என் மலர்
இஸ்லாம்
உஹுத் போரில் ஏற்பட்ட துக்க கரமான நிகழ்வால் முஸ்லிம்களைப் பற்றிப் பிறர் உள்ளத்தில் இருந்த அச்சம் அகன்று விட்டது. உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகள் முஸ்லிம்களுக்கு அதிகரித்தன.
“பகைக் கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் போரில் துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத நற்கூலியும் வெற்றியும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்ற இறைவசனத்திற்கேற்ப உஹுத் போரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வேதனையைப் போலவே எதிரிகளின் நிலைமையும் இருந்தது.
வெற்றியின்றியே இரு சாராரும் தங்களது நகரங்களுக்குத் திரும்பினர். அம்பெறியும் வீரர்கள் அவ்விடத்திலிருந்து விலகக் கூடாது என்று நபி(ஸல்) கூறியதற்கு மாறு செய்ததால் ஏற்பட்ட விளைவுகளே, முஸ்லிம்களின் இக்கட்டான நிலைமைக்கும், பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்குமான காரணம். பாவச் செயலினால் உண்டாகும் நஷ்டங்கள், அதுவும் படைக்கப்பட்ட சமுதாயங்களில் இதுவே மிகச் சிறந்த சமுதாயம் என்பதால் மற்ற சமுதாயத்தை விட இந்தச் சமுதாயத்திடம் இருக்க வேண்டிய உயர்ந்த பண்புகள் தகர்ந்து, சில முஸ்லிம்களிடம் இருந்த பலவீனங்களால் சில நஷ்டங்களை முஸ்லிம்களுக்கு இறைவன் ஏற்படுத்தினான்.

இறைத்தூதர்கள் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதியில் வெற்றி அவர்களுக்குத்தான் கிடைக்கும் என்பதற்கு உஹுத் போர் பெரும் சான்றாக அமைந்தது. அல்லாஹ் உதவியைத் தாமதப்படுத்தி வழங்குவதால் முஸ்லிம்களின் உள்ளத்தின் பெருமை அகற்றப்பட்டு அதில் பணிவு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவேதான் சோதனையின்போது முஸ்லிம்கள் சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தனர். நயவஞ்சகர்களோ பயந்து, அஞ்சி, நடுநடுங்கி நிலைகுலைந்து விட்டனர்.
இருப்பினும் உஹுத் போரில் ஏற்பட்ட துக்க கரமான நிகழ்வால் முஸ்லிம்களைப் பற்றிப் பிறர் உள்ளத்தில் இருந்த அச்சம் அகன்று விட்டது. உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகள் முஸ்லிம்களுக்கு அதிகரித்தன. அனைத்து திசைகளிலிருந்தும் ஆபத்துகள் மதீனாவைச் சூழ்ந்தன. ஆனால் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஞானமிக்க நுட்பமான நடவடிக்கைகள் இந்நிலையை மாற்றியது.
“குஃப்ரில் (மூட நம்பிக்கை சார்ந்த குழப்பங்களில் வீழ்தல்) அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு” என்ற இறை வசனம் அருளப்பட்டது.
திருக்குர்அன் 4:104, 3:176, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
வெற்றியின்றியே இரு சாராரும் தங்களது நகரங்களுக்குத் திரும்பினர். அம்பெறியும் வீரர்கள் அவ்விடத்திலிருந்து விலகக் கூடாது என்று நபி(ஸல்) கூறியதற்கு மாறு செய்ததால் ஏற்பட்ட விளைவுகளே, முஸ்லிம்களின் இக்கட்டான நிலைமைக்கும், பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்குமான காரணம். பாவச் செயலினால் உண்டாகும் நஷ்டங்கள், அதுவும் படைக்கப்பட்ட சமுதாயங்களில் இதுவே மிகச் சிறந்த சமுதாயம் என்பதால் மற்ற சமுதாயத்தை விட இந்தச் சமுதாயத்திடம் இருக்க வேண்டிய உயர்ந்த பண்புகள் தகர்ந்து, சில முஸ்லிம்களிடம் இருந்த பலவீனங்களால் சில நஷ்டங்களை முஸ்லிம்களுக்கு இறைவன் ஏற்படுத்தினான்.

இறைத்தூதர்கள் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதியில் வெற்றி அவர்களுக்குத்தான் கிடைக்கும் என்பதற்கு உஹுத் போர் பெரும் சான்றாக அமைந்தது. அல்லாஹ் உதவியைத் தாமதப்படுத்தி வழங்குவதால் முஸ்லிம்களின் உள்ளத்தின் பெருமை அகற்றப்பட்டு அதில் பணிவு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவேதான் சோதனையின்போது முஸ்லிம்கள் சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தனர். நயவஞ்சகர்களோ பயந்து, அஞ்சி, நடுநடுங்கி நிலைகுலைந்து விட்டனர்.
இருப்பினும் உஹுத் போரில் ஏற்பட்ட துக்க கரமான நிகழ்வால் முஸ்லிம்களைப் பற்றிப் பிறர் உள்ளத்தில் இருந்த அச்சம் அகன்று விட்டது. உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகள் முஸ்லிம்களுக்கு அதிகரித்தன. அனைத்து திசைகளிலிருந்தும் ஆபத்துகள் மதீனாவைச் சூழ்ந்தன. ஆனால் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஞானமிக்க நுட்பமான நடவடிக்கைகள் இந்நிலையை மாற்றியது.
“குஃப்ரில் (மூட நம்பிக்கை சார்ந்த குழப்பங்களில் வீழ்தல்) அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு” என்ற இறை வசனம் அருளப்பட்டது.
திருக்குர்அன் 4:104, 3:176, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
ரமலான் மாதம் பசி, பட்டினி, தாகம், தவிப்பு என்ற நிலையில் ஒருவனைப் பக்குவப்படுத்தி, அதன்பின் ஒவ்வொரு நற்செயல்களையும் விதைத்து, இறையச்சம் கொண்ட முழுமையான மனிதனாக உருவாக்குகிறது.
எந்த ஒரு பயிற்சியை மேற்கொள்வதற்கும், உடல் சார்ந்த, அறிவு சார்ந்த ஒரு தகுதியை நாம் நிர்ணயம் செய்திருக்கிறோம். ஆன்மிகம் சார்ந்த நல்லருளை பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் புனித ரமலான் மாதத்தை நமக்கு அருளி இருக்கின்றான். புனித ரமலான் நாட்களில் நாம் மேற்கொள்ளும் பயிற்சிகள், பின்நாளில் நமது செயல் களில் பிரதிபலிப்பதை நாம் உணர முடியும்.
பாவங்களாலும், கெட்ட செயல்களாலும் கடினப்பட்டுபோன மனங்களையும், உடற்கூறுகளையும் மென்மைப்படுத்த மனிதனை முதலில் பக்குவப்படுத்த வேண்டும். உடலில் திமிர், மனதில் ஆணவம் இவை இரண்டும் இருக்கின்ற வரையில் மனிதன் நியாயத்தின் பக்கம் திரும்பமாட்டான். எனவே முதலில் அதை மாற்றவேண்டும்.
அவனுக்கு பசியாலும், தாகத்தாலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டால் பலவீனமான உடலும், மனமும் பாவச்செயலை எண்ணிப் பார்க்கவே அச்சம் கொள்ளும். ஏழைகள் அனுபவிக்கும் பசியின் கொடுமையும், தாகத்தின் தவிப்பையும் அவன் உணர்ந்து கொள்வான். இதன்மூலம் அவன் இறைவனை நோக்கி பயணிக்கத்தொடங்குவான்.
ஈமானின் மறுபெயரே இறையச்சம். மனிதனிடம் இறையச்சம் தஞ்சம் கொள்ளும் போது நன்றியுணர்ச்சியும் அவனிடம் சேர்ந்து கொள்ளும். அந்த நன்றியை வெளிப்படுத்த அல்லாஹ்வை வணங்குவதற்கு அவன் முயற்சிகள் மேற்கொள்வான்.
அதனால் தான் ரமலான் மாதத்தில் ஐந்துவேளைத் தொழுகைகளோடு உபரி தொழுகைகளாக பலவற்றை தொழக்கூடிய வாய்ப்பினை இறைவன் நமக்கு அருளியுள்ளான். குறிப்பாக இரவு நேரத்தொழுகை ‘தராவீஹ்’, நடுநிசித் தொழுகை ‘தஹஜ்ஜத்’, ‘கியாமுல் லைல்’, பகல் பொழுதில் ‘இஸ்ராக்’, ‘லுஹா’, அந்தி சாய்ந்த வேளையில் ‘அவ்லாபீன்’ போன்ற தொழுகைகள் உள்ளன.
கிட்டதட்ட முப்பது நாட்கள் முனைப்போடு செயல்படுத்தப்படும் இந்த தொழுகைகளின் நன்மைகள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவிப் பதியும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் ரமலான் தவிர்த்த மற்றைய நாட்களிலும் அந்த தொழுகைகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பினை அந்த பயிற்சிகள் நமக்கு கற்றுத்தருகின்றன.
செல்வங்கள் தேங்கிக்கிடந்தாலோ, பாதாள அறைகளில் பதுங்கி கிடந்தாலோ, பன்னாட்டு வங்கிகளில் வலம்வந்து கொண்டிருந்தாலோ அது படைக்கப்பட்ட நோக்கத்தை அடைந்து விட்டதாக அர்த்தமல்ல. அது பலரிடம் சுழற்சி முறையில் சுழன்று கொண்டிருக்க வேண்டும்.
ஏழை ஏழையாகவோ, வசதி படைத்தவன் வசதியோடு வாழ்வதோ ஒரு சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தாது. மாறாக முன்னேற்றம் காணாத தேக்க நிலையையே அது உருவாக்கும்.
இதை மாற்றவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் அந்த ஆண்டில் சம்பாதித்ததில் 2½ சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும். பொது நிதியில் அந்த பணம் சேர்க்கப்பட்டு அது தேவைப்படுபவர்களுக்கு பயன்படுத்தப்படவேண்டும்.
இதன் மூலம் சமூக கட்டமைப்பில் பொருளாதார மேம்பாடு கொஞ்சம் கொஞ்சமாக உருவாகும். எனவே தான் ஜகாத் கொடுப்பது ரமலான் மாதத்தில் வலியுறுத்தப்படுகின்றது. ஒவ்வொருவரும் தகுதிபெற்றுவிட்டால் கட்டாய கடமையாக இதனை நிறைவேற்ற வேண்டும். இதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சமன் செய்யப்படலாம்.
ஒட்டி வாழ வேண்டிய உறவை மனிதன் வெட்டி வாழ்வதால் தான் குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஆனால் அல்லாஹ்வின் கட்டளை அதற்கு மாற்றமானது. இது குறித்து அருள்மறை திருக்குர்ஆன் கூறுகிறது:
‘‘இன்னும் நல்லடியார்கள் எத்தகையோர் என்றால் எதை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அந்த உறவுகளைச் சேர்த்து வைப்பார்கள். இன்னும் தன்னுடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பார்கள்’’. (13:21)
எத்தனை நன்மைகள் செய்தபோதிலும் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் நல்லடியார்கள் அந்தஸ்தைப் பெறமுடியாது என்பது தான் இதன் கருத்து.
‘‘உறவுகள் பாழ்படும் நிலையில் உலக அழிவை எதிர்பாருங்கள்’’ என்று கண்மணி நாயகம் கடுமையாய் எச்சரித்திருக்கிறார்கள்.
‘‘உறவுகளை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்’’ என்று நபிகள் நவின்றதாக ஜுபைர் இப்னு முத்கீம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முறிந்த உறவுகள் கூட ஒட்டி உறவாட முழு முயற்சியாய் முனைவது இந்த ரமலானில் தான். உறவுகளிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதையும் இந்த ரமலான் மாதத்தில் நாம் கண்கூடாய் காணமுடியும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் அது ஏற்படுத்தி தருகிறது.
அதிகாலை நோன்பு நோற்பதற்காக சஹர் உணவு, நோன்பு திறப்பதற்கு பரிமாறப்படும் இப்தார் பண்டங்கள் என்று உறவுகள் ஒன்றோடொன்று அன்போடு பரிமாறிக் கொள்வதை யார் ஒருவரும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாததால் இது உறவு பாலங்கள் உடையாமல் பாதுகாக்க வழிவகுக்கிறது.
பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகளில் உழன்று கொண்டிருக்கும் உறவுகளிடம் ஜகாத் பொருட்கள் வழங்கப்படும் போது இதயங்கள் இணைகின்றன. மற்ற மாதங்களைவிட ரமலான் மாதத்தில் அதிகமாக பள்ளிவாசல்களில் சந்தித்துக் கொள்ளும் உறவுகள் ஆரத்தழுவி அரவணைக்கும் போது உள்ளங்கள் விரிவடைந்து விடும். ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும் மனமாச்சரியங்களும் மாயமாய் மறைந்துவிடும். ரமலான் மாதத்தில் மட்டுமே இதன் சாத்தியக்கூறுகள் அதிகமுண்டு.
பலரின் அகவாழ்வு பறிபோவதற்கு ஒரு சிலரின் சுயநலபோக்கு காரணமாகி அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எல்லாமே பொதுவாகிவிடும் போது இல்லாமை இல்லாத நிலை ஏற்படும். அத்தகைய உன்னத சூழ்நிலையை இந்த ரமலான் நமக்கு கற்றுத்தருகிறது.
உளத்தூய்மையோடு நோன்பிருந்து, உலக ஆசாபாசங்களைத் துறந்து, உறக்கம் தவிர்த்து, தனக்காகவும், குடும்பத்திற்காகவும், ஊருக்காகவும், பிறந்த நாட்டிற்காகவும், உலகளாவிய நன்மைக்காகவும் வேண்டி இறைஇல்லங்களில் தங்கியிருந்து இரவெல்லாம் தனித்திருந்து, இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆ செய்யக்கூடிய உன்னத அமல் நற்செயல் ‘இஃதிகாப்’ எனப்படும். இதனை ரமலான் மாதம் கடைசி பத்து இரவுகளில் மட்டுமே கடமையாக நிறைவேற்ற முடியும். மற்றைய நாட்களில் தங்கள் சொந்த தேவைகளுக்காகவும் நிறைவேற்றலாம்.
இப்படிப்பட்ட உன்னதமான வழிபாடு உலகம் முழுவதும் அமைதியை, நிம்மதியை பெற்றுத் தருமானால் அதற்கான வழியை இந்த ரமலான் தானே வகுத்து தருகிறது.
ஆய்வுகள் பல சொல்வதெல்லாம், உலகில் பாவங்கள் தோன்ற இச்சைகள் தான் அடிப்படையாய் அமைந்திருக்கின்றன. அந்த இச்சைகளை இறைவனுக்காக துறந்து, எண்ணங்களின் கறைகளை நீக்கி, மனதின் மாசுக்களைப் போக்கி, சிந்தனையை சீர்படுத்தி, எலும்பற்ற உறுப்புகளைப் பாதுகாத்து, உடம்பை வருத்தி, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, அகத்திலும், புறத்திலும் அல்லாஹ்வின் நினைவோடு வாழ்வதற்கு பயிற்சிக்களமாக அமைவது தான் இந்த ரமலான் மாதம்.
ரமலான் மாதம் பசி, பட்டினி, தாகம், தவிப்பு என்ற நிலையில் ஒருவனைப் பக்குவப்படுத்தி, அதன்பின் ஒவ்வொரு நற்செயல்களையும் விதைத்து, இறையச்சம் கொண்ட முழுமையான மனிதனாக உருவாக்குகிறது. இந்த முப்பது நாட்களில் செய்தவற்றை சுயபரிசோதனை செய்து மீதமுள்ள காலங்களில் கட்டுப்பாடாய் வாழ வழி அமைத்து தருவதும் இந்த ரமலான் நோன்பு தான். இதுதான் உண்ணா நோன்பின் உண்மையான நோக்கம்.
எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
பாவங்களாலும், கெட்ட செயல்களாலும் கடினப்பட்டுபோன மனங்களையும், உடற்கூறுகளையும் மென்மைப்படுத்த மனிதனை முதலில் பக்குவப்படுத்த வேண்டும். உடலில் திமிர், மனதில் ஆணவம் இவை இரண்டும் இருக்கின்ற வரையில் மனிதன் நியாயத்தின் பக்கம் திரும்பமாட்டான். எனவே முதலில் அதை மாற்றவேண்டும்.
அவனுக்கு பசியாலும், தாகத்தாலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டால் பலவீனமான உடலும், மனமும் பாவச்செயலை எண்ணிப் பார்க்கவே அச்சம் கொள்ளும். ஏழைகள் அனுபவிக்கும் பசியின் கொடுமையும், தாகத்தின் தவிப்பையும் அவன் உணர்ந்து கொள்வான். இதன்மூலம் அவன் இறைவனை நோக்கி பயணிக்கத்தொடங்குவான்.
ஈமானின் மறுபெயரே இறையச்சம். மனிதனிடம் இறையச்சம் தஞ்சம் கொள்ளும் போது நன்றியுணர்ச்சியும் அவனிடம் சேர்ந்து கொள்ளும். அந்த நன்றியை வெளிப்படுத்த அல்லாஹ்வை வணங்குவதற்கு அவன் முயற்சிகள் மேற்கொள்வான்.
