மீதும் மோகமில்லை. நீங்கள்தான் இப்படியான பொருட்களைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறீர்கள். எனக்கு எந்தப் பரிசுகளும் தேவைப்படவில்லை. எனது தேவையெல்லாம் நீங்களும் உங்கள் அரசவையில் உள்ளவர்களும், உங்கள் நகரத்தைச் சேர்ந்தவர்களும் சூரியனையும், நிரந்தரமில்லாதவற்றையும் வணங்குவதைக் கைவிட்டு, இறைவன் ஒருவனே என்ற ஓரிறை நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். மறுத்தால், இறைவனின் தண்டனைக்குள்ளாவதை யாரும் தடுக்க இயலாது” என்று கண்ணியமான முறையில் விளக்கினார்கள்.
பல்கீஸ் அரசியின் பிரமுகர்கள் தங்கள் அரசியிடம் தெரிவிப்பதாகச் சொல்லி சுலைமான் (அலை) அவர்கள் மறுத்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
திருக்குர்ஆன் 27:35-37
- ஜெஸிலா பானு.
நமது வாழ்வில், அதிகமாய் நன்மைகளை ஏவி, தீமைகளை தடுத்திடுவோம்.
மனிதர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று, ‘நன்மைகளை ஏவுவது, தீமைகளைத் தடுப்பது’. ஆனால் இன்று நல்லதை சொல்வோரும் இல்லை; கெட்டதை தடுப்போரும் இல்லை.
அல்லாஹ் திருக்குர்ஆனில் இதுபற்றி கூறியிருப்பதாவது: ‘உங்களில் இருந்து ஒரு கூட்டத்தார் (மக்களை) நன்மையின் பக்கம் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுகிறவர்களாகவும், தீயதை விட்டும் விலக்குபவர்களாகவும் இருக்கட்டும். மேலும் இவர்கள்தான் வெற்றியாளர்கள்’. (3:104)
‘இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும், இறை நம்பிக்கை கொண்ட பெண்களும், அவர்களில் சிலர், சிலருக்கு உதவியாளர்களாய் இருக்கின்றனர்; நன்மையை அவர்கள் ஏவுகின்றனர்; தீமையை தடுக்கின்றனர்; தொழுகையை நிலை நிறுத்தி, ஜகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றனர்; இத்தகையோர்- விரைவில் இவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமுள்ளவன்’. (9:71)
இந்த இருவசனங்களில் முதல் வசனம் வெற்றிக்கு என்ன வழி என்பதைச் சொல்லிக் காட்டுகிறது. மறுவசனம் ஐம்பெரும் கடமைகளுக்கு முன் ‘ஏவல் விலக்கல்’ தான் மிகமிக முக்கியம் என்பதை மிக அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. இது நபிமார்கள், நல்லோர் களின் நற்பண்பு. குறிப்பாக ஒரு நோன்பாளியிடம் இருக்க வேண்டிய பண்பு.
நபிகளார் நவின்றார்கள்: ‘என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக... நிச்சயமாக நீங்கள் நல்லதை ஏவுங்கள். நிச்சயமாக நீங்கள் தீயதை தடுங்கள். அல்லது நிச்சயமாக அல்லாஹ் தன்புறத்திலிருந்து வேதனையை விரைவாக அனுப்புவதை எதிர்பாருங்கள். பிறகு நிச்சயமாக நீங்கள் அவனை அழைத்தாலும் உங்களுக்கு பதில் அளிக்கப்படமாட்டாது’. (நூல்: திர்மிதி)
நாம் இப்புனிதப் பணியை சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை நாம் நமது வீட்டிலிருந்தே கூடஆரம்பிக்கலாம். நம்மைச் சுற்றி நல்லவை நடக்கிறதோ இல்லையோ தீமைகள் பலதும் நடக்கின்றன. அவற்றைத் தடுப்பதும் அவசியம் தானே.
நபிகளார் நவின்றார்கள்: ‘உங்களில் எவர் ஏதேனும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதை தடுக்கட்டும். அதற்கு சக்தி பெறாவிட்டால், தமது நாவால் தடுக்கட்டும். அதற்கும் சக்தி பெறாவிட்டால், தமது மனதால் வருத்தப்படட்டும்’. (நூல்: முஸ்லிம்)
தீமைகளை தடுப்பதற்கான மூன்று வழி முறைகளை நபிகளார் நமக்கு வெகு அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கும் கூட அல்லாஹ்விடத்தில் அங்கீகாரம் பெற்ற நன்மை நிச்சயம் இருக்கிறது. அவற்றை நாம் ஏன் வீணாகத் தவற விட வேண்டும்?
