search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தமிழக இளம் வீரர் சாய் சுதர்சனை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்
    X

    தமிழக இளம் வீரர் சாய் சுதர்சனை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

    • இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.
    • சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தை கண்டு மகிழ்ந்த சச்சின்.

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

    குஜராத் பேட்டிங்கில், சுப்மான் கில்தான் அதிகமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார் சாய் சுதர்சன்.

    இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தை இந்திய முன்னாள் நட்சத்திர வீரரும், லெஜண்ட்டுமான சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், "இன்றிரவு என் கண்களுக்கு விருந்து படைத்தார் சாய் சுதர்சன்.. நன்றாக விளையாடினாய் சாய்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×