ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை முறியடித்த கோலி

302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா.இந்த போட்டியில் விராட் கோலி 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை முறியடித்த கோலி
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 55 ரன்னில் சுருண்டது. இதனால் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சதம் அடித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி 88 ரன்னில் ஆட்டமிழந்தார். சதத்தில் சாதனை படைக்கவில்லை என்றாலும் ஒரு ஆண்டில் அதிக முறை ஆயிரம் ரன் எடுத்த சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

விராட் கோலி 34 ரன்னில் இருந்த போது இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்தார். 2023-ம் ஆண்டில் இந்தியாவின் சுப்மன் கில் (1,426 ரன்), இலங்கையின் நிசாங்கா (1,108 ரன்), இந்திய கேப்டன் ரோகித் சர்மா (1,060 ரன்) ஆகியோருக்கு பிறகு ஆயிரம் ரன்களை கடந்தவர் கோலி (23 ஆட்டத்தில் 1,054 ரன்) தான்.

கோலி ஓராண்டில் ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுப்பது இது 8-வது முறையாகும். ஏற்கனவே 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதன் மூலம் ஓராண்டில் அதிக முறை ஆயிரம் ரன்களை அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (7 முறை) முறியடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com