search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இரவிபுத்தன்துறை புனித கேதரின் ஆலயம்
    X
    இரவிபுத்தன்துறை புனித கேதரின் ஆலயம்

    இரவிபுத்தன்துறை புனித கேதரின் ஆலய அர்ச்சிப்பு விழா

    நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் உள்ள புனித கேதரின் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
    நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித கேதரின் ஆலயம் உள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா இன்று(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசை பாக்கியம், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் ஆகியோர் தலைமை தாங்கி ஆலயத்தை அர்ச்சித்து வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்கள். பின்னர் அன்பு விருந்து நடக்கிறது.

    தொடர்ந்து 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை புனித கேதரின் ஆலய திருவிழா நடக்கிறது.

    23-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். 24-ந் தேதி காலை 10 மணிக்கு அருட்பணியாளர் ஜெரோம் அமிர்தைய்யன், ஜோஸ் வர்க்கீஸ் ஆகியோர் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இரவு 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு திருப்பலி நடைபெறும்.

    25-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் நடக்கிறது. 26-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.

    27-ந் தேதி மாலை 6 மணிக்கு முன்னாள் பங்கு தந்தையர்கள் தலைமையில் ஆடம்பர கூட்டுதிருப்பலியும், 28-ந் தேதி காலை 7 மணிக்கு இறந்தவர்களுக்கான நினைவு திருப்பலியும், மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட விகார் ஜெனரல் ஜோசப் தலைமையில் ஜெபமாலை, திருப்புகழ் மாலையும் நடக்கிறது. தொடர்ந்து தேர்ப்பவனி நடக்கிறது.

    29 மற்றும் 30-ந் தேதிகளில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் மற்றும் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் தலைமையில் கூட்டுதிருப்பலி, உறுதி பூசுதல் திருப்பலி போன்றவை நடக்கிறது. 31-ந் தேதி இரவு 11 மணிக்கு புத்தாண்டு நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு திருப்பலியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×