நமது வாழ்வில், அதிகமாய் நன்மைகளை ஏவி, தீமைகளை தடுத்திடுவோம்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் இதுபற்றி கூறியிருப்பதாவது: ‘உங்களில் இருந்து ஒரு கூட்டத்தார் (மக்களை) நன்மையின் பக்கம் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுகிறவர்களாகவும், தீயதை விட்டும் விலக்குபவர்களாகவும் இருக்கட்டும். மேலும் இவர்கள்தான் வெற்றியாளர்கள்’. (3:104)
‘இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும், இறை நம்பிக்கை கொண்ட பெண்களும், அவர்களில் சிலர், சிலருக்கு உதவியாளர்களாய் இருக்கின்றனர்; நன்மையை அவர்கள் ஏவுகின்றனர்; தீமையை தடுக்கின்றனர்; தொழுகையை நிலை நிறுத்தி, ஜகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றனர்; இத்தகையோர்- விரைவில் இவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமுள்ளவன்’. (9:71)
இந்த இருவசனங்களில் முதல் வசனம் வெற்றிக்கு என்ன வழி என்பதைச் சொல்லிக் காட்டுகிறது. மறுவசனம் ஐம்பெரும் கடமைகளுக்கு முன் ‘ஏவல் விலக்கல்’ தான் மிகமிக முக்கியம் என்பதை மிக அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. இது நபிமார்கள், நல்லோர் களின் நற்பண்பு. குறிப்பாக ஒரு நோன்பாளியிடம் இருக்க வேண்டிய பண்பு.
நபிகளார் நவின்றார்கள்: ‘என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக... நிச்சயமாக நீங்கள் நல்லதை ஏவுங்கள். நிச்சயமாக நீங்கள் தீயதை தடுங்கள். அல்லது நிச்சயமாக அல்லாஹ் தன்புறத்திலிருந்து வேதனையை விரைவாக அனுப்புவதை எதிர்பாருங்கள். பிறகு நிச்சயமாக நீங்கள் அவனை அழைத்தாலும் உங்களுக்கு பதில் அளிக்கப்படமாட்டாது’. (நூல்: திர்மிதி)
நாம் இப்புனிதப் பணியை சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை நாம் நமது வீட்டிலிருந்தே கூடஆரம்பிக்கலாம். நம்மைச் சுற்றி நல்லவை நடக்கிறதோ இல்லையோ தீமைகள் பலதும் நடக்கின்றன. அவற்றைத் தடுப்பதும் அவசியம் தானே.
நபிகளார் நவின்றார்கள்: ‘உங்களில் எவர் ஏதேனும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதை தடுக்கட்டும். அதற்கு சக்தி பெறாவிட்டால், தமது நாவால் தடுக்கட்டும். அதற்கும் சக்தி பெறாவிட்டால், தமது மனதால் வருத்தப்படட்டும்’. (நூல்: முஸ்லிம்)
தீமைகளை தடுப்பதற்கான மூன்று வழி முறைகளை நபிகளார் நமக்கு வெகு அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கும் கூட அல்லாஹ்விடத்தில் அங்கீகாரம் பெற்ற நன்மை நிச்சயம் இருக்கிறது. அவற்றை நாம் ஏன் வீணாகத் தவற விட வேண்டும்?
நமது வாழ்வில், அதிகமாய் நன்மைகளை ஏவி, தீமைகளை தடுத்திடுவோம்.
சுலைமான் (அலை) அனுப்பிய கடிதத்தை அரசவை பிரமுகர்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, அது பற்றிய ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அரசி பல்கீஸ் அறிவித்தார்.
சுலைமான் (அலை), ஸபா நாட்டின் அரசி பல்கீஸிக்கு அனுப்பிய கடிதத்தை ஹுத்ஹுத் பறவை அரசி பல்கீஸ் பார்க்கும் வகையில் சேர்ப்பித்துச் சென்றது.
அரசி பல்கீஸ் அக்கடிதத்தை வாசித்தார். அக்கடிதம் ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்கியிருப்பதைக் கண்டு ஈர்க்கப்பட்டு. அக்கடிதம் மிகக் கண்ணியத்துடன் எழுதப்பட்டிருப்பதையும் உணர்ந்தார்
உடனே தன் அரசவையைக் கூட்டி, சுலைமான் (அலை) அனுப்பிய கடிதத்தில் உள்ளவற்றை அவையிலுள்ள பிரமுகர்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, அது பற்றிய ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அவர்களின் கருத்துக்கேற்ப முடிவு செய்யப்படுமென்றும் அறிவித்தார்
அவையோரில் சிலர் “அவர் சொன்னதற்காக நமது நம்பிக்கையை, நம் வழக்கத்தின் வணக்கங்களை மாற்றிக் கொள்ள முடியாது” என்றனர்.