அதனால் தான் ரமலான் மாதத்தில் ஐந்துவேளைத் தொழுகைகளோடு உபரி தொழுகைகளாக பலவற்றை தொழக்கூடிய வாய்ப்பினை இறைவன் நமக்கு அருளியுள்ளான். குறிப்பாக இரவு நேரத்தொழுகை ‘தராவீஹ்’, நடுநிசித் தொழுகை ‘தஹஜ்ஜத்’, ‘கியாமுல் லைல்’, பகல் பொழுதில் ‘இஸ்ராக்’, ‘லுஹா’, அந்தி சாய்ந்த வேளையில் ‘அவ்லாபீன்’ போன்ற தொழுகைகள் உள்ளன.
கிட்டதட்ட முப்பது நாட்கள் முனைப்போடு செயல்படுத்தப்படும் இந்த தொழுகைகளின் நன்மைகள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவிப் பதியும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் ரமலான் தவிர்த்த மற்றைய நாட்களிலும் அந்த தொழுகைகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பினை அந்த பயிற்சிகள் நமக்கு கற்றுத்தருகின்றன.
செல்வங்கள் தேங்கிக்கிடந்தாலோ, பாதாள அறைகளில் பதுங்கி கிடந்தாலோ, பன்னாட்டு வங்கிகளில் வலம்வந்து கொண்டிருந்தாலோ அது படைக்கப்பட்ட நோக்கத்தை அடைந்து விட்டதாக அர்த்தமல்ல. அது பலரிடம் சுழற்சி முறையில் சுழன்று கொண்டிருக்க வேண்டும்.
ஏழை ஏழையாகவோ, வசதி படைத்தவன் வசதியோடு வாழ்வதோ ஒரு சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தாது. மாறாக முன்னேற்றம் காணாத தேக்க நிலையையே அது உருவாக்கும்.
இதை மாற்றவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் அந்த ஆண்டில் சம்பாதித்ததில் 2½ சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும். பொது நிதியில் அந்த பணம் சேர்க்கப்பட்டு அது தேவைப்படுபவர்களுக்கு பயன்படுத்தப்படவேண்டும்.
இதன் மூலம் சமூக கட்டமைப்பில் பொருளாதார மேம்பாடு கொஞ்சம் கொஞ்சமாக உருவாகும். எனவே தான் ஜகாத் கொடுப்பது ரமலான் மாதத்தில் வலியுறுத்தப்படுகின்றது. ஒவ்வொருவரும் தகுதிபெற்றுவிட்டால் கட்டாய கடமையாக இதனை நிறைவேற்ற வேண்டும். இதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சமன் செய்யப்படலாம்.
ஒட்டி வாழ வேண்டிய உறவை மனிதன் வெட்டி வாழ்வதால் தான் குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஆனால் அல்லாஹ்வின் கட்டளை அதற்கு மாற்றமானது. இது குறித்து அருள்மறை திருக்குர்ஆன் கூறுகிறது:
‘‘இன்னும் நல்லடியார்கள் எத்தகையோர் என்றால் எதை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அந்த உறவுகளைச் சேர்த்து வைப்பார்கள். இன்னும் தன்னுடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பார்கள்’’. (13:21)
எத்தனை நன்மைகள் செய்தபோதிலும் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் நல்லடியார்கள் அந்தஸ்தைப் பெறமுடியாது என்பது தான் இதன் கருத்து.
‘‘உறவுகள் பாழ்படும் நிலையில் உலக அழிவை எதிர்பாருங்கள்’’ என்று கண்மணி நாயகம் கடுமையாய் எச்சரித்திருக்கிறார்கள்.
‘‘உறவுகளை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்’’ என்று நபிகள் நவின்றதாக ஜுபைர் இப்னு முத்கீம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முறிந்த உறவுகள் கூட ஒட்டி உறவாட முழு முயற்சியாய் முனைவது இந்த ரமலானில் தான். உறவுகளிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதையும் இந்த ரமலான் மாதத்தில் நாம் கண்கூடாய் காணமுடியும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் அது ஏற்படுத்தி தருகிறது.
அதிகாலை நோன்பு நோற்பதற்காக சஹர் உணவு, நோன்பு திறப்பதற்கு பரிமாறப்படும் இப்தார் பண்டங்கள் என்று உறவுகள் ஒன்றோடொன்று அன்போடு பரிமாறிக் கொள்வதை யார் ஒருவரும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாததால் இது உறவு பாலங்கள் உடையாமல் பாதுகாக்க வழிவகுக்கிறது.
பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகளில் உழன்று கொண்டிருக்கும் உறவுகளிடம் ஜகாத் பொருட்கள் வழங்கப்படும் போது இதயங்கள் இணைகின்றன. மற்ற மாதங்களைவிட ரமலான் மாதத்தில் அதிகமாக பள்ளிவாசல்களில் சந்தித்துக் கொள்ளும் உறவுகள் ஆரத்தழுவி அரவணைக்கும் போது உள்ளங்கள் விரிவடைந்து விடும். ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும் மனமாச்சரியங்களும் மாயமாய் மறைந்துவிடும். ரமலான் மாதத்தில் மட்டுமே இதன் சாத்தியக்கூறுகள் அதிகமுண்டு.
பலரின் அகவாழ்வு பறிபோவதற்கு ஒரு சிலரின் சுயநலபோக்கு காரணமாகி அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எல்லாமே பொதுவாகிவிடும் போது இல்லாமை இல்லாத நிலை ஏற்படும். அத்தகைய உன்னத சூழ்நிலையை இந்த ரமலான் நமக்கு கற்றுத்தருகிறது.
உளத்தூய்மையோடு நோன்பிருந்து, உலக ஆசாபாசங்களைத் துறந்து, உறக்கம் தவிர்த்து, தனக்காகவும், குடும்பத்திற்காகவும், ஊருக்காகவும், பிறந்த நாட்டிற்காகவும், உலகளாவிய நன்மைக்காகவும் வேண்டி இறைஇல்லங்களில் தங்கியிருந்து இரவெல்லாம் தனித்திருந்து, இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆ செய்யக்கூடிய உன்னத அமல் நற்செயல் ‘இஃதிகாப்’ எனப்படும். இதனை ரமலான் மாதம் கடைசி பத்து இரவுகளில் மட்டுமே கடமையாக நிறைவேற்ற முடியும். மற்றைய நாட்களில் தங்கள் சொந்த தேவைகளுக்காகவும் நிறைவேற்றலாம்.
இப்படிப்பட்ட உன்னதமான வழிபாடு உலகம் முழுவதும் அமைதியை, நிம்மதியை பெற்றுத் தருமானால் அதற்கான வழியை இந்த ரமலான் தானே வகுத்து தருகிறது.
ஆய்வுகள் பல சொல்வதெல்லாம், உலகில் பாவங்கள் தோன்ற இச்சைகள் தான் அடிப்படையாய் அமைந்திருக்கின்றன. அந்த இச்சைகளை இறைவனுக்காக துறந்து, எண்ணங்களின் கறைகளை நீக்கி, மனதின் மாசுக்களைப் போக்கி, சிந்தனையை சீர்படுத்தி, எலும்பற்ற உறுப்புகளைப் பாதுகாத்து, உடம்பை வருத்தி, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, அகத்திலும், புறத்திலும் அல்லாஹ்வின் நினைவோடு வாழ்வதற்கு பயிற்சிக்களமாக அமைவது தான் இந்த ரமலான் மாதம்.
ரமலான் மாதம் பசி, பட்டினி, தாகம், தவிப்பு என்ற நிலையில் ஒருவனைப் பக்குவப்படுத்தி, அதன்பின் ஒவ்வொரு நற்செயல்களையும் விதைத்து, இறையச்சம் கொண்ட முழுமையான மனிதனாக உருவாக்குகிறது. இந்த முப்பது நாட்களில் செய்தவற்றை சுயபரிசோதனை செய்து மீதமுள்ள காலங்களில் கட்டுப்பாடாய் வாழ வழி அமைத்து தருவதும் இந்த ரமலான் நோன்பு தான். இதுதான் உண்ணா நோன்பின் உண்மையான நோக்கம்.
எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
தூய்மையை நடைமுறைப்படுத்திய மார்க்கம், இஸ்லாம். முழுக்கவனத்துடன் தூய்மையைப் பேணுபவர்களையே தன் விருப்பத்திற்கு உரியவர்களாக இறைவன் கருதுகின்றான்.
தூய்மையை உபதேசித்த மார்க்கம்; தூய்மையை நடைமுறைப்படுத்திய மார்க்கம், இஸ்லாம். முழுக்கவனத்துடன் தூய்மையைப் பேணுபவர்களையே தன் விருப்பத்திற்கு உரியவர்களாக இறைவன் கருதுகின்றான்.
‘தூய்மை இறை நம்பிக்கையின் ஒரு பாதி’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மனிதன் தன் ஆன்மாவைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு பாதி, உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இறை நம்பிக்கையின் மற்றொரு பாதி ஆகும்.
இறை நிராகரிப்பு, இணைவைப்பு, தீங்கிழைத்தல், வழிகேட்டில் மூழ்கி விடுதல் முதலிய அசுத்தங்களை விட்டும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, தூய்மையான கோட்பாடு கள், நற்செயல்கள், நற்பண்புகளால் அதை அலங்கரிப்பது தான் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவது ஆகும்.
வெளிப்படையான அசுத்தங்கள், அழுக்குகளை நீக்கி உடலைத் தூய்மையாக, நேர்த்தியாக வைத்துக் கொள்வதுதான் உடல் தூய்மை என்பது.
நமது அகமும், புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே, இறை நம்பிக்கை நம்மில் ஏற்படுத்த விரும்பும் மாற்றம் ஆகும். நமது புறத்தோற்றமான உடலும், உடைமை களும், உறைவிடமும், சுற்றுப்புறமும் அழுக்குப் படிந்தவைகளாக இருக்கக் கூடாது. அதேபோல நமது மனமும் மாசடைந்து இருத்தலாகாது.
தொழுகை என்பது ஒரு பரிசுத்தமான வழிபாடு. அதை மேற்கொள்பவரின் உடல், உள்ளம், உடை, அவர் நிற்கும் இடம் போன்றவை தூய்மையாக இருக்க வேண்டும். ஆகவே தான் தொழுவதற்கு முன்பு கை, கால் உள்ளிட்ட உறுப்புகளைக் கழுவித் தூய்மை செய்து கொள்வது இஸ்லாம் மார்க்கத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது.
தொழுகைக்கு முன்பு செய்து கொள்ளும் அங்கத் தூய்மையைக் குறிக்க மூலத்தில் ‘ஒளு’ என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இது ‘வளாத்’ என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதற்குத் தூய்மை, வெளிச்சம், அழகு ஆகிய பொருள்கள் அகராதியில் உள்ளன. அங்கத்தூய்மை செய்வதால் ஒருவருக்கு இந்த மூன்றும் கிடைக்கின்றன.
‘‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை ஈரக்கைகளால் தடவிக் கொள்ளுங்கள். கணுக்கால் வரை உங்கள் கால்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்)’’ என்று திருமறையிலே (5:6) இறைவன் கூறுகின்றான்.
தொழுகை என்ற வழிபாட்டை நிறைவேற்றுவதற்கு முன்னால், கட்டாயம் அங்கத் தூய்மை (‘ஒளு’) செய்து கொள்ள வேண்டும். தவறினால் தொழுகை செல்லாது.
‘தூய்மையின்றி எந்தத் தொழுகையும் (இறைவனிடம்) ஏற்கப்படாது; மோசடிப் பொருள்களால் செய்யப்படும் எந்தத் தர்மமும் ஏற்கப்படாது’ என்பது நபி மொழி.
‘தொழுகையின் திறவுகோல், தூய்மை ஆகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கதவைத் திறக்க திறவுகோல் அவசியம். அதைப் போன்று தொழுகையை நிறைவேற்ற அங்கத்தூய்மை அவசியமாகும். இதுபோலவே சொர்க்கவாசலைத் திறக்க வழிபாடுகள் அவசியம். வழிபாடுகளில் முதன்மையானது, தொழுகை. ஆகவேதான் ‘தொழுகை சொர்க்கத்தின் திறவுகோல்’ என்று நபிகளார் உவமை நயத்தோடு கூறினார்கள்.
‘ஒளு’ செய்யும்போது முதலில் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் திருநாமத்தால் தொடங்குகிறேன்) என்று கூறித் தண்ணீரைக் கைகளில் எடுத்து மணிக்கட்டு வரை மூன்று முறைக் கழுவ வேண்டும். இரண்டாவதாக, பற்களைக் கைகளால் தேய்த்து மூன்று முறை வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து நாசித் துளைகளில் மூன்று முறை தண்ணீரை ஏற்றி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும். பிறகு முகத்தை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். இதன் பிறகு இரு கைகளை முழங்கை வரை கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து தலையை மூன்று முறை ஈரக்கையால் தடவ வேண்டும். இதன் பிறகு காதுகளின் உள்பகுதியை ஆள்காட்டி விரல்களாலும், வெளிப்பகுதியைக் கட்டை விரல்களாலும் ஈரக்கையால் தடவ வேண்டும். இறுதியில் இரண்டு கால்களையும் கரண்டைக் கால் வரை கழுவ வேண்டும். இத்துடன் ‘ஒளு’ செய்யும் முறை முடிவடைகிறது.
தொழுகைக்குச் செல்லும் முன்பு அங்கத் தூய்மையில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். ‘ஒளு’வை முறைப்படி செய்து கொள்ள வேண்டும்.
‘‘மறுமை நாளில் எனது சமுதாயத்தினரின் அடையாளம் இதுவே. ‘அவர்களது நெற்றியும், ‘ஒளு’ செய்யப்பட்ட உடல் உறுப்புகளும் ஒளியால் மிளிரும்’ எனவே எவர் தம்முடைய ஒளியை அதிகப்படுத்த நாடுகிறாரோ (அவர் ‘ஒளு’வை நேர்த்தியாகச் செய்து) தம் ஒளியை அதிகப் படுத்திக் கொள்ளட்டும்’’ என்பது நபிமொழி.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் ஒருவரின் வீட்டு வாசலில் ஆறு இருந்து அதில் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை குளித்தால் அவரது உடலில் அழுக்கு சிறிதேனும் இருக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், ‘அவரிடம் அழுக்கு எதுவும் இருக்காது’ என்றனர். ‘இதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும்’ என்று நபிகளார் நவின்றார்கள்.
பல் தூய்மை என்பது எல்லா நேரங்களிலும் விரும்பத்தக்கதும், நபிவழியும் ஆகும். இருந்தபோதிலும், ‘ஒளு’ செய்யும்போதும், தொழுகைக்குத் தயாராகும்போதும், குர்ஆன் ஓதும்போதும், தூக்கத்தில் இருந்து எழும்போதும், வாயில் வித்தியாசமான வாடையை உணரும்போதும் பல் தூய்மை என்பது மிகவும் விருப்பத்திற்குரிய நபி வழி (சுன்னத்) ஆகும். காலையிலும் மாலையிலும் பற்களைத் தூய்மை செய்வதில் நோன்பு வைத்தவர், நோன்பு வைக்காதவர் என்ற வேறுபாடு கிடையாது.
‘என் சமூகத்திற்கு சிரமம் ஆகி விடும் என்ற பயம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், ‘ஒளு’ செய்யும் போதெல்லாம் பற்களைத் தூய்மை செய்ய வேண்டும் என்று நான் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்’ என்ற நபிகளாரின் மொழி, பற்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற அவர்களின் அளப்பரிய ஆர்வத்தையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது.
தொழுகைக்கு முன்னர் உள்ளமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மார்க்கத்தைப் போல வேறெந்த மதமும் வற்புறுத்திச் சொல்லவில்லை.
நபிகளார் கூறியபடி வாழ்ந்தால் இந்த உலகமே தூய்மையாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
‘தூய்மை இறை நம்பிக்கையின் ஒரு பாதி’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மனிதன் தன் ஆன்மாவைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு பாதி, உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இறை நம்பிக்கையின் மற்றொரு பாதி ஆகும்.
இறை நிராகரிப்பு, இணைவைப்பு, தீங்கிழைத்தல், வழிகேட்டில் மூழ்கி விடுதல் முதலிய அசுத்தங்களை விட்டும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, தூய்மையான கோட்பாடு கள், நற்செயல்கள், நற்பண்புகளால் அதை அலங்கரிப்பது தான் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவது ஆகும்.
வெளிப்படையான அசுத்தங்கள், அழுக்குகளை நீக்கி உடலைத் தூய்மையாக, நேர்த்தியாக வைத்துக் கொள்வதுதான் உடல் தூய்மை என்பது.
நமது அகமும், புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே, இறை நம்பிக்கை நம்மில் ஏற்படுத்த விரும்பும் மாற்றம் ஆகும். நமது புறத்தோற்றமான உடலும், உடைமை களும், உறைவிடமும், சுற்றுப்புறமும் அழுக்குப் படிந்தவைகளாக இருக்கக் கூடாது. அதேபோல நமது மனமும் மாசடைந்து இருத்தலாகாது.
தொழுகை என்பது ஒரு பரிசுத்தமான வழிபாடு. அதை மேற்கொள்பவரின் உடல், உள்ளம், உடை, அவர் நிற்கும் இடம் போன்றவை தூய்மையாக இருக்க வேண்டும். ஆகவே தான் தொழுவதற்கு முன்பு கை, கால் உள்ளிட்ட உறுப்புகளைக் கழுவித் தூய்மை செய்து கொள்வது இஸ்லாம் மார்க்கத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது.
