search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தை பார்க்க குவிந்த ரசிகர்கள்.. ஏமாற்றத்துடன் திரும்பிய சோகம்
    X

    சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தை பார்க்க குவிந்த ரசிகர்கள்.. ஏமாற்றத்துடன் திரும்பிய சோகம்

    • சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டம் நடைபெறுவதாக தகவல் பரவியிருக்கிறது.
    • இந்த பயிற்சி ஆட்டத்தை பார்க்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனவும் தகவல் பரவியிருக்கிறது.

    சென்னை:

    2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    அந்த வகையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டம் நடைபெறுவதாகவும் அதனை பார்க்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை எனவும் தகவல் பரவியிருக்கிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் டோனியை காண்பதற்காக மதியம் முதல் இரவு வரை காத்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் இந்த செய்தி தவறானது என சேப்பாக்கம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி டோனி டோனி என முழக்கமிட்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் ரசிகர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர்.

    இதனால் சோகத்துடன் சேப்பாக்கத்தில் இருந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். டோனியை பார்க்க வந்த நாங்கள் சிஎஸ்கே வீரர்கள் சென்ற பஸ்சை மட்டும் தான் பார்த்தோம் என மனகுமுறலுடன் ரசிகர்கள் கூறி சென்றனர்.

    Next Story
    ×