search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
    X

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

    • இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செயல்படுவதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.

    Next Story
    ×