தொழுகைக்கு முன்பு செய்து கொள்ளும் அங்கத் தூய்மையைக் குறிக்க மூலத்தில் ‘ஒளு’ என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இது ‘வளாத்’ என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதற்குத் தூய்மை, வெளிச்சம், அழகு ஆகிய பொருள்கள் அகராதியில் உள்ளன. அங்கத்தூய்மை செய்வதால் ஒருவருக்கு இந்த மூன்றும் கிடைக்கின்றன.
‘‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை ஈரக்கைகளால் தடவிக் கொள்ளுங்கள். கணுக்கால் வரை உங்கள் கால்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்)’’ என்று திருமறையிலே (5:6) இறைவன் கூறுகின்றான்.
தொழுகை என்ற வழிபாட்டை நிறைவேற்றுவதற்கு முன்னால், கட்டாயம் அங்கத் தூய்மை (‘ஒளு’) செய்து கொள்ள வேண்டும். தவறினால் தொழுகை செல்லாது.
‘தூய்மையின்றி எந்தத் தொழுகையும் (இறைவனிடம்) ஏற்கப்படாது; மோசடிப் பொருள்களால் செய்யப்படும் எந்தத் தர்மமும் ஏற்கப்படாது’ என்பது நபி மொழி.
‘தொழுகையின் திறவுகோல், தூய்மை ஆகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கதவைத் திறக்க திறவுகோல் அவசியம். அதைப் போன்று தொழுகையை நிறைவேற்ற அங்கத்தூய்மை அவசியமாகும். இதுபோலவே சொர்க்கவாசலைத் திறக்க வழிபாடுகள் அவசியம். வழிபாடுகளில் முதன்மையானது, தொழுகை. ஆகவேதான் ‘தொழுகை சொர்க்கத்தின் திறவுகோல்’ என்று நபிகளார் உவமை நயத்தோடு கூறினார்கள்.
‘ஒளு’ செய்யும்போது முதலில் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் திருநாமத்தால் தொடங்குகிறேன்) என்று கூறித் தண்ணீரைக் கைகளில் எடுத்து மணிக்கட்டு வரை மூன்று முறைக் கழுவ வேண்டும். இரண்டாவதாக, பற்களைக் கைகளால் தேய்த்து மூன்று முறை வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து நாசித் துளைகளில் மூன்று முறை தண்ணீரை ஏற்றி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும். பிறகு முகத்தை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். இதன் பிறகு இரு கைகளை முழங்கை வரை கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து தலையை மூன்று முறை ஈரக்கையால் தடவ வேண்டும். இதன் பிறகு காதுகளின் உள்பகுதியை ஆள்காட்டி விரல்களாலும், வெளிப்பகுதியைக் கட்டை விரல்களாலும் ஈரக்கையால் தடவ வேண்டும். இறுதியில் இரண்டு கால்களையும் கரண்டைக் கால் வரை கழுவ வேண்டும். இத்துடன் ‘ஒளு’ செய்யும் முறை முடிவடைகிறது.
தொழுகைக்குச் செல்லும் முன்பு அங்கத் தூய்மையில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். ‘ஒளு’வை முறைப்படி செய்து கொள்ள வேண்டும்.
‘‘மறுமை நாளில் எனது சமுதாயத்தினரின் அடையாளம் இதுவே. ‘அவர்களது நெற்றியும், ‘ஒளு’ செய்யப்பட்ட உடல் உறுப்புகளும் ஒளியால் மிளிரும்’ எனவே எவர் தம்முடைய ஒளியை அதிகப்படுத்த நாடுகிறாரோ (அவர் ‘ஒளு’வை நேர்த்தியாகச் செய்து) தம் ஒளியை அதிகப் படுத்திக் கொள்ளட்டும்’’ என்பது நபிமொழி.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் ஒருவரின் வீட்டு வாசலில் ஆறு இருந்து அதில் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை குளித்தால் அவரது உடலில் அழுக்கு சிறிதேனும் இருக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், ‘அவரிடம் அழுக்கு எதுவும் இருக்காது’ என்றனர். ‘இதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும்’ என்று நபிகளார் நவின்றார்கள்.
பல் தூய்மை என்பது எல்லா நேரங்களிலும் விரும்பத்தக்கதும், நபிவழியும் ஆகும். இருந்தபோதிலும், ‘ஒளு’ செய்யும்போதும், தொழுகைக்குத் தயாராகும்போதும், குர்ஆன் ஓதும்போதும், தூக்கத்தில் இருந்து எழும்போதும், வாயில் வித்தியாசமான வாடையை உணரும்போதும் பல் தூய்மை என்பது மிகவும் விருப்பத்திற்குரிய நபி வழி (சுன்னத்) ஆகும். காலையிலும் மாலையிலும் பற்களைத் தூய்மை செய்வதில் நோன்பு வைத்தவர், நோன்பு வைக்காதவர் என்ற வேறுபாடு கிடையாது.
‘என் சமூகத்திற்கு சிரமம் ஆகி விடும் என்ற பயம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், ‘ஒளு’ செய்யும் போதெல்லாம் பற்களைத் தூய்மை செய்ய வேண்டும் என்று நான் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்’ என்ற நபிகளாரின் மொழி, பற்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற அவர்களின் அளப்பரிய ஆர்வத்தையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது.
தொழுகைக்கு முன்னர் உள்ளமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மார்க்கத்தைப் போல வேறெந்த மதமும் வற்புறுத்திச் சொல்லவில்லை.
நபிகளார் கூறியபடி வாழ்ந்தால் இந்த உலகமே தூய்மையாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
வீரனுக்கு அழகு கோபத்தில் இல்லை, வேகத்தில் இல்லை. விவேகத்திலும், மென்மையிலும்தான் உள்ளது. கோபத்தை அடக்குபவனே தலைச்சிறந்த வீரன்.
மென்மை என்பது ஒரு நன்மையாகும். மென்மையான எந்த காரியமும் தீமையில் முடிவதில்லை.
தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களில் ஒன்று கோபம். கோபம் என்பது தீமைகளில், ஒன்று வெளிப்படையாக இருக்கலாம் அல்லது மறைமுகமாக இருக்கலாம்.
கோபத்தின் விளைவுகள் குறித்து எச்சரிக்காத எந்த ஒரு மதமும் இருக்க முடியாது; எந்த ஒரு சமூகமும் இருக்க முடியாது.
கோபம் தேவைதான். கோபத்திலும் நிதானம் மிகவும் அவசியம். நிதானத்துடன் வெளிப்படும் கோபம் எச்சரிக்கையாக அமையும், அல்லது கோப நடவடிக்கையாக இருக்கும். இப் படிப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதனால் சமூக மேம்பாடும், சமூக சீர்திருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோபம் மட்டும் வெளிப்படக்கூடிய எந்த ஒரு செயலாலும் பலன் ஏற்படப்போவதில்லை. இதனால், சமூக நல்லிணக்கம் சீர்கெடுகிறது; குடும்ப உறவு சீர்குலைகிறது; நட்பு வட்டாரத்தில் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் அடிதடி, ஆள் கடத்தல், சொத்து சூறையாடல், கொலை செய்தல் போன்ற கொடூர செயல்களில் போய்முடிகிறது.
தேவையான நேரத்தில், தேவையான இடத்தில், தேவையான நபரிடத்தில் கோபப்படாமல் மவுனமாக இருப்பதும் ஒருவகையான குற்றமே!
அதற்காக, எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டே இருப்பது சிறந்த செயல்பாடு அல்ல!
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிடும். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 55 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு இந்த ஆபத்து 6 மடங்கு அதிகமாக உள்ளதாக அச்சமூட்டுகிறார்கள்.
கோபத்தின் பாதிப்பு மூன்று வகையாகும். அது: 1) கோபம் அறிவை பாதிக்கக் கூடியது, 2) கோபம் உடலை பாதிக்கக் கூடியது, 3) கோபம் நடத்தையை பாதிக்கக் கூடியது.

அதிகம் கோபப்படக்கூடிய நபர்கள், இம்மூன்று வகையான பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது. இம்மூன்று வகையான பாதிப்புகளும் ஒருமனிதனை மனநலம் குன்றியவனாக மாற்றி விடுகிறது. இத்தகைய மனிதனால், சமூகத்துக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது? அல்லது அவனுக்கே என்ன பயன் கிடைத்து விடப் போகிறது? தமக்கும், பிறருக்கும் பயன்தராதவரின் வாழ்வு ஒரு நடமாடும் பிணம் தான். அல்லது ஒரு நடமாடும் பைத்தியம் தான்.
‘கோபம் என்பது ஒரு அரைப் பைத்தியம்’ என்று ஒரு ஆங்கில பழமொழியும், ‘கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், அதன் முடிவு வருத்தம்’ என்று ஒரு அரபிப் பழமொழியும், ‘கோபத்தோடும் எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான்’ என்று ஒரு தமிழ் பழமொழியும் கூறுகிறது. அது போல ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்ற தமிழ் பழமொழி அனைவரும் அறிந்ததே.
இத்தகைய பழமொழிகள் உணர்த்துவதெல்லாம், மிதமிஞ்சிய கோபம் மனிதனை பாழாக்கிவிடும் என்பதே!
கோபம் என்பது இருமுனைக் கத்தி போன்றது. கோபம் கொண்டவரையும் பாதிக்கும், மறுதரப்பினரையும் பாதிக்கும். இத்தகைய கோபத்தின் வெளிப்பாடு சில தன்மைகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
கோபம் வரும்போது சிலர் அழுவார்கள்; சிலர் முறைத்துப் பார்ப்பார்கள்; சிலர் மீசையை முறுக்குவார்கள்; சிலர் பல்லைக்கடிப்பார்கள்; சிலர் கையை பிசைவார்கள்; சிலர் கையை ஓங்கிக்குத்துவார்கள்; சிலர் காச் ... மூச் ... என கூச்சல் போடுவார்கள்; சிலர் கிடைத்ததையெல்லாம் உடைப்பார்கள்; சிலர் கண்டபடி வசைபாடுவார்கள். இதுபோல கோபத்தின் அறிகுறிகள் நீண்டுகொண்டே செல்கிறது.
மேற்கூறப்பட்ட வகையினரில் நாம் சேர்வதா? அல்லது அல்லாஹ் கூறும் வகையினரில் நாம் சேர்வதா? என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். கோபம் வரும்போது அதை வெளிப்படுத்துபவன் பலசாலியாக ஆகிவிட முடியாது. கோபம் வரும்போது அதை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்பவரே உண்மையான பலசாலி என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
“இறையச்சமுடையோர் எத்தகையோர் என்றால் அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர, கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மனிதர் (கள் செய்யும் பிழை)களை மன்னித்து விடுவார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்” (திருக்குர்ஆன் 3:134)
கோபம் கொள்பவன் வீரன் அல்ல. உண்மையான வீரன் என்பவன் கோபம் வரும்போது தமது மனதை கட்டுப்படுத்துபவனே. வீரனுக்கு அழகு கோபத்தில் இல்லை, வேகத்தில் இல்லை. விவேகத்திலும், மென்மையிலும்தான் உள்ளது. கோபத்தை அடக்குபவனே தலைச்சிறந்த வீரன்.
மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களில் ஒன்று கோபம். கோபம் என்பது தீமைகளில், ஒன்று வெளிப்படையாக இருக்கலாம் அல்லது மறைமுகமாக இருக்கலாம்.
கோபத்தின் விளைவுகள் குறித்து எச்சரிக்காத எந்த ஒரு மதமும் இருக்க முடியாது; எந்த ஒரு சமூகமும் இருக்க முடியாது.
கோபம் தேவைதான். கோபத்திலும் நிதானம் மிகவும் அவசியம். நிதானத்துடன் வெளிப்படும் கோபம் எச்சரிக்கையாக அமையும், அல்லது கோப நடவடிக்கையாக இருக்கும். இப் படிப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதனால் சமூக மேம்பாடும், சமூக சீர்திருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோபம் மட்டும் வெளிப்படக்கூடிய எந்த ஒரு செயலாலும் பலன் ஏற்படப்போவதில்லை. இதனால், சமூக நல்லிணக்கம் சீர்கெடுகிறது; குடும்ப உறவு சீர்குலைகிறது; நட்பு வட்டாரத்தில் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் அடிதடி, ஆள் கடத்தல், சொத்து சூறையாடல், கொலை செய்தல் போன்ற கொடூர செயல்களில் போய்முடிகிறது.
தேவையான நேரத்தில், தேவையான இடத்தில், தேவையான நபரிடத்தில் கோபப்படாமல் மவுனமாக இருப்பதும் ஒருவகையான குற்றமே!
அதற்காக, எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டே இருப்பது சிறந்த செயல்பாடு அல்ல!
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிடும். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 55 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு இந்த ஆபத்து 6 மடங்கு அதிகமாக உள்ளதாக அச்சமூட்டுகிறார்கள்.
கோபத்தின் பாதிப்பு மூன்று வகையாகும். அது: 1) கோபம் அறிவை பாதிக்கக் கூடியது, 2) கோபம் உடலை பாதிக்கக் கூடியது, 3) கோபம் நடத்தையை பாதிக்கக் கூடியது.

அதிகம் கோபப்படக்கூடிய நபர்கள், இம்மூன்று வகையான பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது. இம்மூன்று வகையான பாதிப்புகளும் ஒருமனிதனை மனநலம் குன்றியவனாக மாற்றி விடுகிறது. இத்தகைய மனிதனால், சமூகத்துக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது? அல்லது அவனுக்கே என்ன பயன் கிடைத்து விடப் போகிறது? தமக்கும், பிறருக்கும் பயன்தராதவரின் வாழ்வு ஒரு நடமாடும் பிணம் தான். அல்லது ஒரு நடமாடும் பைத்தியம் தான்.
‘கோபம் என்பது ஒரு அரைப் பைத்தியம்’ என்று ஒரு ஆங்கில பழமொழியும், ‘கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், அதன் முடிவு வருத்தம்’ என்று ஒரு அரபிப் பழமொழியும், ‘கோபத்தோடும் எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான்’ என்று ஒரு தமிழ் பழமொழியும் கூறுகிறது. அது போல ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்ற தமிழ் பழமொழி அனைவரும் அறிந்ததே.
இத்தகைய பழமொழிகள் உணர்த்துவதெல்லாம், மிதமிஞ்சிய கோபம் மனிதனை பாழாக்கிவிடும் என்பதே!
கோபம் என்பது இருமுனைக் கத்தி போன்றது. கோபம் கொண்டவரையும் பாதிக்கும், மறுதரப்பினரையும் பாதிக்கும். இத்தகைய கோபத்தின் வெளிப்பாடு சில தன்மைகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
கோபம் வரும்போது சிலர் அழுவார்கள்; சிலர் முறைத்துப் பார்ப்பார்கள்; சிலர் மீசையை முறுக்குவார்கள்; சிலர் பல்லைக்கடிப்பார்கள்; சிலர் கையை பிசைவார்கள்; சிலர் கையை ஓங்கிக்குத்துவார்கள்; சிலர் காச் ... மூச் ... என கூச்சல் போடுவார்கள்; சிலர் கிடைத்ததையெல்லாம் உடைப்பார்கள்; சிலர் கண்டபடி வசைபாடுவார்கள். இதுபோல கோபத்தின் அறிகுறிகள் நீண்டுகொண்டே செல்கிறது.
மேற்கூறப்பட்ட வகையினரில் நாம் சேர்வதா? அல்லது அல்லாஹ் கூறும் வகையினரில் நாம் சேர்வதா? என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். கோபம் வரும்போது அதை வெளிப்படுத்துபவன் பலசாலியாக ஆகிவிட முடியாது. கோபம் வரும்போது அதை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்பவரே உண்மையான பலசாலி என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
“இறையச்சமுடையோர் எத்தகையோர் என்றால் அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர, கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மனிதர் (கள் செய்யும் பிழை)களை மன்னித்து விடுவார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்” (திருக்குர்ஆன் 3:134)
கோபம் கொள்பவன் வீரன் அல்ல. உண்மையான வீரன் என்பவன் கோபம் வரும்போது தமது மனதை கட்டுப்படுத்துபவனே. வீரனுக்கு அழகு கோபத்தில் இல்லை, வேகத்தில் இல்லை. விவேகத்திலும், மென்மையிலும்தான் உள்ளது. கோபத்தை அடக்குபவனே தலைச்சிறந்த வீரன்.
மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
மஅபத் சொன்ன செய்தியால் எதிரிகளின் ஆணவமும் வீரமும் நம்பிக்கையும் தளர்ந்தது. அவர்களைப் பயம் ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தற்போதைக்கு நல்லது என்று கருதினர்.
'உஹுத் போர் முடிந்து எல்லோரும் மதீனாவிற்குத் திரும்பிய நிலையில், எதிரிகளான குறைஷிகள் தங்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லையென்று மதீனாவிற்குத் திரும்பி மறுமுறை போர் தொடுக்க வரவேண்டுமென்று யோசிப்பர்'என்று நபி முஹம்மது (ஸல்) நம்பினார்கள். காயத்துடனும் களைப்புடனும் மதீனாவிற்குத் திரும்பிய முஸ்லிம்கள் நபிகளார் தந்த எச்சரிக்கையால் விழிப்புணர்வுடனே இருந்தனர்.
மறுநாள் எதிரிகளை எதிர்கொள்ளத் தயாரானவர்களாக முஸ்லிம்கள் மீண்டும் எழுச்சியுடன் கிளம்பினார்கள். தங்களுடைய காயங்களையும், களைப்பையும் பொருட்படுத்தாமல் விரைந்தனர். முன்பு போரில் கலந்து கொள்ளாதவர்களும் இம்முறை கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துப் புறப்பட்டனர்.