இன்னும் சிலர் “நாம் அவர் சொல்வதைக் கேட்காவிட்டால், நம்மீது அவர் போர் தொடுக்கக் கூடும்” என்றனர்.
அதற்கு மற்றவர்கள் “நாங்கள் பலசாலிகள், கடினமாகப் போர் செய்யக் கூடியவர்கள். அவர்களை வீழ்த்திவிடுவோம். ஆதலால், அரசியே நீங்களே முடிவு செய்யுங்கள். நல்ல சிந்தித்தெடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்” என்றனர்.
அரசி பல்கீஸ் ஆலோசனையாளர்களிடம் “அரசர்கள் ஒரு நகரத்திற்குள் படையெடுத்து நுழைவார்களானால் அதனை அழித்து விடலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் அப்பாவி மக்கள்தான். என் மக்களை அந்நிலைக்கு ஆளாக்க நான் தயாராக இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
உடனே அவையோர் “பிறகு என்ன முடிவு எடுக்கலாம், நீங்களே சொல்லுங்கள் அரசி” என்றனர்.
“நாம் நிறைய விலையுயர்ந்த பொருட்களைக் கடிதம் அனுப்பிய சுலைமான் (அலை) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பலாம். பொருட்களைப் பார்த்த பிறகு அவர் என்ன முடிவு எடுக்கிறார், அதைக் கொண்டு செல்பவர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதன் பிறகு முடிவெடுப்போம்” என்றார்.
அவையோர்களும் அதனை நல்ல யோசனையென்று வரவேற்றனர்.
அரசியின் கட்டளையின்படி பல விலையுயர்ந்தப் பொருட்கள் அவருடைய மேற்பார்வையில் தயாரானது. நம்பிக்கைக்குரியவரிடம் வாகனத்தில் அப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சுலைமான் (அலை) பொருட்களை ஏற்றுகொள்வார் என்று நம்பிக் காத்திருந்தனர்.
திருக்குர்ஆன் 27:29-35
- ஜெஸிலா பானு.
அரசி பல்கீஸ் அக்கடிதத்தை வாசித்தார். அக்கடிதம் ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்கியிருப்பதைக் கண்டு ஈர்க்கப்பட்டு. அக்கடிதம் மிகக் கண்ணியத்துடன் எழுதப்பட்டிருப்பதையும் உணர்ந்தார்
உடனே தன் அரசவையைக் கூட்டி, சுலைமான் (அலை) அனுப்பிய கடிதத்தில் உள்ளவற்றை அவையிலுள்ள பிரமுகர்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, அது பற்றிய ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அவர்களின் கருத்துக்கேற்ப முடிவு செய்யப்படுமென்றும் அறிவித்தார்
அவையோரில் சிலர் “அவர் சொன்னதற்காக நமது நம்பிக்கையை, நம் வழக்கத்தின் வணக்கங்களை மாற்றிக் கொள்ள முடியாது” என்றனர்.
இன்னும் சிலர் “நாம் அவர் சொல்வதைக் கேட்காவிட்டால், நம்மீது அவர் போர் தொடுக்கக் கூடும்” என்றனர்.
அதற்கு மற்றவர்கள் “நாங்கள் பலசாலிகள், கடினமாகப் போர் செய்யக் கூடியவர்கள். அவர்களை வீழ்த்திவிடுவோம். ஆதலால், அரசியே நீங்களே முடிவு செய்யுங்கள். நல்ல சிந்தித்தெடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்” என்றனர்.
அரசி பல்கீஸ் ஆலோசனையாளர்களிடம் “அரசர்கள் ஒரு நகரத்திற்குள் படையெடுத்து நுழைவார்களானால் அதனை அழித்து விடலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் அப்பாவி மக்கள்தான். என் மக்களை அந்நிலைக்கு ஆளாக்க நான் தயாராக இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
உடனே அவையோர் “பிறகு என்ன முடிவு எடுக்கலாம், நீங்களே சொல்லுங்கள் அரசி” என்றனர்.
“நாம் நிறைய விலையுயர்ந்த பொருட்களைக் கடிதம் அனுப்பிய சுலைமான் (அலை) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பலாம். பொருட்களைப் பார்த்த பிறகு அவர் என்ன முடிவு எடுக்கிறார், அதைக் கொண்டு செல்பவர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதன் பிறகு முடிவெடுப்போம்” என்றார்.
அவையோர்களும் அதனை நல்ல யோசனையென்று வரவேற்றனர்.
