என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நிறங்களின் பங்கு
    X

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நிறங்களின் பங்கு

    கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது குறிப்பிட்ட சில நிறங்கள் மட்டும் பாரம்பரிய தொடர்ச்சியாக இணைந்து வருகின்றன.
    கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது குறிப்பிட்ட சில நிறங்கள் மட்டும் பாரம்பரிய தொடர்ச்சியாக இணைந்து வருகின்றன. இந்த நிறங்கள், ஒவ்வொன்றிற்கும் என ஓர் பிரத்யேகமான காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையோடு இந்நிறங்களுக்கு உண்டான தொடர்பு குறித்து கிழக்கத்திய மற்றும் வடக்கத்திய ஐரோப்பிய நாடுகள் தனிப்பட்ட பழக்கங்கள் மற்றும் மரபுகளை வைத்துள்ளன. அதற்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் காலமான குளிர்காலமும் அதில் உள்ள இருளும், குளுமையும் ஓர் காரணமாகவும் அறியப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் உடன் தொன்றுதொட்டு வரும் நிறங்களாக பச்சை, சிகப்பு, தங்கநிறம், வெள்ளை, நீலம் அறியப்படுகிறது. இவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அனைத்து அலங்கார அணிவகுப்பு மட்டுமின்றி எல்லா நிலையிலும் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.

    பச்சை நிறத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    என்றும் பசுமையுடன் திகழும் ஹோலி, இவி மற்றும் மிசல்டாய் போன்ற இலைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அலங்காரத்திற்கு என பயன்படுத்தப்பட்டுள்ளன. இருள் நிறைந்த நீண்ட குளிர்கால இரவுகளில் கட்டிடங்கள் மீது பிரகாசமாக தெரிகின்ற வகையில் இந்த பச்சையிலைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது மக்களுக்கு குளிர்காலம் விரைவில் முடிந்து வசந்தகாலம் வருகிறது என்பதை தெரிவிக்கும் விதமாகவும் உள்ளது.

    ஹோலி என்பது முள் நிறைந்த இந்த இலைகள் இயேசுவின் முள் கிரீடத்தையும் அதில் உள்ள சிவப்பு பழம் முள்பட்டு உதிர்ந்த இயேசுவின் இரத்தத்துளிகளை காட்சிபடுத்தும் விதமாக உள்ளதால் ஹோலி பச்சை இலை பயன்படுத்தப்பட்டன.

    பழங்கால ரோமானியர்கள் பசுமையான கிளைகளை ஜனவரி மாதங்களில் அதிர்ஷ்டத்தின் சின்னமாக பரிமாறி கொள்வர். அதுபோல் எகிப்தியர்கள் பனை இலைகளை வீடுகளின் முன்பு குளிர்கால பண்டிகை தொடக்கத்தின் போதே தொங்கவிடுவர். இதுமட்டுமின்றி இன்றைய நாளில் அனைத்து பகுதி மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் பயன்படுத்தும் கிறிஸ்துமஸ் மரம் பச்சை நிறமாய் தொடர்ந்து இணைந்து உள்ளன.

    இயேசுவின் இரத்தமான சிவப்பு நிறம்

    நெடுங்காலம் முன்பே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சொர்க்க மரத்தில் காணும் ஆப்பிள் நிறமாய் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. சொர்க்க மரம் என்பதால் பைன் மரங்களாய் நிற்க வைத்து அதில் சிகப்பு நிற ஆப்பிள்களை தொங்கவிடுவர்.

    அது போல் ஹோலி பெர்ரி பழங்களின் நிறமும் சிகப்பு, இது இயேசுவின் இரத்தத்தின் வடிவமாக கூறப்படுகிறது. எனவே ஹோலி பச்சை இலையுடன் சிவப்பு உருளை பழங்களும் அலங்காரத்திற்கும் அதன் சிகப்பு நிறம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதான இடம் பிடிக்கிறது. பிஷப்புகளில் கயிறு சிகப்பு, சாண்டா கிளாஸின் ஆடையின் நிறம் சிகப்பு என கிறிஸ்துமஸ் உடன் சிகப்பு நிறம் தொடர்பு கொண்டுள்ளது.

    நட்சத்திர வண்ணமான தங்கநிறம்

    தங்க நிறம் சூரியன் மற்றும் ஒளியின் நிறமாக உள்ளது. இது இருளான குளிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. கதகதப்பு தரும் நெருப்பின் வண்ணமும் சிவப்பு மற்றும் தங்க நிறமாய் தான் இருக்கிறது. குழந்தை இயேசு பிறக்க போகிறான் என்பதை கூறிய ஞானியை தொடர்ந்த நட்சத்திரத்தின் நிறமாகவும் தங்க நிறம் பார்க்கப்படுகிறது.

    தூய்மை மற்றும் அமைதியை நினைவூட்டும் வெள்ளை

    குளிர்கால பனிபொழிவு அதி உன்னத வெண்மை, சொர்க்க மரத்தின் மீது வெள்ளை காகித செதில்கள் சூழப்பட்டிருக்கும். இது கிறிஸ்தவ கூட்டங்களில் பிரெட் உண்பதை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நிறமாக வெள்ளை நிறத்தை பயன்படுத்துகின்றனர். தேவாலய பலிபீடங்களை சுழற்றும் துணி குறிப்பாக வெள்ளை நிறத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.

    மேரிமாதாவுடன் தொடர்புடைய நீலம்

    இயேசுவின் தாயான மேரிமாதா வுடன் தொடர்பு கொண்டது நீல நிறம். மேலும் வானத்தையும், சொர்க்கத்தையும் பிரதிபலிக்கும் நிறமாகவும் நீலம் உள்ளது. மத்திய கால கட்டத்தில் நீல நிற பெயிண்ட் என்பது தங்கத்தின் விலையை விட கூடுதலாக இருந்தது. மேரி மாதா நீலநிற பூச்சுடன் காட்சியளிப்பது மிக முக்கியமாக கருதப்பட்டது.
    Next Story
    ×