மதீனாவைவிட்டு வெளியேறி அங்கிருந்து சில மைல்கள் தொலைவிலிருந்த ‘ஹராவுல் அஸத்’ என்ற இடத்தை அடைந்து முகாமிட்டனர். அந்த இடத்தில் மஅபத் இப்னு அபூமஅபத் என்பவர் சந்தித்து நபிகளாரையும் அவர்களது தோழர்களையும் பற்றி அக்கறையுடன் விசாரித்தவராக, தமது வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டு அங்கேயே இஸ்லாமைத் தழுவினார். நபி முஹம்மது(ஸல்) அவரிடம், “நீங்கள் அபூ ஸுஃப்யானிடம் சென்று நாங்கள் இங்கு முகாமிட்டுருப்பதைத் தெரிவியுங்கள்” என்றார்கள்.
நபிகளார் நினைத்தது போலவே எதிரிகள் மக்காவிற்குச் செல்லாமல், ‘நாம் முஸ்லிம்களின் தலைவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டோம். முஸ்லிம்களின் ராணுவ முகாம்களையும் உடைமைகளையும் நாம் இறுதிவரை கைப்பற்ற முடியவில்லை. முஸ்லிம்களிலிருந்து எவரும் நம்மிடம் கைதியாகவில்லை. அவர்களுடைய ஆற்றல் அனைத்தையும் அடியோடு அழிக்க வேண்டும். நாம் களைப்புடன் இருப்பவர்களை வெட்டிச் சாய்த்துவிடலாம்.

மதீனாவிற்கு மீண்டும் செல்வோம்’ என்று முடிவெடுத்தவர்களாக அபூ ஸுஃப்யான் தனது படையோடு கிளம்பும்போது அங்கு மஅபத் சென்றடைந்தார். அவர் அபூ ஸுஃப்யானுக்குக் கற்பனையான போரைச் சித்தரித்து “முஹம்மது தனது தோழர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நம்முடன் போர் புரிய புறப்பட்டுவிட்டார். போரை தவறவிட்டவர்களும் இம்முறை சேர்ந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் வெறியுடன் நம்மைத் தாக்க வருகிறார்கள்” என்று பயமுறுத்தினார். பதற்றமடைந்த அபூ ஸுஃப்யான் “நீ உண்மையைத்தான் சொல்கிறாயா?” என்று சந்தேகத்துடன் கேட்டார். அதற்கு மஅபத் “நம்பிக்கையில்லையென்றால், யாரையாவது கொஞ்சம் தூரம் அவர்களை நோக்கி பயணிக்கச் சொல், அங்கு முஸ்லிம்களின் முதல் படையின் முகாமை பார்ப்பாய். நீங்கள் திரும்பிவிடுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது” என்று மேலும் பயமுறுத்திப் பார்த்தார்.
மஅபத் சொன்ன செய்தியால் எதிரிகளின் ஆணவமும் வீரமும் நம்பிக்கையும் தளர்ந்தது. அவர்களைப் பயம் ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தற்போதைக்கு நல்லது என்று கருதினர். ஆனால் முஸ்லிம் படைகள் தங்களை விரட்டி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக ஒரு பொய் பரப்புரையை அனுப்பி வைத்தனர். அதாவது ‘முஹம்மதையும் அவரது தோழர்களையும் வேரோடு அழிக்கக் குறைஷிகள் பெரும்படையோடு வருவதாக’ செய்தியை அனுப்பி வைத்தனர். நபிகளாருக்கு இச்செய்தி எட்டியது.
அல்லாஹ் தன் திருமறையில் இது பற்றிக் கூறுகிறான், மக்களில் சிலர் அவர்களிடம் “திடமாக மக்களில் பலர் உங்களுடன் போரிடுவதற்காகத் திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி அச்சுறுத்தினர். ஆனால் இது அவர்களின் ஈமானை அதாவது இறைநம்பிக்கையைப் பெருக்கி வலுப்படச் செய்தது.
“அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் அதாவது அருட்கொடையையும், மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள். அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
திருக்குர்அன் 3:173-174, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
மறுநாள் எதிரிகளை எதிர்கொள்ளத் தயாரானவர்களாக முஸ்லிம்கள் மீண்டும் எழுச்சியுடன் கிளம்பினார்கள். தங்களுடைய காயங்களையும், களைப்பையும் பொருட்படுத்தாமல் விரைந்தனர். முன்பு போரில் கலந்து கொள்ளாதவர்களும் இம்முறை கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துப் புறப்பட்டனர்.
மதீனாவைவிட்டு வெளியேறி அங்கிருந்து சில மைல்கள் தொலைவிலிருந்த ‘ஹராவுல் அஸத்’ என்ற இடத்தை அடைந்து முகாமிட்டனர். அந்த இடத்தில் மஅபத் இப்னு அபூமஅபத் என்பவர் சந்தித்து நபிகளாரையும் அவர்களது தோழர்களையும் பற்றி அக்கறையுடன் விசாரித்தவராக, தமது வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டு அங்கேயே இஸ்லாமைத் தழுவினார். நபி முஹம்மது(ஸல்) அவரிடம், “நீங்கள் அபூ ஸுஃப்யானிடம் சென்று நாங்கள் இங்கு முகாமிட்டுருப்பதைத் தெரிவியுங்கள்” என்றார்கள்.
நபிகளார் நினைத்தது போலவே எதிரிகள் மக்காவிற்குச் செல்லாமல், ‘நாம் முஸ்லிம்களின் தலைவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டோம். முஸ்லிம்களின் ராணுவ முகாம்களையும் உடைமைகளையும் நாம் இறுதிவரை கைப்பற்ற முடியவில்லை. முஸ்லிம்களிலிருந்து எவரும் நம்மிடம் கைதியாகவில்லை. அவர்களுடைய ஆற்றல் அனைத்தையும் அடியோடு அழிக்க வேண்டும். நாம் களைப்புடன் இருப்பவர்களை வெட்டிச் சாய்த்துவிடலாம்.

மதீனாவிற்கு மீண்டும் செல்வோம்’ என்று முடிவெடுத்தவர்களாக அபூ ஸுஃப்யான் தனது படையோடு கிளம்பும்போது அங்கு மஅபத் சென்றடைந்தார். அவர் அபூ ஸுஃப்யானுக்குக் கற்பனையான போரைச் சித்தரித்து “முஹம்மது தனது தோழர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நம்முடன் போர் புரிய புறப்பட்டுவிட்டார். போரை தவறவிட்டவர்களும் இம்முறை சேர்ந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் வெறியுடன் நம்மைத் தாக்க வருகிறார்கள்” என்று பயமுறுத்தினார். பதற்றமடைந்த அபூ ஸுஃப்யான் “நீ உண்மையைத்தான் சொல்கிறாயா?” என்று சந்தேகத்துடன் கேட்டார். அதற்கு மஅபத் “நம்பிக்கையில்லையென்றால், யாரையாவது கொஞ்சம் தூரம் அவர்களை நோக்கி பயணிக்கச் சொல், அங்கு முஸ்லிம்களின் முதல் படையின் முகாமை பார்ப்பாய். நீங்கள் திரும்பிவிடுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது” என்று மேலும் பயமுறுத்திப் பார்த்தார்.
மஅபத் சொன்ன செய்தியால் எதிரிகளின் ஆணவமும் வீரமும் நம்பிக்கையும் தளர்ந்தது. அவர்களைப் பயம் ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தற்போதைக்கு நல்லது என்று கருதினர். ஆனால் முஸ்லிம் படைகள் தங்களை விரட்டி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக ஒரு பொய் பரப்புரையை அனுப்பி வைத்தனர். அதாவது ‘முஹம்மதையும் அவரது தோழர்களையும் வேரோடு அழிக்கக் குறைஷிகள் பெரும்படையோடு வருவதாக’ செய்தியை அனுப்பி வைத்தனர். நபிகளாருக்கு இச்செய்தி எட்டியது.
அல்லாஹ் தன் திருமறையில் இது பற்றிக் கூறுகிறான், மக்களில் சிலர் அவர்களிடம் “திடமாக மக்களில் பலர் உங்களுடன் போரிடுவதற்காகத் திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி அச்சுறுத்தினர். ஆனால் இது அவர்களின் ஈமானை அதாவது இறைநம்பிக்கையைப் பெருக்கி வலுப்படச் செய்தது.
“அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் அதாவது அருட்கொடையையும், மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள். அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
திருக்குர்அன் 3:173-174, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
பழங்கால எகிப்தியர்களின் பெரும்பாலான மருந்து வகைகளில் தேன் முக்கிய இடத்தைப் பெற்றது. தற்போது யுனானி மருந்துகள் பெரும்பாலும் தேனை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
தேனீக்கள் ஆறு கால்கள் கொண்ட சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாகச் சேர்த்து வைக்கின்றன. தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவை ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாகும். ஒரு சொட்டு தேனைச் சேர்க்க தேனீ சில சமயம் 16 மைல் தூரம் வரை பறந்து செல்லுமாம். ஒரு கிலோ எடை கொண்ட தேன் சேகரிக்க தேனீக்கள் 6 லட்சத்து 68 ஆயிரம் பூக்களைச் சந்திக்கின்றன. ஒரு பவுண்டு தேன் சேகரித்துக் கொண்டு வர ஒரு தேனீ சுமார் 45 ஆயிரம் மைல் தூரம் அலை போல அலைய வேண்டும்.
தேனீக்களின் வாழ்க்கை முறை சற்று வேறுபாடானது. இவை கூட்டமாய் ஓரினமாய் இணைந்து வாழும். ராணித் தேனீ, வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ என்று தேனீக்களின் கூட்டத்தில் 3 வகை உண்டு. ராணித் தேனீயும், வேலைக் காரத் தேனீயும் பெண் இனமாகும். ஒரு பெண் தேனீ தான் அரசியாக இருக்கின்றது. ராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 10 மில்லி மீட்டர் முதல் 20 மில்லி மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒரு கூட்டில் ஒரு ராணி மட்டுமே இருக்கும்.
அதைச் சுற்றி ஆயிரம் ஆண் தேனீக்கள், இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உள்ளன. ஆண் தேனீக்கள் தேன் எடுக்கப் போவதில்லை. மேலும் பணி செய்ய பெண் தேனீக்கள் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். தேனீக்களில் ராணித் தேனீயே எல்லா முட்டை களையும் இடுகின்றது. ஒரு ராணித் தேனீ ஒரு நாளைக்கு 1,500 முதல் 3 ஆயிரம் முட்டைகளையும், ஆண்டுக்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும். தேனீக்களைப் பொறுத்தவரை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்றவற்றுக்கு சான்றாகக் கூறுவார்கள்.
தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுகோண அறைகள் கொண்ட கூடு கட்டி தேனீக்கள் அதில் தேனைச் சேகரித்து வாழ்கின்றன. தேனீயின் கூடு வேலைக்காரத் தேனீக் களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியில் இருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும்.
அந்த அறைகளில் மூன்று வகைத் தேனீக்களும் தனித்தனி அறைகளில்தான் வாழும். தேனீக்களின் கூடு பொதுவாக மரங்கள், மலைக்குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்ற வற்றில் கட்டப்பட்டிருக்கும். ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் இவற்றுக்கிடையே எந்தவிதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.
தேன் கிடைக்கும் இடத்தை வேலைக்காரத் தேனீக்கள் அறிந்து வந்து அதை மற்ற தேனீக்களுக்கு நடனமாடித் தெரிவிக்கின்றன. இது ‘தேனீ நடனம்’ எனப்படும்.
தேனீயின் நடவடிக்கை, அவற்றின் தகவல் தொடர்பு வழிமுறை, பாதை போன்றவற்றை முதன்முதலில் ஆராய்ச்சி மேற்கொண்டவர் ஜெர்மன் பேராசிரியர் வான் ப்ரீச். இதற்காக அவருக்கு உலகின் பெரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
“உம் இறைவன் தேனீக்களுக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். ‘நீ மலைகளிலும், மரங்களிலும், (மனிதர்களாகிய) அவர்கள் கட்டுபவைகளிலும் கூடுகளை அமைத்துக் கொள்’ (என்றும்), ‘பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களில் இருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித்தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்’ (என்றும் உள்ளுணர்ச்சியை உண்டாக்கினான்); அதன் வயிறுகளில் இருந்து பல நிறங்களுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) நோய் நிவாரணி உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” (16:68) என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.
உள்ளுணர்வு என்பது ஓர் உயிரினம் வெளியில் இருந்து கற்றுக் கொள்ளாமலேயே கொண்டிருக்கும் நடத்தையாகும்.
இந்த வசனத்தில் தேனீக்கள் எங்கெங்கே கூடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்? எப்படித் தேனை உருவாக்க வேண்டும் ஆகியவற்றைத் தேனீக்களுக்கு இறைவன் (அல்லாஹ்) கற்றுத்தருகிறான். மலர்களில் உள்ள குளுக்கோசை தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. அவை வயிற்றுக்குள் சென்று மாற்றம் அடைந்து அதன் வயிற்றில் இருந்து வெளிப்படுகின்ற ஒரு கழிவுதான் தேன் என்பதை அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். தேனீக்கள் மலர்களில் இருந்து புசித்து அதன் மூலம் தேன் உருவாகிறது என்றும், அதன் வாயில் இருந்து தேன் வெளிப்படவில்லை; வயிற்றில் இருந்து வெளிப்படுகிறது என்றும் திருக்குர்ஆன் கூறி இருப்பதன் மூலம் 1,400 வருடங்களுக்கு முன்பு எந்த மனிதராலும் கற்பனையிலோ, கனவிலோகூட காண முடியாத அபூர்வ செய்தியாகும்.
மேலும் அந்த வசனத்தில் ‘பல நிறங்களுடைய பானம் (தேன்) வெளியாகிறது’ என்று சொல்லப்பட்டுள்ளது. தேனின் நிறம் மஞ்சள், வெளிர் மஞ்சள் மற்றும் கருமையும் மஞ்சளும் கலந்த நிறமாக உள்ளது.
‘தேனில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு’ என்ற திருக்குர்ஆனின் கருத்தை இன்றைய மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
தேனை ஆரோக்கியமானவர்களும் பருகலாம்; உடல் நலம் இல்லாதவர்களும் சாப்பிடலாம். எல்லா நேரங்களிலும், எல்லாப் பருவ காலங்களிலும் உண்ணலாம். சிறு குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். தேன் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ‘ஹீமோகுளோபின்’ அளவு அதிகரிக்கிறது. ரத்தம் சுத்தம் அடைகிறது.
தேன், தேனீக்களுக்கு உணவாக இருப்பதுடன், மனிதனுக்கு முக்கிய உணவாகவும், அருமருந்தாகவும் இருக்கிறது. பழங்கால எகிப்தியர்களின் பெரும்பாலான மருந்து வகைகளில் தேன் முக்கிய இடத்தைப் பெற்றது. தற்போது யுனானி மருந்துகள் பெரும்பாலும் தேனை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சுத்தமான தேன் கெட்டுப்போவதில்லை. எந்தத் தொழிற்சாலைகளிலும் மனிதனால் தேனை உருவாக்க முடியாது.
பாத்திமா மைந்தன்.
தேனீக்களின் வாழ்க்கை முறை சற்று வேறுபாடானது. இவை கூட்டமாய் ஓரினமாய் இணைந்து வாழும். ராணித் தேனீ, வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ என்று தேனீக்களின் கூட்டத்தில் 3 வகை உண்டு. ராணித் தேனீயும், வேலைக் காரத் தேனீயும் பெண் இனமாகும். ஒரு பெண் தேனீ தான் அரசியாக இருக்கின்றது. ராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 10 மில்லி மீட்டர் முதல் 20 மில்லி மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒரு கூட்டில் ஒரு ராணி மட்டுமே இருக்கும்.
அதைச் சுற்றி ஆயிரம் ஆண் தேனீக்கள், இனப்பெருக்கத்திற்காக மட்டுமே உள்ளன. ஆண் தேனீக்கள் தேன் எடுக்கப் போவதில்லை. மேலும் பணி செய்ய பெண் தேனீக்கள் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். தேனீக்களில் ராணித் தேனீயே எல்லா முட்டை களையும் இடுகின்றது. ஒரு ராணித் தேனீ ஒரு நாளைக்கு 1,500 முதல் 3 ஆயிரம் முட்டைகளையும், ஆண்டுக்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும். தேனீக்களைப் பொறுத்தவரை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்றவற்றுக்கு சான்றாகக் கூறுவார்கள்.
தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுகோண அறைகள் கொண்ட கூடு கட்டி தேனீக்கள் அதில் தேனைச் சேகரித்து வாழ்கின்றன. தேனீயின் கூடு வேலைக்காரத் தேனீக் களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியில் இருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும்.
அந்த அறைகளில் மூன்று வகைத் தேனீக்களும் தனித்தனி அறைகளில்தான் வாழும். தேனீக்களின் கூடு பொதுவாக மரங்கள், மலைக்குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்ற வற்றில் கட்டப்பட்டிருக்கும். ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் இவற்றுக்கிடையே எந்தவிதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.
தேன் கிடைக்கும் இடத்தை வேலைக்காரத் தேனீக்கள் அறிந்து வந்து அதை மற்ற தேனீக்களுக்கு நடனமாடித் தெரிவிக்கின்றன. இது ‘தேனீ நடனம்’ எனப்படும்.