அரசியின் கட்டளையின்படி பல விலையுயர்ந்தப் பொருட்கள் அவருடைய மேற்பார்வையில் தயாரானது. நம்பிக்கைக்குரியவரிடம் வாகனத்தில் அப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சுலைமான் (அலை) பொருட்களை ஏற்றுகொள்வார் என்று நம்பிக் காத்திருந்தனர்.
திருக்குர்ஆன் 27:29-35
- ஜெஸிலா பானு.
ஓர் எறும்பு தன் சமுதாயத்தைக் காத்துக் கொள்ள மற்ற எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்ததைக் கண்டு, அதில் தமக்குப் படிப்பினை இருப்பதாக உணர்ந்த சுலைமான் (அலை) தானும் தன் மக்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்று உறுதியெடுத்தார்கள்.
ஓர் எறும்பு தன் சமுதாயத்தைக் காத்துக் கொள்ள மற்ற எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்ததைக் கண்டு, அதில் தமக்குப் படிப்பினை இருப்பதாக உணர்ந்த சுலைமான் (அலை) தானும் தன் மக்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்று உறுதியெடுத்தார்கள்.
ஜெருசேலத்தில் அல்லாஹ்வை வழிபட மிகப் பெரிய வணக்கத் தலத்தைக் கட்டினார்கள். அதுதான் இன்றும் நம்மிடையே இருக்கும் ‘பாறை குவிமாடம் (Dome of the Rock)’ என்பது. இது ஜெருசேலத்தின் பழைய நகரில் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு சுலைமான் (அலை) தமது படைபரிவாரங்களுடன் சென்று தொழுதார்கள்.
தண்ணீர் தேவையிருந்த நேரத்தில் தண்ணீர் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய ஹுத்ஹுத் பறவையைத் தேடினார்கள். “ஹுத்ஹுத் பறவையைக் காணவில்லையே எங்கே?” என்றவர்கள் அது யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்று விட்டதென்று கடுமையான கோபம் கொண்டார்கள். ஹுத்ஹுத் எங்கே சென்றது என்று தகுந்த காரணம் சொல்லியாக வேண்டுமென்று சுலைமான் (அலை) நினைத்த மாத்திரத்தில் ஹுத்ஹுத் பறவை வந்தது.
"வானத்தில் வெகு உயரத்தில் பறந்து பல பகுதிகளைப் பார்வையிட்டபோது, ஒரு சிறிய நகரத்தைக் கண்டேன்" என்றது ஹுத்ஹுத். சுலைமான் (அலை) அவர்களுக்குத் தெரியாத ஒரு நகரத்தைப் பற்றிச் சொன்னவுடன் அவர்கள் ஆர்வமாகக் கேட்டார்கள்.
“ஒரு பெண் ஆட்சி புரியும் ‘ஸபா’ நகரத்தை நான் கண்டேன். அவர்களுக்குத் தேவையான எல்லாப் பொருளும் அங்குள்ளது. மிகப் பிரம்மாண்டமான அழகிய அரியாசனமும் அந்த அரசிக்கு இருக்கிறது. அந்த அரசியின் பெயர் பல்கீஸ். அரசியும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வை வழிபடாமல் சூரியனை வணங்குவதை நான் கண்டேன்.
இதைக் கேட்ட சுலைமான் (அலை) பதற்றமடைந்தார்கள். அந்த மக்களை நேர்வழிப்படுத்த வேண்டுமென்று உடனே அரசி பல்கீஸுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் “பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம். ‘அல்லாஹ்’ அவனையன்றி வணக்கத்திற்குரிய இறைவன் வேறு இல்லை. அவன் மகத்தான அருளாளன்.. ஏக இறைவனை முற்றிலும் வழிபட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” என்று கடிதம் எழுதி அதை ஹுத்ஹுத் பறவையிடம் கொடுத்து ஸபா நகர அரசி பல்கீஸிடம் சேர்ப்பிக்கச் சொன்னார்கள்.
இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களின் ஆணையின்படி ஹுத்ஹுத் பறவையும் அரசி பல்கீஸ் பார்க்கும்படி அந்தக் கடிதத்தை அவர்கள் முன் போட்டுவிட்டு, அது சம்பந்தமாக அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது பற்றிக் கேட்பதற்காக ஓரிடத்திற்குச் சென்று மறைவாக உட்கார்ந்து கொண்டது.
திருக்குர்ஆன் 27:20-28
- ஜெஸிலா பானு.
