search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு பிரார்த்தனை நடந்த காட்சி
    X
    சிறப்பு பிரார்த்தனை நடந்த காட்சி

    சந்தனக்கூடு திருவிழா: ஏர்வாடி தர்காவில் கொடியேற்றம்

    தமிழக அரசு ஊரடங்கு அறிவிப்பின்படியும், மாவட்ட கலெக்டர் உத்தரவின் படியும் இந்த திருவிழாவில் பங்கேற்க யாத்திரிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் அடங்கப்பட்ட மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீதின் 847-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நடைபெறவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 5 மணி அளவில் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் தலைமை டவுன் ஹாஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் தர்கா ஹக்தார்கள் மற்றும் ஆலிம்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு மவுலிது ஓதப்பட்டது.

    உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வருகிற 4-ந் தேதி மாலை உரூஸ் எடுக்கப்பட்டு 5-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும் என்று ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசு ஊரடங்கு அறிவிப்பின்படியும், மாவட்ட கலெக்டர் உத்தரவின் படியும் இந்த திருவிழாவில் பங்கேற்க யாத்திரிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    Next Story
    ×