search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாகுல அன்னை"

    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழாவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மேலும் நேற்று மாலையிலும் தேர் பவனி நடைபெற்றது. தேர் தேவசகாயம் மவுண்டில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது.

    இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசித்து சென்றனர். தொடர்ந்து நற்கருணை, மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் வரலாற்று நாடகம் ஆகியவை நடைபெற்றது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள், திருத்தொண்டர்கள், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    ×