ஜெருசேலத்தில் அல்லாஹ்வை வழிபட மிகப் பெரிய வணக்கத் தலத்தைக் கட்டினார்கள். அதுதான் இன்றும் நம்மிடையே இருக்கும் ‘பாறை குவிமாடம் (Dome of the Rock)’ என்பது. இது ஜெருசேலத்தின் பழைய நகரில் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு சுலைமான் (அலை) தமது படைபரிவாரங்களுடன் சென்று தொழுதார்கள்.
தண்ணீர் தேவையிருந்த நேரத்தில் தண்ணீர் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய ஹுத்ஹுத் பறவையைத் தேடினார்கள். “ஹுத்ஹுத் பறவையைக் காணவில்லையே எங்கே?” என்றவர்கள் அது யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்று விட்டதென்று கடுமையான கோபம் கொண்டார்கள். ஹுத்ஹுத் எங்கே சென்றது என்று தகுந்த காரணம் சொல்லியாக வேண்டுமென்று சுலைமான் (அலை) நினைத்த மாத்திரத்தில் ஹுத்ஹுத் பறவை வந்தது.
"வானத்தில் வெகு உயரத்தில் பறந்து பல பகுதிகளைப் பார்வையிட்டபோது, ஒரு சிறிய நகரத்தைக் கண்டேன்" என்றது ஹுத்ஹுத். சுலைமான் (அலை) அவர்களுக்குத் தெரியாத ஒரு நகரத்தைப் பற்றிச் சொன்னவுடன் அவர்கள் ஆர்வமாகக் கேட்டார்கள்.
“ஒரு பெண் ஆட்சி புரியும் ‘ஸபா’ நகரத்தை நான் கண்டேன். அவர்களுக்குத் தேவையான எல்லாப் பொருளும் அங்குள்ளது. மிகப் பிரம்மாண்டமான அழகிய அரியாசனமும் அந்த அரசிக்கு இருக்கிறது. அந்த அரசியின் பெயர் பல்கீஸ். அரசியும் அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வை வழிபடாமல் சூரியனை வணங்குவதை நான் கண்டேன்.
இதைக் கேட்ட சுலைமான் (அலை) பதற்றமடைந்தார்கள். அந்த மக்களை நேர்வழிப்படுத்த வேண்டுமென்று உடனே அரசி பல்கீஸுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் “பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம். ‘அல்லாஹ்’ அவனையன்றி வணக்கத்திற்குரிய இறைவன் வேறு இல்லை. அவன் மகத்தான அருளாளன்.. ஏக இறைவனை முற்றிலும் வழிபட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” என்று கடிதம் எழுதி அதை ஹுத்ஹுத் பறவையிடம் கொடுத்து ஸபா நகர அரசி பல்கீஸிடம் சேர்ப்பிக்கச் சொன்னார்கள்.
இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களின் ஆணையின்படி ஹுத்ஹுத் பறவையும் அரசி பல்கீஸ் பார்க்கும்படி அந்தக் கடிதத்தை அவர்கள் முன் போட்டுவிட்டு, அது சம்பந்தமாக அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது பற்றிக் கேட்பதற்காக ஓரிடத்திற்குச் சென்று மறைவாக உட்கார்ந்து கொண்டது.
திருக்குர்ஆன் 27:20-28
- ஜெஸிலா பானு.
அல்லாஹ் நன்றியுடையோருக்கு நற்கூலியை வழங்குபவன். அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்.
பறவைகள், மிருகங்கள், பூச்சிகள் என்று எல்லா உயிரினங்களின் மொழியறிந்திருந்த சுலைமான் (அலை), ஜின்களை வசப்படுத்தியிருந்ததால் ஜின்களும் அவர்களுக்குப் பணி செய்யக் காத்து நின்றன. எக்காலத்திலும் எவருமே அடைய முடியாத ஒரு பெரிய அரசாங்கத்தையே ஆட்சி செய்து வந்தார்கள் சுலைமான் (அலை).
இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்கு, காற்றை வசப்படுத்திக் கொடுத்திருந்ததால், அவர்களின் வாகனம் காற்றாகவே அமைந்தது. காற்று அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குக் கொண்டு சென்றது.
