என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமன்புதூர் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலயம்
    X
    ராமன்புதூர் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலயம்

    ராமன்புதூர் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய அர்ச்சிப்பு விழா நாளை நடக்கிறது

    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் உள்ள திருக்குடும்ப ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மறு அர்ச்சிப்பு விழா நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் திருக்குடும்ப ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மறு அர்ச்சிப்பு விழா நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை ஆலயத்தை அர்ச்சித்து வைக்கிறார். தொடர்ந்து நடைபெறும் திருப்பலியில் ஆயர் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    விழா ஏற்பாடுகளை கார்மல் நகர் பங்குதந்தை சகாய பிரபு, கார்மல் நகர் தலைவர் ஜோசப் ஆன்டனி, செயலாளர் டூறிங் ஆன்டனி தனிஸ், பொருளாளர் லியோன் ஜேசு ரெத்தினம் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள், பங்கு இறை மக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×