search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

    புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

    கோவை புலியகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    கோவை புலியகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் தினமும் திருப்பலி நிகழ்ச்சி, நேற்று முன்தினம் புதுநன்மை, உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடந்த திருவிழா திருப்பலியில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

    அதை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அந்தோணியார் சொரூபம் மின்ஒளியில் ஜொலித்தது. மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர், ஆலய வளாகத்தில் இருந்து அந்தோணியார் வீதி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

    பின்னர் இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடந்தது. தேர்பவனி நிகழ்ச்சியில் பங்கு குருக்கள் ஜார்ஜ் தனசேகர், ஆண்டனி பெலிக்ஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×