என் மலர்

    கிறித்தவம்

    புனித உபகார அன்னை ஆலய தேர்பவனி
    X
    புனித உபகார அன்னை ஆலய தேர்பவனி

    புனித உபகார அன்னை ஆலய தேர்பவனி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புனித உபகார அன்னை ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு மறையுரை மற்றும் திருப்பலி நிறைவேற்றினர்.
    மணிகண்டம் அருகே அளுந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட யாகப்புடையான்பட்டியில் உள்ள புனித உபகார அன்னை ஆலயத்தில் திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு மறையுரை மற்றும் திருப்பலி நிறைவேற்றினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.

    இதையொட்டி முன்னதாக நாகமங்கலம் பங்குத்தந்தை ஜெயராஜ், ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ், நாங்குநேரி அருட்தந்தை அற்புத ஜோசப்குமார் ஆகியோர் கலந்து கொண்டு திருவிழாவையொட்டி சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர்.
    Next Story
    ×