search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    தர்காவில் கந்தூரி விழா
    X
    தர்காவில் கந்தூரி விழா

    உடன்குடி தர்காவில் கந்தூரி விழா

    உடன்குடி களம்புதுத்தெரு செய்குனாசெய்கு ஐதுரூஸ் புலவர் ஓலியுல்லா அப்பாவின் 194-வது கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    உடன்குடி களம்புதுத்தெரு செய்குனாசெய்கு ஐதுரூஸ் புலவர் ஓலியுல்லா அப்பாவின் 194-வது கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது.

    இதையொட்டி நடைபெற்ற விழாவிற்கு களம்புதுத்தெரு முஹியித்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் இமாம் ரயிசுத்தீன் தலைமை வகித்தார். முகம்மது அலி அப்துல் அஜீஸ், ரியாஸ், முஸ்தபா, ஷாஜகான், புகாரி, நிசார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதரஸத்துல் காதிரிய்யா அல்முபீன் மதரஸா பள்ளி மாணவ, மாணவியர்களின் மார்க்க சொற்பொழிவுகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பரிசுகளை சக்கரியா, செய்யது சுலைமான், முகம்மது, சர்புதீன், பீர்முகம்மது வழங்கினர்.இரவு 9 மணிக்கு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவிற்கு மகளிர் அரபுக் கல்லூரி முதல்வர் ஜஹ்பர் சாதிக் தலைமை வகித்தார். அப்துல் அஜீஸ் கிராஆத் ஓதினார்.இமாம்கள் ஹமீது சுல்தான், ரயிசுத்தீன், அம்ஜத்கான் ஆகியோர் மார்க்க சொற்பொழிவாற்றினார்கள்.

    இரவு 11 மணிக்கு மவுலூது ஷரீப் நடைபெற்றது. பிப்.14 ஆம் தேதி காலையில் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பரக்கத்துல்லா, மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மஹபூப் நன்றி கூறினார்.
    Next Story
    ×