search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரஞ்சி போட்டியில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ்
    X

    ரஞ்சி போட்டியில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ்

    • மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 80 பந்துகளில் 90 ரன்கள் குவித்துள்ளார்.
    • அதில் 15 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான இந்த ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் அனைத்து மாநில அணிகளை சேர்ந்த வீரர்களும் இந்த தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதன்மை அணிக்கு தேர்வாகும் வாய்ப்பினை எதிர்நோக்கி சிறப்பாக செயல்படுவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் இந்த ரஞ்சி தொடரில் பல்வேறு இந்திய வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வரும் வேளையில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் தான் இடம் பிடித்து விளையாட ஆசைப்படுவதால் நிச்சயம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று உறுதியளித்திருந்தார்.

    மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று கூட பாராமல் 80 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர்கள் என தனது வழக்கமான அதிரடியை கையிலெடுத்து 80 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் தனது அதிரடியான ரன் குவிப்பை இன்றும் அவர் மும்பை அணிக்காக வழங்கினார். ரகானே தலைமையிலான மும்பை அணியானது தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ப்ரித்வி ஷா 19 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 90 ரன்களிலும் ஆட்டம் இழந்தாலும் ஜெய்ஷ்வால் மற்றும் ரகானே ஆகியோரது ஜோடி தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.

    ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படையாக சூர்யகுமார் யாதவ் கூறியவேளையில் தற்போது ரஞ்சி போட்டியிலும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடியுள்ளதால் அவரின் டெஸ்ட் வாய்ப்பை பிடிக்காமல் விடமாட்டார் என்றே தோன்றுகிறது.

    Next Story
    ×