ஒருநாள் சுலைமான் (அலை) தனது படை பரிவாரங்களுடன் புறப்பட்டபோது, வெயிலுக்கு நிழலாக ஆயிரக்கணக்கானப் பறவைகள் தமது சிறகுகளை விரித்து நிழலாடச் செய்து, படைக்கு நிழல் தந்தன. ஓர் இடத்திற்கு வந்தபோது அங்கு எறும்புகள் தமது புற்றிற்கு உணவு சுமந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளின் தலைவி, சுலைமான் (அலை) அவர்களின் படை நெருங்குவதைக் கண்டவுடன், “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் சீக்கிரம் சென்று நுழைந்து கொள்ளுங்கள். சுலைமான் (அலை) அவர்களும் அவருடைய சேனைகளும் நம்மை நெருங்கி வருகிறார்கள். அவர்கள் தெரியாமல், நம்மைக் கவனிக்காமல் நம்மை நசுக்கிவிடக் கூடும்” என்று கூறி தம் கூட்டத்தாரை எச்சரிக்கை செய்தது
இதைக் கேட்ட சுலைமான் (அலை) புன்னகை செய்தார்கள். தமது சேனைகளைத் தாமதப்படுத்தச் சொன்னார்கள். எறும்புகள் கடக்கும் வரை காத்து நின்றார்கள். “என் இறைவா! எனக்கும், எனது பெற்றோருக்கும் நீ அளித்துள்ள அருட்கொடைகளுக்காக, நான் உனக்குச் சரியான வகையில் நன்றி செலுத்தச் செய்வாயாக. உனக்குப் பிடிக்கும் வகையில் நான் நன்மைகளைச் செய்யவும் எனக்கு அருள்வாயாக!! இறைவா! உன்னுடைய அருளைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களோடு சேர்த்தருள்வாயாக” என்று பிரார்த்தித்தார்கள்
அல்லாஹ் நன்றியுடையோருக்கு நற்கூலியை வழங்குபவன். அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
திருக்குர் ஆன் 27:18-19, 2:243
- ஜெஸிலா பானு.
இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்கு, காற்றை வசப்படுத்திக் கொடுத்திருந்ததால், அவர்களின் வாகனம் காற்றாகவே அமைந்தது. காற்று அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குக் கொண்டு சென்றது.
ஒருநாள் சுலைமான் (அலை) தனது படை பரிவாரங்களுடன் புறப்பட்டபோது, வெயிலுக்கு நிழலாக ஆயிரக்கணக்கானப் பறவைகள் தமது சிறகுகளை விரித்து நிழலாடச் செய்து, படைக்கு நிழல் தந்தன. ஓர் இடத்திற்கு வந்தபோது அங்கு எறும்புகள் தமது புற்றிற்கு உணவு சுமந்து சென்று கொண்டிருந்தன. எறும்புகளின் தலைவி, சுலைமான் (அலை) அவர்களின் படை நெருங்குவதைக் கண்டவுடன், “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் சீக்கிரம் சென்று நுழைந்து கொள்ளுங்கள். சுலைமான் (அலை) அவர்களும் அவருடைய சேனைகளும் நம்மை நெருங்கி வருகிறார்கள். அவர்கள் தெரியாமல், நம்மைக் கவனிக்காமல் நம்மை நசுக்கிவிடக் கூடும்” என்று கூறி தம் கூட்டத்தாரை எச்சரிக்கை செய்தது
இதைக் கேட்ட சுலைமான் (அலை) புன்னகை செய்தார்கள். தமது சேனைகளைத் தாமதப்படுத்தச் சொன்னார்கள். எறும்புகள் கடக்கும் வரை காத்து நின்றார்கள். “என் இறைவா! எனக்கும், எனது பெற்றோருக்கும் நீ அளித்துள்ள அருட்கொடைகளுக்காக, நான் உனக்குச் சரியான வகையில் நன்றி செலுத்தச் செய்வாயாக. உனக்குப் பிடிக்கும் வகையில் நான் நன்மைகளைச் செய்யவும் எனக்கு அருள்வாயாக!! இறைவா! உன்னுடைய அருளைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களோடு சேர்த்தருள்வாயாக” என்று பிரார்த்தித்தார்கள்
அல்லாஹ் நன்றியுடையோருக்கு நற்கூலியை வழங்குபவன். அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன். ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
திருக்குர் ஆன் 27:18-19, 2:243
- ஜெஸிலா பானு.
தாவூத் (அலை) அவர்களின் மறைவுக்கு முன்பாகவே சுலைமான் (அலை) அவர்களை, தாவூத் (அலை) அரசராக்கினார்கள்
தாவூத் (அலை) அவர்களின் மறைவுக்கு முன்பாகவே சுலைமான் (அலை) அவர்களை, தாவூத் (அலை) அரசராக்கினார்கள். இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்குக் கல்வி ஞானத்தை முழுமையாகக் கொடுத்து, மிகவும் நியாயமான நேர்மையான முறையில் நல்லாட்சி புரியவும் அருளினான். சுலைமான் (அலை) அவர்களை இறைவன் தன்னுடைய தூதராக்கினான்.
