என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இஸ்லாம்
X
நத்தஹர்வலி தர்கா சந்தனக்கூடு விழா
Byமாலை மலர்9 April 2022 3:45 AM GMT (Updated: 9 April 2022 3:45 AM GMT)
திருச்சி நத்தஹர்வலி தர்காவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு உரூஸ் விழா வருகிற 16-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 17-ந்தேதி அதிகாலை வரை நடக்கிறது.
திருச்சி நத்தஹர்வலி தர்கா பொது அறங்காவலர்கள் அல்லாபக்ஸ் என்கிற முகமது கவுஸ், நூர்தீன், சையத்சலாவுதீன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு வக்புவாரியத் தால் நத்தஹர்வலி தர்கா பொது அறங்காவலர்களாக 3 ஆண்டுகளுக்கு நாங்கள் நியமிக்கப்பட்டள்ளோம். இந்தாண்டு தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர்வலி தர்கா 1025-வது ஆண்டு சந்தனக் கூடு உரூஸ் விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகிற 11-ந் தேதி பீர் உட்கார வைத்தல் நிகழ்ச்சியும், 15-ந்தேதி துர்பத் என்னும் சுத்தம் செய்யும் நிகழ்வும் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு உரூஸ் விழா வருகிற 16-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 17-ந்தேதி அதிகாலை வரை நடக்கிறது. அன்றைய தினம் காந்தி மார்க்கெட்டில் இருந்து சந்தனக்கூடு ஊர் வலம் தொடங்கி நத்தஹர்வலி தர்காவை வந்தடையும்.
17-ந்தேதி சந்தனம் பூசும் வைபமும், 18-ந்தேதி இரவு தர்காவில் மின்அலங்காரம் நடக்கிறது. இந்த விழாவுக்கு வெளிமாநிலங்களில் இருந் தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
தமிழ்நாடு வக்புவாரியத் தால் நத்தஹர்வலி தர்கா பொது அறங்காவலர்களாக 3 ஆண்டுகளுக்கு நாங்கள் நியமிக்கப்பட்டள்ளோம். இந்தாண்டு தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர்வலி தர்கா 1025-வது ஆண்டு சந்தனக் கூடு உரூஸ் விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகிற 11-ந் தேதி பீர் உட்கார வைத்தல் நிகழ்ச்சியும், 15-ந்தேதி துர்பத் என்னும் சுத்தம் செய்யும் நிகழ்வும் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு உரூஸ் விழா வருகிற 16-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 17-ந்தேதி அதிகாலை வரை நடக்கிறது. அன்றைய தினம் காந்தி மார்க்கெட்டில் இருந்து சந்தனக்கூடு ஊர் வலம் தொடங்கி நத்தஹர்வலி தர்காவை வந்தடையும்.
17-ந்தேதி சந்தனம் பூசும் வைபமும், 18-ந்தேதி இரவு தர்காவில் மின்அலங்காரம் நடக்கிறது. இந்த விழாவுக்கு வெளிமாநிலங்களில் இருந் தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
மேலும் தர்காவுக்கு சொந்தமான குளத்தை தூர்வாரி தூய்மையாக பராமரிக்கவும், இங்கு வந்து தங்கும் பக்தர் களுக்காக தங்கும் விடுதியும் கட்டித்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X