search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பத்துகாணி குருசுமலை திருப்பயண விழா
    X
    பத்துகாணி குருசுமலை திருப்பயண விழா

    பத்துகாணி குருசுமலை திருப்பயண விழா நாளை தொடங்குகிறது

    பத்துகாணி குருசுமலை திருப்பயண திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி திரளான பொதுமக்கள் மலையேறி குருசை தரிசனம் செய்கின்றனர்.
    தமிழக-கேரளா எல்லை பகுதியில் பத்து காணியில் குருசுமலை அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(ஏப்ரல்) 3-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் தொடக்கமாக நாளை மதியம் 2 மணிக்கு வெள்ளறடையில் இருந்து குருசுமலை அடிவாரம் வரை சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4 மணிக்கு கொடி பயணம் புனித பத்தாம் கியூஸ் தேவாலயம் முதல் மலை அடிவாரம் வரை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் திருவிழா கொடியை மலை அடிவாரத்தில் ஏற்றி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து மலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு குருசுமலை இயக்குனர் வின்சென்ட் பீட்டர் வரவேற்று பேசுகிறார். நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில் கேரளா எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், சசிதரூர் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.

    தொடர்ந்து நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் முதல் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

    28-ந் தேதி மதுரை மாவட்டம் ஆவணக் காப்பாளர் ஜோசபின் தலைமையில் திருப்பலி, தொடர்ந்து நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    29-ந்தேதி மாணவர்களின் பங்குத்தந்தை ஜோசப் தலைமையில் திருப்பலி, சிலுவை நவநாள், சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, ஜெப ஆராதனை, திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    30-ந்தேதி நெய்யாற்றின்கரை மறை மாவட்டம் முதன்மை குரு தலைமையில் திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் திருப்பலி, சிறப்பு விருந்தினர்கள் உரை, நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவையொட்டி திரளான பொதுமக்கள் மலையேறி குருசை தரிசனம் செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×