தேனீயின் நடவடிக்கை, அவற்றின் தகவல் தொடர்பு வழிமுறை, பாதை போன்றவற்றை முதன்முதலில் ஆராய்ச்சி மேற்கொண்டவர் ஜெர்மன் பேராசிரியர் வான் ப்ரீச். இதற்காக அவருக்கு உலகின் பெரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
“உம் இறைவன் தேனீக்களுக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். ‘நீ மலைகளிலும், மரங்களிலும், (மனிதர்களாகிய) அவர்கள் கட்டுபவைகளிலும் கூடுகளை அமைத்துக் கொள்’ (என்றும்), ‘பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களில் இருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித்தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்’ (என்றும் உள்ளுணர்ச்சியை உண்டாக்கினான்); அதன் வயிறுகளில் இருந்து பல நிறங்களுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) நோய் நிவாரணி உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” (16:68) என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.
உள்ளுணர்வு என்பது ஓர் உயிரினம் வெளியில் இருந்து கற்றுக் கொள்ளாமலேயே கொண்டிருக்கும் நடத்தையாகும்.
இந்த வசனத்தில் தேனீக்கள் எங்கெங்கே கூடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்? எப்படித் தேனை உருவாக்க வேண்டும் ஆகியவற்றைத் தேனீக்களுக்கு இறைவன் (அல்லாஹ்) கற்றுத்தருகிறான். மலர்களில் உள்ள குளுக்கோசை தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. அவை வயிற்றுக்குள் சென்று மாற்றம் அடைந்து அதன் வயிற்றில் இருந்து வெளிப்படுகின்ற ஒரு கழிவுதான் தேன் என்பதை அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். தேனீக்கள் மலர்களில் இருந்து புசித்து அதன் மூலம் தேன் உருவாகிறது என்றும், அதன் வாயில் இருந்து தேன் வெளிப்படவில்லை; வயிற்றில் இருந்து வெளிப்படுகிறது என்றும் திருக்குர்ஆன் கூறி இருப்பதன் மூலம் 1,400 வருடங்களுக்கு முன்பு எந்த மனிதராலும் கற்பனையிலோ, கனவிலோகூட காண முடியாத அபூர்வ செய்தியாகும்.
மேலும் அந்த வசனத்தில் ‘பல நிறங்களுடைய பானம் (தேன்) வெளியாகிறது’ என்று சொல்லப்பட்டுள்ளது. தேனின் நிறம் மஞ்சள், வெளிர் மஞ்சள் மற்றும் கருமையும் மஞ்சளும் கலந்த நிறமாக உள்ளது.
‘தேனில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு’ என்ற திருக்குர்ஆனின் கருத்தை இன்றைய மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
தேனை ஆரோக்கியமானவர்களும் பருகலாம்; உடல் நலம் இல்லாதவர்களும் சாப்பிடலாம். எல்லா நேரங்களிலும், எல்லாப் பருவ காலங்களிலும் உண்ணலாம். சிறு குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். தேன் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ‘ஹீமோகுளோபின்’ அளவு அதிகரிக்கிறது. ரத்தம் சுத்தம் அடைகிறது.
தேன், தேனீக்களுக்கு உணவாக இருப்பதுடன், மனிதனுக்கு முக்கிய உணவாகவும், அருமருந்தாகவும் இருக்கிறது. பழங்கால எகிப்தியர்களின் பெரும்பாலான மருந்து வகைகளில் தேன் முக்கிய இடத்தைப் பெற்றது. தற்போது யுனானி மருந்துகள் பெரும்பாலும் தேனை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சுத்தமான தேன் கெட்டுப்போவதில்லை. எந்தத் தொழிற்சாலைகளிலும் மனிதனால் தேனை உருவாக்க முடியாது.
பாத்திமா மைந்தன்.
அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!
அல்லாஹ்வே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! உண்மையான இறைவனே!” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்தனை புரிந்த பின், நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள்.
உஹுத் போரில் உயிர் தியாகம் செய்தவர்களை அடக்கம் செய்து கொண்டிருந்தபோது, நபிகளாரின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்டது அதனைப் பார்த்து மனம் வருந்தி அழுதார்கள் நபி முஹம்மது (ஸல்). ஹம்ஸா(ரலி) அவர்களின் மகன் ஜாஃபிர்(ரலி) தன் தந்தையின் முகத்திலிருந்த துணியை விலக்கச் சென்றபோது சிலர் அவர்களைத் தடுத்தார்கள். அப்போது ஒப்பாரி வைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபிகளார் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஏன் அழுகிறாய்?” நீ அழுதாலும் அழாவிட்டாலும் வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து உயிர் தியாகிகளுக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
ஹம்ஸா(ரலி) அவர்களின் சிதைந்த உடலைக் காண அவருடைய சகோதரி ஸஃபியா அங்கு வந்தபோது, “நீங்கள் பார்க்க வேண்டாம், உங்களால் தாங்கிக் கொள்ள இயலாது” என்று எல்லோரும் கேட்டுக் கொண்டாலும் ஸஃபியா(ரலி) நான் நிச்சயமாகப் பார்த்தாக வேண்டுமென்று ஹம்ஸா(ரலி) அவர்களின் சிதைந்த உடலைப் பார்த்து “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். நாங்கள் அல்லாஹ்விற்காகவே இருக்கிறவர்கள், மீண்டும் அவனிடமே திரும்பக் கூடியவர்கள்” என்று கூறி ஹம்ஸா(ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள்.
உயிர் நீத்த தியாகிகளின் உடல்களை மறைப்பதற்குப் போதுமான துணிகள் கிடைக்கவில்லை. ஹம்ஸா(ரலி) அவர்களைப் போர்த்துவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அவரது தலையை மறைத்தால் பாதங்கள் தெரிந்தன. அதனால் கால்கள் சிறு செடியால் மூடப்பட்டன.

முஸ்லிம்களில் கிட்டத்தட்ட எழுபது பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் வீட்டிற்குச் சொல்லி அனுப்பட்டது. பெரும்பாலானோர் “நபியே! உங்களை நல்ல நிலையில் பார்த்தவுடன் மற்ற அனைத்து சோதனைகளையும் நாங்கள் சிறியதாகவே கருதுகிறோம்” என்பதாகவே அவர்களின் பதில் இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் கண்ணீர் மல்கியவர்களாகப் பிரார்த்தித்தார்கள், “அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரியது. நீ விரித்ததை மடக்குபவர் யாரும் இல்லை. நீ மடக்கியதை விரிப்பவர் யாரும் இல்லை. நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. நீ நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாரும் இல்லை. நீ கொடுத்ததைக் தடுப்பவர் யாரும் இல்லை. நீ நெருக்கமாக்கி வைத்ததைத் தூரமாக்கி வைப்பவர் யாருமில்லை. அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!
அல்லாஹ்வே! நீங்காத, அகன்று போகாத, நிரந்தரமான அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! சிரமமான நேரத்தில் உதவியையும், பயத்தின் நேரத்தில் பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்குக் கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்குக் கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! எங்களுக்கு இறைநம்பிக்கையைப் பிரியமாக்கி வை. அதை எங்களது உள்ளங்களில் அலங்கரித்து வை. இறை நிராகரிப்பு, உனது கட்டளைக்கு மாறுசெய்வது, உனக்குக் கட்டுப்படாமல் விலகிப்போவது ஆகியவற்றை எங்களுக்கு வெறுப்பாக்கி விடு. எங்களைப் பகுத்தறிவாளர்களாக ஆக்கிவிடு. அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை! முஸ்லிம்களாக எங்களை வாழச் செய்!
நஷ்டமடையாதவர்களாக, சோதனைக்குள்ளாகாதவர்களாக எங்களை நல்லோர்களுடன் சேர்த்து வை! அல்லாஹ்வே! உனது தூதர்களைப் பொய்யாக்கி, உனது வழியிலிருந்து தடுக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! அவர்கள் மீது உனது தண்டனையையும் வேதனையையும் இறக்குவாயாக! அல்லாஹ்வே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! உண்மையான இறைவனே!” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்தனை புரிந்த பின், நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள்.
ஸஹீஹ் புகாரி 3:56:2816, 2:23:1274-75, முஸ்னத் அஹ்மது, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
உஹுத் போரில் உயிர் தியாகம் செய்தவர்களை அடக்கம் செய்து கொண்டிருந்தபோது, நபிகளாரின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்டது அதனைப் பார்த்து மனம் வருந்தி அழுதார்கள் நபி முஹம்மது (ஸல்). ஹம்ஸா(ரலி) அவர்களின் மகன் ஜாஃபிர்(ரலி) தன் தந்தையின் முகத்திலிருந்த துணியை விலக்கச் சென்றபோது சிலர் அவர்களைத் தடுத்தார்கள். அப்போது ஒப்பாரி வைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபிகளார் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஏன் அழுகிறாய்?” நீ அழுதாலும் அழாவிட்டாலும் வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து உயிர் தியாகிகளுக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
ஹம்ஸா(ரலி) அவர்களின் சிதைந்த உடலைக் காண அவருடைய சகோதரி ஸஃபியா அங்கு வந்தபோது, “நீங்கள் பார்க்க வேண்டாம், உங்களால் தாங்கிக் கொள்ள இயலாது” என்று எல்லோரும் கேட்டுக் கொண்டாலும் ஸஃபியா(ரலி) நான் நிச்சயமாகப் பார்த்தாக வேண்டுமென்று ஹம்ஸா(ரலி) அவர்களின் சிதைந்த உடலைப் பார்த்து “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். நாங்கள் அல்லாஹ்விற்காகவே இருக்கிறவர்கள், மீண்டும் அவனிடமே திரும்பக் கூடியவர்கள்” என்று கூறி ஹம்ஸா(ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள்.
உயிர் நீத்த தியாகிகளின் உடல்களை மறைப்பதற்குப் போதுமான துணிகள் கிடைக்கவில்லை. ஹம்ஸா(ரலி) அவர்களைப் போர்த்துவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அவரது தலையை மறைத்தால் பாதங்கள் தெரிந்தன. அதனால் கால்கள் சிறு செடியால் மூடப்பட்டன.

முஸ்லிம்களில் கிட்டத்தட்ட எழுபது பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் வீட்டிற்குச் சொல்லி அனுப்பட்டது. பெரும்பாலானோர் “நபியே! உங்களை நல்ல நிலையில் பார்த்தவுடன் மற்ற அனைத்து சோதனைகளையும் நாங்கள் சிறியதாகவே கருதுகிறோம்” என்பதாகவே அவர்களின் பதில் இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் கண்ணீர் மல்கியவர்களாகப் பிரார்த்தித்தார்கள், “அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரியது. நீ விரித்ததை மடக்குபவர் யாரும் இல்லை. நீ மடக்கியதை விரிப்பவர் யாரும் இல்லை. நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. நீ நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாரும் இல்லை. நீ கொடுத்ததைக் தடுப்பவர் யாரும் இல்லை. நீ நெருக்கமாக்கி வைத்ததைத் தூரமாக்கி வைப்பவர் யாருமில்லை. அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!
அல்லாஹ்வே! நீங்காத, அகன்று போகாத, நிரந்தரமான அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! சிரமமான நேரத்தில் உதவியையும், பயத்தின் நேரத்தில் பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்குக் கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்குக் கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! எங்களுக்கு இறைநம்பிக்கையைப் பிரியமாக்கி வை. அதை எங்களது உள்ளங்களில் அலங்கரித்து வை. இறை நிராகரிப்பு, உனது கட்டளைக்கு மாறுசெய்வது, உனக்குக் கட்டுப்படாமல் விலகிப்போவது ஆகியவற்றை எங்களுக்கு வெறுப்பாக்கி விடு. எங்களைப் பகுத்தறிவாளர்களாக ஆக்கிவிடு. அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை! முஸ்லிம்களாக எங்களை வாழச் செய்!
நஷ்டமடையாதவர்களாக, சோதனைக்குள்ளாகாதவர்களாக எங்களை நல்லோர்களுடன் சேர்த்து வை! அல்லாஹ்வே! உனது தூதர்களைப் பொய்யாக்கி, உனது வழியிலிருந்து தடுக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! அவர்கள் மீது உனது தண்டனையையும் வேதனையையும் இறக்குவாயாக! அல்லாஹ்வே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! உண்மையான இறைவனே!” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்தனை புரிந்த பின், நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள்.
ஸஹீஹ் புகாரி 3:56:2816, 2:23:1274-75, முஸ்னத் அஹ்மது, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ தவறிவிட்டால் இருவரையோ அல்லது ஒருவரை இழந்துவிட்ட குழந்தை ‘அனாதை குழந்தை’ என்ற அடைமொழியுடன் இரக்கமாக அழைக்கப்படுகிறது.
அனாதை என்பதற்கு தமிழ் அகராதியில் வரும் பொருள் ‘திக்கற்றவன்’, ‘ஆதரவற்றவன்’ ஆகும்.
‘ஆதரிப்பார் அற்றவன் அனாதை’, ‘ஆதரிக்கும் பெற்றோரை இழப்பவன் அனாதை ஆவான்’ என இஸ்லாம் கூறுகிறது.
ஒரு குழந்தை தன் பெற்றோரின் அரவணைப்பிலும் ஆதரவிலும், அன்பிலும், அக்கறையிலும், பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வளர்கிறது.
பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ தவறிவிட்டால் இருவரையோ அல்லது ஒருவரை இழந்துவிட்ட குழந்தை ‘அனாதை குழந்தை’ என்ற அடைமொழியுடன் இரக்கமாக அழைக்கப்படுகிறது.
இல்லறத்தை துறந்தால் துறவி.
வாழ்க்கைத் துணையை இழந்தால் விதவை.
செல்வத்தை இழந்தால் ஏழை.
சொந்த நாட்டை துறந்தால் அகதி.
பெற்றோரை இழந்தால் அனாதை.
அனாதைகளை ஆதரிப்பதால் அனாதை இல்லங்கள் ஊர் தோறும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. முதல் அனாதை இல்லத்தை தோற்றுவித்தவன் அவனே இறைவன் ஆவான். அவன் அன்பாளன்; கிருபையாளன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில், அனாதைகளின் பாதுகாப்பு, அவர்களின் மறுவாழ்வு, அவர்களின் பராமரிப்பு, அவர்களின் உரிமை, அவர்களின் பொருளாதாரம், அவர்களின் வாழ்வாதாரம், அவர்களின் இல்லறம் போன்ற அடிப்படையான உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தமாக இருபத்திரெண்டு இடங்களில் பேசிவருகிறான். இந்தளவு இறைவனே வலியுறுத்தி சொல்லுவது அனாதைகளின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
‘(நபியே) அவன் உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?’
‘உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்’.
‘உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்’. (திருக்குர்ஆன்: 93–6,7,8)
அனாதைகளின் முக்கியமான மூன்று அம்சங்களை பற்றி மேற்கூறப்பட்ட திருக்குர்ஆனின் வசனம் கோடிட்டு காட்டுகிறது.
1. அனாதைகளின் அரவணைப்பு, 2. அனாதைகளின் அறியாமையை போக்கி அவர்களை அறிவுசார்ந்த சமூகமாக மாற்றிக் காட்டுவது, 3. அவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக ஏற்றம் காணச்செய்வது.
இவை அடிப்படையான அம்சங்கள். பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் ஆகியவை தான் ஒரு அனாதையை சமூகத்தில் அந்தஸ்து உடையவனாக மாற்றிக்காட்டுகிறது.
பெற்றோரை இழந்த குழந்தை, பருவ வயதை அடையும் வரைதான் அனாதை. பருவ வயதை அடைந்துவிட்ட எவரும் இஸ்லாத்தில் அனாதை இல்லை. பருவ வயதை அடையும் வரை நன்மை தரும் செயலாக உள்ளது.
‘நானும், அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும், மற்றொரு விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட விரல்) சைகை செய்தார்கள்’ (அறிவிப்பாளர்: ஸஹ்ல்பின் ஸஅத் (ரலி)
அனாதை என்பது நிரந்தரமான ஒரு அடையாளம் அல்ல. பெற்றோரை இழந்த குழந்தை பருவ வயதை அடையும் வரைதான் அனாதை. இது தற்காலிகமானது.
‘பருவ வயதை அடைந்த ஒருவர் அனாதையாக இருக்கமுடியாது; மேலும் மாதவிடாய் ஏற்பட்ட ஒருத்தியும் அனாதையாக இருக்க முடியாது’ என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
சரி உண்மையான அனாதை யார் தெரியுமா? இதோ அறிவுக் கருவூலம் அலி (ரலி) அவர்களின் சிந்தனையை கவனிப்போம்.
‘பெற்றோரை இழந்தவன் உண்மையான அனாதை இல்லை. உண்மையான அனாதை என்பவன் கல்வியும், ஒழுக்கத்தையும் இழந்தவன் தான்’.
கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டையும் இழந்தவன் நிரந்தரமான அனாதை ஆவான்.
நபி (ஸல்) அவர்களும் அனாதை தான். அவர்கள் பருவ வயதை அடையும் இந்த அடையாளம் தற்காலிகமாக இருந்தது. ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் கல்வியையும், ஒழுக்கத்தையும் இழந்த நிரந்தரமான அனாதை அல்ல.
நபித்தோழர்களில் அபூ ஹுரைரா (ரலி), ஜுபைர் பின் அவ்வாம் (ரலி) ஆகிய இருவரும் அனாதைகளே. எனினும் இவர்கள் இழந்தது பெற்றோரைத்தான். கல்வியையும் ஒழுக்கத்தையும் அல்ல.
