என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
X
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்3 March 2022 4:02 AM GMT (Updated: 3 March 2022 4:02 AM GMT)
ஆரல்வாய்மொழி தேவசகாயம்மவுண்டில் மறைசாட்சி தேவசகாயம் திருத்தலம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்களில் 10 நாள் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
ஆரல்வாய்மொழி தேவசகாயம்மவுண்டில் மறைசாட்சி தேவசகாயம் திருத்தலம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
முதல் நாளான நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி போன்றவை நடக்கிறது. இதில் அருட்பணியாளர் பென்கர் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பென்சிகர் மறையுரையாற்றுகிறார்.
மாலை 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம், தொடர்ந்து கொடி நேர்ச்சை, ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறும். பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் மறையுரை நிகழ்த்துகிறார். இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
5-ந்தேதி இரவு 7 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஆனந்த் தலைமையில் திருப்பலி நடைபெறும்.
6-ந் தேதி அதிகாலை 5 மணி திருப்பலி, 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சியில் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.
மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு திருப்பலி, மறையுரை, தொடர்ந்து மறைக்கல்வி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
11-ந் தேதி இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 12-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி, இரவு 7 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தொடர்ந்து 10.30 மணிக்கு தேர்பவனி போன்றவை நடைபெறும்.
13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து திருவிழா திருப்பலி, காலை 7.30 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 9 மணிக்கு திருப்பலி, மாலை 3.30 மணிக்கு தேர் பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், 9.30 மணிக்கு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் போன்றவை நடைபெறும்.
14-ந் தேதி இரவு 7 மணிக்கு அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா தலைமையில் தேரடி திருப்பலி, 8.30 மணிக்கு கொடியிறக்கம் போன்றவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், இணை பங்குதந்தை ஆன்றனிபுரூணே, பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
முதல் நாளான நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி போன்றவை நடக்கிறது. இதில் அருட்பணியாளர் பென்கர் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பென்சிகர் மறையுரையாற்றுகிறார்.
மாலை 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம், தொடர்ந்து கொடி நேர்ச்சை, ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறும். பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் மறையுரை நிகழ்த்துகிறார். இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
5-ந்தேதி இரவு 7 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஆனந்த் தலைமையில் திருப்பலி நடைபெறும்.
6-ந் தேதி அதிகாலை 5 மணி திருப்பலி, 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சியில் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.
மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு திருப்பலி, மறையுரை, தொடர்ந்து மறைக்கல்வி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
11-ந் தேதி இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 12-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி, இரவு 7 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தொடர்ந்து 10.30 மணிக்கு தேர்பவனி போன்றவை நடைபெறும்.
13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து திருவிழா திருப்பலி, காலை 7.30 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 9 மணிக்கு திருப்பலி, மாலை 3.30 மணிக்கு தேர் பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், 9.30 மணிக்கு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் போன்றவை நடைபெறும்.
14-ந் தேதி இரவு 7 மணிக்கு அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா தலைமையில் தேரடி திருப்பலி, 8.30 மணிக்கு கொடியிறக்கம் போன்றவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், இணை பங்குதந்தை ஆன்றனிபுரூணே, பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X