மக்களின் நலனில் அக்கறையுடையவராக இருந்த சுலைமான் (அலை), மக்களிடம் இரக்கம் காட்டுபவராக இருந்ததால் இறைவனும் அவர்கள் மீது இரக்கம் காட்டினான்.
சுலைமான் (அலை), “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான், மூமின்களான தன் நல்லடியார்களில் நம்மை மேன்மையாக்கினான்” என்று இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார்கள். சுலைமான் (அலை) அவர்களின் காலத்தில் குதிரைகள்தான் பயணத்தில் நடைமுறையாக இருந்தன. ஒருநாள் பயிற்சியளிக்கப்பட்ட வசீகரமான குதிரையை, சுலைமான் (அலை) அவர்கள் அதன் அழகை வர்ணித்தபடி தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். மாலை நேரத் தொழுகையையே அது மறக்கடித்துவிட்டது.
“சூரியன் திரைக்குள் மறைந்து விடும்வரை அதை அறியாமல், இறைவனை நினைப்பதை மறந்து இதன் மேல் அதிக அன்பு பாராட்டிவிட்டேன்” என்று தமது நிலையை உணர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். “என் இறைவா, என்னை மன்னித்தருள்வாயாக. எக்காலத்திலும் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நீயே மிகப் பெருங்கொடையாளி” என்று கேட்டார்கள்
மேலும் தனக்குப் பறவைகளின் மொழியைக் கற்றுக் கொடுக்கும்படியும், ஜின்களை வசப்படுத்தும் வித்தையையும், கடுமையாக வீசும் காற்றைக் கட்டுப்படுத்தம் ஆற்றலையும், இன்னும் தான் விரும்பியவற்றை இறைவன் நிறைவேற்றித் தருமாறு பிரார்த்தித்தார்கள்.
இறைவனும் சுலைமான் (அலை) அவர்களுக்கு, தம் அருள் கொடையை விசாலமாக்கினான்.
அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
திருக்குர் ஆன் 27:15:19. 21:79-81, 38:30-40
- ஜெஸிலா பானு.
மக்களின் நலனில் அக்கறையுடையவராக இருந்த சுலைமான் (அலை), மக்களிடம் இரக்கம் காட்டுபவராக இருந்ததால் இறைவனும் அவர்கள் மீது இரக்கம் காட்டினான்.
சுலைமான் (அலை), “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான், மூமின்களான தன் நல்லடியார்களில் நம்மை மேன்மையாக்கினான்” என்று இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார்கள். சுலைமான் (அலை) அவர்களின் காலத்தில் குதிரைகள்தான் பயணத்தில் நடைமுறையாக இருந்தன. ஒருநாள் பயிற்சியளிக்கப்பட்ட வசீகரமான குதிரையை, சுலைமான் (அலை) அவர்கள் அதன் அழகை வர்ணித்தபடி தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். மாலை நேரத் தொழுகையையே அது மறக்கடித்துவிட்டது.
“சூரியன் திரைக்குள் மறைந்து விடும்வரை அதை அறியாமல், இறைவனை நினைப்பதை மறந்து இதன் மேல் அதிக அன்பு பாராட்டிவிட்டேன்” என்று தமது நிலையை உணர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். “என் இறைவா, என்னை மன்னித்தருள்வாயாக. எக்காலத்திலும் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நீயே மிகப் பெருங்கொடையாளி” என்று கேட்டார்கள்
மேலும் தனக்குப் பறவைகளின் மொழியைக் கற்றுக் கொடுக்கும்படியும், ஜின்களை வசப்படுத்தும் வித்தையையும், கடுமையாக வீசும் காற்றைக் கட்டுப்படுத்தம் ஆற்றலையும், இன்னும் தான் விரும்பியவற்றை இறைவன் நிறைவேற்றித் தருமாறு பிரார்த்தித்தார்கள்.
இறைவனும் சுலைமான் (அலை) அவர்களுக்கு, தம் அருள் கொடையை விசாலமாக்கினான்.
அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
திருக்குர் ஆன் 27:15:19. 21:79-81, 38:30-40
- ஜெஸிலா பானு.
திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனத்தின் மூலமும் அல்லாஹ் நம்மை சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்
திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனத்தின் மூலமும் அல்லாஹ் நம்மை சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான், ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த இறைத்தூதர்களைப் பற்றியான விளக்கங்களும் சம்பவங்களையும் நாம் அந்தக் காலத்தில் உள்ளவர்களுக்கும் சரி, அதற்குப் பின் வந்தவர்களுக்கும், இனி வரக்கூடியவர்களுக்கும் கிடைத்த படிப்பினையாகவும், பயபக்தியுடையவர்களுக்கு நல் உபதேசமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனைத் திருக்குர்ஆனிலும் வலியுறுத்தியுள்ளான் இறைவன்.
