search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கீப்பரில் யாருக்கு வாய்ப்பு? முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை வெளியிட்ட வாசிம் ஜாபர்
    X

    கீப்பரில் யாருக்கு வாய்ப்பு? முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை வெளியிட்ட வாசிம் ஜாபர்

    • உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இடம் பிடித்துள்ளனர்.
    • ராகுலுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்குவதை பார்க்க விரும்புவதாக வாசிம் ஜாபர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடரில் தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது. முன்னதாக உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இடம் பிடித்துள்ளதால் 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்ற மிகப் பெரிய விவாதம் இந்திய வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முதல் டி20 போட்டியில் களமிறங்கும் தன்னுடைய சிறந்த 11 பேர் இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக்கை முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள அவர் ரிஷப் பண்ட்டை கழற்றி விட்டுள்ளார்.

    முன்னதாக ராகுலுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்குவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்திருந்த வாசிம் ஜாபர் இந்த அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

    அவருடைய 11 பேர் கொண்ட இந்திய அணி:-

    கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சஹால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    Next Story
    ×