என் மலர்
ஆன்மிகம்

பணிக்கன்குப்பம் புனித விண்ணரசி மாதா ஆலய தேர்பவனி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் புனித விண்ணரசி மாதா ஆலய விழாவில் சிகர நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நடந்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் புனித விண்ணரசி மாதா ஆலயம் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு தேர்பவனி பெருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் ஆலயத்தில் கூட்டு திருப்பலி, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. விழாவில் சிகர நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் விண்ணரசி மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர், தேர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து, விழா கொடி இறக்கப்பட்டது.
அதன்படி, இந்தாண்டு தேர்பவனி பெருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் ஆலயத்தில் கூட்டு திருப்பலி, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. விழாவில் சிகர நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் விண்ணரசி மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர், தேர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து, விழா கொடி இறக்கப்பட்டது.
Next Story