குடும்பத்தில் அனாதை; கல்வியில் சாதனை. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஆவார்கள். அனாதையிலும் கடும் வறுமையிலும் வாழ்ந்த அவர் ‘5374’ நபி மொழிகளை அறிவித்திருக்கிறார்.
அனாதையாக பிறந்தாலும் கல்விக்காக வாழ்ந்தவர் அவர். இவ்வாறே எத்தனையோ அறிஞர்கள் பெற்றோரை இழந்த அனாதைகளானாலும், கல்வியையும், ஒழுக்கத்தையும் ஒரு போதும் இழக்கவில்லை.
இந்த பட்டியலில் இமாம் புகாரி, இமாம் ஷாபி, இமாம் அஹ்மது பின் ஹன்பால், இமாம் இப்னு ஜங்ஸி, இமாம் அவ்ஜாயி, இமாம் சுயூதி, மாமேதை இப்னுஹஜர், இமாம் தவ்ரி ஆகியோர் அனாதைகளே. என்றாலும் கல்வியையும் ஒழுக்கத்தையும் அவர்கள் ஒருபோதும் இழக்கவில்லை.
அனாதைகள் எனும் அடையாளத்தைவிட இஸ்லாமிய மார்க்கமேதைகள் எனும் பட்டத்துடன் அவர்கள் பேரும், புகழும் பெற்று இன்று வரைக்கும், உலகம் அழியும் வரைக்கும் அழியாப்புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை புகழுடன் வாழவைத்தது கல்வியும் ஒழுக்கமும் தான்.
இஸ்லாமியர்கள் அனைவரும் கல்வி அறிவும், ஒழுக்கமும் பெற்று சிறந்துவாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்தனை செய்வோம்.
மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
‘ஆதரிப்பார் அற்றவன் அனாதை’, ‘ஆதரிக்கும் பெற்றோரை இழப்பவன் அனாதை ஆவான்’ என இஸ்லாம் கூறுகிறது.
ஒரு குழந்தை தன் பெற்றோரின் அரவணைப்பிலும் ஆதரவிலும், அன்பிலும், அக்கறையிலும், பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வளர்கிறது.
பெற்றோரில் இருவரோ அல்லது ஒருவரோ தவறிவிட்டால் இருவரையோ அல்லது ஒருவரை இழந்துவிட்ட குழந்தை ‘அனாதை குழந்தை’ என்ற அடைமொழியுடன் இரக்கமாக அழைக்கப்படுகிறது.
இல்லறத்தை துறந்தால் துறவி.
வாழ்க்கைத் துணையை இழந்தால் விதவை.
செல்வத்தை இழந்தால் ஏழை.
சொந்த நாட்டை துறந்தால் அகதி.
பெற்றோரை இழந்தால் அனாதை.
அனாதைகளை ஆதரிப்பதால் அனாதை இல்லங்கள் ஊர் தோறும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. முதல் அனாதை இல்லத்தை தோற்றுவித்தவன் அவனே இறைவன் ஆவான். அவன் அன்பாளன்; கிருபையாளன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில், அனாதைகளின் பாதுகாப்பு, அவர்களின் மறுவாழ்வு, அவர்களின் பராமரிப்பு, அவர்களின் உரிமை, அவர்களின் பொருளாதாரம், அவர்களின் வாழ்வாதாரம், அவர்களின் இல்லறம் போன்ற அடிப்படையான உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தமாக இருபத்திரெண்டு இடங்களில் பேசிவருகிறான். இந்தளவு இறைவனே வலியுறுத்தி சொல்லுவது அனாதைகளின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
‘(நபியே) அவன் உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?’
‘உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்’.
‘உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்’. (திருக்குர்ஆன்: 93–6,7,8)
அனாதைகளின் முக்கியமான மூன்று அம்சங்களை பற்றி மேற்கூறப்பட்ட திருக்குர்ஆனின் வசனம் கோடிட்டு காட்டுகிறது.
1. அனாதைகளின் அரவணைப்பு, 2. அனாதைகளின் அறியாமையை போக்கி அவர்களை அறிவுசார்ந்த சமூகமாக மாற்றிக் காட்டுவது, 3. அவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக ஏற்றம் காணச்செய்வது.
இவை அடிப்படையான அம்சங்கள். பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் ஆகியவை தான் ஒரு அனாதையை சமூகத்தில் அந்தஸ்து உடையவனாக மாற்றிக்காட்டுகிறது.
பெற்றோரை இழந்த குழந்தை, பருவ வயதை அடையும் வரைதான் அனாதை. பருவ வயதை அடைந்துவிட்ட எவரும் இஸ்லாத்தில் அனாதை இல்லை. பருவ வயதை அடையும் வரை நன்மை தரும் செயலாக உள்ளது.
‘நானும், அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும், மற்றொரு விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட விரல்) சைகை செய்தார்கள்’ (அறிவிப்பாளர்: ஸஹ்ல்பின் ஸஅத் (ரலி)
அனாதை என்பது நிரந்தரமான ஒரு அடையாளம் அல்ல. பெற்றோரை இழந்த குழந்தை பருவ வயதை அடையும் வரைதான் அனாதை. இது தற்காலிகமானது.
‘பருவ வயதை அடைந்த ஒருவர் அனாதையாக இருக்கமுடியாது; மேலும் மாதவிடாய் ஏற்பட்ட ஒருத்தியும் அனாதையாக இருக்க முடியாது’ என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
சரி உண்மையான அனாதை யார் தெரியுமா? இதோ அறிவுக் கருவூலம் அலி (ரலி) அவர்களின் சிந்தனையை கவனிப்போம்.
‘பெற்றோரை இழந்தவன் உண்மையான அனாதை இல்லை. உண்மையான அனாதை என்பவன் கல்வியும், ஒழுக்கத்தையும் இழந்தவன் தான்’.
கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டையும் இழந்தவன் நிரந்தரமான அனாதை ஆவான்.
நபி (ஸல்) அவர்களும் அனாதை தான். அவர்கள் பருவ வயதை அடையும் இந்த அடையாளம் தற்காலிகமாக இருந்தது. ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் கல்வியையும், ஒழுக்கத்தையும் இழந்த நிரந்தரமான அனாதை அல்ல.
நபித்தோழர்களில் அபூ ஹுரைரா (ரலி), ஜுபைர் பின் அவ்வாம் (ரலி) ஆகிய இருவரும் அனாதைகளே. எனினும் இவர்கள் இழந்தது பெற்றோரைத்தான். கல்வியையும் ஒழுக்கத்தையும் அல்ல.
குடும்பத்தில் அனாதை; கல்வியில் சாதனை. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஆவார்கள். அனாதையிலும் கடும் வறுமையிலும் வாழ்ந்த அவர் ‘5374’ நபி மொழிகளை அறிவித்திருக்கிறார்.
அனாதையாக பிறந்தாலும் கல்விக்காக வாழ்ந்தவர் அவர். இவ்வாறே எத்தனையோ அறிஞர்கள் பெற்றோரை இழந்த அனாதைகளானாலும், கல்வியையும், ஒழுக்கத்தையும் ஒரு போதும் இழக்கவில்லை.
இந்த பட்டியலில் இமாம் புகாரி, இமாம் ஷாபி, இமாம் அஹ்மது பின் ஹன்பால், இமாம் இப்னு ஜங்ஸி, இமாம் அவ்ஜாயி, இமாம் சுயூதி, மாமேதை இப்னுஹஜர், இமாம் தவ்ரி ஆகியோர் அனாதைகளே. என்றாலும் கல்வியையும் ஒழுக்கத்தையும் அவர்கள் ஒருபோதும் இழக்கவில்லை.
அனாதைகள் எனும் அடையாளத்தைவிட இஸ்லாமிய மார்க்கமேதைகள் எனும் பட்டத்துடன் அவர்கள் பேரும், புகழும் பெற்று இன்று வரைக்கும், உலகம் அழியும் வரைக்கும் அழியாப்புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை புகழுடன் வாழவைத்தது கல்வியும் ஒழுக்கமும் தான்.
இஸ்லாமியர்கள் அனைவரும் கல்வி அறிவும், ஒழுக்கமும் பெற்று சிறந்துவாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்தனை செய்வோம்.
மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்ற சொல்லைப் போல அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பொருள் செறிவுள்ள வார்த்தைகள் பல உள்ளன.
‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்ற சொல்லைப் போல அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பொருள் செறிவுள்ள வார்த்தைகள் பல உள்ளன.
எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதைத் தொடங்குவதற்கு முன்பு, முஸ்லிம்கள் சொல்லும் வார்த்தை, ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.’ இதற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன் என்று பொருள்.
ஆச்சரியத்தைத் தரக்கூடிய பொருளைப் பார்க்கும்போது சொல்ல வேண்டிய சொல், ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் மிகவும் தூய்மையானவன்)
கோபம் வரும்போதும், தீய செயல்களில் ஈடுபடாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்போதும், ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ (சபிக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கில் இருந்து நான் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்) என்று சொல்ல வேண்டும்.
ஒரு நண்பரின் மகளுக்கு திருமணம். அதில் பங்கேற்க முடியாத உறவினர் அவரைச் சந்தித்து, ‘முக்கிய வேலை இருந்ததால் உங்கள் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணம் சிறப்பாக நடந்ததா?’ என்று வினவுகிறார். அதற்கு அந்த நண்பர், ‘ஆமாம். சிறப்பாக நடந்தது’ என்று சொல்ல மாட்டார். அதற்கு மாறாக ‘மாஷா அல்லாஹ்’ என்று பதில் அளிப்பார்.
‘மாஷா அல்லாஹ்’ என்பதற்கு ‘இறைவனால் நடந்தது’, ‘இறைவன் நாடியதால் நடந்தது’ என்று பொருள். எந்தவொரு சுப நிகழ்ச்சி நடந்தாலோ அல்லது உயர்வு தேடி வந்தாலோ அதற்குக் காரணம் இறைவன் என்று நம்புவதும், தான் இதற்கு எந்தவிதத்திலும் காரணம் அல்ல; இது இறைவனால் நடந்தது என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதன் அடிப்படையிலேயே ‘மாஷா அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
யாராவது நமக்கு நன்மை செய்யும்போது, ‘ஜஸாக்கல்லாஹ் கைரா’ என்று சொல்ல வேண்டும். இதற்கு ‘அல்லாஹ் உங்களுக்கு இதை விட சிறந்ததைப் பரிசளிப்பானாக’ என்றும், ‘அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி அருள்வானாக’ என்றும் அர்த்தம். ‘ஜஸாக்கல்லாஹ் கைரா’ என்பது ஆங்கிலத்தில் ‘தேங்க்ஸ்’ என்று சொல்வது போலவும், தமிழில், ‘நன்றி’ என்று கூறுவது போலவும் அமையும். இருந்த போதிலும் இந்தச் சொல்லை ஆழ்ந்து நோக்கினால் அதன் உயர்ந்த நோக்கம் புலப்படும். உதவி செய்தவருக்கு வெறுமனே ‘நன்றி’ சொல்வது நன்றன்று என்று கருதி, ‘நீங்கள் செய்த இந்த உதவிக்காக, ‘இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவான்’ என்ற ஒற்றை வாக்கியத்தில், இறைவனை நினைவு கூர்வதையும், உதவி செய்தவருக்கு இறைவனிடத்தில் உயர்வை வேண்டி பிரார்த்திப்பதிலும் உள்ளடங்கிய மேன்மை தெரிகிறது.
செயற்கரிய சாதனைகளைச் செய்து முடித்தபோதும், உண்டு முடித்தவுடனும் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று மொழிய வேண்டும். இதற்கு, ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று அர்த்தம்.
அதே நேரத்தில் தும்மும்போது தும்பியவர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று சொல்ல வேண்டும். அதைக் கேட்டவர், தும்மியவருக்கு, ‘யர்கமுகல்லாஹ்’ (இறைவன் உங்கள் மீது அருள் பாலிப்பானாக) என்று பதில் கூற வேண்டும். சாதனைகளைப் புரிவதற்கும், உணவைப் பெறுவதற்கும் இறைவனின் அருள் வேண்டும். அதனால் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்கிறோம். ஆனால் தும்மும்போதும் ஏன் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூற வேண்டும்? ஆழ்ந்து சிந்தித்தால் அதன் அர்த்தம் புரியும்.
தும்மும்போது இதயம் நின்று விடுவதைப் போல ஒரு வினாடி நின்று மீண்டும் இயங்குவதைப் பார்க்கலாம். அதனால்தான் தும்மும்போது இறைவனைப் புகழும் வகையில் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்கிறோம். இதைப் போலவே பிற மதத்தைச் சேர்ந்த சகோதரர்களும் தும்மும்போது அவரவர் கடவுள்களை நினைவு கூர்வது இங்கே நினைவு கூரத்தக்கது.
முஸ்லிம்கள் அடிக்கடி பயன்படுத்தும் இன்னொரு சொல், ‘தவக்கல்து அலல்லாஹ்.’ இதற்கு ‘இறைவன் மீது நான் பொறுப்பு சாற்றுகிறேன்’, ‘இறைவன் உன்னைப் பாதுகாப்பான்’ என்பதாகும். ‘தவக்குல்’ என்பது ஒருவன் இறைவன் மீது நம்பிக்கை வைத்து தன் செயல்கள் அனைத்தையும் அவனிடமே ஒப்படைப்பதாகும்.
‘எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்’ (திருக்குர்ஆன்–65:3) என்பது இறைமறை வசனம்.
வெளியிலோ, வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லும் மகனை ஒரு தாய் வாழ்த்தும்போது, ‘தவக்கல்து அலல்லாஹ்’ என்பார்கள். இறைவனின் பாதுகாப்பே இறை நம்பிக்கையாளர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பாகும்.
ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு பெரும் சோதனை ஏற்பட்டாலும் கலங்குவதில்லை. ‘இறை விதிப்படியே இது நடந்திருக்கிறது’ என்ற எண்ணமே அதற்குக் காரணம். ஒருவர் மரணம் அடைந்து விட்டால் முஸ்லிம்கள் சொல்லக்கூடிய வார்த்தை ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ என்பதாகும். இதற்கு ‘நாம் இறைவனுக்காகவே இருக்கின்றோம்; அவனிடமே செல்லக் கூடியவராக இருக்கின்றோம்’ என்று அர்த்தம். நம்மிடம் உள்ளவை அனைத்தும் இறைவனுடையதே; நாமும் அவனுடையதாகவே இருக்கின்றோம். அவனே அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறான்.
ஆக முஸ்லிம்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவனை முன்னிறுத்தியே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
நிற்கும்போதும், நடக்கும்போதும், பார்க்கும்போதும் கேட்கும்போதும், பேசும்போதும், எழுதும்போதும், தும்மும்போதும், தூங்கும்போதும், எழும்போதும், எப்போதும் இறைவனையே தங்கள் சிந்தையில், செயலில், சொல்லில் ஏற்றுகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதைத் தொடங்குவதற்கு முன்பு, முஸ்லிம்கள் சொல்லும் வார்த்தை, ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.’ இதற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன் என்று பொருள்.
ஆச்சரியத்தைத் தரக்கூடிய பொருளைப் பார்க்கும்போது சொல்ல வேண்டிய சொல், ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் மிகவும் தூய்மையானவன்)
கோபம் வரும்போதும், தீய செயல்களில் ஈடுபடாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்போதும், ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ (சபிக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கில் இருந்து நான் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்) என்று சொல்ல வேண்டும்.
ஒரு நண்பரின் மகளுக்கு திருமணம். அதில் பங்கேற்க முடியாத உறவினர் அவரைச் சந்தித்து, ‘முக்கிய வேலை இருந்ததால் உங்கள் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணம் சிறப்பாக நடந்ததா?’ என்று வினவுகிறார். அதற்கு அந்த நண்பர், ‘ஆமாம். சிறப்பாக நடந்தது’ என்று சொல்ல மாட்டார். அதற்கு மாறாக ‘மாஷா அல்லாஹ்’ என்று பதில் அளிப்பார்.
‘மாஷா அல்லாஹ்’ என்பதற்கு ‘இறைவனால் நடந்தது’, ‘இறைவன் நாடியதால் நடந்தது’ என்று பொருள். எந்தவொரு சுப நிகழ்ச்சி நடந்தாலோ அல்லது உயர்வு தேடி வந்தாலோ அதற்குக் காரணம் இறைவன் என்று நம்புவதும், தான் இதற்கு எந்தவிதத்திலும் காரணம் அல்ல; இது இறைவனால் நடந்தது என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதன் அடிப்படையிலேயே ‘மாஷா அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
யாராவது நமக்கு நன்மை செய்யும்போது, ‘ஜஸாக்கல்லாஹ் கைரா’ என்று சொல்ல வேண்டும். இதற்கு ‘அல்லாஹ் உங்களுக்கு இதை விட சிறந்ததைப் பரிசளிப்பானாக’ என்றும், ‘அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி அருள்வானாக’ என்றும் அர்த்தம். ‘ஜஸாக்கல்லாஹ் கைரா’ என்பது ஆங்கிலத்தில் ‘தேங்க்ஸ்’ என்று சொல்வது போலவும், தமிழில், ‘நன்றி’ என்று கூறுவது போலவும் அமையும். இருந்த போதிலும் இந்தச் சொல்லை ஆழ்ந்து நோக்கினால் அதன் உயர்ந்த நோக்கம் புலப்படும். உதவி செய்தவருக்கு வெறுமனே ‘நன்றி’ சொல்வது நன்றன்று என்று கருதி, ‘நீங்கள் செய்த இந்த உதவிக்காக, ‘இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவான்’ என்ற ஒற்றை வாக்கியத்தில், இறைவனை நினைவு கூர்வதையும், உதவி செய்தவருக்கு இறைவனிடத்தில் உயர்வை வேண்டி பிரார்த்திப்பதிலும் உள்ளடங்கிய மேன்மை தெரிகிறது.