தாவூத் (அலை) அவர்கள் ஆட்சியாளராக இருந்தபோது, இரு பெண்கள் அவர்களிடம் ஒரு வழக்கிற்கான தீர்வு காண வந்திருந்தனர். அவ்விருவரில் ஒருவரின் மகனை ஓநாய் கொண்டு சென்றுவிட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம் “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது” என்று கூற, மற்றொருத்தியோ “இல்லை, உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது” என்று வாதிட்டார்.
தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள, தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரின் வாதத்தையும் விசாரித்தார்கள் தாவூத் (அலை). அவ்விரு பெண்களில் மூத்தவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். இருப்பினும் அவர்களின் வாக்குவாதம் தீர்ந்தபாடில்லை. தீர்ப்பின் மீது கருத்து வேறுபட்ட அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களின் தீர்ப்பு வழங்கும் முறையை அறிந்து அவர்களிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர்.
சுலைமான் (அலை) அவர்களிடம் இருவரும் வழக்கு பற்றிய விவரத்தைக் கூறினர். சிறிது யோசனைக்குப் பிறகு சுலைமான் (அலை) “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப் பிளந்து பங்கிட்டுவிடுகிறேன்” என்று கூறினார்கள். உடனே பதறிய இளையவள், “அவ்வாறு செய்துவிடாதீர்கள், அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். இவன் என் மகன். ஆனால் அவன் உயிரோடு அவளிடமே இருந்துவிட்டுப் போகட்டும்” என்று அழுகையோடு கூறினார்.
இதிலிருந்து மிகச் சாமர்த்தியமாக உண்மையான தாயின் கண்ணீரைப் புரிந்து கொண்ட சுலைமான் (அலை) “அந்தக் குழந்தை இளையவளுக்கே உரியது” என்று தீர்ப்பளித்தார்கள். குழந்தை மீதான பாசத்தால் மற்றவள் தாம் செய்த தவறை உணர்ந்தவளாகத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அமைதியாகவும் இருவரும் ஒற்றுமையாகவும் திரும்பிச் சென்றார்கள்.
ஸஹிஹ் புகாரி 4:60:3427, 7:86:6769, திருக்குர்ஆன் 2:66, 2:221
- ஜெஸிலா பானு.
தாவூத் (அலை) அவர்கள் ஆட்சியாளராக இருந்தபோது, இரு பெண்கள் அவர்களிடம் ஒரு வழக்கிற்கான தீர்வு காண வந்திருந்தனர். அவ்விருவரில் ஒருவரின் மகனை ஓநாய் கொண்டு சென்றுவிட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம் “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது” என்று கூற, மற்றொருத்தியோ “இல்லை, உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது” என்று வாதிட்டார்.
தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள, தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரின் வாதத்தையும் விசாரித்தார்கள் தாவூத் (அலை). அவ்விரு பெண்களில் மூத்தவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். இருப்பினும் அவர்களின் வாக்குவாதம் தீர்ந்தபாடில்லை. தீர்ப்பின் மீது கருத்து வேறுபட்ட அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களின் தீர்ப்பு வழங்கும் முறையை அறிந்து அவர்களிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர்.
சுலைமான் (அலை) அவர்களிடம் இருவரும் வழக்கு பற்றிய விவரத்தைக் கூறினர். சிறிது யோசனைக்குப் பிறகு சுலைமான் (அலை) “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப் பிளந்து பங்கிட்டுவிடுகிறேன்” என்று கூறினார்கள். உடனே பதறிய இளையவள், “அவ்வாறு செய்துவிடாதீர்கள், அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். இவன் என் மகன். ஆனால் அவன் உயிரோடு அவளிடமே இருந்துவிட்டுப் போகட்டும்” என்று அழுகையோடு கூறினார்.
இதிலிருந்து மிகச் சாமர்த்தியமாக உண்மையான தாயின் கண்ணீரைப் புரிந்து கொண்ட சுலைமான் (அலை) “அந்தக் குழந்தை இளையவளுக்கே உரியது” என்று தீர்ப்பளித்தார்கள். குழந்தை மீதான பாசத்தால் மற்றவள் தாம் செய்த தவறை உணர்ந்தவளாகத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அமைதியாகவும் இருவரும் ஒற்றுமையாகவும் திரும்பிச் சென்றார்கள்.
ஸஹிஹ் புகாரி 4:60:3427, 7:86:6769, திருக்குர்ஆன் 2:66, 2:221
- ஜெஸிலா பானு.






