என் மலர்
ஆன்மிகம்

பல்கீஸ் அரசியின் ஆர்வமும் விசாரணையும்
அரசி பல்கீஸ் சுலைமான் (அலை)யை சந்தித்து விட்டு திரும்பி வந்த தமது பிரமுகர்களிடம் விசாரணை செய்த நிகழ்ச்சியை பார்க்கலாம்.
பல்கீஸ் அரசியின் பிரமுகர்கள் சுலைமான் (அலை) அவர்கள் மறுத்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஸபாவிற்குத் திரும்பிச் சென்றார்கள். ஸபாவின் அரசி பல்கீஸ் தனது அரண்மனையில் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார். திரும்பி வந்த தமது பிரமுகர்களைக் கண்டு “என்ன நடந்தது?” என்று விசாரித்தார். அவர்கள் அங்கு பார்த்ததையும் கேட்டதையும் விவரிக்கும்படி கேட்டார் அரசி.
சுலைமான் (அலை) அவர்களிடம் சென்று வந்த பிரமுகர்கள், “மன்னிக்கவும். சுலைமான் (அலை) உங்களுடைய பரிசுப் பொருட்களை நிராகரித்துவிட்டார்கள். உண்மையில் அவர்களிடம் எல்லாவித செல்வங்களும் உள்ளது. அவருடைய மக்கள் மட்டுமல்ல அவரது பலம். பறவைகளும் மிருகங்களும் கூட அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளன. எல்லா உயிரினங்களும் அவருடைய கட்டளைக்கு உட்படுகிறது. நாங்கள் எங்குமே இப்படியான ஆட்சியாளரைப் பற்றிக் கேட்டதும் பார்த்ததுமில்லை” என்று சுலைமான் (அலை) அவர்களைப் பற்றிக் கூறிக் கொண்டே சென்றதை மறித்து அரசி, “சரி, அவர் என்னதான் சொன்னார்? அதைச் சொல்லுங்கள்” என்றார்.
வார்த்தை மாறாமல் சுலைமான் (அலை) அவர்கள் சொன்னதை அப்படியே விவரித்தார்கள் பிரமுகர்கள். “ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கோருகிறார். நாம் இந்நாள் வரை நம்பிக்கொண்டிருந்த தெய்வங்களைக் கைவிடச் சொல்கிறார்” என்ற விபரத்தையும் சொன்னார்கள்.
விபரங்களைக் கேட்டறிந்த அரசி பல்கீஸ், பிரமுகர்களிடம் “இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சுலைமான் (அலை) அவர்களின் ஆட்சி மிகவும் சக்தி வாய்ந்ததென்று புரிந்து கொள்கிறேன். உங்களுடைய ஆலோசனை என்ன?” என்று கேட்டார்.
“நீங்கள் சொல்வது சரிதான் அரசி. அவர்களை எதிர்க்கும் பலம் நமக்கில்லை என்றே தோன்றுகிறது” என்று பிரமுகர்களும் ஆமோதித்த பிறகு, மிகுந்த யோசனைக்குப் பின், தான் உடனே அரசர் சுலைமானைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி ஆணையிட்டவர், தம் வருகையைக் குறித்துச் சுலைமான் (அலை) அவர்களுக்குச் செய்தியை அனுப்பி வைத்தார்.
வைரத்தாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட தமது விலையுயர்ந்த அரியணையை ஓர் அறையிலிட்டுப் பூட்டி காவலாளிகளைப் பாதுகாப்பிற்கு வைத்துவிட்டு தமது சேனைகளுடன் புறப்பட்டார் அரசி பல்கீஸ். பல நாள் பிரயாணத்திற்குப் பிறகு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
திருக்குர்ஆன் 27:35-37
- ஜெஸிலா பானு.
சுலைமான் (அலை) அவர்களிடம் சென்று வந்த பிரமுகர்கள், “மன்னிக்கவும். சுலைமான் (அலை) உங்களுடைய பரிசுப் பொருட்களை நிராகரித்துவிட்டார்கள். உண்மையில் அவர்களிடம் எல்லாவித செல்வங்களும் உள்ளது. அவருடைய மக்கள் மட்டுமல்ல அவரது பலம். பறவைகளும் மிருகங்களும் கூட அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளன. எல்லா உயிரினங்களும் அவருடைய கட்டளைக்கு உட்படுகிறது. நாங்கள் எங்குமே இப்படியான ஆட்சியாளரைப் பற்றிக் கேட்டதும் பார்த்ததுமில்லை” என்று சுலைமான் (அலை) அவர்களைப் பற்றிக் கூறிக் கொண்டே சென்றதை மறித்து அரசி, “சரி, அவர் என்னதான் சொன்னார்? அதைச் சொல்லுங்கள்” என்றார்.
வார்த்தை மாறாமல் சுலைமான் (அலை) அவர்கள் சொன்னதை அப்படியே விவரித்தார்கள் பிரமுகர்கள். “ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கோருகிறார். நாம் இந்நாள் வரை நம்பிக்கொண்டிருந்த தெய்வங்களைக் கைவிடச் சொல்கிறார்” என்ற விபரத்தையும் சொன்னார்கள்.
விபரங்களைக் கேட்டறிந்த அரசி பல்கீஸ், பிரமுகர்களிடம் “இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சுலைமான் (அலை) அவர்களின் ஆட்சி மிகவும் சக்தி வாய்ந்ததென்று புரிந்து கொள்கிறேன். உங்களுடைய ஆலோசனை என்ன?” என்று கேட்டார்.
“நீங்கள் சொல்வது சரிதான் அரசி. அவர்களை எதிர்க்கும் பலம் நமக்கில்லை என்றே தோன்றுகிறது” என்று பிரமுகர்களும் ஆமோதித்த பிறகு, மிகுந்த யோசனைக்குப் பின், தான் உடனே அரசர் சுலைமானைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி ஆணையிட்டவர், தம் வருகையைக் குறித்துச் சுலைமான் (அலை) அவர்களுக்குச் செய்தியை அனுப்பி வைத்தார்.
வைரத்தாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட தமது விலையுயர்ந்த அரியணையை ஓர் அறையிலிட்டுப் பூட்டி காவலாளிகளைப் பாதுகாப்பிற்கு வைத்துவிட்டு தமது சேனைகளுடன் புறப்பட்டார் அரசி பல்கீஸ். பல நாள் பிரயாணத்திற்குப் பிறகு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
திருக்குர்ஆன் 27:35-37
- ஜெஸிலா பானு.
Next Story






