என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்தியா திரும்பினார் விராட் கோலி: உற்சாகத்தில் ரசிகர்கள்
- சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஆடவில்லை.
- தற்போது விராட் கோலி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. கோலி-அனுஷ்கா தம்பதிக்கு லண்டனில் 2-வது குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அகாய் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் அவர் ஆடவில்லை. 2-வது குழந்தை பிறந்ததால் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியது தெரிய வந்தது. இதனால் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவர் ஆடுவாரா என சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், விராட் கோலி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார். 2-வது குழந்தை பிறந்த பிறகு அவர் முதல் முறையாக தோன்றினார்.
விராட் கோலி நாடு திரும்பியுள்ள நிலையில், ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறார். வரும் 19-ந்தேதி அவர் பெங்களூரு வந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் இணைந்து கொள்கிறார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்தியா திரும்பினார் விராட் கோலி: உற்சாகத்தில் ரசிகர்கள்#ViratKohli #KingKohli #RCBvsCSK #CSKvsRCB #IPL #IPL2024 #Cricket #Sportsnews #MMNews #Maalaimalar pic.twitter.com/LWjpxRCD4o
— Maalai Malar தமிழ் (@maalaimalar) March 17, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்