search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அஸ்வின், ஜுரேல் நிதான ஆட்டம்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 388/7
    X

    அஸ்வின், ஜுரேல் நிதான ஆட்டம்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 388/7

    • ஜடேஜா 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் அவுட்.
    • அறிமுக வீரர் ஜுரேல் 31 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோரின் சதங்கள், சர்பராஸ் கான் அரைசதத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 112 ரன்னில் ஆட்டம் இழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். ஜுரேல் முதலில் திணறினார். அதன்பின் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார். அஸ்வின் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்த ஜோடி அரைசதம் ரன்களை கடந்தது.

    மேலும், இன்றைய 2-வது நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா தற்போது 7 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்துள்ளது. ஜுரேல் 31 ரன்னுடனும், அஸ்வின் 25 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

    Next Story
    ×