search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா.. 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
    X

    இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா.. 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

    • தென் ஆப்பிரிக்கா அணியின் கிளாசன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.
    • இங்கிலாந்து அணிக்கு மார்க் வுட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக்டோபர் 21) இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று, உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 399 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் கிளாசன் அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.

    400 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடைசியில் சிறப்பாக ஆடிய அட்கின்சன் மற்றும் மார்க் வுட் முறையே 35 மற்றும் 43 ரன்களை எடுத்தனர்.

    அட்கின்சன் 35 ரன்களில் ஆட்டமிழக்க, 22 ஓவர்களில் இங்கிலாந்து அணி 170 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. மார்க் வுட் ஆட்டமிழக்காமல் 43 ரன்களை குவித்து இருந்தார். அடுத்து களமிறங்க வேண்டிய ரீஸ் டோப்லி பேட்டிங் ஆடவில்லை. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜெரால்ட் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×