செயற்கரிய சாதனைகளைச் செய்து முடித்தபோதும், உண்டு முடித்தவுடனும் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று மொழிய வேண்டும். இதற்கு, ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று அர்த்தம்.
அதே நேரத்தில் தும்மும்போது தும்பியவர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று சொல்ல வேண்டும். அதைக் கேட்டவர், தும்மியவருக்கு, ‘யர்கமுகல்லாஹ்’ (இறைவன் உங்கள் மீது அருள் பாலிப்பானாக) என்று பதில் கூற வேண்டும். சாதனைகளைப் புரிவதற்கும், உணவைப் பெறுவதற்கும் இறைவனின் அருள் வேண்டும். அதனால் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்கிறோம். ஆனால் தும்மும்போதும் ஏன் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூற வேண்டும்? ஆழ்ந்து சிந்தித்தால் அதன் அர்த்தம் புரியும்.
தும்மும்போது இதயம் நின்று விடுவதைப் போல ஒரு வினாடி நின்று மீண்டும் இயங்குவதைப் பார்க்கலாம். அதனால்தான் தும்மும்போது இறைவனைப் புகழும் வகையில் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்கிறோம். இதைப் போலவே பிற மதத்தைச் சேர்ந்த சகோதரர்களும் தும்மும்போது அவரவர் கடவுள்களை நினைவு கூர்வது இங்கே நினைவு கூரத்தக்கது.
முஸ்லிம்கள் அடிக்கடி பயன்படுத்தும் இன்னொரு சொல், ‘தவக்கல்து அலல்லாஹ்.’ இதற்கு ‘இறைவன் மீது நான் பொறுப்பு சாற்றுகிறேன்’, ‘இறைவன் உன்னைப் பாதுகாப்பான்’ என்பதாகும். ‘தவக்குல்’ என்பது ஒருவன் இறைவன் மீது நம்பிக்கை வைத்து தன் செயல்கள் அனைத்தையும் அவனிடமே ஒப்படைப்பதாகும்.
‘எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்’ (திருக்குர்ஆன்–65:3) என்பது இறைமறை வசனம்.
வெளியிலோ, வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லும் மகனை ஒரு தாய் வாழ்த்தும்போது, ‘தவக்கல்து அலல்லாஹ்’ என்பார்கள். இறைவனின் பாதுகாப்பே இறை நம்பிக்கையாளர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பாகும்.
ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு பெரும் சோதனை ஏற்பட்டாலும் கலங்குவதில்லை. ‘இறை விதிப்படியே இது நடந்திருக்கிறது’ என்ற எண்ணமே அதற்குக் காரணம். ஒருவர் மரணம் அடைந்து விட்டால் முஸ்லிம்கள் சொல்லக்கூடிய வார்த்தை ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ என்பதாகும். இதற்கு ‘நாம் இறைவனுக்காகவே இருக்கின்றோம்; அவனிடமே செல்லக் கூடியவராக இருக்கின்றோம்’ என்று அர்த்தம். நம்மிடம் உள்ளவை அனைத்தும் இறைவனுடையதே; நாமும் அவனுடையதாகவே இருக்கின்றோம். அவனே அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறான்.
ஆக முஸ்லிம்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவனை முன்னிறுத்தியே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
நிற்கும்போதும், நடக்கும்போதும், பார்க்கும்போதும் கேட்கும்போதும், பேசும்போதும், எழுதும்போதும், தும்மும்போதும், தூங்கும்போதும், எழும்போதும், எப்போதும் இறைவனையே தங்கள் சிந்தையில், செயலில், சொல்லில் ஏற்றுகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
நாம் அதிக அக்கறையுடனும், அதிக கவனமுடனும் இருக்க வேண்டும். பிள்ளைகளும் தம் பெற்றோர் படும் சிரமங்களையும் கஷ்டங்களையும் கொஞ்சமாவது புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
கோடைகால விடுமுறை என்றாலே எல்லாருக்கும் கொண்டாட்டம் தான். அதிகாலை எழ வேண்டியதில்லை. அவசர அவசரமாக தயாராக வேண்டியதில்லை. நீண்ட நேரம் தூங்கலாம். ஜாலியாய் இருக்கலாம் என்றுதான் இன்றைய பிள்ளைகளின் பிஞ்சுமனம் நினைக்கிறது.
எப்போதுமே நாம் நமது ஓய்வுநேரங்களையும், விடுமுறை நாட்களையும் வீணாக கழித்துவிடக்கூடாது. சும்மா இருந்தாலும் காலமும் நேரமும் ஓடத்தான் செய்யும். காலம் கடந்த பிறகு கடைசி காலத்தில் நாம் வருத்தப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
எனவே விடுமுறை தினங்களை வீண், விரயமாக்கி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரவரின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விடுமுறைகாலப் பயிற்சிகளில் சேர்ந்து அவற்றை கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். மேலும் குழந்தைகளுக்கு அறிந்துகொள்ளவேண்டிய வாழ்வியல் பயிற்சிகளை அளிப்பது பெற்றோரின் கடமையாகும்.
இந்த நேரத்தில் அவர்களை நாம் எதற்கும் கண்டுக்காமல், எதையும் கண்டிக்காமல் அப்படியே விட்டு விடுவது, அல்லது அவர்களுடன் எங்கும் செல்லாமல் அல்லது, அவர்களை எங்கும் செல்லவிடாமல், அவர்களுடன் எதையும் பேசாமல் அல்லது அவர்கள் எதையும் பேசிவிடாமல் வீட்டுக்குள்ளேயேஅடைத்துவைப்பது, அல்லது வீதியில் அவிழ்த்து விடுவது இரண்டுமே போற்றத்தக்க செயல் அல்ல.
‘பெற்றோர் மீதும், (பெற்றெடுத்த தம்) பிள்ளைகளின் மீதும் சத்தியமாக....’ (90:3) என்பது திருக்குர்ஆன் வசனம் ஆகும்.
அல்லாஹ் எதன் மீதெல்லாம் சத்தியம் செய்து சொல்கிறானோ அதுவெல்லாம் நம் கவனத்திற்குரியது, நம் கண்ணியத்திற்குரியது என்பது திருக்குர்ஆன் விரிவுரையின் பொதுவிதி.
இவ்வகையில் நம் பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் கவனிப்பிற்கும், கண்ணியத்திற்கும் உரியவர்கள் என்பதை என்றும் நாம் மறந்து விடக்கூடாது.
‘எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், இறை வணக்கத்திலும்) முயல்வீராக’ (திருக்குர்ஆன் 94:7)
இந்த இறைமறை வசனம் நமக்கு அழுத்தமான, ஆழமான ஒருசெய்தியைச் சொல்கிறது. அதாவது நீங்கள் ஒருசெயலை செய்து முடித்துவிட்டால், அடுத்த ஒரு செயலுக்கு தயாராகி விடுங்கள் என்பதே அது. ஆக ஓய்வு என்பது ஒரு செயலுக்குத்தானே தவிர நமக்கு அல்ல என்பது தெள்ளதெளிவாகவே புரிகிறது. இது இந்த விடுமுறைக்கும் பொருந்தும். நம்ம பிள்ளைகளுக்கும் பொருந்தும்.
‘ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்குத் தரும் பரிசுகளில் ஆக மிகச் சிறந்தது நல்லொழுக்கமே’ என்றுரைத்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.
அந்த நல்லொழுக்கம் என்பது இதுபோன்ற பயிற்சிகளையும், அதற்கான முயற்சிகளையும் குறிக்கும். ஒழுக்கமான ஒரு வாழ்க்கைக்கு எதுவெல்லாம் துணை நிற்குமோ அதுவும் இன்னொரு நல்லொழுக்கம் தான். பிள்ளைகள் சும்மா இருக்கும் போதுதான் தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு வேலை வந்துவிட்டால் நிச்சயம் அவர்கள் நல்ல பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும், உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை ‘உஃப்’ (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக. இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக. (திருக்குர்ஆன் 17:23,24)
இந்த இறைமறை வசனங்கள் சொல்லிக்காட்டுவதில் இருந்தே ஒரு பெற்றோரும், பிள்ளைகளும் எப்படியிருக்க வேண்டும் என்பதை மிகத்துல்லியமாக நாம் எடை போட்டுப்பார்த்துக் கொள்ள முடியும். எனவே நம் பிள்ளைகள் நமக்கு பிரார்த்தனை செய்பவர்களாக மிளிர வேண்டும் என்றால் அவர்களை நாம் மிகச்சரியான ஒரு பாதையில் செலுத்தினால் தான் அவர்கள் மிகச்சரியாக செயல்படுவார்கள். தம் பெற்றோரின் உயர்வு என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
அதற்கு இந்த விடுமுறையும் நிச்சயம் துணைபுரியும். இந்த நேரங்களில் நாம் தான் நமது பிள்ளைகளை கண்ணும், கருத்துமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையெனில் அவர்கள் வெகுசீக்கிரத்தில் வழிதவறிப்போகும் நேரமும் இதுதான்.
எனவே நாம் அதிக அக்கறையுடனும், அதிக கவனமுடனும் இருக்க வேண்டும். பிள்ளைகளும் தம் பெற்றோர் படும் சிரமங்களையும் கஷ்டங்களையும் கொஞ்சமாவது புரிந்து கொண்டு நடக்க வேண்டும். எந்த வாய்ப்புகளுமே ஓரிரு முறைதான் நம் வீட்டுக் கதவுகளை தட்டும். ஆனால் நாம் தான் நமது கதவை திறப்பதில்லை அல்லது கதவை திறப்பதற்கு வீட்டில் இருப்பதில்லை. இனியேனும் நாம் நமது வீடுகளில் இல்லாவிட்டாலும் நல்ல நல்ல பயிற்சிக் கூடங்களில் இருப்போமே...!
வாருங்கள்...! விடுமுறைகளைப் போற்றுவோம்..! கடுமுறைகளை மாற்றுவோம்...!
மவுலவீ எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3
எப்போதுமே நாம் நமது ஓய்வுநேரங்களையும், விடுமுறை நாட்களையும் வீணாக கழித்துவிடக்கூடாது. சும்மா இருந்தாலும் காலமும் நேரமும் ஓடத்தான் செய்யும். காலம் கடந்த பிறகு கடைசி காலத்தில் நாம் வருத்தப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
எனவே விடுமுறை தினங்களை வீண், விரயமாக்கி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரவரின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விடுமுறைகாலப் பயிற்சிகளில் சேர்ந்து அவற்றை கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். மேலும் குழந்தைகளுக்கு அறிந்துகொள்ளவேண்டிய வாழ்வியல் பயிற்சிகளை அளிப்பது பெற்றோரின் கடமையாகும்.
இந்த நேரத்தில் அவர்களை நாம் எதற்கும் கண்டுக்காமல், எதையும் கண்டிக்காமல் அப்படியே விட்டு விடுவது, அல்லது அவர்களுடன் எங்கும் செல்லாமல் அல்லது, அவர்களை எங்கும் செல்லவிடாமல், அவர்களுடன் எதையும் பேசாமல் அல்லது அவர்கள் எதையும் பேசிவிடாமல் வீட்டுக்குள்ளேயேஅடைத்துவைப்பது, அல்லது வீதியில் அவிழ்த்து விடுவது இரண்டுமே போற்றத்தக்க செயல் அல்ல.
‘பெற்றோர் மீதும், (பெற்றெடுத்த தம்) பிள்ளைகளின் மீதும் சத்தியமாக....’ (90:3) என்பது திருக்குர்ஆன் வசனம் ஆகும்.
அல்லாஹ் எதன் மீதெல்லாம் சத்தியம் செய்து சொல்கிறானோ அதுவெல்லாம் நம் கவனத்திற்குரியது, நம் கண்ணியத்திற்குரியது என்பது திருக்குர்ஆன் விரிவுரையின் பொதுவிதி.
இவ்வகையில் நம் பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் கவனிப்பிற்கும், கண்ணியத்திற்கும் உரியவர்கள் என்பதை என்றும் நாம் மறந்து விடக்கூடாது.
‘எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், இறை வணக்கத்திலும்) முயல்வீராக’ (திருக்குர்ஆன் 94:7)
இந்த இறைமறை வசனம் நமக்கு அழுத்தமான, ஆழமான ஒருசெய்தியைச் சொல்கிறது. அதாவது நீங்கள் ஒருசெயலை செய்து முடித்துவிட்டால், அடுத்த ஒரு செயலுக்கு தயாராகி விடுங்கள் என்பதே அது. ஆக ஓய்வு என்பது ஒரு செயலுக்குத்தானே தவிர நமக்கு அல்ல என்பது தெள்ளதெளிவாகவே புரிகிறது. இது இந்த விடுமுறைக்கும் பொருந்தும். நம்ம பிள்ளைகளுக்கும் பொருந்தும்.
‘ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்குத் தரும் பரிசுகளில் ஆக மிகச் சிறந்தது நல்லொழுக்கமே’ என்றுரைத்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.
அந்த நல்லொழுக்கம் என்பது இதுபோன்ற பயிற்சிகளையும், அதற்கான முயற்சிகளையும் குறிக்கும். ஒழுக்கமான ஒரு வாழ்க்கைக்கு எதுவெல்லாம் துணை நிற்குமோ அதுவும் இன்னொரு நல்லொழுக்கம் தான். பிள்ளைகள் சும்மா இருக்கும் போதுதான் தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு வேலை வந்துவிட்டால் நிச்சயம் அவர்கள் நல்ல பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும், உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை ‘உஃப்’ (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக. இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக. (திருக்குர்ஆன் 17:23,24)
இந்த இறைமறை வசனங்கள் சொல்லிக்காட்டுவதில் இருந்தே ஒரு பெற்றோரும், பிள்ளைகளும் எப்படியிருக்க வேண்டும் என்பதை மிகத்துல்லியமாக நாம் எடை போட்டுப்பார்த்துக் கொள்ள முடியும். எனவே நம் பிள்ளைகள் நமக்கு பிரார்த்தனை செய்பவர்களாக மிளிர வேண்டும் என்றால் அவர்களை நாம் மிகச்சரியான ஒரு பாதையில் செலுத்தினால் தான் அவர்கள் மிகச்சரியாக செயல்படுவார்கள். தம் பெற்றோரின் உயர்வு என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
அதற்கு இந்த விடுமுறையும் நிச்சயம் துணைபுரியும். இந்த நேரங்களில் நாம் தான் நமது பிள்ளைகளை கண்ணும், கருத்துமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையெனில் அவர்கள் வெகுசீக்கிரத்தில் வழிதவறிப்போகும் நேரமும் இதுதான்.
எனவே நாம் அதிக அக்கறையுடனும், அதிக கவனமுடனும் இருக்க வேண்டும். பிள்ளைகளும் தம் பெற்றோர் படும் சிரமங்களையும் கஷ்டங்களையும் கொஞ்சமாவது புரிந்து கொண்டு நடக்க வேண்டும். எந்த வாய்ப்புகளுமே ஓரிரு முறைதான் நம் வீட்டுக் கதவுகளை தட்டும். ஆனால் நாம் தான் நமது கதவை திறப்பதில்லை அல்லது கதவை திறப்பதற்கு வீட்டில் இருப்பதில்லை. இனியேனும் நாம் நமது வீடுகளில் இல்லாவிட்டாலும் நல்ல நல்ல பயிற்சிக் கூடங்களில் இருப்போமே...!
வாருங்கள்...! விடுமுறைகளைப் போற்றுவோம்..! கடுமுறைகளை மாற்றுவோம்...!
மவுலவீ எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3
மனிதர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று, ‘நன்மைகளை ஏவுவது, தீமைகளைத் தடுப்பது’. ஆனால் இன்று நல்லதை சொல்வோரும் இல்லை; கெட்டதை தடுப்போரும் இல்லை.
மனிதர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று, ‘நன்மைகளை ஏவுவது, தீமைகளைத் தடுப்பது’. ஆனால் இன்று நல்லதை சொல்வோரும் இல்லை; கெட்டதை தடுப்போரும் இல்லை.
அல்லாஹ் திருக்குர்ஆனில் இதுபற்றி கூறியிருப்பதாவது: ‘உங்களில் இருந்து ஒரு கூட்டத்தார் (மக்களை) நன்மையின் பக்கம் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுகிறவர்களாகவும், தீயதை விட்டும் விலக்குபவர்களாகவும் இருக்கட்டும். மேலும் இவர்கள்தான் வெற்றியாளர்கள்’. (3:104)
‘இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும், இறை நம்பிக்கை கொண்ட பெண்களும், அவர்களில் சிலர், சிலருக்கு உதவியாளர் களாய் இருக்கின்றனர்; நன்மையை அவர்கள் ஏவுகின்றனர்; தீமையை தடுக்கின்றனர்; தொழுகையை நிலை நிறுத்தி, ஜகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றனர்; இத்தகையோர்- விரைவில் இவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமுள்ளவன்’. (9:71)
இந்த இருவசனங்களில் முதல் வசனம் வெற்றிக்கு என்ன வழி என்பதைச் சொல்லிக் காட்டுகிறது. மறுவசனம் ஐம்பெரும் கடமைகளுக்கு முன் ‘ஏவல் விலக்கல்’ தான் மிகமிக முக்கியம் என்பதை மிக அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. இது நபிமார்கள், நல்லோர்களின் நற்பண்பு. குறிப்பாக ஒரு நோன்பாளியிடம் இருக்க வேண்டிய பண்பு.
