என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தூத்துக்குடி தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்29 Sep 2021 4:54 AM GMT
தூத்துக்குடி தாளமுத்துநகா் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட குரு ரோலிங்டன், வடக்கலூர் பங்குதந்தை ஜேம்ஸ் அமிர்தராஜ், தாளமுத்துநகர் துணை பங்குதந்தை பிபின் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினர். நிகழ்ச்சியில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருவிழா அன்று விடிவெள்ளி குடிநோய் மருத்துவ ஆலோசனையகம் இயக்குனா் ரெக்ஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. மறைமாவட்ட நூற்றாண்டு விழா பொறுப்பாளா் ஜேம்ஸ் விக்டா் மறையுரையாற்றுகிறார். 11-ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி மறைமாவட்ட முதன்மைக்குரு பன்னீா்செல்வம் தலைமையில் நடக்கிறது. மறைமாவட்ட பொருளாளா் சகாயம் மறையுரையாற்றுகிறார். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை நெல்சன், துணைப்பங்கு தந்தை பிபின் மற்றும் திரு இருதய சகோதரிகள், ஊா் நிர்வாகிகள், அன்பியங்கள், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-ம் திருவிழா அன்று விடிவெள்ளி குடிநோய் மருத்துவ ஆலோசனையகம் இயக்குனா் ரெக்ஸ் தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. மறைமாவட்ட நூற்றாண்டு விழா பொறுப்பாளா் ஜேம்ஸ் விக்டா் மறையுரையாற்றுகிறார். 11-ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி மறைமாவட்ட முதன்மைக்குரு பன்னீா்செல்வம் தலைமையில் நடக்கிறது. மறைமாவட்ட பொருளாளா் சகாயம் மறையுரையாற்றுகிறார். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை நெல்சன், துணைப்பங்கு தந்தை பிபின் மற்றும் திரு இருதய சகோதரிகள், ஊா் நிர்வாகிகள், அன்பியங்கள், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X