என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
அணி தோற்றாலும் அவரது அதிரடி விளையாட்டால் நாடே மகிழ்ச்சியடைகிறது- இளம் வீரரை புகழ்ந்த கம்பீர்
- கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள்.
- அவர் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இளம் வீரர் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் அடித்து இந்தியா 180 ரன்கள் குவிக்க உதவினார்.
இந்நிலையில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது என்று கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியடைகிறது. நீங்கள் முதல் தர கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக விளையாடி கடினமாக உழைத்து இந்தியாவுக்காக விளையாட வரும்போது உங்களின் ஒவ்வொரு இன்னிங்சுக்கும் தனி மதிப்பு இருக்கும்.
அப்படி கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்சையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள். அந்த வகையில் விளையாடும் ரிங்கு சிங் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் எந்த வாய்ப்பையும் எளிதாக பெறவில்லை.
என்று கம்பீர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்