search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆஷஸ் 4-வது டெஸ்டில் 130 வருட சாதனையை சமன் செய்த இங்கிலாந்து அணி
    X

    ஆஷஸ் 4-வது டெஸ்டில் 130 வருட சாதனையை சமன் செய்த இங்கிலாந்து அணி

    • இங்கிலாந்து அணியில் 1893-ல் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் 6 பேர் அரைசதம்
    • 500 ரன்களுக்கு மேல் எடுத்து சராசரி 5-க்கு மேல் என்பது 4-வது முறையாகும்

    இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 592 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முதல் ஏழு பேட்ஸ்மேன்களில் ஆறு பேர் 50 ரன்களை கடந்தனர்.

    இதன்மூலம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் முதல் ஏழு பேரில் ஆறுபேர் அரைசதம் தொட்ட நிகழ்வு 2-வது முறையாக நிகழ்ந்துள்ளது. இதற்கு முன் 1893-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் முதல் ஏழு பேரில் ஆறு பேர் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். தற்போது 130 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

    500 ரன்களுக்கு மேல் அடித்து 5-க்கு மேல் சராசரி வைத்திருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 4-வது முறையாகும்.

    மான்செஸ்டர் டெஸ்டில் இங்கிலாந்து 107.4 ஓவரில் 592 ரன்கள் குவித்தது. சராசரி 5.49 ஆகும்.

    இதற்கு முன்,

    ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எஆஷஸ் 4-வது டெஸ்ட்டில் 130 வருட சாதனையை சமன் செய்த இங்கிலாந்து அணிதிராக 2022-ல் இங்கிலாந்து 107 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. சராசரி 6.50 ஆகும்.

    அயர்லாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து 82.4 ஓவரில் 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அப்போது ரன்ரேட் 6.33 ஆகும்

    2001-ம் ஆண்டு கொழும்பில் வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கை 103.3 ஓவரில் 555 ரன்கள் குவித்தது. சராசரி 5.36 ஆகும்.

    Next Story
    ×