நபிகளார் நவின்றார்கள்: ‘என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக... நிச்சயமாக நீங்கள் நல்லதை ஏவுங்கள். நிச்சயமாக நீங்கள் தீயதை தடுங்கள். அல்லது நிச்சயமாக அல்லாஹ் தன்புறத்திலிருந்து வேதனையை விரைவாக அனுப்புவதை எதிர்பாருங்கள். பிறகு நிச்சயமாக நீங்கள் அவனை அழைத்தாலும் உங்களுக்கு பதில் அளிக்கப்படமாட்டாது’. (நூல்: திர்மிதி)
நாம் இப்புனிதப் பணியை சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை நாம் நமது வீட்டிலிருந்தே கூடஆரம்பிக்கலாம். நம்மைச் சுற்றி நல்லவை நடக்கிறதோ இல்லையோ தீமைகள் பலதும் நடக்கின்றன. அவற்றைத் தடுப்பதும் அவசியம் தானே.
நபிகளார் நவின்றார்கள்: ‘உங்களில் எவர் ஏதேனும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதை தடுக்கட்டும். அதற்கு சக்தி பெறாவிட்டால், தமது நாவால் தடுக்கட்டும். அதற்கும் சக்தி பெறாவிட்டால், தமது மனதால் வருத்தப்படட்டும்’. (நூல்: முஸ்லிம்)
தீமைகளை தடுப்பதற்கான மூன்று வழி முறைகளை நபிகளார் நமக்கு வெகு அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கும் கூட அல்லாஹ்விடத்தில் அங்கீகாரம் பெற்ற நன்மை நிச்சயம் இருக்கிறது. அவற்றை நாம் ஏன் வீணாகத் தவற விட வேண்டும்?
நமது வாழ்வில், அதிகமாய் நன்மைகளை ஏவி, தீமைகளை தடுத்திடுவோம்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் இதுபற்றி கூறியிருப்பதாவது: ‘உங்களில் இருந்து ஒரு கூட்டத்தார் (மக்களை) நன்மையின் பக்கம் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுகிறவர்களாகவும், தீயதை விட்டும் விலக்குபவர்களாகவும் இருக்கட்டும். மேலும் இவர்கள்தான் வெற்றியாளர்கள்’. (3:104)
‘இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும், இறை நம்பிக்கை கொண்ட பெண்களும், அவர்களில் சிலர், சிலருக்கு உதவியாளர் களாய் இருக்கின்றனர்; நன்மையை அவர்கள் ஏவுகின்றனர்; தீமையை தடுக்கின்றனர்; தொழுகையை நிலை நிறுத்தி, ஜகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றனர்; இத்தகையோர்- விரைவில் இவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமுள்ளவன்’. (9:71)
இந்த இருவசனங்களில் முதல் வசனம் வெற்றிக்கு என்ன வழி என்பதைச் சொல்லிக் காட்டுகிறது. மறுவசனம் ஐம்பெரும் கடமைகளுக்கு முன் ‘ஏவல் விலக்கல்’ தான் மிகமிக முக்கியம் என்பதை மிக அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. இது நபிமார்கள், நல்லோர்களின் நற்பண்பு. குறிப்பாக ஒரு நோன்பாளியிடம் இருக்க வேண்டிய பண்பு.
நபிகளார் நவின்றார்கள்: ‘என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக... நிச்சயமாக நீங்கள் நல்லதை ஏவுங்கள். நிச்சயமாக நீங்கள் தீயதை தடுங்கள். அல்லது நிச்சயமாக அல்லாஹ் தன்புறத்திலிருந்து வேதனையை விரைவாக அனுப்புவதை எதிர்பாருங்கள். பிறகு நிச்சயமாக நீங்கள் அவனை அழைத்தாலும் உங்களுக்கு பதில் அளிக்கப்படமாட்டாது’. (நூல்: திர்மிதி)
நாம் இப்புனிதப் பணியை சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை நாம் நமது வீட்டிலிருந்தே கூடஆரம்பிக்கலாம். நம்மைச் சுற்றி நல்லவை நடக்கிறதோ இல்லையோ தீமைகள் பலதும் நடக்கின்றன. அவற்றைத் தடுப்பதும் அவசியம் தானே.
நபிகளார் நவின்றார்கள்: ‘உங்களில் எவர் ஏதேனும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதை தடுக்கட்டும். அதற்கு சக்தி பெறாவிட்டால், தமது நாவால் தடுக்கட்டும். அதற்கும் சக்தி பெறாவிட்டால், தமது மனதால் வருத்தப்படட்டும்’. (நூல்: முஸ்லிம்)
தீமைகளை தடுப்பதற்கான மூன்று வழி முறைகளை நபிகளார் நமக்கு வெகு அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கும் கூட அல்லாஹ்விடத்தில் அங்கீகாரம் பெற்ற நன்மை நிச்சயம் இருக்கிறது. அவற்றை நாம் ஏன் வீணாகத் தவற விட வேண்டும்?
நமது வாழ்வில், அதிகமாய் நன்மைகளை ஏவி, தீமைகளை தடுத்திடுவோம்.
“(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியில் இருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்” (76:2) என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.
“(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியில் இருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்” (76:2) என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.
கருவணு என்பது பாலின இனப்பெருக்கம் மூலம் ஆண்பால் அணுவும், பெண்பால் அணுவும் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு. பெண்ணின் சினை முட்டையும், ஆணின் விந்துவும் இணைவதால் உருவாகும் கருவணு, பின்னர் பெண்ணின் வயிற்றில் உள்ள கருப்பையில் வளர்கிறது. இதன் தொடக்க நிலையை ‘கலப்பான இந்திரியத்துளி’ என்ற சொல்லால் திருக்குர்ஆன் குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை எண்ணிப்பாருங்கள்.
“(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக! மனிதனை (அட்டைப்பூச்சி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும்) ரத்தக் கட்டியில் இருந்து அவன் படைத்தான்” (96:1) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இங்கே ‘அலக்’ என்ற அரபிச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ‘ஓர் உறைந்த கட்டி’ என்று அர்த்தம். அதோடு அது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்றும் பொருள்படும். இந்தத் தொங்கும் பொருள் ஓர் அட்டைப் பூச்சியைப் போன்ற அமைப்பைக் கொண்டது.
கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூறு துறைத்தலைவராகவும், கருவியல் துறை பேராசிரியராகவும் இருந்தவர் டாக்டர் கீத் மூர். இவரிடம் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள கருவியல் சார்ந்த தகவல்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. தாயின் கருவறையில் வளரும் கரு தொடக்க நிலையில் அட்டைப் பூச்சியைப் போன்று காட்சி அளிக்கக் கூடியது என்பதை டாக்டர் கீத் மூர் அறிந்திருக்கவில்லை.
ஒரு சக்தி வாய்ந்த நுண்ணோக்கி கருவி மூலம் கருவின் ஆரம்ப நிலையை ஆய்வு செய்தார், டாக்டர் கீத். அதை அவர் ஓர் அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அடடா! என்ன ஆச்சரியம். திருக்குர்ஆன் கூறும் கருவியல் தகவலும், சோதனைக்கூட கருவியல் ஆய்வும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதைக் கண்டு அவரது விழிகள் வியப்பால் விரிந்தன. இதன் காரணமாகவே அவர் “முகம்மது இறைவனின் தூதராக இருந்தார் என ஏற்றுக் கொள்வதிலோ, குர்ஆன் உண்மையிலேயே இறைச் செய்திதான் என்பதை ஒப்புக் கொள்வதிலோ எனக்குத் தயக்கமே இல்லை” என்று மொழிந்தார்.
“அவன் உங்களை ஒரே மனிதரில் இருந்து படைத்தான். பிறகு அவரில் இருந்து அவருடைய மனைவியை ஆக்கினான். அவன் உங்களுக்காக கால்நடைகளில் இருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாகப் படைத்தான். உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுதும் உரித்தாகும்.) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படு கிறீர்கள்?” (39:6) என்பது திருக்குர்ஆன் வசனம்.
தாய்மார்களின் வயிறுகளில் கருக்குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்துப் பாதுகாப்பதாக இறைவன் கூறுகின்றான். அதன்படி தாயின் வயிறு, கருப்பையின் சுவர், குழந்தையைச் சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் ஆகியவையே திருக்குர்ஆன் குறிப்பிடும் மூன்று இருள் திரைகள் ஆகும்.
“நிச்சயமாக நாம் (ஆதி) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர், அந்த இந்திரியத் துளியை ரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அந்த ரத்தக்கட்டியை ஒரு சதைத்துண்டாகப் படைத்தோம். பின்னர் அந்தச் சதைத்துண்டை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறொரு படைப்பாக (மனிதனாக) செய்தோம். எனவே படைப்பாளர்களில் மிக்க அழகானவனான அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன்” (திருக்குர்ஆன்-23:12).
மேற்கண்ட இந்த இறை வசனம், ‘மனிதனை இறைவன் ஒரு துளி விந்தில் இருந்து படைத்து, அதனை ஒரு பாதுகாப்பான இடத்தில் பத்திரமாகத் தங்க வைத்துள்ளான்’ என்பதை எடுத்துக்கூறுகிறது.
“கர்ப்பப்பைக்குள் இருக்கும் குழந்தை வளரத்தொடங்குகிறது. சுற்றிலும் ‘பிளசெண்டா’ (நச்சுக் கொடி) திரை அமைத்துக் கொள்கிறது. ‘பிளசெண்டா’ எனப்படும் நச்சுக் கொடி, கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் ரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான உணவு, ஆக்சிஜன் போன்றவற்றை பிரித்து எடுத்து ‘தொப்புள் கொடி’ மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும்.
‘தொப்புள்கொடி’, பார்ப்பதற்கு ஒரு குழாய் (டியூப்) மாதிரி இருந்தாலும், அதற்குள் இரண்டு தமனிகளும், ஒரு சிரையும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. உணவு மற்றும் ஆக்சிஜனை ஏந்தி வரும் சுத்தமான ரத்தம், சிரை வழியே தாயிடம் இருந்து உள்ளே போக, குழந்தை அதை உறிஞ்சிக் கொண்டு அசுத்த ரத்தத்தை மிச்சமிருக்கும் இரண்டு தமனிகள் வழியாக ‘பிளசெண்டா’வுக்குள் அனுப்புகிறது.
இதுவரை இருந்த வேகத்தை விட ஐந்தாவது மாதத்திற்கு மேல் கருக்குழந்தை சற்று வேகமாக வளரத்தொடங்குகிறது. கருவைச் சுற்றி உருவாகி இருக்கும் மெல்லிய பையில், சற்று வழவழப்பான ‘அம்னியாடிக் திரவம்’ (பனிக்குடம்) நிரம்பி ஐந்தாவது மாதத்தில் ஒரு மினி நீச்சல் குளம் போல ஆகி விடுவதால் கருக்குழந்தை அதில் உற்சாகமாக கை கால்களை உதைத்து நீச்சலடிக்க ஆரம்பிக்கிறது.
கருக்குழந்தை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு மேற்கண்ட மருத்துவக் குறிப்புகள் மறுக்க முடியாத சாட்சியங்களாகக் காட்சி அளிக்கின்றன.
- பாத்திமா மைந்தன்.
கருவணு என்பது பாலின இனப்பெருக்கம் மூலம் ஆண்பால் அணுவும், பெண்பால் அணுவும் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு. பெண்ணின் சினை முட்டையும், ஆணின் விந்துவும் இணைவதால் உருவாகும் கருவணு, பின்னர் பெண்ணின் வயிற்றில் உள்ள கருப்பையில் வளர்கிறது. இதன் தொடக்க நிலையை ‘கலப்பான இந்திரியத்துளி’ என்ற சொல்லால் திருக்குர்ஆன் குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை எண்ணிப்பாருங்கள்.
“(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக! மனிதனை (அட்டைப்பூச்சி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும்) ரத்தக் கட்டியில் இருந்து அவன் படைத்தான்” (96:1) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இங்கே ‘அலக்’ என்ற அரபிச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ‘ஓர் உறைந்த கட்டி’ என்று அர்த்தம். அதோடு அது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்றும் பொருள்படும். இந்தத் தொங்கும் பொருள் ஓர் அட்டைப் பூச்சியைப் போன்ற அமைப்பைக் கொண்டது.
கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூறு துறைத்தலைவராகவும், கருவியல் துறை பேராசிரியராகவும் இருந்தவர் டாக்டர் கீத் மூர். இவரிடம் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள கருவியல் சார்ந்த தகவல்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. தாயின் கருவறையில் வளரும் கரு தொடக்க நிலையில் அட்டைப் பூச்சியைப் போன்று காட்சி அளிக்கக் கூடியது என்பதை டாக்டர் கீத் மூர் அறிந்திருக்கவில்லை.
ஒரு சக்தி வாய்ந்த நுண்ணோக்கி கருவி மூலம் கருவின் ஆரம்ப நிலையை ஆய்வு செய்தார், டாக்டர் கீத். அதை அவர் ஓர் அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அடடா! என்ன ஆச்சரியம். திருக்குர்ஆன் கூறும் கருவியல் தகவலும், சோதனைக்கூட கருவியல் ஆய்வும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதைக் கண்டு அவரது விழிகள் வியப்பால் விரிந்தன. இதன் காரணமாகவே அவர் “முகம்மது இறைவனின் தூதராக இருந்தார் என ஏற்றுக் கொள்வதிலோ, குர்ஆன் உண்மையிலேயே இறைச் செய்திதான் என்பதை ஒப்புக் கொள்வதிலோ எனக்குத் தயக்கமே இல்லை” என்று மொழிந்தார்.
“அவன் உங்களை ஒரே மனிதரில் இருந்து படைத்தான். பிறகு அவரில் இருந்து அவருடைய மனைவியை ஆக்கினான். அவன் உங்களுக்காக கால்நடைகளில் இருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாகப் படைத்தான். உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுதும் உரித்தாகும்.) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படு கிறீர்கள்?” (39:6) என்பது திருக்குர்ஆன் வசனம்.
தாய்மார்களின் வயிறுகளில் கருக்குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்துப் பாதுகாப்பதாக இறைவன் கூறுகின்றான். அதன்படி தாயின் வயிறு, கருப்பையின் சுவர், குழந்தையைச் சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் ஆகியவையே திருக்குர்ஆன் குறிப்பிடும் மூன்று இருள் திரைகள் ஆகும்.
“நிச்சயமாக நாம் (ஆதி) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர், அந்த இந்திரியத் துளியை ரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அந்த ரத்தக்கட்டியை ஒரு சதைத்துண்டாகப் படைத்தோம். பின்னர் அந்தச் சதைத்துண்டை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறொரு படைப்பாக (மனிதனாக) செய்தோம். எனவே படைப்பாளர்களில் மிக்க அழகானவனான அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன்” (திருக்குர்ஆன்-23:12).
மேற்கண்ட இந்த இறை வசனம், ‘மனிதனை இறைவன் ஒரு துளி விந்தில் இருந்து படைத்து, அதனை ஒரு பாதுகாப்பான இடத்தில் பத்திரமாகத் தங்க வைத்துள்ளான்’ என்பதை எடுத்துக்கூறுகிறது.
“கர்ப்பப்பைக்குள் இருக்கும் குழந்தை வளரத்தொடங்குகிறது. சுற்றிலும் ‘பிளசெண்டா’ (நச்சுக் கொடி) திரை அமைத்துக் கொள்கிறது. ‘பிளசெண்டா’ எனப்படும் நச்சுக் கொடி, கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் ரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான உணவு, ஆக்சிஜன் போன்றவற்றை பிரித்து எடுத்து ‘தொப்புள் கொடி’ மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும்.
‘தொப்புள்கொடி’, பார்ப்பதற்கு ஒரு குழாய் (டியூப்) மாதிரி இருந்தாலும், அதற்குள் இரண்டு தமனிகளும், ஒரு சிரையும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. உணவு மற்றும் ஆக்சிஜனை ஏந்தி வரும் சுத்தமான ரத்தம், சிரை வழியே தாயிடம் இருந்து உள்ளே போக, குழந்தை அதை உறிஞ்சிக் கொண்டு அசுத்த ரத்தத்தை மிச்சமிருக்கும் இரண்டு தமனிகள் வழியாக ‘பிளசெண்டா’வுக்குள் அனுப்புகிறது.
இதுவரை இருந்த வேகத்தை விட ஐந்தாவது மாதத்திற்கு மேல் கருக்குழந்தை சற்று வேகமாக வளரத்தொடங்குகிறது. கருவைச் சுற்றி உருவாகி இருக்கும் மெல்லிய பையில், சற்று வழவழப்பான ‘அம்னியாடிக் திரவம்’ (பனிக்குடம்) நிரம்பி ஐந்தாவது மாதத்தில் ஒரு மினி நீச்சல் குளம் போல ஆகி விடுவதால் கருக்குழந்தை அதில் உற்சாகமாக கை கால்களை உதைத்து நீச்சலடிக்க ஆரம்பிக்கிறது.
கருக்குழந்தை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு மேற்கண்ட மருத்துவக் குறிப்புகள் மறுக்க முடியாத சாட்சியங்களாகக் காட்சி அளிக்கின்றன.
- பாத்திமா மைந்தன்.






